search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருண் கோயல்"

    • சந்திரா பாண்டே என்ற தேர்தல் ஆணையம் கடந்த மாதம் ஓய்வு பெற்றார்.
    • அருண் கோயல் கடந்த 9-ந்தேதி ராஜினாமா செய்தார்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக அருண் கோயல் மற்றும் சந்திரா பாண்டே ஆகியோர் இருந்தனர்.

    சந்திரா பாண்டே கடந்த வருடம் ஓய்வு பெற்றார். இதனால் இரண்டு ஆணையர்களுடன் இயங்கி வந்தது. இரண்டு ஆணையர்களும் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கான பணிகளை துரிதமாக செய்து கொண்டிருந்தனர். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் அருண் கோயல் கடந்த 9-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனால் தலைமை தேர்தல் ஆணையர் மட்டுமே உள்ளார். அவர் ஒரு நாளாக இருந்து தேர்தலை நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது.

    இந்த விவகாரத்தால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட தாமதம் ஏற்படலாம் எனத் தெரிகிறது. இதற்கிடையே வருகிற 15-ந்தேதி பிரதமர் மோடி தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியானது. அதன்பின் 14-ந்தேதி ஆலோசனை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மத்திய அரசின் தேர்தல் ஆணையர்கள் நியமன நடைமுறைக்கு தடைவிதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் 2023 நீதிமன்ற தீர்ப்பின்படி தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த நிலையில் இந்த மனுவை நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • 26 நாட்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்.
    • தேர்தல் பத்திர நன்கொடை தகவல்களை வெளியிட 2 நாட்கள் இருந்த நிலையில் கால அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்தது ஏன்?

    வங்கி மூலம் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பெறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15-ந்தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.

    தேர்தல் நன்கொடை பத்திர முறையை சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தது. இந்த திட்டத்தின் கீழ் நன்கொடை அளித்தவர்களின் முழு விவரங்களை மார்ச் 6-ந்தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) பகிர வேண்டும் என்றும், அவற்றை மார்ச் 13-ந்தேதிக்குள் மக்கள் பார்வைக்காக தேர்தல் ஆணையம் தன்னுடைய இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

    இதற்கிடையே 2019 ஏப்ரல் முதல் இதுவரையிலும் பணமாக மாற்றப்பட்ட அனைத்து தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க ஜூன் 30-ந்தேதி வரை கால அவகாசம் கேட்டு பாரத ஸ்டேட் வங்கி கடந்த 4-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் தகவல் தர தாமதிக்கும் பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிராக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

    இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஹரீஷ் சால்வே ஆஜரானார். அவர் வாதாடும்போது கூறியதாவது:-

    எங்கள் கோர் பேங்கிங் அமைப்பில் வாங்குபவரின் பெயர் மற்றும் பத்திர எண் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்பதற்காக செய்யப்பட்டது.

    எனவே தகவல்களை கொடுக்க நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். 55 செயல்முறையையும் நாங்கள் மாற்றி அமைக்க வேண்டும். இதனால் தேர்தல் பத்திர விவரங்கள் கொடுக்க கால அவகாசம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் வாதிட்டார்.

    ஹரீஷ் சால்வேயின் இந்த வாதத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கவில்லை. இது தொடர்பாக நீதிபதிகள் கூறியதாவது:-

    தேர்தல் பத்திர நன்கொடை தகவல்களை வெளியிட உத்தரவிட்டு 26 நாட்கள் ஆகி விட்டது. இந்த 26 நாட்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள். தேர்தல் பத்திர நன்கொடை தகவல்களை வெளியிட 2 நாட்கள் இருந்த நிலையில் கால அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்தது ஏன்?

    மிக எளிமையாக திரட்டக்கூடிய இந்த தகவல்களை தருவதற்கு அவகாசம் ஏன்? அதாவது 24-க்கும் குறைவான அரசியல் கட்சிகள்தான் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்று உள்ளன.

    அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்புக்கு கால அவகாசம் கேட்பது ஏன்? மிக எளிமையான உத்தரவை பின்பற்ற கால அவகாசம் கோருவதை எந்த வகையில் ஏற்பது. பாரத ஸ்டேட் வங்கியால் செய்ய முடியாத எந்த வேலையையும் நாங்கள் சொல்லவில்லை. அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை மாற்றுமாறு இப்போது கேட்பது ஏன்?

    கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்தவர்கள், அவர்களுக்கு இடையிலான தொடர்பு பற்றி எதுவும் கேட்கவில்லை. எஸ்.பி.ஐ. வங்கியிடம் இருந்து நேர்மையான செயல்பாட்டை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    இந்த பணியை செய்ய எவ்வளவு காலம் ஆகும் என்று வங்கியை கேட்கவில்லை. நாங்கள் தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் என்று உத்தர விடுகிறோம். தகவல்களை ஒருங்கிணைக்க கால அவகாசம் கேட்பது சரியல்ல.

