search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "May day"

    • இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு.
    • அனைத்து நன்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் பலகோடி நன்றிகள்.

    மே 1 தினமான இன்று உழைப்பாளர் தினத்துக்கும், நடிகர் அஜித் பிறந்தநாளுக்கும் வாழ்த்து தெரிவித்து இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எஸ்.ஜே சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மே 1 உழைப்பாளர் தின வாழ்த்துகள் மற்றும் இந்த உழைப்புக்கு வாழ்க்கை கொடுத்த சிறந்த உழைப்பாளி அஜித்திற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வரும் ஆண்டு சிறப்பாக அமையட்டும்.

    வாலி திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிறது. அதற்காக, அப்பா, அம்மா, அஜித், என் அன்பும் ஆருயிருமான எனது அனைத்து நன்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் பலகோடி நன்றிகள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தபோதும் கர்நாடக அரசு திறக்கவில்லை.
    • அணைகளில் அதிகமாக தண்ணீர் இருக்கும்போதும் அதே பாட்டுதான்.

    சென்னை:

    இன்று (மே 1-ந் தேதி) உலகம் முழுவதும் உழைப்பாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் அமைந்துள்ள மே தின நினைவுச் சின்னத்துக்கு தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மே தின நினைவு சின்னத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, தலைமை நிலைய செயலாளரான தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், டி.கே.எஸ்.இளங்கோவன், தொ.மு.க. பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் எம்.பி., அமைச்சர் சி.வி.கணேசன், சென்னை மேற்கு மாவட்டக் கழக செயலாளர் நே.சிற்றரசு, பகுதிச் செயலாளர் மதன்மோகன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

     

    இதனை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகனை நிருபர்கள் சந்தித்தனர். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தபோதும் கர்நாடக அரசு திறக்கவில்லை. என்றைக்காவது கர்நாடகா அரசு நாங்கள் தண்ணீர் திறந்து விடுகிறோம் என்று சொல்லி இருக்கிறார்களா? இல்லை. அணைகளில் அதிகமாக தண்ணீர் இருக்கும்போதும் அதே பாட்டுதான். குறைவாக தண்ணீர் இருக்கும்போதும் அதே பாட்டுதான். காவிரி ஒழுங்காற்று குழு தண்ணீரை திறந்து விடுமாறு கூறியும் திறக்க மாட்டேன் என்று கர்நாடக அரசு கூறுகிறது.

    ஆகையால் மத்திய அரசை கர்நாடக அரசு மதிக்காமல் இருக்கிறது. இதில் கேள்வி கேட்க வேண்டியது சுப்ரீம் கோர்ட்டுதான். எனவே காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உழைப்பு, காதல், பசி இந்த மூன்றுமே மண்ணுலகை இயக்கும் மகா சக்திகள்...
    • இந்தப் பாட்டு இந்த மூவருக்கு மட்டுமல்ல உழைக்கும் தோழர் ஒவ்வொருவருக்கும் சொந்தம்...

    சென்னை :

    மே தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து இன்று எக்ஸ் தள பக்கத்தில் 'கண் சிவந்தால் மண் சிவக்கும்' என்ற பாடலை வெளியிட்டு கூறியிருப்பதாவது,

    உழைப்பு, காதல், பசி

    இந்த மூன்றுமே

    மண்ணுலகை இயக்கும்

    மகா சக்திகள்

    அந்த உழைப்பு

    உரிமை பெற்றநாள்

    இந்த நாள்

    தூக்குக் கயிற்றுக்குக்

    கழுத்து வளர்த்தவர்களும்

    குண்டுகள் குடைவதற்காக

    நெஞ்சு நீட்டியவர்களும்

    வீர வணக்கத்துக்குரியவர்கள்

    இந்தச் சிறப்பு நாளுக்கு

    ஒரு சிவப்புப் பாடல் காணிக்கை

    எழுத்து வைரமுத்து

    இசை இளையராஜா

    குரல் ஜேசுதாஸ்

    இந்தப் பாட்டு

    இந்த மூவருக்கு மட்டுமல்ல

    உழைக்கும் தோழர்

    ஒவ்வொருவருக்கும் சொந்தம்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் மே தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • உழைப்பாளர்களுக்கான உரிமைகளை நிலைநாட்ட உறுதியேற்போம்!

