search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்சீஸ்வரர்"

    பண் குறிஞ்சி: திருச்சிற்றம்பலம்

    பொன்றிரண் டன்ன புரிசடை புரளப்

    பொருகடற் பவளமொ டழல்நிறம் புரையக

    குன்றிரண் டன்ன தோளுடை யகலங்

    குலாயவெண் னூலொடு கொழும்பொடி யணிவர்

    மின்திரண் டன்ன நுண்ணிடை அரிவை

    மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி

    அன்றிரண் டுருவம் ஆயஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    1

    தேனினும் இனியர் பாலன் நீற்றர்

    தீங்கரும் பனையர்தந் திருவடி தொழுவார்

    ஊன்நயந் துருக உவகைகள் தருவார்

    உச்சிமே லுறைபவர் ஒன்றலா தூரார்

    வானக மிறந்து வையகம் வணங்க

    வயங்கொள நிற்பதோர் வடிவினை யுடையார்

    ஆணையின் உரிவை போர்த்தஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    2

    காரிரு ளுருவம் மால்வரை புரையக்

    களிற்றின துரிவைகொண்ட டரிவைமே லோடி

    நீருரு மகளை நிமிர்சடைத் தாங்கி

    நீறணிந் தேறுகந் தேறிய நிமலர்

    பேரரு ளாளர் பிறவியிற் சேரார்

    பிணியிலர் கேடிலர் பேய்க்கணஞ் சூழ

    ஆரிருண் மலை யாடுஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    3

    மைம்மலர்க் கோதை மார்பின ரெனவும்

    மலைமகள வளடு மருவின ரெனவும்

    செம்மலர்ப் பிறையுஞ் சிறையணி புனலுஞ்

    சென்னிமே லுடையரெஞ் சென்னிமே லுறைவார்

    தம்மல ரடியன் றடியவர் பரவத்

    தமிழ்ச்சொலும் வடசொலுந் தாள்நிழற் சேர

    அம்மலர்க் கொன்றை யணிந்தஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    4

    விண்ணுலா மதியஞ் சூடின ரெனவும்

    விரிசடை யுள்ளது வெள்ளநீ ரெனவும்

    பண்ணுலாம் மறைகள் பாடின ரெனவும்

    பலபுக ழல்லது பழியில ரெனவும்

    எண்ணலா காத இமையவர் நாளும்

    ஏத்தர வங்களோ டெழில்பெற நின்ற

    அண்ணலான் ஊர்தி ஏறும்எம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    5

    நீடிருஞ் சடைமேல் இளம்பிறை துளங்க

    நிழல்திகழ் மழுவொடு நீறுமெய் பூசித்

    தோடொரு காதினிற் பெய்துவெய் தாய

    சுடலையி லாடுவர் தோலுடை யாகக்

    காடரங் காகக் கங்குலும் பகலுங்

    கழுதொடு பாரிடங் கைதொழு தேத்த

    ஆடர வாட ஆடும்எம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    6

    ஏறுமொன் றேநி நீறுமெய் பூசி

    இளங்கிளை அரிவைய டொருங்குட னாகிக்

    கூறுமொன் றருளிக் கொன்றையந் தாருங்

    குளிரிள மதியமுங் கூவிள மலரும்

    நாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும்

    மகிழிள வன்னியும் இவைநலம் பகர

    ஆறுமோர் சடைமேல் அணிந்தஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    7

    கச்சும்ஒள் வாளுங் கட்டிய வுடையர்

    கதிர்முடி சுடர்விடக் கவரியுங் குடையும்

    பிச்சமும் பிறவும் பெண்அணங் காய

    பிறைநுத லவர்தமைப் பெரியவர் பேணப்

    பச்சமும் வலியுங் கருதிய அரக்கன்

    பருவரை யெடுத்ததிண் தோள்களை யடர்வித்

    தச்சமும் அருளுங் கொடுத்தஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    8

    நோற்றலா ரேனும் வேட்டலா ரேனும்

    நுகர்புகர் சாந்தமொ டேந்தியமாலைக்

    கூற்றலா ரேனும் இன்னவா றென்றும்

    எய்தலா காததொ ரியல்பினை யுடையார்

    தோற்றலார் மாலும் நான்முக முடைய

    தோன்றலும் அடியடு முடியுறத் தங்கள்

    ஆற்றலாற் காணா ராயஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    9

    வாதுசெய் சமணுஞ் சாக்கியப் பேய்கள்

    நல்வினை நீக்கிய வல்வினை யாளர்

    ஓதியுங் கேட்டு உணர்வினை யிலாதார்

    உள்கலா காததோ ரியல்பினை யுடையார்

    வேதமும் வேத நெறிகளு மாகி

    விமலவே டத்தொடு கமலமா மதிபோல்

    ஆதியும் ஈறும் ஆயஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    10

    மைச்செறி குவனை தவளைவாய் நிறைய

    மதுமலர்ப் பொய்கையிற் புதுமலர் கிழியப்

    பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப்

    பதியவர் அதிபதி கவுணியர் பெருமான்

    கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக்

    கருத்துடை ஞானசம் பந்தன தமிழ்கொண் டச்சிறு பாக்கத் தடிகளை யேத்தும்

    அன்புடை யடியவர் அருவினையிலரே.

