search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new building"

    • அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்
    • ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட மேலபுலம் ஊராட்சியில் ரூ.29 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டது.

    இதன் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இதை தொடர்ந்து அதே கிராமத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.35.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியை திறந்து வைத்தார்.

    இதில் மாவட்ட கலெக்டர் வளர்மதி, சோளிங்கர் எம்.எல்.ஏ முனிரத்தினம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ரவி, ஊராட்சி மன்ற தலைவர் அனிதா நாராயணன், தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், ரவீந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தி.மு.க ஒன்றிய பொருளாளர் பிரகாஷ் மற்றும் ஏராள மான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பரமக்குடியில் அரசினர் மாணவிகள் விடுதி புதிய கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
    • பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் அடிக்கல் நாட்டினார்.

    பரமக்குடி 

    பரமக்குடி பொன்னையாபுரத்தில் தாட்கோ மூலம் ரூ. 2.78 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 850 சதுர மீட்டர் பரப்பளவில் கல்லூரி மாணவிகள் விடுதி புதிதாக கட்டப்பட உள்ளது. இதற்கு பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பரமக்குடி நகர்மன்ற தலை வர் சேது.கருணாநிதி, மதுரை கோட்ட தாட்கோ செயற்பொறியாளர் பச்சவ டிவு, உதவி பொறியாளர் சிதம்பரம் தானு, நகர்மன்ற உறுப்பினர் மாரியம்மாள், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சம்பத், நகர மாணவரணி செயலாளர் மகேந்திரன், வார்டு செயலாளர் அருண்குமார் மற்றும் பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் சந்திரசேகர், வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சூரக்குடி ஊராட்சியில் புதிய கட்டிடங்களை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து ைவத்தார்.
    • கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    0சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை, தி.சூரக்குடி ஊராட்சிகளில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம், கலையரங்கம், நியாய விலை கடைகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிகளில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டி டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறிய தாவது:-

    பொதுமக்களின் கோரிக்கைகளுக்கிணங்க சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தி.சூரக்குடி ஊராட்சிக்குட்பட்ட பூவான்டிபட்டி கிராமத்தில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கலை யரங்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2021-22ன் கீழ் ஆவுடைபொய்கை கிராமத்தில் ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக் கப்பட்டுள்ள அங்கன்வாடி மையம்,

    சூரக்குடி கிரா மத்தில் ரூ.14.08 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக் கப்பட்டுள்ள நியாய விலை கடை, நெற்புகப்பட்டி கிராமத்தில் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நியாய விலை கடை, சூரக்குடி கிராமத்தில் ரூ.06.81 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சுகாதார வளாக கட்டிடம் என மொத்தம் ரூ.53.91 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் பொதுமக்களின் பயன் பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஊராட்சி சார்பில் கொடுக்கப்பட் டுள்ள கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவ ராமன், திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்) முத்து மாரியப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதா பாலசுப்பிரமணியன். சூரக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முருகப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், கானாடு காத்தான் பேரூராட்சி தலைவர் ராதிகா, காரைக் குடி வட்டாட்சியர் தங்க மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, ஊர்காவலன், சாக்கோட்டை தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் ஆனந்த், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னதுரை, பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய அங்காடி கட்டிடம் கட்டப்பட்டது.
    • புதிய அங்காடி கட்டிடத்தை முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி பால்பண்ணைச் சேரியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2022-23 நிதியின் கீழ், ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்காடி கட்டிடத்தை முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகர்மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், 12-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செந்தில் குமார், வி.சி.க. நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் அருட்செல்வன், நகரச் செயாளர் முத்துலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அரியநாயகிபுரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் கூடுதலாக 4 வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
    • அதனை விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 85 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 4 வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியினை விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயபிரகாஷ், ராஜன், துணை ஆய்வாளர் ரமேஷ், பள்ளி தலைமை ஆசிரியை கனி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி, விளாத்தி குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ்,

    ஊராட்சிமன்ற தலைவர் மாரியம்மாள், விளாத்தி குளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், சமூகவலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உட்பட தி.மு.க. நிர்வாகிகள், ஆசிரிய-ஆசிரியைகள், கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • கீழநாலுமூலைகிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.20½ லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறையும் கட்டப்பட்டுள்ளது.
    • குமாரபுரத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலும் புதிதாக சிறுவர்கள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் யூனியன் மேலத்திருச்செந்தூர் பஞ்சாயத்துக்குட்பட்ட கிருஷ்ணா நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5½ லட்சம் மதிப்பில் புதிதாக பயணியர் நிழற்குடையும், கீழநாலுமூலைகிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.20½ லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறையும் கட்டப்பட்டுள்ளது.

