search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மே தின விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை
    X

    மே தின விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

    • மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 106 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மேற்கண்ட தகவலை மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்தார்.

    மதுரை

    தொழிலாளர் துறை முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் உத்தரவின்ப டியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோரது வழிகாட்டுதலின்படியும் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் களால் தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று மதுரை மாவட்டத்தில் கூட்டாய்வு மேற்கொள்ளப் பட்டது.

    தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் தேசிய, பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள் சட்டத்தின்படி, உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மே தினத்தன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

    இந்த நாளில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமானால் உரிய படிவத்தில் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் அவர்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.

    அவ்வாறு மே தினத்தன்று மதுரை மாவட்டத்தில் உள்ள கடைகள், உணவ கங்கள், மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி சட்ட விதிகளை அனுசரிக்காமல் அவற்றிற்கு முரணாக தொழிலாளர் களை பணிக்கு அமர்த்திய 62 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 43 உணவு நிறுவனங்கள் மற்றும் 1 மோட்டார் போக்குவரத்து நிறுவனம் என மொத்தம் 106 நிறுவனங்களின் மீது முரண்பாடுகள் கண்டறி யப்பட்டு சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேற்கண்ட தகவலை மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்தார்.

    Next Story
    ×