    • சிவபெருமான் தேவர்களின் சக்தியை ஒன்று சேர்த்து ஒரு பயங்கர ஆயுதத்தை உருவாக்கினார்.
    • ‘அகாரம்’ என்ற ஆயுதம் பரமசிவன் தன் கண்களை மூடாமல் பல வருடங்கள் தவம் செய்தது.

    திரிபுராசுரன் என்ற அரக்கன் ஒரு தடவை ஸ்ரீபிரம்மா, பரமேசுவரனிடம் வரம் பெற்று வல்லமை அடைந்து அதனால் கர்வம் கொண்டு தேவர்களை இம்சிக்க ஆரம்பித்தபொழுது ஸ்ரீவிஷ்ணு பரமேசுவரனை அணுகி இதற்கு விமோசனம் காண வழி சொன்னார்.

    சிவபெருமான் தேவர்களின் சக்தியை ஒன்று சேர்த்து ஒரு பயங்கர ஆயுதத்தை உருவாக்கினார்.

    'அகாரம்' என்ற ஆயுதம் பரமசிவன் தன் கண்களை மூடாமல் பல வருடங்கள் தவம் செய்தது.

    'அகோர அஸ்த்ர' நிர்மாணத்தின் பொருட்டு தன் மூன்று கண்களையும் மூட பல வருடங்களுக்குப் பின் தன் கண்களை திறந்தவுடன் கண்களில் இருந்து கண்ணீர் சொட்டியது.

    அந்த கண்ணீர் துளிகள் பூமியில் ஆங்காங்கே தெறித்து விழுந்தன.

    அப்படி கண்ணீர் துளிகள் விழுந்த இடங்களில் ருத்ராட்ச மரங்கள் முளைத்தன.

    அப்படி ஈசனின் கண்களில் இருந்து கண்ணீர் தெறித்து விழுந்து ருத்ராட்ச மரம் உருவான தலங்களில் அச்சரபாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயமும் ஒன்றாக கருதப்படுகிறது.

    இதனால் ஆட்சீஸ்வரர் ஆலயத்துக்கு ருத்ராட்சத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

    ருத்ராட்சம் ஒரு முகத்தில் இருந்து பல முகங்கள் உடையதாக இருக்கும்.

    ஒவ்வொரு முகத்திலும் ஒவ்வொரு விதை இருக்கும்.

    அக்கினித்தேவன் மூன்று முக ருத்ராட்சத்திற்கு அதிபதி என்று கூறப்படுகிறது.

    ஏழு முக ருத்ராட்சம் செல்வத்தைக் கொண்டு வரும் தன்மையையுடையது. அதாவது லட்சுமி தேவியை குறிக்கிறது.

    மாலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை, ஈஸ்வர அனுக்கிரகம், பஞ்சபூத அனுக்கிரகம் பெறுவதற்கு ருத்ராட்சம் அணிந்து கொள்ள வேண்டும் என்று நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.

    செந்நிறமாக செப்புத்தாது போல் காட்சியளிக்கும் ருத்ராட்சக் காய்களில் அற்புதமான, அபரிமிதமான காந்த சக்தி அடங்கி உள்ளது.

    இப்படி இயற்கையிலேயே காந்தசக்தி அடங்கிய காய் வேறு எதுவும் கிடையாது.

    இதில் அடங்கி உள்ள காந்த சக்தியால் நம் உடலும், உள்ளமும் பயன் அடையும்.

    ருத்ராட்சக் கொட்டை நம் உடலை தொட்டுக் கொண்டிருந்தால் உடலில் உள்ள உஷ்ணத்தையும், உள்ளத்தில் உள்ள கொந்தளிப்பையும் கிரகித்து பிளட் பிரஷரையும், மன சஞ்சலத்தையும் சீராக்கி விடும்.

    பிளட் பிரஷர் உள்ளவர்கள் ருத்ராட்சக் கொட்டையை தாங்கள் குடிக்கும் தண்ணீரில் ஐந்து நிமிடம் மிதக்கவிட்டுப் பின் அந்த நீரை அருந்த பிரஷர் கட்டுப்படும். குறையவும் செய்யும்.

    • விநாயகர் விக்னேசுவரர். தன்னை வழிபடுவோரின் விக்னங்களைப் போக்குவார்.
    • ‘‘தனதடி வழிபடும் அவர் இட கடி கணபதி‘‘ எனத் திருஞானசம்பந்தர் போற்றுவார்.

    முன்பு ஒரு காலத்தில் தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய மூன்று அசுரர்களும் பிரம்மதேவரை நோக்கிக் கடுந்தவம் புரிந்தனர்.

    அவர்கள் தவத்துக்கு இரங்கி பிரம்மதேவர் அவர்கள் முன்புதோன்றி, ''உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?'' எனக் கேட்டார்.

