search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Resignation"

    • டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி விலகினார்.
    • பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். டெல்லி காங்கிரஸ் உள் விவகாரத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் தீபக் பதரியா தலையிடுவதாக கூறி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    தீபக் பதரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்களை கட்சியில் இருந்து நீக்கக்கோரி தொடர்ந்து அழுத்தம் வருவதால் டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என அர்விந்தர் சிங் லவ்லி தெரிவித்தார்.

    இதற்கிடையே, அர்விந்தர் சிங் லவ்லி பா.ஜ.க. பக்கம் தாவலாம் என தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், நான் வேறு எந்தக் கட்சியிலும் சேரப்போவது இல்லை. காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்வேன். கட்சி தொண்டர்களுடன் தொடர்பில் இருப்பேன். கட்சியின் கொள்கைகளை நிலைநாட்டவே இந்த முடிவை எடுத்துள்ளேன். பாராளுமன்ற தேர்தலில் சீட் ஒதுக்குவதில் உள்ள பிரச்சனை காரணம் இல்லை என அர்விந்தர் சிங் லவ்லி தெரிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த சம்பவம் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா.
    • டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் 4ல் ஆம் ஆத்மி, 3ல் காங்கிரஸ் போட்டி.

    டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி திடீரென பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

    ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் மேலிடம் தங்களின் கருத்துக்களை கேட்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் 4ல் ஆம் ஆத்மி, 3ல் காங்கிரஸ் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிமுக நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை மதிப்பளிப்பதில்லை.
    • தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாததால் அதிருப்தியில் ராஜினாமா.

    கர்நாடகா அதிமுகவின் முக்கிய நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் ராஜினாமா அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

    தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை களம் இறக்க மறுத்ததால் அதிருப்தி என தெரிவிக்கப்படுகிறது.

    பிற மாநிலங்களில் ஏன் அதிமுகவை வளர்க்க வேண்டும் என மேலிடம் நினைப்பதாக கர்நாடகா நிர்வாகிகள் வேதனை அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    மக்களவை தேர்தலில் யாருக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்பதை கூட கட்சி மேலிடம் கூற மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

    ஜெயலலிதாவுக்கு பிறகு கர்நாடகாவில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை மதிப்பளிப்பதில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து எஸ்டி குமார் ராஜினாமா செய்துள்ளார்.

    ஓசூரில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது எஸ்.டி.குமார் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " கர்நாடகாவில் மக்களவை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பமனு அளித்தும், வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    யாரை ஆதரித்து பிரசாரம் செய்வதென்று தெரியாமல் கர்நாடகா அதிமுகவினர் குழம்பியுள்ளனர். அதனால், மாநில அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்து கொண்டேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பொய் சொல்வதை முதலில் நிறுத்துங்கள் என்றும் நிர்வாகிகளை கடிந்து கொண்டார்.
    • தேனி தொகுதியில் போட்டி கடுமையானதாக இருக்கும் என்பது கட்சியினர் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பிரசாரங்களும்களை கட்டி வருகிறது.

    2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மீதமுள்ள ஒரு தொகுதி தேனி ஆகும்.

    இந்த தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டார்.

    2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.

    இந்நிலையில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்செல்வனும், அதிமுக சார்பில் நாராயணசாமியும், அமமுக சார்பில் டிடிவி தினகரனும், நாம் தமிழர் சார்பில் மதன் ஜெயபாலும் வேட்பாளர்களாக களம் இறங்குகிறார்கள். இதை தொடர்ந்து இந்த முறையும் தேனி தொகுதியில் போட்டி கடுமையானதாக இருக்கும் என்பது கட்சியினர் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் மதுரை அலங்காநல்லூரில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தி.முக. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது,

    திமுக பாராளுமன்ற தேர்தலில் தேனி மாவட்ட திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற வேண்டும் என்றும், அதிகப்படியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை என்றால் தனது பதவியை அடுத்த நாளே ராஜினாமா செய்கிறேன் என்று கூறினார்.

