search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்தியன் செஞ்சிலுவைச் சங்க புதிய கட்டிடத்திற்க்கு பூமி பூஜை
    X

    இந்தியன் செஞ்சிலுவைச் சங்க புதிய கட்டிடத்திற்க்கு பூமி பூஜை

    • அரியலூர் அடுத்த எருத்துக்காரன் பட்டி ஊராட்சியில், இந்தியன் செஞ்சிலுவைச் சங்க புதிய கட்டிடத்திற்க்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • 25 ஆண்டு காலமாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த அலுவலகத்துக்கு சொந்தமாக இடம் வாங்கி,புதிய கட்டிடத்திற்க்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியது.

    அரியலூர்,

    அரியலூர் அடுத்த எருத்துக்காரன் பட்டி ஊராட்சியில், இந்தியன் செஞ்சிலுவைச் சங்க கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.25 ஆண்டு காலமாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த அலுவலகத்துக்கு சொந்தமாக இடம் வாங்கி, கட்டடம் கட்ட வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான பணிகளை சங்க நிர்வாகிகள் மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில், இறுதியாக எருத்துக்காரன்பட்டி ஊராட்சி, ராஜகணபதி நகரில், தேர்வு செய்யப்பட்ட இடத்தில், கட்டுமானப் பணிகள் புதன்கிழமை தொடங்கியது.இதற்காக நடைபெற்ற பூமி பூஜைக்கு, அச்சங்கத்தின் மாவட்ட கிளைத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். இடம் வழங்கிய எருத்துக்காரன்பட்டி ஊராட்சித் தலைவர் சிவா, புரவலர் சீத்தாராம சுப்பிரமணியன், பேராசிரியர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்வில், செந்துறை ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்களான தங்கசிவமூர்த்தி, சிவசக்தி ஆகியோர் சேர்ந்து கட்டட நிதியாக ரூ.1 லட்சத்தை கிளைத் தலைவர் ஜெயராமனிடம் வழங்கினார்.நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள் எஸ்.எம். சந்திரசேகர், செல்வராஜ், பொருளாளர் எழில், செயலர் ஸ்டீபன், துணை புரவலர் சகானா காமராஜ், முன்னாள் தலைவர் நல்லப்பன், மாநில பொதுக் குழு உறுப்பினர் செல்வராஜ், நிர்வாகக் குழு உறுப்பினர் சுமங்கலி ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




    Next Story
    ×