என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "transfer"
- பிரதான நுழைவு வாயில் காந்தி இர்வீன் சாலையிலும் பின்புற நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைய உள்ளது.
- வாகன நிறுத்துமிடம் எழும்பூர் தெற்கு ரெயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திற்குப் பக்கத்தில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
எழும்பூர் ரெயில் நிலையம் பல்வேறு நவீன வசதிகளுடன் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன. மறு சீரமைப்பு பணியில் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் காந்தி இர்வீன் சாலையிலும் பின்புற நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைய உள்ளது.
மேலும் ரெயில் நிலைய கட்டிடங்கள், பலஅடுக்கு வாகன நிறுத்துமிடம், காந்தி-இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி சாலை அருகே வணிக வளாகங்கள் அமைத்தல், புதிய பார்சல் அலுவலகம், நடை மேம்பாலம், பார்சல்களை கையாள நடைமேம்பாலம், புதிய ரெயில்வே குடியிருப்புகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வாகன நிறுத்தும் இடம் உள்ளது. தற்போது அந்த பகுதியில் நடைபெற்று வரும் ரெயில்வே பணிகளால் மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தும் இடம் நாளை முதல் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "எழும்பூர் ரெயில் நிலையம் மற்றும் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் ஆகியவற்றில் தெற்கு ரெயில்வேயின் பன்முக ஒருங்கிணைப்புப் பணிகள் நடை பெற்று வருகின்றன.
இதனால் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம் எழும்பூர் தெற்கு ரெயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திற்குப் பக்கத்தில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடமாற்றம் செய்யப்பட்ட வாகன நிறுத்துமிடத்தை அனைத்து பயணிகளும் நாளை(5-ந்தேதி) முதல் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று கூறப்பட்டு உள்ளது.
- நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் பணி நியமனம் அளித்து மாவட்ட கலெக்டர் சரயு ஆணையிட்டுள்ளார்.
- பாப்பி பிரான்சினா, பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையில் உள்ள அலுவலர்கள், நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் பணி நியமனம் அளித்து மாவட்ட கலெக்டர் சரயு ஆணையிட்டுள்ளார்.
அதன்படி, தளி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) பாலாஜி, கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) செந்தில், காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சதீஷ்பாபு, காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளர் சிவக்குமார், பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ) சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) பாப்பி பிரான்சினா, பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதே போல், கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) முருகன், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராம கணேஷ், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) துரைசாமி, ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவராகவும் (கி.ஊ), காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) உமாசங்கர், ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் தவமணி (கி.ஊ), வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) வேடியப்பன், வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), கிருஷ்ணகிரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சையத் பயாஸ் அகமது, சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சுப்பிரமணி, ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ), ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஹேமலதா, கிருஷ்ணகிரி வளர்ச்சிப் பிரிவு, வட்டார வளர்ச்சி அலுவலர், அலுவலக மேலாளராகவும் (வளர்ச்சி), கிருஷ்ணகிரி வளர்ச்சிப் பிரிவு, வட்டார வளர்ச்சி அலுவலர், அலுவலக மேலாளராக (வளர்ச்சி) இருந்த முகமது சிராஜிதீன், தளி வட்டார வளர்ச்சி அலுவலராக (வ.ஊ), சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) விமல் ரவிக்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளராகவும், ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சிவப்பிரகாசம், கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) மகேஸ்வரன், கிருஷ்ணகிரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவல வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு பிறப்பித்துள்ளார்.
- 6 மாவட்ட கலெக்டர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்,
- அரசு துணைச் செயலாளராக டி.ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, கீழ்க்கண்டவாறு அவர்கள் புதியதாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்ட கலெக்டர்: பிருந்தா தேவி
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர்: தட்பகராஜ்
தென்காசி மாவட்ட கலெக்டர்: கமல் கிஷோர்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்: அருண் ராஜ்
வேலூர் மாவட்ட கலெக்டர்: சுப்புலட்சுமி
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்: பாஸ்கர பாண்டியன்
வேளாண்மைத்துறை இயக்குனர்: பி. முருகேஷ்
தோட்டக்கலை இயக்குனர்: பி.குமாரவேல் பாண்டியன்
அரசு துணைச் செயலாளர்: டி.ரவிச்சந்திரன்
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குனர்: எம். லட்சுமி
வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் துறை கமிஷனர்: ஜி. பிரகாஷ்
வருவாய் நிர்வாகக் கூடுதல் ஆணையராக எஸ். நடராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஜெயஷ்ரீ முரளிதரன் சமூக நலத்துறை செயலாளராக மாற்றம்.
