search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேல்மலையனூர் அருகே கடலி ஊராட்சியில் மே தின கிராமசபை கூட்டம்
    X

    மேல்மலையனூர் அருகே கடலி ஊராட்சியில் மே தின கிராமசபை கூட்டம்

    • கடலி ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
    • அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே கடலி ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, வட்டார கல்விக் குழு தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் வரவேற்றார்.

    அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மேலும் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணை தலைவர் விஜயலட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுப்ரமணியன், செல்வி ராமசரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலோத்துங்கன், சரவணகுமார், ஒன்றிய கவுன்சிலர் ரவிச்சந்திரன் மற்றும் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×