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று, தொழிலாளர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம். இது மே தினம் அல்லது சர்வதேச தொழிலாளர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் பங்களிப்புகள் இந்த நாளில் நினைவு கூரப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.

    இதனால் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் மே தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்குப் பறைசாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த "மே தின" நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்பதை மனதில் கொண்டு, அவர்களுக்கான உரிமைகளை நிலைநாட்ட உறுதியேற்போம்! என கூறியுள்ளார்.

    • ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம்!
    • உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்!

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் உழைப்பாளர் தினத்தில் வாழ்த்திப் போற்றுவோம்!

    மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க - ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம்! உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்!

    இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

    • ஜாதி, மதம், இனம், மொழி, நிறம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, மனித குலம் முழுவதும் கொண்டாடும் நாள் மே தினமாகும்
    • உலகெங்கிலும் உள்ள உழைக்கும் தொழிலாளர்கள் உரிய உரிமை பெற வேண்டும். சமுதாயத்தில் உயர்வு காண வேண்டும்

    மே தினத்தை முன்னிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜாதி, மதம், இனம், மொழி, நிறம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, மனித குலம் முழுவதும் கொண்டாடும் நாள் மே தினமாகும். உலகெங்கிலும் உள்ள உழைக்கும் தொழிலாளர்கள் உரிய உரிமை பெற வேண்டும். சமுதாயத்தில் உயர்வு காண வேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில் உருவானதே மே தின நாளாகும்.

    நாடுகள் பலவாயினும் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுவது மே தினம் மட்டுமே. அதே போல மனிதர்களும் உழைத்து வாழ வேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி. எல்லோரும் இன்ப வாழ்வு காண பாடுபடுவதே தேமுதிகவின் லட்சியமாகும். வறுமையை ஒழித்து, எல்லோருக்கும் எல்லா நலமும், வளமும் கிடைத்திட இந்த மே தின நன்னாளில் சூளுரை மேற்கொள்வோம்.

    இரத்தத்தை வியர்வையாக்கி உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தேமுதிக சார்பில் எனது மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். எரிமலை எப்படிப் பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம், ரத்தச்சாட்டை எடுத்தால் கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும், மே தினம் உழைப்பவர் சீதனம், மே தினம் உழைப்பவர் சீதனம், மே தினம் உழைப்பவர் சீதனம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் தொழிலாளர்களின் நலம் நாடிப் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது.
    • நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளர்களின் தோழனாக பல்வேறு புதிய திட்டங்களைக் கடந்த மூன்றாண்டுகளில் நிறைவேற்றி வருகிறோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தொழிலாளர் சமுதாயம் 8 மணி வேலை, முறையான ஊதியம் ஆகியவற்றை வலியுறுத்தி ரத்தம் சிந்திப் போராடி, உயிர்ப் பலி தந்து தொழிலாளர் சமுதாயம் பெற்ற உரிமை வரலாற்றை நினைவுபடுத்தும் நாள் தான் மே நாள்! திராவிட முன்னேற்றக் கழகம், தொழிலாளர்களை உயிராக மதிக்கும் இயக்கம்.

    தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் தொழிலாளர்களின் நலம் நாடிப் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது.

    நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளர்களின் தோழனாக பல்வேறு புதிய திட்டங்களைக் கடந்த மூன்றாண்டுகளில் நிறைவேற்றி வருகிறோம்.

    கடைகள் மற்றும் நிறுவனங்களில் அனைத்துப் பணியாளர்களும் அமர்வதற்கு, பணிபுரியும் இடங்களில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தித் தருதல் குடிநீர், கழிப்பிடம், ஓய்வு அறை, உணவருந்தும் அறை மற்றும் முதலுதவி வசதிகள் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் 1947 ஆம் ஆண்டைய தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு தொழிலாளர் நலன்கள் இந்த அரசினால் பாதுகாக்கப்பட்டுள்ளன.

