search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "oppose"

    • தென்காசி மாவட்டம் கடையம் அருகே வாகைக்குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
    • சரணாலயம் அமைத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என கருத்தைக் கூறி கடும் எதிர்ப்பை விவசாயிகள் பதிவு செய்தனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே வாகைக்குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட வருவாய் ஜெய்னுலாப்தீன், மாவட்ட வன அலுவலர் முருகன், தென்காசி வட்டாச்சியர் அருணாசலம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர்(மத்திய மற்றும் மாநில திட்டங்கள்) நல்லமுத்துராஜா, கடையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஞானசேகரன், வேளாண்மை அலுவலர் அபிராமி, துணை வேளாண்மை அலுவலர் சுப்ராம், தோட்டக்கலை அலுவலர் சபா பாத்திமா, வேளாண்மை உதவி அலுவலர்கள் கமல்ராஜன், பேச்சியப்பன், தோட்டக்கலை உதவி அலுவலர் பார்த்தீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பஞ்சாயத்து தலைவர்கள் ரவணசமுத்திரம் முகமது உசேன் வீராசமுத்திரம் ஜீனத் பர்வீன் யாகூப்,மந்தியூர் கல்யாண சுந்தரம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வின்சென்ட் மற்றும் வாகைக்குளம், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பெரும்பாலான மக்கள் பறவைகள் சரணாலயம் அமைக்ககூடாது என்றும் , சரணாலயம் அமைத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என கருத்தைக் கூறி கடும் எதிர்ப்பை விவசாயிகள் பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உடனான எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு தடை விதித்ததை காஷ்மீர் அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன. #CrossBorderTrade #Kashmir
    ஸ்ரீநகர்:

    இந்தியா- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இடையேயான எல்லைத்தாண்டிய வர்த்தகம், தற்போது பாரமுல்லா மாவட்டம் உரியிலுள்ள சலமாபாத், பூஞ்ச் மாவட்டத்திலுள்ள சக்கான் டா-பாக் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இந்த வர்த்தகமானது, வாரத்துக்கு 4 நாள்கள் நடைபெறுகிறது.

    இந்நிலையில், எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு இந்தியா தற்போது தடை விதித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

    எல்லை தாண்டிய வர்த்தகத்தை பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் சில சக்திகள் தவறாகப் பயன்படுத்துகின்றன என்றும், இந்த வர்த்தகத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக ஆயுதங்கள், போதைப் பொருள்கள், கள்ள கரன்சி நோட்டுகள் மற்றும் பிற பொருள்கள் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்படுகின்றன என்றும் விசாரணை அமைப்புகள் அறிக்கை அளித்தன. இதைப் பரிசீலித்து சலமாபாத், சக்கான் டா- பாக் ஆகிய இடங்களில் நடைபெறும்  எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு தற்காலிகத் தடை விதிப்பதென்று அரசு முடிவு செய்துள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

    வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட இந்த வர்த்தகத்தை தடை செய்திருப்பபது பிற்போக்குத்தனமானது என்று காஷ்மீர் அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கை, அண்டை நாட்டுடனான உறவை மேலும் மோசமாக்கவே செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    காஷ்மீரை அரசியல் நலனுக்காக பாஜக பலிகடா ஆக்குவதாக மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவர் மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார். வாஜ்பாய் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு அமைதி முயற்சியையும் தற்போதைய மத்திய அரசு நிராகரிக்கிறது என தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். #CrossBorderTrade #Kashmir
    சேலம் சென்னை இடையே அமையவுள்ள 8 வழிச்சாலையின் திட்டம் மற்றும் பயன்பாடு குறித்து முழுமையாக அறியாமல் அதனை எதிர்க்க கூடாது என உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். #GreenWayPlan #HC
    சென்னை:

    சென்னை சேலம் இடையே 8 வழிச்சாலையை அமைக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. அதிகமான நிவாரணம், மாற்று நிலம் என பல்வேறு சலுகைகளை தமிழக அரசு அறிவித்தாலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் இந்த திட்டம் எதிர்ப்பையே சம்பாதிக்கிறது.

    இந்நிலையில், இந்த திட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரிய த.மா.கா.வின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா, திட்டத்தின் நோக்கம் மற்றும் பயன்பாடுகள் தெரியாமல் அதனை எதிர்க்க கூடாது என தெரிவித்துள்ளார். மேலும், இரு பெருநகரங்களுக்கு இடையே உருவாக்கப்படும் இந்த சாலையால் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் அமைய வாய்ப்புகள் அதிகம் எனவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கக்கூடும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த திட்டம் குறித்து நீதிமன்ற அறையில் கருத்து கேட்ட போது பல்வேறு வழக்கறிஞர்கள் இதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாகவும் உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா கூறியுள்ளார்.  #GreenWayPlan #HC
    ×