- சமூக நலத்துறை செயலாளராக இருந்த ஜடக் சிரு, மீன்வளத்துறை ஆணையராக மாற்றம்.
தமிழகத்தில் முக்கிய துறைகளை சேர்ந்த ஐ.ஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதகிாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வேளாண்துறை ஆணையராக இருந்த எஸ்.சுப்பிரமணியன், தமிழ்வளர்ச்சி மற்றும் தகவல்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஜெயஷ்ரீ முரளிதரன் சமூக நலத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நில நிர்வாகத்துறை ஆணையராக இருந்த எஸ்.நாகராஜன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மீன்வளத்துறை ஆணையராக இருந்த கே.எஸ்.பழனிசாமி, நில நிர்வாகத்துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சமூக நலத்துறை செயலாளராக இருந்த ஜடக் சிரு, மீன்வளத்துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
- போலீசார் சுமத்திய குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
சென்னை:
புதுச்சேரி முன்னாள் போக்குவரத்து அமைச்சர் கல்யாண சுந்தரம் . இவர் கடந்த 2011-ம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை நடத்திய பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார் இந்த தேர்வில் தனித் தேர்வலராக அவர் பங்கேற்றார். அப்போது இவருக்கு பதில் வேறு ஒருவர் தேர்வை எழுதியதாக கூறப்பட்டது.
இது குறித்து விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு சிறை தண்டனை வழங்கியது. இதனால் அவர் அமைச்சர் பதவியை இழந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட கோர்ட்டு அவரை விடுதலை செய்தது. இதை எதிர்த்து விழுப்புரம் போலீசார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று பிறப்பித்தார்.
போலீசார் சுமத்திய குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
சண்முகசுந்தரம் அமைச்சராக இருந்த போது என்.ஆர்.காங்கிரசில் இருந்தார். தற்போது காலாபட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
- குப்புராணி கோவை மண்டல தலைமை மின் பொறியாளராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
- புதிய நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளராக டேவிட் ஜெபசிங் இன்று பொறுப்பேற்று கொண்டார்.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லை மண்டலத்திற்கு உட்பட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளராக பணியாற்றி வந்த குப்புராணி கோவை மண்டல தலைமை மின் பொறியாளராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் புதிய நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளராக டேவிட் ஜெபசிங் இன்று பொறுப்பேற்று கொண்டார். அவரிடம் மாறுதலாகி செல்லும் தலைமை மின் பொறியாளர் குப்புராணி பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட மேற்பார்வை மின் பொறியாளர்கள், மின் பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சிறப்பு செயலாளர் ஜெயகாந்தன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனராக மாற்றப்பட்டார்.
- வேளாண்மை கூடுதல் இயக்குனர் ஷ்ரேயா சிங், தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு கழகத்தின் செயல் இயக்குனராக மாற்றப்பட்டார்.
சென்னை:
தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண் இயக்குனர் பிரதாப், சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறையின் துணை செயலாளராக மாற்றப்பட்டார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சிறப்பு செயலாளர் ஜெயகாந்தன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனராக மாற்றப்பட்டார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இயக்குனர் ரத்னா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இணை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
வணிக வரிகள் மற்றும் மாநில வரிகள் (கோவை) இணை கமிஷனர் காயத்ரி கிருஷ்ணன், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக மாற்றப்பட்டார்.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் விஜயகார்த்திகேயன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குனராகவும், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் திட்ட இயக்குனராகவும் மாற்றப்பட்டார். அவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராகவும் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
வேளாண்மை கூடுதல் இயக்குனர் ஷ்ரேயா சிங், தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு கழகத்தின் செயல் இயக்குனராக மாற்றப்பட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. நரேந்திரன் நாயர் உத்தரவின் பேரில் நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- நெல்லை மாநகர் பேட்டை சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி மற்றும் மாநகர தீவிர குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ஆகியோர் நெல்லை மாவட்டத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை:
தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. நரேந்திரன் நாயர் உத்தரவின் பேரில் நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி வள்ளியூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வரும் ஸ்டீபன் ஜோஸ் நெல்லை மாநகரத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். நெல்லை டவுன் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்து வரும் சுப்புலட்சுமி நெல்லை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் நெல்லை மாநகரத்திற்கும், நெல்லை மாநகர் பேட்டை சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி மற்றும் மாநகர தீவிர குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ஆகியோர் நெல்லை மாவட்டத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள வெள்ளக்கல்பட்டி ஊராட்சி வெள்ளைக் கரடு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
- இங்குள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கூடாது.
