search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபச்சாரம்"

    • மும்பையைச் சேர்ந்த 30 வயது பெண், திருப்பூர் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஆகியோரை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
    • திருப்பூர் குமரன் ரோட்டில் ஒரு ஓட்டலில் உள்ள அறையில் மசாஜ் சென்டர் நடந்து வந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் குமரன் ரோட்டில் ஒரு ஓட்டலில் உள்ள அறையில் மசாஜ் சென்டர் நடந்து வந்தது. இந்த சென்டரில் விபசாரம் நடப்பதாக திருப்பூர் வடக்கு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கொங்கு நகர் உதவி போலீஸ் கமிஷனர் அனில் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் அந்த மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

    அங்கிருந்து மும்பையைச் சேர்ந்த 30 வயது பெண், திருப்பூர் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஆகியோரை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மசாஜ் சென்டர் நடத்தி வந்த திருப்பூர் பி.என். ரோடு பகுதியை சேர்ந்த மோகன் (வயது 30) என்பவரை வடக்கு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    • உறையூர் பகுதியில் வெளி மாநில அழகிகளை வைத்து விபச்சாரம்
    • புரோக்கர் அதிரடி கைது செய்யப்பட்டு உள்ளார்

    திருச்சி,

    திருச்சி உறையூர் ஏ.யூ.டி. காலனி பி. வி.குடோன் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அசாருதீன் (வயது 27). இவர் வெளி மாநில அழகிகளை வைத்து விபச்சாரம் செய்து வந்ததாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே விபச்சார தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு விபச்சாரம் நடைபெறுவது உறுதியானது. பின்னர் முகமது அசாருதீனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்டு எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அறந்தாங்கியில் 4 இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெற்றை போலீசார் தடுத்து நிறுத்தினர்
    • இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்

    புதுக்கோட்டை,

    அறந்தாங்கி எல் என் புரம் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 5 பேரை மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அறந்தாங்கி எல்என்புரம் பகுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக மாவட்ட தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படையினர் ஒரு வீட்டில் 4 இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்றுள்ளதை கண்டுள்ளனர். அதனையடுத்து இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 5 நபர்களை காவல்த்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட 4 இளம் பெண்களையும் மீட்டு ஆவுடையார்கோவில் ரீக்கோ காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடைபெற்று கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடைபெற்றது
    • வெளிமாநில அழகி உட்பட 3 பேர் மீட்பு

    திருச்சி,

    திருச்சி கண்டோ ன்மெண்ட் கலெக்டர் அலுவலக சாலை பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக கண்டோன்மெண்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே விபச்சார தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். அப்போது பாலியலில் இளம் பெண்களை ஈடுபடுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    அதைத் தொடர்ந்து திருச்சி திருவெறும்பூர் மூன்றாவது தெரு அடைக்கல அன்னை நகர் பகுதியைச் சேர்ந்த விவேக் கிருஷ்ணன் (வயது 29)என்பவரை கைது செய்தனர். அவரது பிடியில் இருந்த ஹரியானா மாநிலம் செக்க சிக்கா கெய்தால் பகுதியைச் சேர்ந்த 48 வயது அழகி மற்றும் திருச்சியில் லால்குடி திருச்சி இடுமலைப்பட்டி புதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 38 மற்றும் 24 வயதுடைய 2 இளம் பெண்கள் ஆகிய மூன்று பேரை போலீசார் மீட்டனர் அவர்கள் வசம் இருந்து 5 செல்போன்கள் மட்டுமல்லாமல் ரூ.5000, ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது

    • தில்லை நகர் பகுதியில் மசாஜ் சென்டரில் விபச்சாரம்
    • 2 இளம் பெண்கள் மீட்பு

    திருச்சி, 

    திருச்சி தில்லைநகர் சாஸ்திரி ரோடு பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஸ்பா எனும் மசாஜ் சென்டர் இயங்கி வந்தது. இங்கு இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வதாக திருச்சி இ.பி. ரோடு தையல்காரை தெருவை சேர்ந்த சபிக் முகமது தில்லை நகர் போலீசில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான சிறப்பு படை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று சோதனை நடத்தினர். இதில் திருச்சி கருமண்டபம் ஆர். எம்.எஸ். காலனி 2-வது தெரு பகுதியைச் சேர்ந்த பூபதி சஞ்சய் ( வயது 28) என்பவர் இரண்டு இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பூபதியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம்

