search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வட்டாட்சியர் அலுவலகம்"

    • 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு கொடுக்க வட்டாட்சியர் அலுவல கத்திற்கு வந்து செல்கின்ற னர்.
    • மழை காலங்களில் பாம்பு, விஷபூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் சுற்று சுவர் மற்றும் பல்வேறு வகையான மரங்களுடன் இயற்கையாக அமைந் துள்ளது.

    இங்கு மாரண்டஹள்ளி, புலிக்கரை, பாலக்கோடு, வெள்ளிச்சந்தை உள்ளிட்ட 4 வருவாய் பிர்காகளிலிருந்து தினந்தோறும் ஆதார் அட்டை, பட்டா பெறுதல், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை களுக்கு தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு கொடுக்க வட்டாட்சியர் அலுவல கத்திற்கு வந்து செல்கின்ற னர்.

    வட்டாட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் குப்பைகள், முட்புதர்கள், புல் செடிகள் மரங்கள் இருக்கும் பகுதியில் அடர்ந்த சீமை கருவேலம் மரங்கள் உள்ளிட்டவை இருப்பதால் மழை காலங்களில் பாம்பு, விஷபூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் வந்து செல்கின்றனர்,

    மேலும் மாற்றுத்தி றனாளிகள் பொதுமக்கள் பொதுக் கழிவறை சுகாதாரமற்றிருப்பதாலும் புதர் மண்டி இருப்பதாலும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் அடிப்படை வசதி கூட இல்லாமல் இருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு முட்புதர்கள் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பணிகள் தொடங்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் முடிந்தது.
    • புதிய கட்டிடம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் தாலுகா சாலையில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு தேர்தல் பிரிவு, சர்வேயர் பிரிவு, பதிவேடுகள் பாதுகாப்பு பிரிவு, இ-சேவை மையம், தனி வட்டாட்சியர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த பழமை கட்டிடத்தின் மேற்பகுதி சேதம், இட நெருக்கடி, மற்றும் பொது மக்களுக்கு போதுமான இருக்கை வசதி இல்லாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டனர் இதைத்தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இதை த்தொடர்ந்து பொன்னேரி- திருவொற்றியூர் சாலை வேன்பாக்கத்தில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு ரூ.3.06 கோடி ஒதுக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பணிகள் தொடங்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் முடிந்தது. தற்போது இந்த புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் திறக்க தயார் நிலையில் உள்ளது. ஆனால் இன்னும் திறக்கப்படாமல் பயன்பாட்டிற்கு வராமல் காணப்படுகிறது.

    இதனால் புதிய கட்டிட அலுவலகம் முன்பு புதர் மண்டியும், தனி நபர்கள் வாகனங்களை நிறுத்தும் இடமாகவும் பயன்படுத்து கிறார்கள். எனவே பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டிடம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    ×