search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siva"

    • இதில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர்.
    • இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார்.

    இதில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதி காட்சி படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி உள்ளன.

    கங்குவா படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகியது. வெளியான குறுகிய நேரத்தில் பலக் கோடி பார்வைகளை பெற்றது. டீசரில் சூர்யா மிக அற்புதமாக நடித்து இருப்பார். இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    அதில் இரு வேடங்களில் காணப்படுகிறார். ஒரு கதாப்பாத்திரம் கையில் கத்தியுடன் ஒரு பழங்கால வீரரைப் போல் காட்சியளிக்கிறார். அவருக்கு எதிரி மற்றொரு கதாப்பாத்திரம் இக்கால மனிதனைப் போல் கோட் சூட் அணிந்து கையில் துப்பாக்கியுடன் காணப்படுகிறார்.

    எப்படிப்பட்ட கதைக்களத்துடன் இருக்கும் என பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கிடையே உருவாகியுள்ளது. படம் இந்தாண்டு வெளியிடப்போவதாக கூறியுள்ளனர். தற்பொழுது கங்குவா படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வி.எஃப்.எக்ஸ். வேலைகளுக்காக பாராட்டுகளை பெற்றது.
    • பாபி தியோல் இந்த படத்தில் நடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நடிகர் சூர்யாவின் கங்குவா டீசர் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் வம்சி- பிரமோத் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

    இயக்குநர் சிவா இயக்கும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இதன் அறிவிப்பில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்த டீசர் மேக்கிங் மற்றும் வி.எஃப்.எக்ஸ். வேலைகளுக்காக பாராட்டுகளை பெற்றுள்ளது.

     


    இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அனிமல் படத்தின் வெற்றி மூலம் அனைவரையும் ஈர்த்த நடிகர் பாபி தியோல் இந்த படத்தில் நடித்துள்ளார். கங்குவா டீசர் வெளியான குறுகிய காலத்தில் 1.8 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.

    இந்த படத்திற்கு மிலன் கலை இயக்குநராகவும், நிஷாத் யூசுப் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். சுப்ரீம் சுந்தர் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். எழுத்தாளர் ஆதி நாராயணாவுடன் இணைந்து மதன் கார்க்கி இப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூர்யா இப்படத்தில் 6 வேடங்களில் நடித்துள்ளார்
    • . இந்திய சினிமாவில் மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் கங்குவா.

    தமிழ் சினிமாவின் மிக முக்கிய கதாநாயகனாக சூர்யா இருக்கிறார். திரைத்துறை பணியிலும் , சமூக பணியிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 2020-ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த 'சூரரைப் போற்று' படத்திற்காக தேசிய விருதைப் பெற்றார் சூர்யா.

    2021 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெய் பீம் மக்களிடையே சூர்யாவுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இந்நிலையில் இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள படம் 'கங்குவா'. ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். அவர் இதுவரை தயாரித்த படங்களில் கங்குவா தான்

    மிகப்பெரிய பட்ஜட் படம். சூர்யா இப்படத்தில் 6 வேடங்களில் நடித்துள்ளார். பாபி டியோல், திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா, கே.எஸ் ரவிக்குமார் என பல முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர்.

    தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்திய சினிமாவில் மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் கங்குவா. இத்திரைப்படம் 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4.30 மணியளவில் கங்குவா படத்தின் டீசர் வெளியிடப்படும் என படக்குழுவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.இதனால் ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அரசு தொடர்புடைய காரியங்களில் ஏற்படும் தடைகள் தீர, ஆட்சிஸ்வரரை வழிபாடு செய்வது சிறந்த பரிகாரமாகும்.
    • இங்கு வழிபாடு செய்பவர்கள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கக்கூடிய பேறு பெறுவார்கள்.

    அச்சரபாக்கம் தலத்தில் சர்வேஸ்வரன் அட்சரம் என்ற எழுத்தின் வடிவமாக இருப்பதால் இங்கு வழிபாடு செய்யும் அன்பர்கள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கக்கூடிய பேறு பெறுவார்கள்.

    அரசு தொடர்புடைய காரியங்களில் ஏற்படும் தடைகள் தீர, ஆட்சிஸ்வரரை வழிபாடு செய்வது சிறந்த பரிகாரமாகும்.

    மேலும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்வதால் அரசுப் பணிபுரிய வாய்ப்பும் ஆளுமைத் திறனும், பதவி உயர்வும் கிடைக்கும்.

    ஏழ்மையினாலோ அல்லது வீண் பழியினாலோ உற்றார் உறவினர்களாலும், நண்பர்களாலும் சிறுமைப்படுத்தப்படும் துர்பாக்கியம் ஏற்பட்டால், அதற்கு உடனடியாகப் பரிகாரமளிக்கும் திருத்தலம்.