    தொழிலாளர்கள் நலனில் முழு அக்கறை செலுத்தி தொழிலாளர்களையும், அவர்களின் குடும்பங்களையும் காத்து வரும் திராவிட மாடல் அரசின் சார்பில் தொழிலாளர் சமுதாயம் நல வாழ்விலும், பொருளாதார மேம்பாட்டிலும் முன்னேற்றங்கள் பல கண்டு உயர்ந்திட என் நெஞ்சம் நிறைந்த "மே" தின நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • ஆண்டிப்பட்டியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
    • ஊராட்சி மன்றத்தலைவர் மீனாள் தலைமை தாங்கினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி யூனியன் ஆண்டிப்பட்டி ஊராட்சி மன்றத்தில் மேதின சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் மீனாள் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் செல்வம் வரவேற்று தீர்மான அறிக்கை வாசித்தார். யூனியன் பற்றாளர் முத்தையா ''எங்கள் கிராமம் எழில்மிகு கிராமம்'' உறுதி மொழி வாசித்தார்.

    இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டயானா, கிராம நிர்வாக அலுவலர்கள் கீதா, பாண்டியம்மாள், உமாதேவி, தலைமை ஆசிரியர் கணேசன், கிராமசுகாதார செவிலியர் சித்ரா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி உறுப்பினர் அழகர் நன்றி கூறினார்.

    • கொம்புக்காரன் பொட்டல் சமுதாய நலக்கூடத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சாயர்புரம்:

    நட்டாத்தி ஊராட்சியின் மே தின கிராமசபைக் கூட்டம் கொம்புக்காரன் பொட்டல் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் சுதாகலா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பண்டாரம் முன்னிலை வகித்தார். பற்றாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோசப், வார்டு உறுப்பினர்கள் ஜான்சிராணி, சரோஜா, பண்டாரம், மணி மந்திரம் அங்கன்வாடி பணியாளர்கள் ஜோதிகனி, உச்சிமாகாளி, தேவிகலா டிவிஎஸ் தொண்டு நிறுவனம் சார்பாக செல்வி, திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளச்சாமி பணித்தள பொறுப்பாளர்கள் எஸ்தர், மருதவள்ளி, மேரி ஆனந்தி மற்றும் ஊராட்சி பொதுமக்கள், சுயஉதவிக்குழுவினர் 100 நாள் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் 2022-23-ம் நிதி ஆண்டிற்கான வரவு-செலவுகள், 2021-22 ஊராட்சி தணிக்கை அறிக்கை, திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, அனைவருக்கும் வீடு திட்டம் கணக்கெடுப்பு ஒப்புதல், நெகிழி ஒழிப்பு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள், 15-வது நிதிக்குழு மானிய பணிகள் ஒப்புதல், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், தூய்மை பாரத இயக்கம், பள்ளி மேலாண்மை குழு செயல்பாடுகள் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் முத்துராஜ் செய்திருந்தார்.

    • மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 106 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மேற்கண்ட தகவலை மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்தார்.

    மதுரை

    தொழிலாளர் துறை முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் உத்தரவின்ப டியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோரது வழிகாட்டுதலின்படியும் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் களால் தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று மதுரை மாவட்டத்தில் கூட்டாய்வு மேற்கொள்ளப் பட்டது.

    தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் தேசிய, பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள் சட்டத்தின்படி, உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மே தினத்தன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

    இந்த நாளில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமானால் உரிய படிவத்தில் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் அவர்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.

    அவ்வாறு மே தினத்தன்று மதுரை மாவட்டத்தில் உள்ள கடைகள், உணவ கங்கள், மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி சட்ட விதிகளை அனுசரிக்காமல் அவற்றிற்கு முரணாக தொழிலாளர் களை பணிக்கு அமர்த்திய 62 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 43 உணவு நிறுவனங்கள் மற்றும் 1 மோட்டார் போக்குவரத்து நிறுவனம் என மொத்தம் 106 நிறுவனங்களின் மீது முரண்பாடுகள் கண்டறி யப்பட்டு சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேற்கண்ட தகவலை மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்தார்.

