search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் அரசு பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவது எப்போது?
    X

    கோத்தகிரியில் அரசு பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவது எப்போது?

    • கேர்பட்டா பள்ளியில் படிக்கும் குழந்தைகள் விளையாடுவதற்கு சரியான மைதான வசதி இல்லை
    • பள்ளி முன்பு கிடக்கும் கம்பி கற்களை அகற்றவேண்டும், புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி செல்லும் சாலையில் கேர்பட்டா அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. அங்கு உள்ள கட்டிட வகுப்பறைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. எனவே அவை முற்றிலுமாக இடித்து தள்ளப்பட்டன.

    ஆனாலும் அவை அப்புறப்படுத்தப்படவில்லை. இன்னொருபுறம் கேர்பட்டா பள்ளியில் படிக்கும் குழந்தைகள் விளையாடுவதற்கு சரியான மைதான வசதி இல்லை. எனவே குழந்தைகள் நுழைவாயில் அருகே விளையாடுகின்றனர்.

    அங்கு உள்ள பகுதியில் கம்பி-கற்கள் நீட்டிக்கொண்டு உள்ளன. அதில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. பள்ளியின் கணினி அறையும் இடிக்கப்பட்டு விட்டது. எனவே குழந்தைகளுக்கு சரியான கணினி பாடங்கள் எடுக்க முடியவில்லை என ஆசிரியர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

    எனவே பள்ளி முன்பு கிடக்கும் கம்பி கற்களை அகற்றவேண்டும், புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×