search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Massage center"

    • 50-க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்களில் போலீசார் சோதனை நடத்தி வீடியோ பதிவுகளை கைப்பற்றியுள்ளனர்.
    • மசாஜ்கள் எல்லாம் பாலியல் ரீதியாகவே நடத்தப்பட்டு இளைஞர்களிடம் பணம் பறிக்கும் வித்தையாகவே மாறி இருக்கிறது

    சென்னை:

    சென்னையில் மசாஜ் சென்டர்களில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் சம்ப வங்கள் நடைபெற்று வருகிறது.

    இதனை கட்டுப்படுத்து வதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக மசாஜ் சென்டர்களில் ரகசியமாக ஆய்வு செய்யும் போலீசார் அது சட்ட விரோதமாக நடைபெறுவதாக தெரிய வந்தால் அதற்கு சீல் வைத்து வருகிறார்கள்.

    அந்த வகையில் சென்னையில் மசாஜ் சென்டர்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். கோயம்பேடு, திருமங்கலம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 50-க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்களில் போலீசார் சோதனை நடத்தி வீடியோ பதிவுகளை கைப்பற்றியுள்ளனர்.


    அதில் சினிமா துணை நடிகைகள், குடும்ப பெண்கள், கல்லூரி மாணவிகள் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த வீடியோக்களில் இடம் பெற்றுள்ள துணை நடிகைகள் பகுதி நேரமாக மசாஜ் சென்டர்களில் மசாஜ் செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் குடும்ப பெண்கள், கல்லூரி மாணவிகள் ஆகி யோரும் மசாஜ் சென்டர்களில் பணியாற்றி வாலிபர்களுக்கு எண்ணை தேய்த்து விட்டு மசாஜ் செய்து வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    வாலிபர்களை மசாஜ் செய்ய அழைத்து குறுஞ்செய்திகளை வாட்ஸ் அப் வழியாகவும் இவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். அதில் "அழகான பெண்கள் உங்களுக்கு மசாஜ் செய்ய காத்திருக்கிறார்கள். விரைந்து வரவும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "சலுகை விலையில் நிறைவான மசாஜ்" என்கிற பெய ரிலும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார்கள்.

    இப்படி இளைஞர்களை மயக்கும் வகையில் மசாஜ் செய்யும் துணை நடிகைகள் உள்ளிட்ட பெண்கள் இறுதிக் கட்டத்தில் எல்லை மீறி நடந்து வாலிபர்களை மேலும் மயக்கமாக்கி கூடுதல் பணத்தை கறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு "பினிசிங் டச்" என்று பெயர் வைத்துள்ளனர்.

    தொடக்கத்தில் மேற்கொள்ளப்படும் "கை மசாஜ்" முடியும் நேரத்தில் "உதட்டு மசாஜ்" ஆகவும் மாறி விடுகிறது. இதற்கு தனி கட்டணம் என்று கூறி கூடுதல் பணத்தையும் கறந்து விடுகிறார்கள். இப்படி மசாஜ் சென்டர்களில் ஆபாச லீலைகள் அரங்கேறுவதாக எழும் புகாரின் பேரிலும் போலீ சார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.


    தற்போது கோடை காலம் என்பதால் மசாஜ் சென்டர்களில் உடல் சூட்டை தணிக்கும் வகையிலான மசாஜ் செய்யப்படுவதாகவும் தகவல்கள் பகிரப்பட்டு வாடிக்கையாளர்கள் வசப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

    தயிர் மசாஜ், பழ மசாஜ் என்றும் அதற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். இது போன்ற மசாஜ்கள் எல்லாம் பாலியல் ரீதியாகவே நடத்தப்பட்டு இளைஞர்களிடம் பணம் பறிக்கும் வித்தையாகவே மாறி இருக்கிறது என்கிற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது.

    இதையடுத்தே மசாஜ் சென்டர்கள் மீதான போலீசாரின் பார்வை வேறு விதமாக மாறி அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    • 2 பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • கேரளாவை சேர்ந்த நிகில் சிட்டி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதி யில் மசாஜ் சென்ட ர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இந்த மசாஜ் சென்டர்களில் பெரும்பாலும் வட மாநில பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    இதில் சில மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் தொழில் நடை பெறுவதாக போலீசாருக்கு புகார் வந்தது.