    அதேபோல், 15-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட சுனாமி நகரில் ரூ.18.98 லட்சம் மதிப்பிலும், குமாரபுரத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலும் புதிதாக சிறுவர்கள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி பகுதியில் ரூ.82 லட்சம் மதிப்பில் புதிதாக தார் சாலைகள் போடப்பட்டுள்ளது.

    இதன் திறப்புவிழா நேற்று அந்தந்த பகுதிகளில் நடந்தது. விழாவிற்கு திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, மேலத்திருச்செந்தூர் பஞ்சாயத்து தலைவர் மகாராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ் வரவேற்றார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மொத்தம் ரூ.64.98 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை, பள்ளி வகுப்பறை, சிறுவர் பூங்காக்கள் போன்றவற்றையும், ரூ.82 லட்சத்தில் போடப்பட்ட தார் சாலையையும் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில், திருச்செந்தூர் தாசில்தார் வாமனன், நகராட்சி ஆணை யாளர் கண்மணி, யூனியன் ஆணையர் அன்றோ, தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், கீழநாலுமூலைகிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திராணி, ஊர் தலைவர் முத்துகுமார், மேலத்திருச்செந்தூர் பஞ்சாயத்து துணை தலைவர் முருகன், மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் ராமஜெயம், அரசு வழக்கறிஞர் சாத்ராக், திருச்செந்தூர் நகராட்சி, நகர தி.மு.க. செயலாளர் வாள்சுடலை, ஒன்றிய பொருளாளர் பரிசமுத்து, தி.மு.க. சுற்றுசூழல் அணி தெற்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன், கிளை செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.31 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்களை வெங்கடேசன் எம்.பி. ஆய்வு செய்தார்.
    • பணிகள் விரைவில் முடிவுறும் தருவாயில் உள்ளது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ரூ.21 கோடி மதிப்பில் 50 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சைப் பிரிவு 5 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

    என்.ஹெச்.எம். மூலம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 100 படுக்கைகள் கொண்ட 2 மாடி கட்டிடம் கட்டப்ப ட்டு வருகிறது. இந்த கட்டிட் பணிகளை வெங்கடேசன் எம்.பி. ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாதத்திற்கு 130 விபத்துகள் நடக்கின்றன. விபத்துக்கு உள்ளானவர்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுபோய் சேர்க்க 45 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. எனவே மரண மடையும் சதவீதமும் அதிகமாக உள்ளது. இதனை தடுக்க 2 முயற்சிகளை மேற்கொண்டோம்.

    மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்து நடைபெறும் 5 இடங்களில் மேம்பாலங்கள் கட்ட ஒன்றிய அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி னோம். அதன் விளைவாக இப்போது ரூ.100 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் விரைவில் முடிவுறும் தருவாயில் உள்ளது. மேலூர் அரசு மருத்துவ மனையில் ஒன்றிய மற்றும் மாநில அரசின் பங்களிப்போடு ரூ.31 கோடி மதிப்பீட்டில் 150 படுக்கை கள், நவீனப்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை கட்டி டங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட கட்டடப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    இத்திட்டங்கள் முழுமை பெறும் போது மேலூர் பகுதியில் விபத்து மற்றும் விபத்து மரணங்கள் பெறு மளவு குறையும். பொது மருத்துவ வசதியும் பெரு மளவு முன்னேறி இருக்கும். மருத்துவத்து றையில் மற்ற பகுதியைவிட முன்னேறிய பகுதியாக முன்னுதார ணமான பகுதியாக மேலூர் மாறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் நகர மன்ற தலைவர் முகமது யாசின், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ரகுநாதன், மக்கள் நல்வாழ்வுத்துறை இணை இயக்குனர் வெங்கடாசலம், மேலூர் அரசு தலைமை மருத்துவர் டாக்டர் ஜெயந்தி, மேலூர் யூனியன் வைஸ் சேர்மன் பாலகிருஷ்ணன், சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், தாலுகா செயலாளர் கண்ணன், தும்பைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அயூப்கான், நகர்மன்ற உறுப்பினர் சர்மிளா பேகம் அப்துல் சலாம், மற்றும் டாக்டர்கள் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

    • அரியலூர் அடுத்த எருத்துக்காரன் பட்டி ஊராட்சியில், இந்தியன் செஞ்சிலுவைச் சங்க புதிய கட்டிடத்திற்க்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • 25 ஆண்டு காலமாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த அலுவலகத்துக்கு சொந்தமாக இடம் வாங்கி,புதிய கட்டிடத்திற்க்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியது.