    வாடிக்கையாளர்களுக்கு வலை வீச வைத்திருந்த 2 செல்போன்களை கைப்பற்றினர் .மீட்கப்பட்ட பாண்டிச்சேரியை சேர்ந்த 25 மற்றும் 23 வயது உடைய இரண்டு இளம் பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். கைதான பூபதி மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 2 அழகிகள் காப்பகத்தில் ஒப்படைப்பு
    • சொந்த தேவைக்கு என வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து விபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்தியது தெரியவந்தது.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே முளகுமூடு நிங்காரவிளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்ப தாக திருவட்டார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ் பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வீட்டில் அரைகுறை ஆடையுடன் 2 பெண்களும் ஒரு ஆணும் இருந்தனர். போலீசார் அவர்கள் 3 பேரிடமும் விசாரணை நடத்தினார்கள். அப்போது பிடிபட்டவர் தக்கலை அப்பட்டுவிளையை சேர்ந்த ரவீந்திரன் (வயது 61) என்பது தெரியவந்தது.

    போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற இவர் நிங்காரவிளை பகுதியில் தன்னுடைய சொந்த தேவைக்கு என வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து விபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்தியது தெரியவந்தது.

    மீட்கப்பட்ட 2 பெண்களிடம் விசாரணை நடத்திய போது ஒருவர் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் சென்னையை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இருவரையும் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். ரவீந்திரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய் யப்பட்ட ரவீந்திரன் கோர்ட் டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    விபச்சார கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்ட ரவீந்திரன் வீட்டை சொந்த தேவைக்கு என்று எடுத்துள்ளார். இங்கு 2 பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டுள் ளார்.

    அடிக்கடி இந்த வீட்டிற்கு ஆட்கள் வந்து சென்றதால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வாலிபர்களை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு வரவழைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

    • வீட்டை மாற்று உடையில் போலீசார் ரோந்து சுற்றி நோட்டமிட்டனர்.
    • 2 அழகிகளை மீட்டு கோவையில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரம் நல்லூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட முத்தணம்பாளையம் அருகே ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அந்த வீட்டை மாற்று உடையில் போலீசார் ரோந்து சுற்றி நோட்டமிட்டனர். அப்போது அந்த வீட்டிற்கு ஆண்கள் அடிக்கடி வந்து சென்றனர்.

    இதனையடுத்து வீட்டிற்குள் அதிரடியாக போலீசார் உள்ளே நுழைந்தனர். அங்கு தனி அறையில் இருந்த 24 வயது மதிக்கத்தக்க 2 அழகிகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரிய வந்தது. 2 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண் டனர். விசாரணையில் முத்தணம்பாளையம் பகுதி சேர்ந்த சக்திவேல் (34), அருண் (28) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர். 2 அழகிகளை மீட்டு கோவையில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

    • ஒரு வாடகை வீட்டில் ஆன்லைன் மூலமாக விபச்சாரம் நடைபெற்று வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு பெண்களையும் மீட்க பட்டனர்.

    பட்டீஸ்வரம்:

    கும்பகோணம் பகுதியில் ஆன்லைன் வழியாக விபச்சாரம் நடைபெற்று வருவதாக தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத்க்கு வந்த தகவலின் அடிப்படையில் தஞ்சை மாவட்ட பகுதிகளில் ஆன்லைன் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களை கண்டு பிடித்து கைது செய்ய உத்தர விட்டார்.

    இதன் அடிப்படையில் கும்பகோணம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் மேற்பா ர்வையில் தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையில்,சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர்கள் ராஜா, செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம், நாடிமுத்து, பார்த்திபநாதன், செந்தில்குமார், ஜனார்த்தனன், பெண் காவலர் சுபேகா ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கும்பகோணம் பாணாதுறை தெற்கு வீதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் ஆன்லைன் மூலமாக விபச்சாரம் நடைபெற்று வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் ஆன்லைன் மூலமாக விபச்சாரத்தில் ஈடுபட்ட தஞ்சாவூர் கீழவாசலை சேர்ந்த ஜான் சர்ச்சில் (எ)ராஜா (வயது 43) , பட்டிஸ்வரம் அடுத்துள்ள உடையாளூரை சேர்ந்த ரேவதி (எ) ரம்யா (35) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு பெண்களையும் மீட்க பட்டனர்.

    இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் தஞ்சை பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    • நெய்வேலி அடுத்த வள்ளலார் நகரில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்து காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    நெய்வேலி அடுத்த வள்ளலார் நகரில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வடக்குத்து வள்ளலார் நகரில் உள்ள வீட்டில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர். அப்பொழுது அந்த வீட்டில் 4 பேர் விபச்சாரம் செய்வது தெரியவந்தது.போலீசார் விசாரணையில் நெய்வேலி டவுன்ஷிப், வட்டம் 18, சென்னை வீதி ராஜா மனைவி பிரியதர்ஷினி (வயது 34) என்பவர் பெண்களை வைத்து விபச்சாரம் செய்தது தெரியவந்தது.மேலும் அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட நாகப்பட்டினம் கூத்தூர் பகுதியைச் சேர்ந்த நிரோஷா (33). பாண்டிச்சேரி அம்மு (29). சித்ரா (30) ஆகியோரை போலீசார் கைது செய்து காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    பெண்களை வைத்து விபச்சாரம் செய்த பிரியதர்ஷினியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குடியிருப்பு பகுதியில் விபச்சாரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

    • தப்பி ஓடிய புரோக்கருக்கு வலைவீச்சு
    • சொகுசு வீட்டில் இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடந்துள்ளது.

    திருச்சி,

    திருச்சி பழைய பால்பண்ணை தனரத்தினம் நகர் பகுதியில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் இளம் பெண்களை வைத்து ராஜேஷ் என்பவர் விபச்சாரம் செய்து வந்தார்.இந்த நிலையில் அவர் திருச்சி உறையூர் செவ்வந்தி பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த சஞ்சீவி (வயது 21) என்பவரை உல்லாசத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சஞ்சீவி உடனடியாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.அங்கு திருவள்ளுவர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இரு அப்பாவி இளம் பெண்களை சொகுசு வீட்டில் வைத்து விபச்சாரம் செய்வது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து 2 பெண்களையும் மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.இதற்கு இடையே போலீசார் வருவதை மோப்பம் பிடித்த புரோக்கர் ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி வாடிக்கையாளர்களை வரவழைப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • மசாஜ் செய்ய வருபவர்களை ஆசை வார்த்தைகள் கூறி விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் அவினாசி ரோடு கீரணி சந்திப்பு அருகே உள்ள கட்டிடத்தின் மேல்மாடியில் மசாஜ்சென்டர்செயல்பட்டு வருவதாகவும் இங்கு இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வதா கவாவும் மேலும் வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி வாடிக்கையாளர்களை வரவழைப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து திருப்பூர் வடக்கு போலீசார் சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டரில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அங்கு 5 பெண் கள், 2 ஆண்கள் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சென்னை, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து இளம் பெண்களை வரவைத்து அவர்கள் மூலம் மசாஜ் செய்ய வருபவர்களை ஆசை வார்த்தைகள் கூறி விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து மசாஜ் சென்டர் நடத்திய செந்தமி ழ்ச்செல்வன், ஜெகதீசன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ஐந்து இளம் பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    • மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடைபெற்றது
    • 2 அழகிகள் மீட்பு

    திருச்சி:

    திருச்சி தில்லை நகர் நான்காவது குறுக்கு தெருவில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து, அப்பகுதிக்கு சென்ற விபச்சார தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த சங்கீதா (வயது32), சேலம் மாவட்டத்தை சேர்ந்த லைலா (23)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) உள்ளிட்ட இருவரையும் காவல்துறையினர் மீட்டு பெண்கள் காப்பகத்தில் ேசர்த்தனர். மேலும் அவர்கள் இருவருக்கும் இடைத்தரகராக செயல்பட்ட சரத் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த அருள் செல்வம் என்ற இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன் ரூ.1500, ஆணுறை பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டது.

    ×