search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசினர் மாணவிகள் விடுதி புதிய கட்டிடம்
    X

    அரசினர் மாணவிகள் விடுதி புதிய கட்டிடம்

    • பரமக்குடியில் அரசினர் மாணவிகள் விடுதி புதிய கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
    • பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் அடிக்கல் நாட்டினார்.

    பரமக்குடி

    பரமக்குடி பொன்னையாபுரத்தில் தாட்கோ மூலம் ரூ. 2.78 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 850 சதுர மீட்டர் பரப்பளவில் கல்லூரி மாணவிகள் விடுதி புதிதாக கட்டப்பட உள்ளது. இதற்கு பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பரமக்குடி நகர்மன்ற தலை வர் சேது.கருணாநிதி, மதுரை கோட்ட தாட்கோ செயற்பொறியாளர் பச்சவ டிவு, உதவி பொறியாளர் சிதம்பரம் தானு, நகர்மன்ற உறுப்பினர் மாரியம்மாள், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சம்பத், நகர மாணவரணி செயலாளர் மகேந்திரன், வார்டு செயலாளர் அருண்குமார் மற்றும் பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் சந்திரசேகர், வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×