search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "puri Jagannath"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஹரியானா மாநிலம் மகேந்தர்கரில் தேர்தல் பேரணியில் பங்கேற்ற ராகுல் காந்தி மோடி மீதும் பாஜக மீதும் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார்.
    • மோடி ராகுல் காந்தியைக் குறிப்பிடும்போது இளவரசர் என்று கூறுவதையே வழக்கமாக வைத்துள்ளார்.

    நாடு முழுவதும் 5கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 6 மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் பிரதான கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் ஹரியானா மாநிலம் மகேந்தர்கரில் தேர்தல் பேரணியில் பங்கேற்ற ராகுல் காந்தி மோடி மீதும் பாஜக மீதும் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார். பேரணியில் அவர் பேசுகையில், நான் அரசன் இல்லை, பிரதமர் மோடி தான் அரசன். நான் ஒருபோதும் அரசனாக இருக்க விரும்பவில்லை. நான் உங்களது மகன் மற்றும் சகோதரன் மட்டுமே, அரசன் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

     

    மோடி ராகுல் காந்தியைக் குறிப்பிடும்போது இளவரசர் என்று கூறுவதையே வழக்கமாக வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன் மோடியை ஒடிசாவில் பூரி ஜெகநாதர் கோயிலில் உள்ள கடவுளான ஜெகநாதரே மோடியின் பக்தர்தான் என்று பாஜக பிரமுகர் பேசியது சர்ச்சையானது.

    அதுமட்டுமின்றி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் மோடி, தான் மனிதப் பிறவியே அல்ல என்றும் பரமாத்மாதான் தன்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது, பயாலஜிகளாக தான் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்திருந்தது விமர்சனத்துக்கு உள்ளானது. 

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்.
    • சம்பித் பத்ரா கைகூப்பி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தல்.

    ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி சென்று வழிபட்டார்.

    கோயிலுக்குச் சென்ற புகைப்படத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், "நான் பூரியில் உள்ள ஸ்ரீஜெகன்நாதரிடம் பிரார்த்தனை செய்தேன். அவருடைய ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது இருக்கட்டும், மேலும் முன்னேற்றத்தின் புதிய உயரங்களை அடைய வழிகாட்டட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஒடிசா மாநில பாஜக தலைவர் சம்பித் பத்ரா, "பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்" என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஒடிசா பாஜக தலைவர் பேச்சுக்கு ஒடிசா காங்கிரஸ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    மேலும் அவரது பேச்சுக்காக தேசிய ஊடகங்கள் மற்றும் ஒடிசாவின் ஒவ்வொரு குடிமகன் முன்பும் சம்பித் பத்ரா கைகூப்பி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது.

    இந்நிலையில், பூரி ஜெகன்நாதர் பற்றி பேசிய கருத்துக்கு வருத்தும் தெரிவித்து 3 நாட்கள் விரதம் இருக்கப்போவதாக பூரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் சம்பித் பத்ரா அறிவித்துள்ளார்.

    மோடி பூரி ஜெகன்நாதரின் பக்தர் என சொல்வதற்கு பதிலாக பூரி ஜெகன்நாதர் மோடியின் பக்தர் என தவறுதலாக கூறிவிட்டதாக வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.

    • பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி இன்று வழிபட்டார்.
    • ஒடிஷா பாஜக தலைவர் பேச்சுக்கு ஒடிஷா காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

    ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி இன்று வழிபட்டார்.

    கோயிலுக்குச் சென்ற புகைப்படத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "நான் பூரியில் உள்ள ஸ்ரீஜெகன்நாதரிடம் பிரார்த்தனை செய்தேன். அவருடைய ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது இருக்கட்டும், மேலும் முன்னேற்றத்தின் புதிய உயரங்களை அடைய வழிகாட்டட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், "பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்" என்று ஒடிஷா பாஜக தலைவர் சம்பித் பத்ரா பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஒடிஷா பாஜக தலைவர் பேச்சுக்கு ஒடிஷா காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்த பேச்சுக்காக தேசிய ஊடகங்கள் மற்றும் ஒடிசாவின் ஒவ்வொரு குடிமகன் முன்பும் சம்பித் பத்ரா கைகூப்பி மன்னிப்பு கேட்க வேண்டும் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    உலகப் புகழ் வாய்ந்த பூரி ஜெகந்நாதர் ஆலய தேரோட்டம் இன்று தொடங்கியது. 9 நாட்கள் நடைபெறும் இந்த தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    புவனேஸ்வர்:

