search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Raja"

    • பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலத்தில் பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் உள்ளது.
    • அன்னதானத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளை கோவிலை ஒட்டி செல்லும் ராஜாவாக்காலில் அப்படியே அன்னதான ஊழியர்கள் வீசி விடுகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலத்தில் பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், தினசரி அன்னதானம் நடக்கிறது.

    குறிப்பாக சனிக்கிழமை அன்று சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வர். அன்றைய தினம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அன்னதானத்தில் கலந்து கொண்டு உணவருந்தி செல்வர்.

    இந்த நிலையில், இந்த அன்னதானத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளை கோவிலை ஒட்டி செல்லும் ராஜாவாக்காலில் அப்படியே அன்னதான ஊழியர்கள் வீசி விடுகின்றனர்.

    சாப்பிட்ட எச்சில் இலை மற்றும் மீதம் வைக்கப்பட்ட உணவு, பேப்பர் கப்புகள் அப்படியே தண்ணீரில் மிதந்து வருவது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது.

    எனவே பாண்டமங்கலம் கோவிலில் சேரும் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதானி குற்றவாளி என்றால் பிரதமர் மோடியும் குற்றவாளி தான்.
    • இவ்வளவு பெரிய ஊழலை தட்டிக்கேட்ட ஒரே இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் தான்.

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசும் போது கூறியதாவது:-

    அதானி விவகாரத்தில் ரூ.10 லட்சம் கோடி முறைகேடு நடந்தது குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பினர். பா.ஜனதா எம்.பி.க்கள் 350 பேர் காவி துண்டு போட்டுகிட்டு உட்கார்ந்து இருந்தார்கள். நாங்கள் 39 பேர் கருப்பு சட்டை போட்டு கிட்டு கேள்விகளால் துளைத்தெடுத்தோம்.

    அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை. அமலாக்க துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை ஆகியவற்றுக்கு பயந்து மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ், ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா, பஞ்சாப் முதல்-மந்திரிகள் யாரும் பேசவில்லை. இவ்வளவு பெரிய ஊழலை தட்டிக்கேட்ட ஒரே இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் தான்.

    அதானி குற்றவாளி என்றால் பிரதமர் மோடியும் குற்றவாளி தான். இதை கூறியதற்காக கூட என் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கி கொடுத்து என்னுடைய பதவியை பறித்தாலும் பரவாயில்லை. நான் சிறைக்கு செல்லவும் தயாராக உள்ளேன்.

    • கே.என்.ஆர்.ராஜா கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் மாவீரன் பிள்ளை.
    • இந்த படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    கே.என்.ஆர்.ராஜா கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் 'மாவீரன் பிள்ளை'.இந்த படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும் இதில் முக்கிய வேடத்தில் தெருக்கூத்து கலைஞராக நடிகர் ராதாரவி நடித்துள்ளார்.

    படத்தில் நடிப்பது குறித்து விஜயலட்சுமி கூறியதாவது:-"சின்ன வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. என்னுடைய தந்தை தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்ந்து ஒரு முன் உதாரணமாக இருந்தவர். சமூகத்தில் ஒரு பக்கம் குடி, இன்னொரு பக்கம் காதல் என்கிற பெயரில் பெண்கள் சீரழிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இவற்றை மையமாக வைத்து திரைப்படம் எடுத்தால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும். அதனாலேயே இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் நிச்சயமாக என் தந்தையின் பெயருக்கு எந்தவித களங்கமும் வராமல் அவரது பெயரை காப்பாற்றுவேன்" என்று கூறினார்.

    • தி.மு.க. அரசின் சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் முடிவு கட்டுவர் என தமிழக பா.ஜ.க தலைவர் தெரிவித்துள்ளார்.
    • மாபெரும் அறவழி போராட்டத்தை 26-ம் தேதி நடத்துவோம் என கூறினார்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    தொடர்ந்து இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் தி.மு.க. எம்.பி. ராஜாவை திறனற்ற தி.மு.க. அரசு கண்டிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை.

    வெறுப்பை உமிழும் ராஜாவை கண்டித்ததற்காக கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை காவல்துறை கைது செய்துள்ளதை தமிழக பா.ஜ.க. வன்மையாகக் கண்டிக்கிறது.

    மத கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் ராஜாவை கைது செய்யாமல் இரண்டாம் கட்ட பேச்சாளர்களை மிஞ்சிய, அவரது இழிவான பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த தமிழக பா.ஜ.க. மாவட்ட தலைவரை கைது செய்தது ஏன்?