    கடன் தொல்லைகள் அல்லது தவறான நண்பர்களுடன் நெருங்கிப் பழகியதால் அவப்பெயர் ஏற்பட்டு மனதில் எப்பொழுது பார்த்தாலும், பிறரால் என்ன ஏற்படுமோ என்ற நிலை ஏற்படும் போது, வியக்கத்தக்க வகையில் அந்த அச்சத்தை போக்கும்.

    இத்தகைய அரிய சக்திக்குக் காரணம், கருவறையில் எழுந்தருளியுள்ள மூலவருக்கு அடியில் சில ரகசிய அதர்வண வேத யந்திரங்கள், பிரத்யேகமாக இத்தகைய தோஷங்களைப் போக்குவதற்கென்றே பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதே ஆகும்.

    • ஆலயங்களில் பிரதட்சனம் செய்வதில் அந்தந்த சந்நதிக்கு ஏற்ப விதிமுறைகள் உள்ளன.
    • கார்த்திகை மாத 31 நாட்களுக்குள் 1008 சுற்றுகளையும் பக்தர்கள் முடித்து விடுவார்கள்.

    ஆலயங்களில் பிரதட்சனம் செய்வதில் அந்தந்த சந்நதிக்கு ஏற்ப விதிமுறைகள் உள்ளன.

    அவற்றை தெரிந்து கொண்டு பிரதட்சனம் செய்தால் அளவில்லாத பலன்களை பெற முடியும்.

    அந்த வகையில் அச்சரபாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் நடக்கும் "தலவிருட்ச பிரதட்சனம்" மிகவும் புகழ் பெற்றது.

    இங்குள்ள தல விருட்சத்தை 1008 தடவை சுற்றுவதாக வேண்டி கொண்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகமாகும்.

    இந்த பிரதட்சனம் கார்த்திகை மாதம் நடைபெறும்.

    பக்தர்கள் கார்த்திகை 1ந்தேதி தொடங்கி 31ந்தேதி வரை 1008 பிரதட்சனத்தை மேற்கொள்வார்கள்.

    ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இந்த பிரதட்சனம் நடைபெறும்.

    கார்த்திகை மாத 31 நாட்களுக்குள் 1008 சுற்றுகளையும் பக்தர்கள் முடித்து விடுவார்கள்.

    சமீப ஆண்டுகளாக இந்த வழிபாடு மிகவும் புகழ் பெற்றுள்ளது.

    • சில அபூர்வங்கள் மட்டும் இன்றும் நடைமுறையில் உள்ளது. அதில் ஒன்று கொன்றையடி சேவையாகும்.
    • இந்த அதிசயம் ஒவ்வொரு ஆண்டும் கொன்றையடி சேவையின்போது நடந்து வருகிறது.

    அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயம் எத்தனையோ விசேஷங்களையும், வித்தியாசங்களையும் உள்ளடக்கியது.

    நிறைய அபூர்வ தகவல்கள் இந்த தலத்தில் இருந்து மறைந்து போய் விட்டன.

    சில அபூர்வங்கள் மட்டும் இன்றும் நடைமுறையில் உள்ளது. அதில் ஒன்று கொன்றையடி சேவையாகும்.

    சித்திரை மாதம் இந்த கொன்றையடி சேவை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆலயத்தை கட்டிய திரிநேந்திர முனிவரிடம் சிவபெருமான் காட்சி கொடுத்து, "எமக்கு ஆலயம் எழுப்பிய உமக்கு என்ன வரம் வேண்டும் கேளும்" என்று கேட்டார்.

    அதற்கு அந்த முனிவர், "திரிபுரத்தை சம்காரம் சென்ற போது நீங்கள் ரதம் ஏறி சென்றீர்கள்.

    திரிபுரத்தை எரித்து விட்டு நீங்கள் ரதத்தில் இருந்து இறங்கும் காட்சி கண்கொள்ளா காட்சி.

    அப்படி நீங்கள் ரதம் இறங்கி செல்லும் காட்சியை எனக்கு காண்பிக்க வேண்டும்" என்றார்.

    அதை ஏற்றுக் கொண்டு சிவபெருமான் முனிவருக்காக ரதத்தில் வந்து இறங்குவது போன்று காட்சி கொடுத்து அருளினார்.

    அதை பிரதிபலிப்பது போல இந்த ஆலயத்தில் சித்திரை பிரமோற்சவத்தின் போது 7வது நாள் முனிவருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    பொதுவாக கொன்றை மரங்கள் தை மாதம் முடிந்து மாசியில் பூக்க தொடங்கும்.

    ஆனால் அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயத்துக்குள் இருக்கும் கொன்றை மரம் மாசி மாதம் பூக்காது.

    சித்திரை மாதம் பிரமோற்சவம் நடக்கும் நாளில் மட்டுமே பூக்கும்.