    இவ்வாறு நீதிபதிகள் காட்டமான கேள்விகளையும், அறிவுறுத்தல்களையும் முன் வைத்தனர்.

    இதைத் தொடர்ந்து கால அவகாசம் கோரிய பாரத ஸ்டேட் வங்கி மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. நாளை மாலைக்குள் தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை வெளியிட வேண்டும் என்று எஸ்.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடியான உத்தரவை பிறப்பித்தது.

    பாரத ஸ்டேட் வங்கி பகிர்ந்துள்ள தகவல்களை வருகிற 15-ந்தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்றும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

    தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் நாளைக்குள் சமர்ப்பிக்க விட்டால் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை விடுத்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சந்திரா பாண்டே என்ற தேர்தல் ஆணையர் கடந்த மாதம் ஓய்வு பெற்றார்.
    • நேற்று முன்தினம் அருண் கோயல் ராஜினாமா செய்தார்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக அருண் கோயல் மற்றும் சந்திரா பாண்டே ஆகியோர் இருந்தனர்.

    சந்திரா பாண்டே கடந்த வருடம் ஓய்வு பெற்றார். இதனால் இரண்டு ஆணையர்களுடன் இயங்கி வந்தது. இரண்டு ஆணையர்களும் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கான பணிகளை துரிதமாக செய்து கொண்டிருந்தனர். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் அருண் கோயல் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனால் தலைமை தேர்தல் ஆணையர் மட்டுமே உள்ளார். அவர் ஒரு நபராக இருந்து தேர்தலை நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது.

    இந்த விவகாரத்தால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட தாமதம் ஏற்படலாம் எனத் தெரிகிறது. இதற்கிடையே வருகிற 15-ந்தேதி பிரதமர் மோடி தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக ஆலோசனை நடத்த இருக்கிறார்.

    இந்த நிலையில் மத்திய அரசால் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் 2023 நீதிமன்ற தீர்ப்பின்படி தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.
    • மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த விட மாட்டேன்

    அண்மையில் ராஜினாமா செய்த தேர்தல் ஆணையர் அருண் கோயலுக்கு சல்யூட் செய்கிறேன் என்று மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. அதனால், தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், கட்சிகள் அதற்கு ஆயத்தமாகி வருகின்றன.

    இதில், இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.

    இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 42 வேட்பாளர்களையும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார்.

    இந்நிகழ்வில் பேசிய அவர், மேற்கு வங்கத்தில் தேர்தல் நடத்துவது, கூடுதல் மத்திய படைகளை நிறுத்துவதற்கு டெல்லி தலைவர்களும், அதிகாரிகளும் கொடுத்த அழுத்தத்திற்கு பணியாத அருண் கோயலுக்கு சல்யூட் செய்கிறேன். மக்களவை தேர்தலில் வாக்குகளை கொள்ளையடிக்க பாஜக முயற்சிக்கிறது.

    மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த விட மாட்டேன். பாஜகவை தோற்கடிப்பதில் முழு நாட்டிற்கும் திரிணாமுல் காங்கிரஸ் வழிவகுக்கும்

    தேர்தலுக்கு முன்பு பாஜக சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்துள்ளது. தேர்தலுக்கு பிறகு 100 ரூபாய் உயர்த்துவார்கள். சிலிண்டர் விலை உயர்வு மூலம் ரூ.70,000 கோடி சம்பாதித்துள்ளனர் என்று மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடத்தப்படுகின்றன
    • நூறு விழுக்காடு ஒப்புகைச் சீட்டுடன் ( VVPAT) வாக்குப்பதிவு எந்திரங்களை இணைக்க வேண்டும்; ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்

    தேர்தல் ஆணையர் பொறுப்பிலிருந்து அருண் கோயல் அவர்கள் பதவி விலகியிருப்பது நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் நேர்மையான முறையில் நடக்குமா என்கிற அச்சத்தை எழுப்பி இருக்கிறது. எனவே, உச்ச நீதிமன்றம் இதில் உடனடியாகத் தலையிட்டுத் தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கு உறுதி செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இது தொடர்பாக அக்கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

    இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடித்தளமாக இருப்பது தேர்தல் முறையாகும். சுமார் 140 கோடி மக்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நேர்மையான முறையில் நடத்தப்பட வேண்டும். அதற்கெனவே மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையம் இயங்கி வருகிறது.