    உலக அளவில் புகழ் பெற்ற 12-ம் நூற்றாண்டை சேர்ந்த ஜெகநாதர் கோவில், ஒரிசா மாநிலம் பூரி நகரில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஒன்பதுநாள் தேரோட்ட திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தேரோட்ட திருவிழா இன்று பிற்பகல் தொடங்கியது. இந்த விழாவில், உலகம் முழுவதும் இருந்து பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தேராட்ட திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகந்நாதர் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தார். மேலும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய மற்றொரு தேரில் அவருடைய சகோதரர் பாலபத்ரர் அலங்கரிக்கப்பட்டிருந்தார். 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கருப்பு நிறத்தேரில் சுபத்ரா தேவி அலங்கரிக்கப்பட்டிருந்தார்.

    கோவிலில் உள்ள சிங்கவாசல் அருகே மூன்று தேர்களும் தயார் நிலையில் இருந்தன. முன்னதாக, ஜெகநாதர், பாலபத்ரர், சுபத்ரா தேவி ஆகிய கடவுளர்களின் சிலைகளை கோவில் ஊழியர்கள் தோளில் சுமந்து வந்து தேர்களில் வைத்தனர். அப்போது, சங்கொலி முழங்க பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினார்கள். இவ்விழாவில் ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    பிற்பகல் 3 மணி அளவில் தேரோட்ட விழா தொடங்குகிறது. முதலில் பாலபத்ரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி உள்ளிட்ட மற்ற சிறு தேர்களும் புறப்பட்டன. கடைசியாக ஜெகநாதர் தேர் புறப்பட்டு செல்லும்.



    தேர் திருவிழாவையொட்டி ஊர்வலப் பாதையிலும் பூரி நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. போலீசாருடன் மத்திய ஆயுதப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குண்டிச்சா கோவில் நோக்கி செல்லும் இந்த தேரோட்டத்தின் ஒரு அங்கமாக, வழியில் உள்ள மவுசிமா கோவிலில் ஜெகநாதர் ஓய்வு எடுப்பது வழக்கம். அதன் பிறகு, தேரோட்டம் தொடங்கி வருகிற 22-ந்தேதி அன்று நிறைவடையும்

    முன்னதாக, பூரி ஜெகந்நாதர் ஆலய தேரோட்டத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

    ஜகநாதர் அருளால் நாடு பெரிய அளவிலான வளர்ச்சியை அடைய வேண்டும். இந்தியர்கள் அனைவரும் ஜகநாதரின் அருளால் சுபிட்சத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என தனது வாழ்த்து செய்தியில் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

    இதேபோல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோரும் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
    பூரி ஜெகந்நாதர் தரிசனம் சகல போகமும், செல்வமும், நல்வாழ்வும் கிட்டச் செய்யும் என்கிறார்கள். பூரி ஜெகந்நாதரின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    துவாரகையில் தன் மனைவியரோடு வசித்து வந்தார் கிருஷ்ண பகவான். அவரது மனைவியர் அனைவரும் அவர் மீது மிகுந்த பக்தியும், அன்பும் கொண்டிருந்தனர். இருப்பினும் நீலமேகவண்ணன் கிருஷ்ணனோ எப்போதும் பிருந்தாவன கோபியர்களையே நினைத்துக் கொண்டிருந்தார்.

    இது எதனால் என்பதனை அறிய விரும்பிய கண்ணனின் மனைவியர், கண்ணனின் குழந்தைப் பருவ லீலைகளை பிருந்தாவனத்தில் அருகில் இருந்து தரிசித்த அன்னை ரோகிணியை அணுகினர்.

    அவரோ, ‘கண்ணனின் குழந்தைப் பருவ லீலைகளை உங்களுக்கு கூறவேண்டும் என்றால், ஒரு நிபந்தனை. நான் அதுபற்றி கூறும்போது, அந்த அறைக்குள் கண்ணனையோ, பலராமரையோ அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால் அவற்றைக் கேட்டு அவர்களின் பிருந்தாவன ஏக்கம் மேலும் அதிகரித்துவிடும்’ என்றார்.