    இந்த அதிசயம் ஒவ்வொரு ஆண்டும் கொன்றையடி சேவையின்போது அற்புதமான ஒன்றாக நடந்து வருகிறது.

    வேறு எந்த சிவாலயத்திலும் இந்த அற்புதத்தை காண முடியாது.

    • இந்த தலத்தில் உமையாட்சீஸ்வரர் சன்னதியில் சிவபெருமான், பார்வதி திருமண கோலத்தில் காட்சி அளிக்கிறார்கள்.
    • இந்த வழிபாடு மூலம் மூன்றே மாதத்தில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாகும்.

    அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயம் திருமணம் கைகூட செய்யும் சிவாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது.

    இந்த தலத்தில் உமையாட்சீஸ்வரர் சன்னதியில் சிவபெருமான், பார்வதி திருமண கோலத்தில் காட்சி அளிக்கிறார்கள்.

    இது அகத்தியருக்கு சிவபெருமான் காட்டிய திருமண கோலமாக கருதப்படுகிறது.

    திருமணம் நடைபெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த சன்னதிக்கு வந்து மலர் மாலை அணிவித்து வழிபாடுகள் செய்ய வேண்டும்.

    சுவாமிக்கும், அம்பாளுக்கும் வேஷ்டி புடவை சாத்தி வழிபாடு செய்வது நல்லது.

    யாருக்கு திருமணம் நடைபெற வேண்டுமோ அவரது நட்சத்திர தினத்தன்று இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.

    வழிபாட்டுக்கு வரும் போது 3 மாலைகளை வாங்கி வர வேண்டும்.

    கோவில் அர்ச்சகர் சொல்வதற்கு ஏற்ப அந்த மாலைகளை பயன்படுத்தி வழிபாடுகள் செய்யப்பட வேண்டும்.

    அதன்பிறகு திருமண வயதில் இருப்பவர் தங்களுக்கு எத்தனை வயதாகிறதோ அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும்.

    சுவாமிக்கு கல்கண்டு, முந்திரி, திராட்சை ஆகியவை வாங்கி வந்து நைவேத்தியம் செய்ய வேண்டும்.

    பிறகு அதை அங்குள்ள பக்தர்களுக்கு வினியோகம் செய்யலாம்.

    இந்த வழிபாடு மூலம் மூன்றே மாதத்தில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாகும்.

    • சிதம்பரம் நடராஜர் ஆலயம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது.
    • மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளையும் சிதம்பரம் கொண்டுள்ளது.

    1. பஞ்ச பூதங்களால்தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது. பஞ்ச பூதங்களில் ஆகாயம் முதலில் தோன்றியது. அந்த வகையில் பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது.

    2. பஞ்சபூத தலங்கள் மற்றும்பாடல் பெற்ற தலங்களை வழிபட விரும்புபவர்கள் சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது என்பது ஐதீகமாக உள்ளது.

    3. வைணவத்தில் கோவில் என்றால் ஸ்ரீரங்கத்தை குறிப்பது போல சைவத்தில் கோவில் என்றால் சிதம்பரம் நடராஜரையே குறிக்கும்.

    4. சிதம்பரம் நடராஜர் ஆலயம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது.

    5. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளையும் சிதம்பரம் கொண்டுள்ளது.

    6. சிதம்பரம் நடராஜரை எல்லா கடவுள்களும் வந்து வழிபட்டு பேறு பெற்றனர். இதை உணர்த்தும் வகையில் நடராஜர் ஆலயம் முழுவதும் ஏராளமான சன்னதிகள் உள்ளன.

    7. நடராஜர் ஆலயத்துக்குள் தினமும் 27 லிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர ஏராளமான லிங்கங்கள் உள்ளன.

    8. சிவாலயங்களில் கர்ப்பக்கிரக கோஷ்டத்தை சுற்றி தெய்வ உருவங்கள் இருக்கும். சிதம்பரத்தில் அத்தகைய அமைப்பு இல்லை.

    9. திருவண்ணாமலை போன்றே எமன், சித்ரகுப்தன் இருவரும் சிதம்பரம் தலத்திலும் வழிபட்டுள்ளனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் பிரகாரத்தில் எமனுக்கும், சிவகாமி அம்மன் சன்னதி பகுதியில் சித்ரகுப்தனுக்கும் சிலை உள்ளது.

    10. இங்குள்ள 4 கோபுரங்களும் சிறப்பு களஞ்சியங்களாக உள்ளன. கிழக்கு கோபுரம் ஆடல் கலையின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. மற்றொரு கோபுரத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி, பராசக்தி, விநாயகர், முருகன், விஷ்ணு, தன்வந்திரி, இந்திரன், அக்னி, வாயு, குபேரன், புதன், நிருதி, காமன், பத்ரகாளி, துர்க்கை, கங்காதேவி, யமனாதேவி, ராகு, கேது, நாரதர், விசுவகர்மா, நாகதேவன், சுக்கிரன், லட்சுமி, வியாக்ரபாதர், அகத்தியர், திருமூலர், பதஞ்சலி ஆகியோர் சிலைகள் உள்ளன.