    அரியலூர்,

    அரியலூர் அடுத்த எருத்துக்காரன் பட்டி ஊராட்சியில், இந்தியன் செஞ்சிலுவைச் சங்க கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.25 ஆண்டு காலமாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த அலுவலகத்துக்கு சொந்தமாக இடம் வாங்கி, கட்டடம் கட்ட வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான பணிகளை சங்க நிர்வாகிகள் மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில், இறுதியாக எருத்துக்காரன்பட்டி ஊராட்சி, ராஜகணபதி நகரில், தேர்வு செய்யப்பட்ட இடத்தில், கட்டுமானப் பணிகள் புதன்கிழமை தொடங்கியது.இதற்காக நடைபெற்ற பூமி பூஜைக்கு, அச்சங்கத்தின் மாவட்ட கிளைத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். இடம் வழங்கிய எருத்துக்காரன்பட்டி ஊராட்சித் தலைவர் சிவா, புரவலர் சீத்தாராம சுப்பிரமணியன், பேராசிரியர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்வில், செந்துறை ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்களான தங்கசிவமூர்த்தி, சிவசக்தி ஆகியோர் சேர்ந்து கட்டட நிதியாக ரூ.1 லட்சத்தை கிளைத் தலைவர் ஜெயராமனிடம் வழங்கினார்.நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள் எஸ்.எம். சந்திரசேகர், செல்வராஜ், பொருளாளர் எழில், செயலர் ஸ்டீபன், துணை புரவலர் சகானா காமராஜ், முன்னாள் தலைவர் நல்லப்பன், மாநில பொதுக் குழு உறுப்பினர் செல்வராஜ், நிர்வாகக் குழு உறுப்பினர் சுமங்கலி ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




    • கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பணிகள் தொடங்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் முடிந்தது.
    • புதிய கட்டிடம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் தாலுகா சாலையில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு தேர்தல் பிரிவு, சர்வேயர் பிரிவு, பதிவேடுகள் பாதுகாப்பு பிரிவு, இ-சேவை மையம், தனி வட்டாட்சியர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த பழமை கட்டிடத்தின் மேற்பகுதி சேதம், இட நெருக்கடி, மற்றும் பொது மக்களுக்கு போதுமான இருக்கை வசதி இல்லாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டனர் இதைத்தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இதை த்தொடர்ந்து பொன்னேரி- திருவொற்றியூர் சாலை வேன்பாக்கத்தில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு ரூ.3.06 கோடி ஒதுக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பணிகள் தொடங்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் முடிந்தது. தற்போது இந்த புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் திறக்க தயார் நிலையில் உள்ளது. ஆனால் இன்னும் திறக்கப்படாமல் பயன்பாட்டிற்கு வராமல் காணப்படுகிறது.

    இதனால் புதிய கட்டிட அலுவலகம் முன்பு புதர் மண்டியும், தனி நபர்கள் வாகனங்களை நிறுத்தும் இடமாகவும் பயன்படுத்து கிறார்கள். எனவே பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டிடம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • கேர்பட்டா பள்ளியில் படிக்கும் குழந்தைகள் விளையாடுவதற்கு சரியான மைதான வசதி இல்லை
    • பள்ளி முன்பு கிடக்கும் கம்பி கற்களை அகற்றவேண்டும், புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி செல்லும் சாலையில் கேர்பட்டா அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. அங்கு உள்ள கட்டிட வகுப்பறைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. எனவே அவை முற்றிலுமாக இடித்து தள்ளப்பட்டன.

    ஆனாலும் அவை அப்புறப்படுத்தப்படவில்லை. இன்னொருபுறம் கேர்பட்டா பள்ளியில் படிக்கும் குழந்தைகள் விளையாடுவதற்கு சரியான மைதான வசதி இல்லை. எனவே குழந்தைகள் நுழைவாயில் அருகே விளையாடுகின்றனர்.