    கண்ணன் மற்றும் பல ராமரின் தங்கையான சுபத்ரா தேவியை, அந்த அறையின் பாதுகாப்பிற்காக நிறுத்திவிட்டு பிருந்தாவன நிகழ்வை விவரிக்கலானாள், ரோகிணி. அனைவரும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர். அதனைக் கேட்டுக்கொண்டு, காவலுக்கு நின்ற சுபத்ரா தேவியும் தன்னை மறந்து சொக்கி நின்றாள். அப்போது அங்குவந்த கண்ணனும், பலராமரும் கூட தங்கள் குழந்தைப் பருவ லீலைகளைக் கேட்டு மெய் மறந்து பரவசநிலையில் ஒன்றியிருந்தனர்.

    இப்படி கண்ணனும், பலராமரும், சுபத்ரா தேவியும் அதிபரவச திருக்கோலத்தில் மெய்மறந்திருப்பதைக் கண்ட நாரதர், தான் பார்த்து உள்ளம் நெகிழ்ந்த அந்த வேறுபட்ட வடிவங்களை அன்பர்களும் பார்க்க வேண்டும் என்று கண்ணபிரானிடம் வேண்டுதல் வைத்தார். இசைந்த கண்ணன், ‘வெகுவிரைவில் அக்கோலத்திலேயே தாங்கள் மூவரும் பூரி திருத்தலத்தில் எழுந்தருள்வோம்’ என நாரதரிடம் கூறி அருளினார்.

    அந்த நாளும் கூடிவந்தது. கலிங்க தேசத்து மன்னன் இந்திரத்யும்னன் சிறந்த விஷ்ணு பக்தன். ஒருநாள் அவன் கனவில் கண்ணபிரான் தோன்றி, தமக்கு ஒரு கோவிலை உண்டாக்கி, தம்மை மரக்கட்டையில் செதுக்கி நிர்மாணிக்குமாறு பணிக் கிறார். அவ்வண்ணமே கோவிலை நிர்மாணித்த மன்னன், சிலைசெய்து பிரதிஷ்டை செய்ய வேண்டி மரக்கட்டையை தேர்ந்தெடுத்து, தகுந்த சிற்பிகளை கூட்டிவந்து சிலையை வடிவமைக்க ஆரம்பித்தான். ஆனால் எந்த சிற்பியாலும் அந்த மரக்கட்டையை செதுக்கி சிற்பமாக்க முடியவில்லை.

    கவலையடைந்த மன்னன், கண்ணபிரானை வேண்டினான். இதையடுத்து தேவ சிற்பியான விஸ்வகர்மாவே அச்சிலையை செதுக்க முன்வந்தார். சிலை உருவாக்க 21 நாட்கள் ஆகும். அதுவரை தான் வேலைசெய்யும் அறை மூடியே இருக்கும். எக்காரணம் கொண்டும் யாரும் கதவுகளை திறக்கக்கூடாது. சிலையை உருவாக்கி முடித்ததும், நானே கதவை திறந்து வெளியில் வருவேன்’ என நிபந்தனை விதித்தார், விஸ்வகர்மா.

    மன்னனும் அவன் அருகில் இருந்த அவனது மனைவி பட்டத்தரசி குண்டிச்சா தேவியும் அதற்கு ஒப்புக்கொண்டனர். உடனே சிலையை செதுக்கும் பணியை விஸ்வகர்மா ஆரம்பித்தார். பதினைந்து நாட்கள் கழிந்தன. ஒருநாள் மன்னனின் மனைவி குண்டிச்சா தேவிக்கு சிலையைக் காணும் ஆவல் தோன்றியது. யாருக்கும் தெரியாமல் ஓரிரவு அந்த அறைக்கதவை திறந்தாள், குண்டிச்சா தேவி. அந்தநொடியே சிலைசெய்து கொண்டிருந்த விஸ்வகர்மா மறைந்துவிட, சிலை செதுக்கும் வேலை பாதியில் நின்றுபோனது. இதனால் மரக்கட்டை மூன்று துண்டுகளாக முற்றுப்பெறாத அமைப்பில் காணப்பட்டது.