    11. புத்த மதத்தை தழுவிய மன்னன் அசோகன், தன் படை ஒன்றை அனுப்பி, சிதம்பரம் கோவிலை புத்த விகாரமாக மாற்ற முயன்றான். அவர்களை மாணிக்கவாசகர் தன் திறமையால் ஊமையாக்கி சிதம்பரத்தை காப்பாற்றினார்.

    12. தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும்பார்க்க முடியாதபடி சிதம்பரம் ஆலயத்தில் மட்டுமே அரிய வகை வித்தியாசமான சிவ வடிவங்களைப்பார்க்க முடியும்.

    13. தமிழ் மொழியை மட்டுமின்றி தமிழர் பண்பாட்டு கலாச்சாரத்தைபாதுகாத்த சிறப்பும் சிதம்பரம் ஆலயத்துக்கு உண்டு.

    14. அறுபத்து மூவர் வரலாறு மட்டும் சிதம்பரம் கோவிலில்பாதுகாப்புடன் வைக்கப்படாமல் இருந்திருந்தால் 63 நாயன்மார்கள் பற்றி குறிப்புகள் நமக்கு தெரியாமல் போய் இருக்கும். அந்த சிவனடியார்களை நாம் தெரிந்து கொள்ளாமலே போய் இருப்போம்.

    15. சிதம்பரம் கோவிலுக்குள் திருமுறைகள் உள்ளது என்பதை இந்த உலகுக்கு சொன்னவர் பொல்லாப் பிள்ளையார் ஆவார். எனவே விநாயகரை "மூத்த நாயனார்" என்கிறார்கள்.

    16. சிதம்பரம் தலத்தை நால்வரும் புகழ்ந்துபாடியுள்ளனர். எனவே திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் குரு பூஜை பெரிய திருவிழா போல இத்தலத்தில் கொண்டாடப்படுகிறது.

    17. மாணிக்கவாசகர் மட்டுமின்றி நந்தனார், கணம்புல்லர், திருநீலச் கண்டக் குயவர் ஆகியோரும் தில்லையில் முக்தி பெற்றனர்.

    18. சிதம்பரத்தில் நடக்கும் திருவிழாக்களில் திருவாதிரை திருவிழாவும் முக்கியமானது. அன்று ஒரு வாயாவது திருவாதிரைக்களி சாப்பிட வேண்டும் என்பார்கள்.

    19. ஒரு தடவை இத்தலத்தில் கொடியேற்றம் நடந்த போது கொடி ஏறாமல் தடைபட்டது. அப்போது உமாபதி சிவாச்சாரியார் என்பவர் கொடிக்கவி என்றபாடலைபாடினார். அடுத்த நிமிடம் கொடி மரத்தில் தானாகவே ஏறிய அற்புதம் நடந்தது.

    20. தேவநாயனார் என்பவர் நடராஜர் மீது ஒரு சித்தாந்தபாடலைபாடி கருவறை முன்புள்ள வெள்ளிப்படிகளில் நூலை வைத்தார். அப்போது படியில் உள்ள ஒரு யானை சிற்பம் உயிர் பெற்று அந்த நூலை எடுத்து நடராஜரின் காலடியில் எடுத்து வைத்தது. இந்த அதிசயம் காரணமாக அந்த நூலுக்கு "திருக்களிற்றுப்படியார்" என்ற பெயர் ஏற்பட்டது.

    21. முத்து தாண்டவர் என்ற புலவர் தினமும் சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்ததும், முதலில் தன் காதில் எந்த சொல் விழுகிறதோ, அதை வைத்து கீர்த்தனை இயற்றி,பாடி நடராஜரை துதித்து வழிப்பட்டார். அவர்பாடி முடித்ததும் தினமும் அவருக்கு நடராஜர் படிக்காசு கொடுத்தது ஆச்சரியமானது.

    22. சங்க இலக்கியமான கலித் தொகையின் முதல்பாடல் சிதம்பரம் நடராஜர் துதியாக உள்ளது. எனவே சங்க காலத்துக்கு முன்பே சிதம்பரம் தலம் புகழ் பெற்றிருந்தது உறுதியாகிறது.

    23. சிதம்பரம் நடராஜருக்கு சிதம்பரத்தின் பல பகுதிகளிலும் தீர்த்தங்கள் உள்ளன.