    அதன் பேரில் போலீசார் சமீப காலகமாக மசாஜ் சென்டர்களில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதில் சில மசாஜ் சென்டரில் வேலை பார்க்கும் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர்களை போலீசார் மீட்டு வருகின்றனர். மேலும் மசாஜ் தொழில் ஈடுபடும் புரோக்கர்கள், உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலை யில் ஈரோடு நெரிக்கல்மே ட்டில் ஒரு மசாஜ் சென்டர் இயங்கி வந்தது.

    இந்த மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்து வதாக வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் போலீசார் இரவு அங்கு அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். இதில் அங்கு 2 பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து விபச்சாரம் நடத்திய கேரளா மாநிலம் திருசூரை சேர்ந்த திலகன் மகன் நிகில் சிட்டி (28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அங்கு இருந்த 2 பெண்களை மீட்டு அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மசாஜ் சென்டர் உரிமையாளரான ரங்க நாயகி என்பவரை போலீசார் தேடி வருகி ன்றனர்.

    இதேபோல் நேற்றும் மசாஜ் சென்டரில் விபசார தொழிலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட னர். 6 பெண்கள் மீட்க ப்பட்டது குறிப்பிடத்தக்கது


    • மும்பையைச் சேர்ந்த 30 வயது பெண், திருப்பூர் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஆகியோரை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
    • திருப்பூர் குமரன் ரோட்டில் ஒரு ஓட்டலில் உள்ள அறையில் மசாஜ் சென்டர் நடந்து வந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் குமரன் ரோட்டில் ஒரு ஓட்டலில் உள்ள அறையில் மசாஜ் சென்டர் நடந்து வந்தது. இந்த சென்டரில் விபசாரம் நடப்பதாக திருப்பூர் வடக்கு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கொங்கு நகர் உதவி போலீஸ் கமிஷனர் அனில் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் அந்த மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

    அங்கிருந்து மும்பையைச் சேர்ந்த 30 வயது பெண், திருப்பூர் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஆகியோரை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மசாஜ் சென்டர் நடத்தி வந்த திருப்பூர் பி.என். ரோடு பகுதியை சேர்ந்த மோகன் (வயது 30) என்பவரை வடக்கு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    • கே.வி.ஆர்.நகரை சேர்ந்த காளிஸ்வரன் (27), ஆனந்த் (26) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • இன்ஸ்பெக்டர் பதுர்நிஷா பேகம் மற்றும் போலீசாரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பாராட்டினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் ரோடு வெங்கடாசலபுரம் 3-வது வீதியில் உள்ள மசாஜ் சென்டரில் கடந்த 1-12-2022 அன்று மாலை 4 பேர் கொண்ட கும்பல் புகுந்து அங்கிருந்த பெண் ஊழியர்களை கத்தியால் தாக்கி பணம் கேட்டு கொலைமிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பூர் ஆண்டிப்பாளையத்தை சேர்ந்த சையது முகமது இக்ரம் (வயது 26), தெற்கு ேதாட்டத்தை சேர்ந்த கார்த்திக் (27), கே.வி.ஆர்.நகரை சேர்ந்த காளிஸ்வரன் (27), ஆனந்த் (26) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. சையது முகமது இக்ரம், கார்த்திக், காளிஸ்வரன், ஆனந்த் ஆகிய 4 பேருக்கு தலா 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார். சிறப்பாக செயல்பட்ட மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்ரா, சிறந்த முறையில் சாட்சிகளை விரைந்து ஆஜர் செய்த இன்ஸ்பெக்டர் பதுர்நிஷா பேகம் மற்றும் போலீசாரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பாராட்டினார்.

    • இளம்பெண் தனது கணவரிடம் வேலைக்கு செல்வதாக கூறினார்.
    • இளம்பெண் மசாஜ் சென்டருக்கு வரும் ஆண்களுடன் வெளியே சென்று உல்லாசமாக இருப்பது தெரியவந்தது

    கோவை

    கோவை கே.ஜி.சாவடியை சேர்ந்த 30 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் ரெயில்வே ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    நள்ளிரவு

    இந்தநிலையில் இளம்பெண் தனது கணவரிடம் வேலைக்கு செல்வதாக கூறினார். இதனையடுத்து அவரை அவரது கணவர் வேலைக்கு செல்ல அனுமதித்தார். ஆனால் இளம்பெண் தினசரி நள்ளிரவில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். இதனை அவரது கணவர் கண்டித்தார்.

    இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தினசரி வேலை முடிந்து வீட்டிற்கு வரும் இளம்பெண் மிகவும் சோர்வாக காணப்பட்டார். அவர் தனது குழந்தைகளையும் கவனிக்காமல் இருந்தார். இதனால் இளம்பெண்ணின் நடத்தையில் அவரது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனது மனைவி எங்கே வேலை செய்கிறார். என்ன வேலைக்கு செல்கிறார் என்பதை கண்காணிக்க திட்டமிட்டார்.

    பல ஆண்களுடன் உல்லாசம்

    அதன்படி அவர் வேலைக்கு செல்லும் போது பின் தொடர்ந்து சென்று கண்காணித்தார். அப்போது இளம்பெண் தனது கணவருக்கு தெரியாமல் மசாஜ் சென்டரில் வேலை பார்ப்பதும், அவருக்கு பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பு இருப்பது ெதரிய வந்தது.

    இளம்பெண் மசாஜ் சென்டருக்கு வரும் ஆண்களுடன் வெளியே சென்று உல்லாசமாக இருந்து விட்டு நள்ளிரவு வீட்டிற்கு வருவது தெரிய வந்தது.

    ஓட்டம்

    இதுகுறித்து அவர் இளம்பெண்ணிடம் கேட்டார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இளம்பெண்ணின் கணவர் வழக்கம் போல வேலைக்கு சென்றார். வீட்டில் இருந்த இளம்பெண் கணவரிடம் கோபித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

    இது குறித்து இளம்பெண்ணின் கணவர் கே.ஜி.சாவடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள். 

    • அறைக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
    • போலீசார் கதவை தட்டி உள்ளே இருந்தவர்களை அழைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக வடக்கு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    விபசாரம் :

    இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டருக்கு சென்றனர். அப்போது அங்குள்ள அறைக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. உள்ளே 2 இளம்பெண்கள், 2 ஆண்கள் சென்றதாக அருகில் இருந்த பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் கதவை தட்டி உள்ளே இருந்தவர்களை அழைத்தனர். ஆனால் கதவை திறக்கவில்லை. அப்போது அந்த அறையில் பின்புற கதவு இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று போலீசார் பார்த்தபோது அறைக்குள் யாரும் இல்லை. சொகுசு படுக்கைகள் இருந்தன.

    தப்பியோட்டம்

    போலீசார் வருவதை அறிந்ததும் 4 பேரும் பின்புறம் வாசல் வழியாக தப்பியது தெரியவந்தது. இதையடுத்து அந்த கட்டிடத்தை வாடகைக்கு விட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    நடவடிக்கை

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், திருப்பூரில் ஸ்பா என்ற பெயரில் சிலர் விபசாரம் நடத்தி வருகின்றனர்.சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டருக்கு தினமும் இளம்பெண்கள், இளைஞர்கள் வருகின்றனர். அவர்கள் காரை வேறு இடத்தில் நிறுத்தி விட்டு வருகின்றனர். மசாஜ் சென்டருக்குள் செல்லும் அவர்கள் அரை மணி நேரம் கழித்து திரும்புவார்கள். எனவே விபசாரம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    மசாஜ் சென்டருக்குள் புகுந்து பெண்களிடம் கத்தி முனையில் நகை பறித்த கும்பலில் ஒருவன் சிக்கினான். தப்பி ஓடிய 4 பேர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    சாலிகிராமம், ஆற்காடு சாலையில் உள்ள வணிக வளாகத்தின் முதல் தளத்தில் “அரோமா பியூட்டி பார்லர்” என்கிற பெயரில் மசாஜ் சென்டர் உள்ளது. இங்கு 3 பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    நேற்று மதியம் மசாஜ் சென்டருக்கு 5 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அங்கிருந்த பெண் ஊழியர்களிடம் பேச்சு கொடுத்தனர். திடீரென அவர்கள் 3 பெண் ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 3 செல்போன்கள், 2 பவுன் செயின், ரூ.7 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர்கள் கூச்சலிட்டனர். சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் 5 பேர் கும்பலை துரத்திச் சென்றனர். அதில் ஒருவனை மட்டும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மற்ற 4 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து மசாஜ் சென்டர் மேலாளர் கார்த்திக், விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் கோமதி பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினார். அவன், எம்.ஜி.ஆர். நகர் சூளைப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் என்பது தெரிய வந்தது.

