search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருஞான சம்பந்தர்"

    பண் குறிஞ்சி: திருச்சிற்றம்பலம்

    பொன்றிரண் டன்ன புரிசடை புரளப்

    பொருகடற் பவளமொ டழல்நிறம் புரையக

    குன்றிரண் டன்ன தோளுடை யகலங்

    குலாயவெண் னூலொடு கொழும்பொடி யணிவர்

    மின்திரண் டன்ன நுண்ணிடை அரிவை

    மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி

    அன்றிரண் டுருவம் ஆயஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    1

    தேனினும் இனியர் பாலன் நீற்றர்

    தீங்கரும் பனையர்தந் திருவடி தொழுவார்

    ஊன்நயந் துருக உவகைகள் தருவார்

    உச்சிமே லுறைபவர் ஒன்றலா தூரார்

    வானக மிறந்து வையகம் வணங்க

    வயங்கொள நிற்பதோர் வடிவினை யுடையார்

    ஆணையின் உரிவை போர்த்தஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    2

    காரிரு ளுருவம் மால்வரை புரையக்

    களிற்றின துரிவைகொண்ட டரிவைமே லோடி

    நீருரு மகளை நிமிர்சடைத் தாங்கி

    நீறணிந் தேறுகந் தேறிய நிமலர்

    பேரரு ளாளர் பிறவியிற் சேரார்

    பிணியிலர் கேடிலர் பேய்க்கணஞ் சூழ

    ஆரிருண் மலை யாடுஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    3

    மைம்மலர்க் கோதை மார்பின ரெனவும்

    மலைமகள வளடு மருவின ரெனவும்

    செம்மலர்ப் பிறையுஞ் சிறையணி புனலுஞ்

    சென்னிமே லுடையரெஞ் சென்னிமே லுறைவார்

    தம்மல ரடியன் றடியவர் பரவத்

    தமிழ்ச்சொலும் வடசொலுந் தாள்நிழற் சேர

    அம்மலர்க் கொன்றை யணிந்தஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    4

    விண்ணுலா மதியஞ் சூடின ரெனவும்

    விரிசடை யுள்ளது வெள்ளநீ ரெனவும்

    பண்ணுலாம் மறைகள் பாடின ரெனவும்

    பலபுக ழல்லது பழியில ரெனவும்

    எண்ணலா காத இமையவர் நாளும்

    ஏத்தர வங்களோ டெழில்பெற நின்ற

    அண்ணலான் ஊர்தி ஏறும்எம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    5

    நீடிருஞ் சடைமேல் இளம்பிறை துளங்க

    நிழல்திகழ் மழுவொடு நீறுமெய் பூசித்

    தோடொரு காதினிற் பெய்துவெய் தாய

    சுடலையி லாடுவர் தோலுடை யாகக்

    காடரங் காகக் கங்குலும் பகலுங்

    கழுதொடு பாரிடங் கைதொழு தேத்த

    ஆடர வாட ஆடும்எம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    6

    ஏறுமொன் றேநி நீறுமெய் பூசி

    இளங்கிளை அரிவைய டொருங்குட னாகிக்

    கூறுமொன் றருளிக் கொன்றையந் தாருங்

    குளிரிள மதியமுங் கூவிள மலரும்

    நாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும்

    மகிழிள வன்னியும் இவைநலம் பகர

    ஆறுமோர் சடைமேல் அணிந்தஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    7

    கச்சும்ஒள் வாளுங் கட்டிய வுடையர்

    கதிர்முடி சுடர்விடக் கவரியுங் குடையும்

    பிச்சமும் பிறவும் பெண்அணங் காய

    பிறைநுத லவர்தமைப் பெரியவர் பேணப்

    பச்சமும் வலியுங் கருதிய அரக்கன்

    பருவரை யெடுத்ததிண் தோள்களை யடர்வித்

    தச்சமும் அருளுங் கொடுத்தஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    8

    நோற்றலா ரேனும் வேட்டலா ரேனும்

    நுகர்புகர் சாந்தமொ டேந்தியமாலைக்

    கூற்றலா ரேனும் இன்னவா றென்றும்

    எய்தலா காததொ ரியல்பினை யுடையார்

    தோற்றலார் மாலும் நான்முக முடைய

    தோன்றலும் அடியடு முடியுறத் தங்கள்

    ஆற்றலாற் காணா ராயஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    9

    வாதுசெய் சமணுஞ் சாக்கியப் பேய்கள்

    நல்வினை நீக்கிய வல்வினை யாளர்

    ஓதியுங் கேட்டு உணர்வினை யிலாதார்

    உள்கலா காததோ ரியல்பினை யுடையார்

    வேதமும் வேத நெறிகளு மாகி

    விமலவே டத்தொடு கமலமா மதிபோல்

    ஆதியும் ஈறும் ஆயஎம் அடிகள்

    அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

    10

    மைச்செறி குவனை தவளைவாய் நிறைய

    மதுமலர்ப் பொய்கையிற் புதுமலர் கிழியப்

    பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப்

    பதியவர் அதிபதி கவுணியர் பெருமான்

    கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக்

    கருத்துடை ஞானசம் பந்தன தமிழ்கொண் டச்சிறு பாக்கத் தடிகளை யேத்தும்

    அன்புடை யடியவர் அருவினையிலரே.