    24. ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு தல புராணத்தை சிறப்பாக சொல்வார்கள். சிதம்பரம் ஆலயத்துக்கு புலியூர் புராணம், கோவில் புராணம், சிதம்பரப் புராணம் என்று மூன்று தல புராணங்கள் உள்ளன.

    25. சங்க கால தமிழர்கள் கட்டிய சிதம்பரம் ஆலயம் இப்போது இல்லை. தற்போதுள்ள ஆலயம் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டு, சோழ மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டதாகும்.

    26. சங்க காலத்துக்கு முன்பு சிதம்பரம் ஆலயம் கடலோரத்தில் இருந்ததாகபாடல்கள் குறிப்பின் மூலம் தெரிகிறது.

    27. சிதம்பரம் தலம் உருவான போது பொன்னம்பலம் எனும் கருவறை தென் திசை நோக்கி இருந்ததாம். பல்லவ மன்னர்கள் புதிய கோவில் கட்டிய போது அதை வடதிசை நோக்கி அமைத்து விட்டதாக சொல்கிறார்கள்.

    28. முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் படையெடுப்பின் போது சிதம்பரம் தலம் பல தடவை இடித்து நொறுக்கப்பட்டது. என்றாலும் பழமை சிறப்பு மாறாமல் சிதம்பரம் தலம் மீண்டும் எழுந்தது.

    29. இத்தலத்துக்கு "தில்லை வனம்" என்றும் ஒரு பெயர் உண்டு. புலியூர், பூலோக கைலாசம், புண்டரீகபுரம், வியாக்கிரபுரம் முதலிய வேறு பெயர்களும் உண்டு.

    30. மாணிக்கவாசகர் இத்தலத்தில் தங்கி இருந்த போது, கண்டப்பத்து, குயில்பத்து, குலாபத்து, கோத்தும்பி, திருப்பூவல்லி, திருத்தோணோக்கம், திருத்தெற்றோணம், திருப்பொற்சுண்ணம், திருப்பொன்னூசல், திருவுந்தியார், அண்ணப்பத்து, கோவில் பதிகம், கோவில் மூத்த திருப்பதிகம், எண்ணப்பதிகம், ஆனந்த மாலை, திருப்படையெழுச்சி, யாத்திரைப்பத்து நூல்களைபாடினார்.

    • பஞ்சப்பூத தலங்களில் சிதம்பரம் தலம் ஆகாய தலமாக உள்ளது.
    • இந்த உருவங்களில் முதன் மையாகக் கருதப்படுவது நடராஜர் வடிவமாகும்.

    தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவாலயங்கள் உள்ளன.

    அவற்றில் 274 கோவில்கள்பாடல் பெற்ற சிவத்தலங்கள் என்ற சிறப்பைப் பெற்றுள்ளன.

    7, 8ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் இந்த 274 ஆலயங்கள் பற்றியும், அங்கு குடி கொண்டுள்ள சிவபெருமான் பற்றியும் தேவாரப் பதிகங்கள் இயற்றியுள்ளனர்.

    இந்த சிவதலங்கள் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிறப்புப் பெற்றவை.

    இந்த சிவ தலங்களில் முதன் மையானது என்ற பெருமையை சிதம்பரம் நடராஜர் ஆலயம் பெற்றுள்ளது.

    பஞ்சப்பூத தலங்களில் சிதம்பரம் தலம் ஆகாய தலமாக உள்ளது.

    ஈசன் இந்த பிரபஞ்சத்தை தோற்று வித்த போது, முதலில் ஆகாயம்தான் தோன்றியது.

    அதன்பிறகே காற்று, நீர், நிலம், நெருப்பு தோன்றின. எனவே சிதம்பரம் முதல் தலம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

    சிவ வழிபாட்டை தொடங்கு பவர்கள் சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது என்பார்கள்.

    இது மட்டுமல்ல கோவில் என்றாலே அது சிதம்பரம் தலத்தைத்தான் குறிக்கும் என்பார்கள்.

    சிதம்பரம் என்றதும் நமக்கு நடராஜர் பளீரென நினைவுக்கு வருவார்.

    ஒரு காலை தூக்கி நாட்டியமாடும் நடராஜரின் உருவமேனி வித்தியாசமானது.

    எத்தனை முறைபார்த்தாலும் சலிப்பே வராதது.

    உலகை ஆளும் சிவபெருமான் 25 விதமான உருவ மேனியைக் கொண்டவர்.

    இந்த உருவங்களில் முதன் மையாகக் கருதப்படுவது நடராஜர் வடிவமாகும்.

    பக்தர்கள் அதிகம் விரும்புவதும் இந்த வடிவத்தைத்தான்.

    எல்லா சிவாலயங்களிலும் நடராஜர் அருள்புரிந்தாலும் சிதம்பரம் தலத்தில் அவர் நம் ஒவ்வொருவரின் ஆத்மாவையும் மேம்படுத்தும் இறைவனாகத் திகழ்கிறார்.