    தப்பி சென்ற கூட்டாளிகள் 4 பேர் குறித்து ஆற்காடு சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மசாஜ் சென்டரில் எப்போது, எந்த சூழ்நிலையில் போலீசார் சோதனை நடத்தலாம் என்ற வரையறை செய்து தமிழக டி.ஜி.பி., அனைத்து போலீஸ் நிலையத்துக்கும் சுற்றறிக்கை அனுப்பினால் என்ன?’ என்று ஐகோர்ட் கேள்வியெழுப்பியுள்ளது.
    சென்னை:

    கோவையை சேர்ந்தவர் புஷ்பா. இவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘கோவையில், ‘ஸ்பா’ என்ற மசாஜ் சென்டர் நடத்தி வருகிறேன். இங்கு, கேரளாவின் பாரம்பரியமான ஆயுர்வேத சிகிச்சை அடிப்படையில் உடலுக்கு மசாஜ் செய்யப்படுகிறது. இதனால், உடலில் உள்ள பல நோய்கள் குணமடைகின்றன.

    ரத்த நாளங்கள் சரியாகி, ரத்த ஓட்டம் சீராகுகிறது. ஆனால், தேவையில்லாமல் போலீசார் இதுபோன்ற பாரம்பரியமான மசாஜ் சென்டரில் சோதனை நடத்துகின்றனர். 2014-ம் ஆண்டு மசாஜ் சென்டரில் தேவையில்லாமல், அடிப்படை முகாந்திரம் இல்லாமல், சோதனை நடத்தக்கூடாது என்று அப்போதைய ஐகோர்ட்டு நீதிபதி வி.ராம சுப்பிரமணியம் தீர்ப்பு அளித்தார்.

    எனவே, தேவையில்லாமல் மசாஜ் தொழிலில் தலையிடக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்தார். பின்னர் நீதிபதி, ‘ஐகோர்ட்டு ஏற்கனவே 2 முறை உத்தரவிட்டுள்ளது.

    அந்த உத்தரவின் அடிப்படையில், மசாஜ் சென்டரில் எப்போது, எந்த சூழ்நிலையில் போலீசார் சோதனை நடத்தலாம் என்ற வரையறை செய்து தமிழக டி.ஜி.பி., அனைத்து போலீஸ் நிலையத்துக்கும் சுற்றறிக்கை அனுப்பினால் என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக சிறப்பு அரசு பிளீடர் ஏ.பாலமுருகன் கூறினார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
    கோவையில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டதையடுத்து உரிமையாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் எல்.ஐ.ஜி. காலனியில் ஆயுர்வேத வெல் சென்டர் என்ற பெயரில் மசாஜ் சென்டர் இயங்கி வந்தது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு தான் இந்த மசாஜ் சென்டர் தொடங்கப்பட்டது. கேரள மாநிலம் பத்தனம் திட்டாவை சேர்ந்த நவீன் (30) இதனை நடத்தி வந்தார். இங்கு ஊழியர்களாக கோட்டயத்தை சேர்ந்த சம்பத், திருச்சூர் ஜினேஷ், எர்ணாகுளம் ‌ஷனு ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். மசாஜ் சென்டர் என்ற பெயரில் இங்கு விபசாரம் நடப்பதாக பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசுக்கு புகார் வந்தது.

    இதை தொடர்ந்து டி.எஸ்.பி. கிருஷ்ண மூர்த்தி, இன்ஸ்பெக்டர் நடேசன் மற்றும் போலீசார் இந்த மசாஜ் சென்டரை கண்காணித்தனர். அப்போது அங்கு விபசாரம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மசாஜ் சென்டர் உரிமையாளர் நவீன், ஊழியர்கள் சம்பத், ஜினேஷ், ‌ஷனு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    புதுக்கோட்டை மற்றும் பெங்களூரை சேர்ந்த 2 இளம்பெண்கள் அங்கு இருந்தனர். அவர்களை போலீசார் மீட்டு கோவை சங்கனூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    ×