    நிர்வாகிகள் கூட்டத்தில் வெளியில் இருந்து பெண்களை அழைத்து வந்ததை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் மூர்த்தி செல்போனில் அரசியல் தேவையில்லை என்றும், மக்களை நேரில் சந்தியுங்கள் என்றும், செல்போனில் அரசியல் செய்தால் எப்படி உருப்படும் என்றும், பொய் சொல்வதை முதலில் நிறுத்துங்கள் என்றும் நிர்வாகிகளை கடிந்து கொண்டார்.

    • தேர்தலில் போட்டியிட சீட் வழங்காததால் அசாம் எம்.பி. அப்துல் காலிக் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்தார்.
    • அப்துல் காலிக் இதுவரை இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார்.

    புதுடெல்லி:

    அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 14 எம்.பி. தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 3 எம்.பி.க்கள் இருந்தனர். அதில் 2 பேருக்கு வரும் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது.

    பார்பேட்டா தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான அப்துல் காலிக்குக்கு இம்முறை போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. அவருக்கு பதிலாக தீப் பயான் என்பவரை அக்கட்சி வேட்பாளராக களமிறக்கியது.

    அப்துல் காலிக் இதுவரை இரண்டு முறைஎம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கடும் அதிருப்தியில் இருந்து வந்த அப்துல் காலிக், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் அனுப்பி வைத்தார்.

    இந்நிலையில், அசாம் எம்.பி.யான அப்துல் காலிக், காங்கிரஸ் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தனது ராஜினாமாவை வாபஸ் பெறுகிறேன் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்த அப்துல் காலிக், காங்கிரசை வலுப்படுத்துவது காலத்தின் தேவை. எனவே எனது ராஜினாமாவை வாபஸ் பெறுகிறேன். ராகுல் காந்தி மற்றும் உங்களின் திறமையான தலைமையின் கீழ் பணியாற்ற விரும்புகிறேன் என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆளுங்கட்சியாக பா.ஜனதா இருப்பதால் வெற்றி பெறுவது எளிது என தமிழிசை கணக்கிட்டார்.
    • அண்ணன் என அழைத்த தங்கையை வேட்பாளராக்க முதல்-அமைச்சர் ரங்கசாமியும் முன்வரவில்லை.

    புதுச்சேரி:

    தமிழ்நாடு பா.ஜனதா மாநில தலைவராக திறம்பட செயலாற்றிய தால் தமிழிசைக்கு தெலுங்கானா கவர்னர் பதவி அளிக்கப்பட்டது.

    தெலுங்கானா கவர்னராக இருந்த தமிழிசை, 2021 பிப்ரவரியில் புதுச்சேரியின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார். வாரத்துக்கு 3 நாள் தெலுங்கானா, 3 நாள் புதுவை என பம்பரமாக சுழன்று தமிழிசை பணியாற்றி வந்தார்.

    புதுச்சேரியின் மீது அதீத கவனம் செலுத்தி வந்த அவர் அரசு பள்ளிகளில் புத்தக பை இல்லாத தினம், வாட்டர் பெல் நேரம், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு, பெண் அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை நேர சலுகை என பல்வேறு வகையிலும் அரசுக்கு உறுதுணையாக செயல்பட்டார்.

    புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை, அரசு விழாக்களில் அண்ணன் என அழைத்தார். அமைச்சர்கள் தமிழிசையை அக்கா என்றே அழைத்து வந்தனர். பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே தமிழிசையின் செயல்பாடுகள் அமைந்தது.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை, ஆண்டவனும், ஆண்டு கொண்டிருப்பவரும் முடிவு செய்வார்கள் என தெரிவித்து வந்தார். புதுச்சேரியில் ஆளுங்கட்சியாக பா.ஜனதா இருப்பதால் வெற்றி பெறுவது எளிது என தமிழிசை கணக்கிட்டார்.