    மனம் கலங்கிய மன்னன் இந்திரத்யும்னனும், அவனது மனைவி குண்டிச்சா தேவியும் மீண்டும் கண்ணனை துதித்தனர். அப்போது அங்கே ஒரு அசரீரி ஒலித்தது.

    ‘மன்னா! கவலை வேண்டாம். உனது பட்டத்தரசி குண்டிச்சா தேவி எம்மை தரிசிக்கும் ஆவலினால் சிற்பியின் அறையை திறந்ததால், சிலை வடிவம் முற்றுப்பெறவில்லை. இந்த சிலை வடிவே இங்கு யாம் எழுந்தருள எமக்கு மிகவும் உகந்தது. ஆம்! அன்னை ரோகிணி விவரித்த எங்களது பிருந்தாவன குழந்தைப்பருவ லீலைகளைக் கேட்டு ஒருவித பரவசநிலையில் நாங்கள் யாவரும் மெய்மறந்து நின்றோம். அதேகோலத்தில் உலகோருக்கு அருள நாரதன் எம்மிடம் வேண்டினான். அதன்பொருட்டு அந்த பரவசகோலத்தில் இந்த மூன்று முற்று பெறாத மரக்கட்டைகளில் யானும், பலராமனும், தங்கை சுபத்ராவும் எழுந்தருளி உள்ளோம். எனவே இப்படியே கருவறையில் நிறுவிவிடுங்கள்' என்றது அந்தக் குரல்.

    மேலும் ‘குண்டிச்சா தேவி.. தாய்மை பாசத்துடன் என்னை பார்க்கும் ஆவலில் சிலை உருவான அறையை திறந்ததால், வருடத்தில் ஒன்பது நாட்கள் குண்டிச்சா தேவியின் இருப்பிடம் நாடி வருவேன்' எனவும் வாக்களித்தார் ஜெகந்நாதரான கண்ணன்.

    அதன்படியே இன்றும் கருவறையில் வலப்புறம் ஓரத்தில் ஐந்து அடி, ஏழு அங்குல உயரத்தில் கறுப்பு நிறத்தில் வட்டவடிவமான பெரிய கண்களுடன் ஜெகந்நாதர் எனும் திருநாமத்தில் கண்ணபிரானும், மறு ஓரத்தில் ஐந்தடியில் வெள்ளை நிறத்தில் தாமரைக்கண்களுடன் பலராமரும், இருவருக்கும் நடுவில் ஐந்தடி உயரத்தில் மஞ்சள் நிறத்தில் சுபத்ரா தேவியும் எழுந்தருளி உள்ளனர். அதாவது ஜெகந்நாதர், பலராமர், சுபத்ரா மூவரும் ஒரே கருவறையில் கை, கால் உறுப்புகள் இன்றி மூன்று தனித்தனி மரக்கட்டைகளாகவே உள்ளனர். அதிலே கண், காது, மூக்கு வடிவமைக்கப்பட்டு அதனையே வழிபடுகிறார்கள்.

    பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஆடிமாதத்தில் பூரி ஜெகந்நாதர் ஆலய கருவறையில் புதிய மரத்திருவுருவை நிறுவி, பழைய திருவுருவினை ‘வைகுண்ட்' எனும் ஆலயத்தின் ஒருபகுதியில் இரவில் பூமிக்குள் வைத்துவிடும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வு நடைபெறும் போது யாருக்கும் அனுமதியில்லை. அதுசமயம் பூரி நகரம் முழுவதும் ஒடிசா மாநில அரசு மின்தடையை ஏற்படுத்துகிறது. அடுத்து புதுச் சிலையை உருவாக்கும்போது, அச்சிலை செய்யப்பயன்படும் வேப்ப மரத்தினை இத்தல விமலாதேவி பாம்பு வடிவில் வந்து அடையாளம் காட்டுவாளாம். இந்த அதிசய நிகழ்வு இன்றும் தொடர்கிறதாம்.

    பூரி ஜெகந்நாதர் தரிசனம் சகல போகமும், செல்வமும், நல்வாழ்வும் கிட்டச் செய்யும் என்கிறார்கள்.
    ×