    • கடலி ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
    • அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே கடலி ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, வட்டார கல்விக் குழு தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் வரவேற்றார்.

    அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மேலும் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணை தலைவர் விஜயலட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுப்ரமணியன், செல்வி ராமசரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலோத்துங்கன், சரவணகுமார், ஒன்றிய கவுன்சிலர் ரவிச்சந்திரன் மற்றும் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • 1917-ல் ரஷ்யாவில் லெனின் தலைமையில் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
    • புதுவையில் பஞ்சாலை தொழிலாளர்கள்தான் பெருமளவில் இருந்தனர்.

    புதுச்சேரி:

    18-ம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் நில பிரபுக்கள், ஜமீன்தார்கள், தொழிலதிபர்கள் தங்களிடம் வேலைபார்க்கும் தொழிலாளர்களை நசுக்கி பிழிந்து வந்தனர்.

    1986-ம் ஆண்டு மே 4-ந்தேதி அமெரிக்காவில் சிகாகோ நகரில் ரொட்டி தயாரிப்பு நிறுவன தொழிலாளர்கள் அதிக பணி நேர வேலை, குறைந்த கூலி ஆகியவற்றை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் 8 தொழிலாளர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    அன்று தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காரணத்தால் இந்த தகவல் 6 மாதத்திற்கு பிறகு ஜெர்மனில் இருந்த காரல்மார்க்சை சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து அவர் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மே 1-ந் தேதியை தொழிலாளர் தினமாக கடைபிடிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.

    இதையடுத்து பல நாடுகள் மே 1-ந்தேதியை தொழிலாளர் தினமாக கடைபிடிக்க தொடங்கியது. 1917-ல் ரஷ்யாவில் லெனின் தலைமையில் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த ஆட்சி மாற்றம் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியது.

    இதனால் தொழிலாளர்கள் பல நாடுகளில் தங்கள் உரிமைக்காக குரல் எழுப்பி போராட தொடங்கினர். 1923-ம் ஆண்டு மே 1-ந் தேதி பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சென்னையில் மெரினா கடற்கரையில் சிந்தனைசிற்பி சிங்காரவேலர் முதல்முறையாக தொழிலாளர் தினத்தை கொண்டாடினார்.

    இதன் தாக்கம் புதுவையிலும் எதிரொலித்தது. அப்போது புதுவையில் பஞ்சாலை தொழிலாளர்கள்தான் பெருமளவில் இருந்தனர். ஆங்கிலோ பிரெஞ்சு டெக்ஸ்டைல்ஸ், சவானா, கெப்ளே என 3 பஞ்சாலைகள் இயங்கி வந்தது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

    இங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் 12 மணி நேர வேலைக்கு நிர்பந்திக்கப்பட்டனர். 1936-ம் ஆண்டு கம்யூனிஸ்டு தொழிற்சங்க தலைவர் வ.சுப்பையா தலைமையில் 8 மணி நேர வேலை உரிமைக்காக பஞ்சாலை தொழிலாளர்கள் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் வலுத்தது.

    போராட்டத்தை அடக்க 1936-ம் ஆண்டு ஜூலை 30-ந்தேதி பிரெஞ்சு அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது.

    இதனால் 1937 ஏப்ரல் 6-ந்தேதி பிரெஞ்சு பாராளுமன்றத்தில் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்காக சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் நகல் புதுவைக்கு கிடைத்தது. அது பிரெஞ்சு மொழியில் இருந்ததால் மொழி பெயர்ப்பு செய்து, தமிழிலில் பாரதிதாசன் வெளியிட்டார். தொழிலாளர்கள் உயிரை இழந்து 8 மணி நேர வேலை உரிமையை பெற்றுத் தந்த போராட்டத்தின் நினைவாக மே தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

    இன்று 138-வது மே தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. புதுவையிலும் அனைத்து தொழிற்சங்கத்தினரும் கொடியேற்றி தொழிலாளர்களுக்கு இனிப்பு, சீருடை, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.

    ×