    அது அரசமைப்புச் சட்டத்தின்படி தன்னாட்சி அதிகாரம் கொண்ட சுதந்திரமான அமைப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த அமைப்பைத் தம்முடைய கைப் பாவையாக ஆக்கிக் கொள்வதற்கு மோடி அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    ஒன்றிய அரசின் அதிகாரியாக 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய அருண் கோயல் அவர்கள் கடந்த 2022 நவம்பரில் விருப்ப ஓய்வு பெற்று 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையராக மோடி அரசால் நியமிக்கப்பட்டார். அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த நேரத்தில் தேர்தல் ஆணையர் நியமனம் குறித்த வழக்கு ஒன்றை விசாரித்துக் கொண்டிருந்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கையும் அத்துடன் சேர்த்து விசாரித்தது. தேர்தல் ஆணையம் தன்னாட்சி கொண்ட அமைப்பாகத் தொடர வேண்டுமென்றால் தேர்தல் ஆணையர் நியமனம் நேர்மையாக நடைபெற வேண்டும் எனத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுப்பதற்காக மூன்று பேர் கொண்ட குழு ஒன்றையும் அமைத்தது.

    பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகிய மூவரைக் கொண்ட குழு தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை செல்லாததாக ஆக்கும் நோக்கில் மோடி அரசு, அவசர அவசரமாக சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. அதாவது, பிரதமர், அவரால் நியமிக்கப்படும் ஒரு அமைச்சர், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவரைக் கொண்ட குழுவில் யாரேனும் இரண்டு பேர் என்ன முடிவெடுக்கிறார்களோ அதனடிப்படையில் தேர்தல் ஆணையர் நியமனம் நடைபெறும் என்று அந்த சட்டம் சொல்கிறது.

    இது ஆளுங்கட்சியின் கைப் பாவையாகத் தேர்தல் ஆணையத்தை மாற்றும் நடவடிக்கையே தவிர வேறல்ல. இந்த சட்டத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் எதிர்த்தோம். அதையும் மீறி மோடி அரசால் அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு வெளிப்படையாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் புறக்கணித்துத் தேர்தல் ஆணையத்தைத் தன்னுடைய பிடிக்குள் கொண்டு வர மோடி அரசாங்கம் திட்டமிட்டுச் செயல்படுகிறது.

    மோடி அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்தப் பின்னணியில் தான் தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியிருக்கிறார். மூன்று உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் ஆணையத்தில் இப்போது தலைமைத் தேர்தல் ஆணையர் மட்டுமே இருக்கிறார். இரண்டு உறுப்பினர் பதவிகள் காலியாக இருக்கின்றன. அவற்றைத் தனது விருப்பம் போல இப்போது மோடி அரசு நிரப்பப் போகிறது. அதன் மூலம் தேர்தல் ஆணையத்தை ஒட்டுமொத்தமாகத் தனது பிடிக்குள் கொண்டு வரப் போகிறது.

    'வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடத்தப்படுகின்றன. எனவே, நூறு விழுக்காடு ஒப்புகைச் சீட்டுடன் ( VVPAT) வாக்குப்பதிவு எந்திரங்களை இணைக்க வேண்டும்; ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்' என்று ஏற்கனவே இந்தியா கூட்டணி கட்சிகள் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகின்றன.

    அதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. 400 இடங்களுக்கு மேல் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று பிரதமரும், உள்துறை அமைச்சரும் பேசி வருகிறார்கள். அதற்கு ஏற்ப அவர்களது ஆதரவு ஊடகங்களில் கருத்துக் கணிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் இணைத்துப் பார்க்கும் போது வாக்குப் பதிவு எந்திரங்களில் மோசடி செய்து இந்தத் தேர்தலில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றுவதற்கு பாஜக சதித் திட்டம் தீட்டி இருக்கிறதோ என்ற சந்தேகம் வலுப்பெற்று வருகிறது.

    பாஜகவும் அதன் ஆதரவு சக்திகளும் தேர்தல் முறையை சீரழித்து, முறைகேடான முறையில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முயற்சிக்கின்றன என்பதைத்தான் தேர்தல் ஆணையத்தில் நடக்கும் இந்த நாடகக் காட்சிகள் உணர்த்துகின்றன.

    எனவே, உச்ச நீதிமன்றம் இதனை வேடிக்கை பார்க்க கூடாது. தேர்தல் ஆணையர் நியமன சட்டத்தை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்கையும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான வழக்கையும் அவசர வழக்குகளாக விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும்.

    இந்திய தலைமை நீதிபதியும் அங்கம் வகிக்கும் தேர்வுக்குழுவை நியமித்துக் காலியாகவுள்ள இரண்டு ஆணையர்களை நியமிக்க வேண்டும். அவர்களைக் கொண்டு எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை நேர்மையான முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து ' அரசியல் தலையீடுகளின்றி தேர்தல் நடக்கும்' என்கிற நம்பிக்கையை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டதாக தகவல்.
    • தேர்தல் ஆணைய அமர்வில் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

    இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார்.

    2027ம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள நிலையில் திடீரென அருண் கோயல் பதவி விலகியுள்ளார்.

    இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயலின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அருண் கோயல் ராஜினாமாவை தொடர்ந்து தேர்தல் ஆணைய அமர்வில் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    ×