    அதற்கு அவர்கள் முறையே தங்களுக்கு பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் ஆனதும் பறக்கும் திறன் வாய்ந்ததுமான மூன்று கோட்டைகள் வேண்டும்'' என வேண்டினர். அவரும் அவ்விதமே தந்தருளினார்.

    அந்த மூன்று அசுரர்களும் கோட்டைகளுடன் வானத்தில் பறந்து சென்று தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் தந்து வந்தனர்.

    தேவர்கள் துன்பம் பொறுக்க முடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

    சிவபெருமான் சூரிய சந்திரர்களைச் சக்கரங்களாகவும், கீழ் ஏழு உலகங்களைத் தேருக்குக் கீழ்த்தட்டுகளாகவும்

    எட்டுத்திக்கும் உள்ள மலைகளைத் தூண்களாகவும் மேலேழு உலகங்களைத் தேரின் மேல் தட்டுகளாகவும்

    இமயத்தைக் கொடியாக்கி நான்கு வேதங்களைக் குதிரைகளாகவும் பிரம்மாவைத் சாரதியாகவும்,

    மகாமேருமலையை வில்லாகவும் ஆதிசேஷனை அந்த வில்லுக்கு நாணாகவும் திருமாலை அம்பாகவும் அமைத்துக் கொண்டு தேவாம்சம் பொருந்திய தேரை உருவாக்கினார்.

    அந்த தேரில் ஏறி அசுரர்கள் தங்கியிருந்த திரிபுரம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

    அப்போது அவர் முழு முதற்கடவுளாகிய விநாயகரை வழிபடாமல் புறப்பட்டார்.

    தேவர்கள் தம்மை மதியாது சென்ற தேவர்களின் செயல்கண்டு கோபம் கொண்ட விநாயகப் பெருமான் தேரின் அச்சை முறித்து தடையை ஏற்படுத்தினார்.

    இதனால் மகேசனின் தேர் தொடர்ந்து செல்ல முடியாமல் புறப்பட்ட இடத்திலேயே நின்றது.

    வினைகளை வேரறுக்கும் விநாயகப் பெருமானின் செயல் இது என்பதை குறிப்பால் உணர்ந்த ஈசன், தன் தனயனை நினைத்து செல்லும் செயல் சிறப்படைய வேண்டும் என திருவுள்ளம் பற்றினான்.

    இதனால் அத்தேரின் அச்சு வழியில் முறிந்துவிட்டது. அப்படித் தேரின் அச்சு இற்ற இடமே 'அச்சிறுப்பாக்கம்' எனப் பெயர் பெற்றது.

    இதனை அருணகிரிநாதர் திருப்புகழில் ''முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடி செய்த அதிதீரா'' எனப் பாடுகிறார்.

    எவரும் ஒரு செயலைச் செய்யத் தொடங்குகையில் விநாயகரை வழிபட்டே தொடங்க வேண்டும். அப்படித் தொடங்கினால் அவர் செயலை விநாயகர் முன்னின்று முடித்து வைக்க வேண்டும்.

    தன்னை வணங்காமல் தொடங்கினால் இடையூறு செய்ய வேண்டும் என விதித்தவரே சிவ பெருமான்தான்.

    அவ்விதியை உலகிற்கு செயல்படுத்திக்காட்ட அவர் அமைத்துக் கொண்ட திருவிளையாடலே இது.

    சிவபெருமான் தேவம்சம் பொருந்திய தேரில் இருந்து இறங்கி ஸ்ரீவிநாயக பெரு மானை வணங்கி, விநாயக பெருமானுக்கு முக்கண் உடைய தேங்காய் பலியிட்டு (செதூர் தேங்காய் உடைத்து) மீண்டும் அத்தேரில் சென்று முப்பராதிகளை அழிக்க திருவதிகை என்ற தலத்துக்கு சென்றார்.

    யாரின் துணையும் இல்லாமலேயே சிவன் சிரித்தார். அவ்வளவிலேயே முப்புரங்களை எரித்தார்.

    விநாயகர் விக்னேசுவரர். தன்னை வழிபடுவோரின் விக்னங்களைப் போக்குவார்.

    தம்மை வழிபடாதவர்க்கு விக்கினங்களை ஆக்குவார்.

    ''தனதடி வழிபடும் அவர் இட கடி கணபதி'' எனத் திருஞானசம்பந்தர் போற்றுவார்.

    இவ்வரலாற்றை நினைவூட்டும் வகையில் கிழக்கு மாடவீதியில் ''அச்சுமுறி விநாயகர்'' திருக்கோவில் கொண்டு எழுந்தருளி உள்ளார்.

    தேர் அச்சு + இற்ற காரணத்தினால் அச்சிறுபாக்கம் என இவ்வூர் பெயர் பெற காரணம் ஆகும்.

    இவ்வாலயத்தில் அச்சுமுறி விநாயகரை வழிபட்டால் சலக கஷ்டங்களும், சகலவித தோஷங்களும், தொழில் தொடங்குவதற்கு தடங்களும், படிப்பிற்கும் 11, 54, 108, 1008 சதூர் தேங்காய் உடைத்து சங்கடங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    ×