    • கிரந்த எழுத்து வடிவில் 12 பனையோலை சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
    • திருஞான சம்பந்தரின் தேவாரப்பாடல் அடங்கிய ஓலைச்சுவடிகள் இருப்பதும் தெரியவந்தது.

    நெல்லை:

    இந்து சமய அறநிலையத்துறையின் ஓலைச்சுவடிகள் நூலாக்க திட்டப்பணி குழுவினர் அறநிலையத்துறைக்கு உட்பட்ட சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் உள்ள பழங்கால ஓலைச்சுவடிகளை சேகரித்து வருகின்றனர்.

    அதன்படி கடந்த 4 நாட்களாக பழமை வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன சுவடியியல் துறை பேராசிரியர் தாமரை பாண்டியன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

    அவருடன் சுவடியியலாளர்கள் சண்முகம், சந்தியா, நீலகண்டன், பாலசுப்பிரமணியன் அடங்கிய குழுவினர் நெல்லையப்பர் கோவில் நூலகத்தில் உள்ள சுவடிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது கோவில் நிர்வாகத்தால் பாதுகாக்கப்பட்டு வந்த 10 செப்பு பட்டயங்களை ஆய்வு செய்தனர். மேலும் கிரந்த எழுத்து வடிவில் வேணுவன நாத ஸ்தல புராணம், சைவ அக்னி காரியம் உள்ளிட்டவை குறித்த 12 பனையோலை சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் திருஞான சம்பந்தரின் தேவாரப்பாடல் அடங்கிய ஓலைச்சுவடிகள் இருப்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து திட்டப்பணியின் ஒருங்கிணைப்பாளர் தாமரைப்பாண்டியன் கூறுகையில், பழமை வாய்ந்த சிறிய சிறிய அறைகள் அமைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ஓலைச்சுவடிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    கூடுதலாக 2 அரிய தாள் சுவடிகள் கிடைத்துள்ளது. அதில் திருஞானசம்பந்தரின் 3 திருமுறைகள் அடங்கிய தேவார பாடல்கள் இருந்தன. அதன் தொடக்க பக்கத்தில் தோடுடைய செவியன் எனும் பாடல் இடம் பெற்றுள்ளது.

    இந்த பிரதிகள் செய்தவரின் குறிப்புகள் இல்லை. இவை 200 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். இங்கு கண்டறியப்பட்ட பட்ட யங்களை ஆராயும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

    தற்போது கண்டு பிடிக்கப்பட்ட பனையோலை சுவடிகளில் 281 ஓலைச்சுவடிகள் நல்ல நிலையில் உள்ளது என்றார்.

    • கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களுக்கும் தீபங்களை ஏற்றி வைப்பவர்களும் உண்டு.
    • வெள்ளியாலான விளக்கில் தீபமேற்றினால் மகாலட்சுமியின் கடைக்கண் பார்வையும், சகல பாக்கியங்களும் உண்டாகும்.

    கார்த்திகை தீப திருவிழா மிகப் பழங்காலம் தொட்டே தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. இதை அகநானூறு, நற்றிணை ஆகிய சங்க நூல்களில் நக்கீரர், அவ்வையார் போன்றோரின் பாடல்களால் அறிய முடிகிறது. சைவ சமய நால்வர்களில் ஒருவரான திருஞான சம்பந்தப் பெருமானின் திருமயிலைத் திருப்பதிகத்திலும் கார்த்திகை தீபம் பற்றிய குறிப்பைக் காணலாம்.

    இவ்விழாவை கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தினத்தன்று தொடங்கி தினமும் வீட்டு வாசலில் வரிசையாக விளக்கேற்றி வைத்து தமிழ்நாடு முழுவதம் கொண்டாடுகின்றனர். முதல் மூன்று நாட்களுக்கு மட்டுமே தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு நடத்துபவர்களும் உண்டு.

    கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களுக்கும் தீபங்களை ஏற்றி வைப்பவர்களும் உண்டு. எப்படி இருந்தாலும் விளக்கு என்றாலே அதைத் தீபலட்சுமியின் அம்சமாகவே கருதி மங்களங்கள் பொங்கச் செய்யும் மாபெரும் விழாவாக நாம் கொண்டாடுகிறோம். விளக்கின் ஜோதியில் நெருப்பு சிவபெருமான்; நெருப்பின் வெப்பம் அம்பிகை; ஒளி முருகன்; ஜோதி விஷ்ணுவும் சூரியனும் என்பது ஐதீகம்.

    இந்த தீபத் திருவிழா தமிழ்நாட்டில் பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் மற்ற எந்த தலத்திலும் இல்லாதபடி மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. மண் அகல் விளக்கை ஏற்றினால் வீரிய விருத்தி மிகும். இரும்பு அகல் கெட்ட சகவாசங்களை அகற்றும். வெண்கல விளக்கு பாபங்களைப் போக்கும். பித்தளை விளக்கிலும் தீபமேற்றலாம். எவர்சில்வர் விளக்கு கூடாது. வெள்ளியாலான விளக்கில் தீபமேற்றினால் மகாலட்சுமியின் கடைக்கண் பார்வையும், சகல பாக்கியங்களும் உண்டாகும்.

    ×