    அதனால்தான் ''சிதம்பரம் தரிசிக்க முக்தி'' என்கிறார்கள்.

    சித் எனும் ஞானமும், அம்பரம் எனும் ஆகாசமும் இணைந்தே ''ஞானாகாசம்'' எனும் சிதம்பரம் ஆகியது.

    இத்தலத்தில் நடராஜர் ஆனந்த நடனம் ஆடியபடி உள்ளார்.

    அவர் ஆடலால்தான் இந்த உலகமே இயங்குகிறது என்று சிவனடி யார்கள் கூறுகிறார்கள்.

    இதை உறுதிபடுத்துவது போல அமெரிக்க பெண் விஞ்ஞானி ஒருவரின் ஆய்வு முடிவு இருந்தது.

    இந்த உலகின் மையப்புள்ளி எது என்று அவர் கடும் ஆராய்ச்சிகள் செய்து முடித்த போது, அந்த மையப்புள்ளி சிதம்பரம் தலத்தில் கருவறையில் உள்ள நடராஜரின் காலடிக் குள் இருப்பது தெரிந்தது.

    இப்படி எண்ணற்ற ரகசியங்கள் சிதம்பரம் தலத் தில் புதைந்து கிடக்கிறது.

    சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் சிதம்பரம் ஆலயத்தின் ஒவ்வொரு அம்சமும் ரகசியம் நிறைந்ததாக உள்ளது.

    உலகத் தொழில் ஐந்தி னையும் குறித்து உயர்ந்த தோற்றமே நடராஜரின் திருவுருவமாகும்.

    சிவ பெருமான் ஆன்மாக்களின் இரு வினைகளையும் தாமே ஏற்று அவைகளைப் போக்கி, முத்தி அளிக்க வேண்டி தனு, கரண, புவன யோகங்களை அளித்துள்ளான்.

    படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல், ஆகிய ஐந்து தொழில்களையும் அப்பெருமான் எப்போதும் செய்து கொண்டிருக்கிறான்.

    இந்த ஐந்து தொழில்களையும் உணர்த்துவதே நடராஜரின் திருவுருவமாகும்.

    ஐந்தொழில் புரியும் நடனம் பஞ்ச கிருத்திய நடனம் என போற்றப்படுகிறது.

    நடராஜர் நான்கு திருக்கரங்களைக் கொண்டிருக்கிறார்.

    ஒரு கரத்தில் தமருகமும், ஒரு கரத்தில் அனலும், ஏந்தி ஒரு கரம் அபயம் அளிக்க அதற்கு நேரான இடக்கரம் கீழ்நோக்கிச் சாய்ந்திருக்க வலக்காலை ஊன்றி இடக்காலை உயர்த்தி அவிர்சடையுடன் நடனம் ஆடுகிறார்.

    உலக உயிர்களின் தோற்றம் தமருக ஒலியில் உள்ளது. அபயமளிக்கும் கரம் காத்தல் தொழில் புரிகிறது.

    அனலேந்திய கரம் அழித்தல் தொழிலுக்கு உரியது.

    ஊன்றியுள்ள திருப்பாதம் மறைத் தலையும் உயர்த்திய திருப்பாதம் அருளையும் குறிக்கிறது.

    சிதம்பரம் சென்று வழிபடுகின்றவர்களுக்கு ஆனந்தமயமான வளமான பொன் பொருள் மிக்க வாழ்வு கிடைக்கும்.

    வானோங்கும் புகழ் சேரும். மீண்டும் வந்து பிறவாத பேரின்ப முக்தியும் உண்டாகும்.

    பசி பகை போன்றவை விலகும். மெய்ஞானம் உண்டாகும். எண்ணிய எண்ணம் ஈடேறும்.

    இத்தகைய சிறப்புடைய சிதம்பரம் தலம் பற்றிய இதர தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

    • பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாத முனிவரும் சிதம்பரம் தலத்தில் பரம்பொருளின் ஆனந்தக்கூத்து தரிசனம் பெற்றனர்.
    • திருக்கூத்து தரிசனம் அருளிச் செய்யுமாறு ஈசனை நோக்கித் தவம் புரிந்தனர்.

    பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாத முனிவரும் சிதம்பரம் தலத்தில் பரம் பொருளின் ஆனந்தக் கூத்து தரிசனம் பெற்றனர்.

    இதை அறிந்த தெய்வங்களும் தேவர்களும் சிவானந்தக்கூத்து காண விரும்பினார்கள்.

    பிரம்மன் விஷ்ணு லட்சுமி சரஸ்வதி பராசக்தி இந்திரன் முதலிய தேவர்கள் எல்லோரும் பூமியில் உள்ள தில்லை வனத்தை அடைந்தனர்.