    முதல்- அமைச்சர் ரங்கசாமியும் தமிழிசையின் எண்ணத்துக்கு தடை போடவில்லை.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்க, நெருங்க புதுச்சேரி அரசியல் கட்சியினர் தமிழிசையை வெளிமாநிலத்தை சேர்ந்தவர் என முத்திரை குத்தினர். தமிழிசை புதுவையில் போட்டியிட பா.ஜனதா மேலிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அணுகிய போது கிரீன் சிக்னல் அளிக்கவில்லை.

    இருப்பினும் கட்சி தலைமை மீது மிகுந்த நம்பிக்கையோடு தமிழிசை காத்திருந்தார். புதுச்சேரியில் 3 ஆண்டாக செயல்படுத்தியுள்ள திட்டங்களை புத்தகமாக மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து வழங்கினார். பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்தார்.

    ஆனால், புதுச்சேரியில் பா.ஜனதாவினர் கவர்னர் தமிழிசையை வேட்பாளராக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். புதுச்சேரியை சேராதவரை வேட்பாளராக நிறுத்தினால் எதிர்கட்சிகள் இதனை பிரசாரமாக செய்யும் என பா.ஜனதாவினர் எதிர்த்தனர்.

    மேலும், புதுச்சேரியை சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தினர், சிறுபான்மையினர், பட்டியலினத் தவர் ஓட்டுகள் பா.ஜனதாவுக்கு கிடைக்காது என புள்ளி விபரங்களை தெரிவித்தனர்.

    இதற்கு பதில் அளித்த தமிழிசை, தமிழ்நாடு வேறு, புதுவை வேறு அல்ல, மக்களிடையே வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்ற பிரிவினை வாதத்தை ஏற்படுத்தாதீர்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

    இருப்பி னும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர் வேட்பாளராகக் கூடாது என உள்ளூர் பா.ஜனதாவினர் உறுதியாக இருந்தனர்.

    அண்ணன் என அழைத்த தங்கையை வேட்பாளராக்க முதல்-அமைச்சர் ரங்கசாமியும் முன்வரவில்லை. இதனால் தமிழிசையை வேட்பாளராக்க கட்சித்தலைமை தயங்கியது.

    இதனிடையே புதிய் சட்டமன்ற கட்டிடம் கட்ட கவர்னர் தமிழிசை முட்டுக்கட்டையிடுவதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பகிரங்கமாக தெரிவித்தார்.

    இது ஆளுங்கட்சியின் ஒட்டு மொத்த எதிர்ப்பாக பார்க்கப்பட்டது.

    இதனால் தமிழ்நாட்டில் போட்டியிடும்படி தமிழிசையை பா.ஜனதா தலைமை கேட்டுக் கொண்டது. இதையேற்று புதுச்சேரியை கைகழுவி தமிழிசை, தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்து தமிழ்நாட்டில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

    • அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன்.
    • மூன்று ஆண்டுகள் தங்களுடனும் மக்கள் நீதி மய்யம் உறவுகளுடனும் இணைந்து பயணிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

    மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் அனுஷா ரவி பதிவிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது

    மாற்றத்திற்கான அரசியலில் கடந்த மூன்று ஆண்டுகள் தங்களுடனும் மக்கள் நீதி மய்யம் உறவுகளுடனும் இணைந்து பயணிக்க வாய்ப்பளித்தமைக்கும், கட்சியில் பொறுப்புகள் வழங்கியமைக்கும் நன்றி. இந்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் வழங்கிய பொறுப்புக்களை உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப மிகச்சிறப்பாக செயல்படுத்தி உங்கள் பாராட்டுக்களை பெற்றதில் மகிழ்ச்சி.

    இருப்பினும். தேர்தல் அரசியலில் மய்யம் பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதினால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன் என்று அவர் கடிதத்தில் பதிவிட்டுள்ளார்.

    • ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டதாக தகவல்.
    • தேர்தல் ஆணைய அமர்வில் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

    இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார்.

    2027ம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள நிலையில் திடீரென அருண் கோயல் பதவி விலகியுள்ளார்.

    இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயலின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அருண் கோயல் ராஜினாமாவை தொடர்ந்து தேர்தல் ஆணைய அமர்வில் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
    • தொடர் தாக்குதல் எதிரொலியாக ராஜினாமா முடிவை எடுத்திருப்பதாக முகமது ஷ்டய்யே கூறியுள்ளார்.

    காசா:

    பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் படைக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், பாலஸ்தீனத்தில் திடீர் திருப்பமாக அந்நாட்டு பிரதமர், பதவியை ராஜினாமா செய்வதாக முகமது ஷ்டய்யே அறிவித்தார்.

    பாலஸ்தீனத்தில் தனது தலைமையிலான அரசை கலைத்துவிட்டு புதிய அரசு பொறுப்பேற்க பிரதமர் முகமது ஷ்டய்யே விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாசிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் எதிரொலியாக இந்த முடிவை எடுத்துள்ளேன். காசாவில் போர் முடிவுற்ற பின், அதற்குப் பிந்தைய சூழலில் பாலஸ்தீனியத்தை நிர்வகிக்க புதிய அரசு அமைவதே சிறந்ததாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

    • காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி நேற்று பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
    • எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன் என விஜயதாரணி சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முக்கிய தலைவர்கள் தங்களது சொந்த கட்சியை விட்டு எதிரணிக்கு தாவி வருகின்றனர்.

    இதற்கிடையே, தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணி நேற்று திடீரென டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்துக்குச் சென்று தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் முதல் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கட்சித்தலைமைக்கு எழுதிய கடிதத்தை செய்தியாளர்களிடம் காண்பித்தார்.

    இதையடுத்து, கட்சித் தாவல் தடைச்சட்டத்தின்படி, ஒரு அரசியல் கட்சியின் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியில் இருந்து வேறு அரசியல் கட்சிக்கு தாவினால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டு விடும் என்ற விதியின் அடிப்படையில் விஜயதாரணியின் எம்.எல்.ஏ. பதவியை உடனடியாக தகுதிநீக்கம் செய்து அறிவிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய விஜயதாரணி, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன் என சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்ட விஜயதாரணி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேத்தி ஆவார். இவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கொறடாவாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராஜினாமா கடிதத்தை, மேற்குவங்க முதல்வரிடம் வழங்கியுள்ளார்.
    • தனது தொகுதிக்குட்பட்ட கட்சித் தலைமை மீது அதிருப்தி.

    மேற்குவங்க எம்.பியும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மிமி சக்ரபோர்த்தி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

    தனது ராஜினாமா கடிதத்தை, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

    தனது தொகுதிக்குட்பட்ட கட்சித் தலைமை மீது அதிருப்தி தெரிவித்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

    ஆனால் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மேலிடம் இன்னும் ஏற்கவில்லை எனவும் மிமி சக்ரபோர்த்தி தெரிவித்துள்ளார்.

    தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி மக்களவை சபாநாயகரிடம் வழங்காமல், மம்தாவிடம் வழங்கியதற்கான காரணம் குறித்து மிமி சக்ரபோர்த்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த மிமி, " கட்சி மேலிடத்தில் இருந்து ஒப்புதல் கிடைத்ததும், ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பேன்" என்றார்.

    • கடந்த ஆண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
    • புழல் சிறையில் இருந்து தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக தகவல்.

    கடந்த 2023ம் ஆண்டு 14ம் தேதி சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

    பிறகு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி மீதான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார். 8 மாதங்களாக இலாகா இல்லாத அமைச்சராக நீட்டித்த நிலையில், செந்தில் பாலாஜி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    புழல் சிறையில் இருந்து தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.

    ×