கருப்பூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள வெள்ளக்கல்பட்டி ஊராட்சி வெள்ளைக் கரடு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. தற்போது அந்த கடையை அதிகாரிகள் குடியிருப்பு பகுதிக்கு மாற்றம் செய்யும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் நெருஞ்சிபட்டி, மாங்குப்பை ஆகிய கிராம பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். இங்குள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கூடாது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் பாதிக்கப்படுவர். தற்போது உள்ள இடத்திலேயே டாஸ்மாக் கடை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.
அதனை வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கே.கே.கண்ணன், துணைத் தலைவர் ராஜா, ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி ஆகியோர் பெற்றுக்கொண்டு அரசுக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தனர்.
- பணியிட மாற்றத்திற்கான உத்தரவை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பிறப்பித்துள்ளார்.
- தாசில்தார் நிலையில் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில் நிர்வாக நலன் கருதி, தாசில்தார் நிலையில் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மடத்துக்குளம் தாசில்தாராக இருந்த செல்வி காங்கயம் ஆதிதிராவிடர் நல (நிலம் எடுப்பு) தனிதாசில்தாராகவும், ஊத்துக்குளி தாசில்தாராக இருந்த தங்கவேல் காங்கயம் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், தமிழ்நாடு மாநில வாணிப கழக உதவி மேலாளராக (சில்லறை விற்பனை) இருந்த சரவணன் ஊத்துக்குளி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோல் காங்கயம் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராக இருந்த பானுமதி மடத்துக்குளம் தாசில்தாராகவும், காங்கயம் ஆதிதிராவிடர் நல (நில எடுப்பு) தனிதாசில்தாராக இருந்த நந்தகோபால் திருப்பூர் தமிழ்நாடு வாணிப கழக உதவி மேலாளராக (சில்லறை விற்பனை) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோல் 5 துணை தாசில்தார்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த சிவசுப்பிரமணியன் திருப்பூர் தெற்கு வட்ட வழங்கல் அதிகாரியாகவும், திருப்பூர் துணை தாசில்தாராக இருந்த தமிழேஸ்வரன் கலெக்டர் அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட தலைமை உதவியாளராகவும், தெற்கு வட்ட வழங்கல் அதிகாரியாக இருந்த புஷ்பராஜன் மாவட்ட கலெக்டர் அலுவலக வரவேற்பு துணை தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பல்லடம் தலைமையிடத்து துணை தாசில்தாராக இருந்த முருகேஸ்வரன் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம்-2 துணை தாசில்தாராகவும், சாலை மேம்பாட்டு திட்ட துணை தாசில்தாராக இருந்த சிவக்குமார் பல்லடம் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பிறப்பித்துள்ளார்.
- போலீஸ் குடியிருப்புக்கும் சி.பி.சி.ஐ.டி. ஷாம்ளா பெரியகடைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
- உத்தரவை தலைமையக எஸ்.பி. சுபம்கோஷ் பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி:
போலீஸ் துறையில் 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 181 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிக்மா செக்யூரிட்டியில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம் மாகிவிற்கும், வெங்கடாஜலபதி ஓதியஞ்சாலைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
போலீஸ் குடியிருப்பு குமரவேல், கடலோர காவல்பிரிவுக்கும், அரியாங்குப்பம் பழனிசாமி சிக்மா செக்யூரிட்டிக்கும், காரைக்கால் ஆயுதப்படை தமிழரசன், புதுவை போலீஸ் குடியிருப்புக்கும் சி.பி.சி.ஐ.டி. ஷாம்ளா பெரியகடைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
தலைமை காவலர்கள் 15 பேர் உதவி சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளித்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10 பெண் போலீசார் உட்பட 160 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமையக எஸ்.பி. சுபம்கோஷ் பிறப்பித்துள்ளார்.
- வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டத்தில் வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மடத்துக்குளம் தனி வட்டாட்சியர் மயில்சாமி காங்கேயம் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவிநாசி வட்டாட்சியர் சுந்தரம் உடுமலை வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார் .உடுமலை வட்டாட்சியராக பணியாற்றி வந்த கண்ணாமணி மடத்துக்குளம் தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்