    ஆகாயத்தலத்துப் பொன்மேனி அழகனைத் தொழுது போற்றிப் பூஜை செய்து வழிபட்டனர்.

    தில்லையம்பலத்தை பொன்னம்பலமாக்கிப் பொற்கூரை வேய்ந்து திருப்பணி செய்தனர்.

    திருக்கூத்து தரிசனம் அருளிச் செய்யுமாறு ஈசனை நோக்கித் தவம் புரிந்தனர்.

    பரமேஸ்வரன் மார்கழி மாதம் திருவாதிரை திருநாளன்று (ஆருத்திரா) தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் ஆனந்த நடனத் திருக்காட்சி கொடுத்து அருளினார்.

    ஆனந்த நடராஜரின் திருக்காட்சி கண்டு ஆடிப்பாடி மகிழ்ந்த தேவர்களும், தேவியர்களும் விழுந்து வணங்கிப் பணிந்தனர்.

    பிரம்மன் இறைவனது திருநடனத்திற்கு கீதம் பாடலானார். மகாவிஷ்ணு புல்லாங்குழல் ஊதினார்.

    ருத்திரன் மிருதங்கம் வாசித்தார். பராசக்திபாடினாள். சரஸ்வதி வீணை வாசித்தாள்.

    லட்சுமி தாளம் போட்டாள். நந்தி குடமுழா இயக்கினார்.

    இவ்வாறு எல்லோரும் கண்டு களித்துப்பணி புரியப் பரமன் தெய்வங்களுக்கும் தேவர்களுக்கும் ஆனந்த நடனக் காட்சியளித்தார்.

    • சிவபெருமான் தேவர்களின் சக்தியை ஒன்று சேர்த்து ஒரு பயங்கர ஆயுதத்தை உருவாக்கினார்.
    • ‘அகாரம்’ என்ற ஆயுதம் பரமசிவன் தன் கண்களை மூடாமல் பல வருடங்கள் தவம் செய்தது.

    திரிபுராசுரன் என்ற அரக்கன் ஒரு தடவை ஸ்ரீபிரம்மா, பரமேசுவரனிடம் வரம் பெற்று வல்லமை அடைந்து அதனால் கர்வம் கொண்டு தேவர்களை இம்சிக்க ஆரம்பித்தபொழுது ஸ்ரீவிஷ்ணு பரமேசுவரனை அணுகி இதற்கு விமோசனம் காண வழி சொன்னார்.

    சிவபெருமான் தேவர்களின் சக்தியை ஒன்று சேர்த்து ஒரு பயங்கர ஆயுதத்தை உருவாக்கினார்.

    'அகாரம்' என்ற ஆயுதம் பரமசிவன் தன் கண்களை மூடாமல் பல வருடங்கள் தவம் செய்தது.

    'அகோர அஸ்த்ர' நிர்மாணத்தின் பொருட்டு தன் மூன்று கண்களையும் மூட பல வருடங்களுக்குப் பின் தன் கண்களை திறந்தவுடன் கண்களில் இருந்து கண்ணீர் சொட்டியது.

    அந்த கண்ணீர் துளிகள் பூமியில் ஆங்காங்கே தெறித்து விழுந்தன.

    அப்படி கண்ணீர் துளிகள் விழுந்த இடங்களில் ருத்ராட்ச மரங்கள் முளைத்தன.

    அப்படி ஈசனின் கண்களில் இருந்து கண்ணீர் தெறித்து விழுந்து ருத்ராட்ச மரம் உருவான தலங்களில் அச்சரபாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயமும் ஒன்றாக கருதப்படுகிறது.

    இதனால் ஆட்சீஸ்வரர் ஆலயத்துக்கு ருத்ராட்சத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

    ருத்ராட்சம் ஒரு முகத்தில் இருந்து பல முகங்கள் உடையதாக இருக்கும்.

    ஒவ்வொரு முகத்திலும் ஒவ்வொரு விதை இருக்கும்.

    அக்கினித்தேவன் மூன்று முக ருத்ராட்சத்திற்கு அதிபதி என்று கூறப்படுகிறது.

    ஏழு முக ருத்ராட்சம் செல்வத்தைக் கொண்டு வரும் தன்மையையுடையது. அதாவது லட்சுமி தேவியை குறிக்கிறது.

    மாலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை, ஈஸ்வர அனுக்கிரகம், பஞ்சபூத அனுக்கிரகம் பெறுவதற்கு ருத்ராட்சம் அணிந்து கொள்ள வேண்டும் என்று நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.

    செந்நிறமாக செப்புத்தாது போல் காட்சியளிக்கும் ருத்ராட்சக் காய்களில் அற்புதமான, அபரிமிதமான காந்த சக்தி அடங்கி உள்ளது.

    இப்படி இயற்கையிலேயே காந்தசக்தி அடங்கிய காய் வேறு எதுவும் கிடையாது.