    அங்கு உள்ள பகுதியில் கம்பி-கற்கள் நீட்டிக்கொண்டு உள்ளன. அதில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. பள்ளியின் கணினி அறையும் இடிக்கப்பட்டு விட்டது. எனவே குழந்தைகளுக்கு சரியான கணினி பாடங்கள் எடுக்க முடியவில்லை என ஆசிரியர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

    எனவே பள்ளி முன்பு கிடக்கும் கம்பி கற்களை அகற்றவேண்டும், புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மாநில மகளிா் தொண்டரணி துணைச்செயலாளா் விஜிலா சத்யானந்த் சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தாா்.
    • திறப்பு விழாவில் ஏராளமான தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    பாளை யூனியன் பாளையஞ்செட்டிகுளத்தில் முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் உள்ளுா் மேம்பாட்டு நிதியில் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். மாநில மகளிா் தொண்டரணி துணைச்செயலாளா் விஜிலா சத்யானந்த் சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தாா்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில தொண்டரணி துணைச்செயலாளா் ஆவின் ஆறுமுகம், விவசாய தொழிலாளா் அணி துணை செயலாளா் கணேஷ் குமாா் ஆதித்தன், ஒன்றிய செயலாளா்கள் வேலன்குளம் முருகன், போா்வெல் கணேசன், இ.பி நடராஜன், வட்டார காங்கிரஸ் தலைவா் கனகராஜ், பாளையஞ்செட்டி குளம் ஊராட்சி மன்ற தலைவா் ஏமன், துணைத்தலைவா் சஞ்சய் காந்தி, ஒன்றிய அவைத்தலைவா் விஜயகுமாா், மாவட்ட பிரதிநிதி முத்துசாமி மற்றும் நிா்வாகிகள் திருப்பதி, ஜெயசீலன், குறிச்சி ராஜபாண்டி, பெட்டைகுளம் முருகன், மணப்படை வீடு சண்முகவேல், துணை செயலாளா் சம்பத்ராஜா ஆகியோா் கலந்துகொண்டனா்.

    • ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
    • மதுரை ஐகோர்ட்டில் உத்தரவு பிறப்பித்தது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்ட மனித நேய மக்கள் கட்சி மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் கலந்தர் ஆசிக் மதுரை ஐகோர்ட்டில் பொது நலமனு ஒன்விறை தாக்கல் செய்திருந்தார்.அதில் அவர் கூறியிருந்த தாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்களம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் இருக்கக்கூடிய பொதுமக்கள் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் காய்ச்சல், பூச்சிக்கடி உள்ளிட்ட முதல் உதவி சிகிச்சைகளுக்கும், மகப்பேறு சிகிச்சைகளுக்கும் இங்கு உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தைத்தான் நம்பி உள்ளனர்.

    இந்நிலையில் இந்த கட்டிடம் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் மிகவும் பழுதடைந்து காணப்படு கிறது. மேலும் மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால் இங்கு பணிபுரியக் கூடிய செவிலி யர்கள் கூட மருத்துவ மனைக்கு வர தயக்கம் காட்டுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட சுகாதார அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆர்.எஸ். மங்களம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தினை இடித்து புதிய சுகாதார நிலையம் கட்ட உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கில் ஏற்கனவே விசாரணை செய்த போது மருத்துவமனை கட்டிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் மாவட்ட நீதிபதி மருத்துவ மனை கட்டிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில் மருத்துவ மனை கட்டிடங்கள் சேதம் அடைந்து இருப்பதாகவும் ஆய்வுக்கு வருவது தெரிந்து பல இடங்களில் பூச்சு, பெயின்ட் வேலைகள் நடந்துள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் அந்த அறிக்கையை பார்த்த நீதிபதிகள் வைத்தியநாதன், பரத சக்கரவர்த்தி அது தொடர்பாக பதில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்ற பதிவு துறைக்கு உத்தர விட்டனர்.

    அதன்படி குடும்ப நல சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

    அதில் 1989-ம் ஆண்டிலிருந்து ஆர்.ஸ் மங்கலம் சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.தற்போது சேதமடைந்துள்ள கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்டுவதற்கு பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது.

    மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவசர தேவை கருதி பொது சுகாதார பிரிவு கட்டிடம் கட்ட ரூ.1 கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டு பணி ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த சுகாதார நிலை யத்தில் வெளி நோயாளிகள் பிரிவு, படுக்கை வசதியுடன் கூடிய உள் நோயாளிகள் பிரிவு இ.சி.ஜி. எக்ஸ்ரே மற்றும் பிரசவ வசதிகள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது.

    ×