    தி.மு.க. அரசின் அடக்குமுறைகளுக்கு நாங்கள் என்றும் அஞ்சமாட்டோம். உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவர்.

    ஆ.ராசாவின் அவலத்திற்கு நீதி கேட்டு அறவழியில் போராட்டத்தை நடத்துவோம். மாபெரும் அறவழி போராட்டத்தை 26-ம் தேதி நடத்துவோம். ஆளுங்கட்சியின் அவலத்திற்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.

    திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா அல்லது முடியாதா என்பது குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #ECI #ThiruvarurByElection #CycloneGaja #TNElectionCommision
    புதுடெல்லி:

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்துவது தொடர்பாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்களை இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலாளர் டி.ராஜா சந்தித்து பேசினார்.

    அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை கலந்து பின்னர் முடிவு செய்வதாக தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்கள் தெரிவித்தனர் என்றார்.

    மேலும், கஜா புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகள் நிலை பற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்த பின்னர் முடிவெடுக்க வேண்டும் என தாம் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். 



    இதற்கிடையே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் இன்று அனுமதி அளித்துள்ளது.

    இந்நிலையில் திருவாரூரில் தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? என்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை எப்படி உள்ளது? என மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டு உள்ளார். #ECI  #ThiruvarurByElection #CycloneGaja #TNElectionCommision
    இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என ஸ்டாலின் கூறியதற்கு, சவாலை ஏற்க மோடியின் காவித் தொண்டர்கள் தயாராக இருப்பதாக எச்.ராஜா தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #HRaja
    சென்னை:

    தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கப்பட்டார். இதற்கென இன்று அண்ணா அறிவாலயத்தில் கூடிய பொதுக்குழுவில் பேசிய மு.க ஸ்டாலின், திமுக-வை வழிநடத்த இன்று புதிதாக பிறந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா என தொண்டர்கள் மத்தியில் மு.க ஸ்டாலின் எழுச்சி உரையாற்றினார்.



    இந்த உரைக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலளித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில் தி.மு.க தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், ஸ்டாலினின் சவாலை ஏற்க மோடியின் காவித்தொண்டர்கள் தயாராக உள்ளதாகவும், களம் காண்போம் எனவும் எச்.ராஜா தெரிவித்துள்ளார். மோடியின் காவி தொண்டர்கள் என எச்.ராஜா குறிப்பிட்டிருப்பது மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது. #DMK #MKStalin #HRaja
    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி தற்போது நலமாக உள்ளார் என ராசா தெரிவித்துள்ளார். #Karunanidhi #DMK #Raja
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று அதிகாலை மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தகவலறிந்து ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்து மு.க.ஸ்டாலின் மீண்டும் கோபாலபுரம் வீட்டுக்கு சென்றார். காவேரி மருத்துவமனை சார்பில் மருத்துவ குழுவினரும் வந்தனர்.

    அதன்பின்னர், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக அவர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி நலமாக உள்ளார் என ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

    தமிழின தலைவர் கலைஞருக்கு திடீரென ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தற்போது அவர் நலமாக உள்ளார். இதுகுறித்து மருத்துவமனை குழுவினர் அறிக்கை அளிக்க உள்ளனர். எனவே தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
    சேலம் சென்னை இடையே அமையவுள்ள 8 வழிச்சாலையின் திட்டம் மற்றும் பயன்பாடு குறித்து முழுமையாக அறியாமல் அதனை எதிர்க்க கூடாது என உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். #GreenWayPlan #HC
    சென்னை:

    சென்னை சேலம் இடையே 8 வழிச்சாலையை அமைக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. அதிகமான நிவாரணம், மாற்று நிலம் என பல்வேறு சலுகைகளை தமிழக அரசு அறிவித்தாலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் இந்த திட்டம் எதிர்ப்பையே சம்பாதிக்கிறது.

    இந்நிலையில், இந்த திட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரிய த.மா.கா.வின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா, திட்டத்தின் நோக்கம் மற்றும் பயன்பாடுகள் தெரியாமல் அதனை எதிர்க்க கூடாது என தெரிவித்துள்ளார். மேலும், இரு பெருநகரங்களுக்கு இடையே உருவாக்கப்படும் இந்த சாலையால் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் அமைய வாய்ப்புகள் அதிகம் எனவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கக்கூடும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த திட்டம் குறித்து நீதிமன்ற அறையில் கருத்து கேட்ட போது பல்வேறு வழக்கறிஞர்கள் இதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாகவும் உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா கூறியுள்ளார்.  #GreenWayPlan #HC
    ×