    இதில் அடங்கி உள்ள காந்த சக்தியால் நம் உடலும், உள்ளமும் பயன் அடையும்.

    ருத்ராட்சக் கொட்டை நம் உடலை தொட்டுக் கொண்டிருந்தால் உடலில் உள்ள உஷ்ணத்தையும், உள்ளத்தில் உள்ள கொந்தளிப்பையும் கிரகித்து பிளட் பிரஷரையும், மன சஞ்சலத்தையும் சீராக்கி விடும்.

    பிளட் பிரஷர் உள்ளவர்கள் ருத்ராட்சக் கொட்டையை தாங்கள் குடிக்கும் தண்ணீரில் ஐந்து நிமிடம் மிதக்கவிட்டுப் பின் அந்த நீரை அருந்த பிரஷர் கட்டுப்படும். குறையவும் செய்யும்.

    • சிவத்தலங்களில் பாடல் பெற்ற முதல் தலம் இந்த தலம்தான்.
    • இதன்மூலம் இந்த தலமே தமிழ்நாட்டின் முதல் சிவாலயம் என்பதை உறுதிபடுத்துகிறது.

    தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமையான சிவாலயங்கள் இருக்கின்றன.

    இவற்றில் 276 தலங்கள் பாடல் பெற்ற தலங்கள் என்ற சிறப்பை பெற்றவை.

    இந்த பழம்பெரும் சிவத்தலங்களில் மகத்துவமும் தனித்துவமும் நிறைந்தது உத்தரகோசமங்கை எனும் திருத்தலமாகும்.

    இந்த திருத்தலம் ராமநாதபுரத்துக்கு மிக, மிக அருகில் உள்ளது.

    சிவத்தலங்களில் பாடல் பெற்ற முதல் தலம் இந்த தலம்தான்.

    இதன்மூலம் இந்த தலமே தமிழ்நாட்டின் முதல் சிவாலயம் என்பதை உறுதிபடுத்துகிறது.

    சமயக்குறவர்களில் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் தம் வாழ்நாளில் பெரும்பகுதியை இத்தலத்தில் கழித்தார்.

    அவர் தன் பாடலில், "சிவன் உண்பதும், உறங்குவதும் உத்தரகோசமங்கை தலத்தில்தான்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஓம் எனும் பிரணவ மந்திரத்தை பார்வதி தேவிக்கு சிவபெருமான் இத்தலத்தில் வைத்துதான் ரகசியமாக சொல்லி கொடுத்தார் என்பார்கள்.

    அதுபோல பார்வதிக்கு நாட்டியக்கலையை ஈசன் இங்கு ரகசியமாக சொல்லிக் கொடுத்தார் என்பார்கள்.

    'மண் தோன்றிய போதே மங்கை தோன்றியது' என்பார்கள்.

    உலகிலேயே முதலில் தோன்றிய சிவன் கோவில் இது என்று கூறப்படுகிறது.

    ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது என்பதில் இருந்தே, இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.

    சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும். அதனால் இந்த ஊருக்கு "உத்தரகோசமங்கை" என்ற பெயர் தோன்றியது என்று சொல்கிறார்கள்.

    அதாவது உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை.

    மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது என்கிறார்கள்.

    ஆனால் இத்தல பெயர் விளக்கத்துக்கு வேறொன்றும் சொல்லப்படுகிறது. உத்திரம் என்றால் உபதேசம்.

    கோசம் என்றால் ரகசியம். மங்கை என்றால் பார்வதி என்று பொருள்.

    பார்வதிதேவிக்கு ஈசன் ரகசியமாக வேதத்தை உபதேசம் செய்த இடம் என்ற அர்த்தத்தில் இத்தலம் உத்தரகோச மங்கை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது என்கிறார்கள்.

    இத்தல மூலவர் 'மங்களநாதர்' சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர்.

    அந்த இலந்தை மரமே இவ்வாலயத்தின் தலவிருட்சமாக விளங்குகிறது.

    மங்கள நாதரின் உடனுறை அம்பிகையின் திருநாமம் மங்களேஸ்வரி என்பதாகும்.

    மாணிக்கவாசகர் இத் தலத்தில் சிவலிங்க வடிவிலும், நின்ற கோலத்திலும் காட்சி தருகிறார்.

    'நீத்தல் விண்ணப்பம்' என்னும் திருவாசகப் பகுதி இத்தலத்தில் பாடப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவாசகத்தில் 38 இடங்களில் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார் மாணிக்கவாசகர்.

    உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி.

    இதனால் அவளுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது.

    பின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள்.

    அதன்பிறகே ராவணனை கரம் பிடித்தாள்.

    மேலும் ராவணன் மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்று கூறப்படுகிறது.

    ×