search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman jewel robbery"

    மசாஜ் சென்டருக்குள் புகுந்து பெண்களிடம் கத்தி முனையில் நகை பறித்த கும்பலில் ஒருவன் சிக்கினான். தப்பி ஓடிய 4 பேர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    சாலிகிராமம், ஆற்காடு சாலையில் உள்ள வணிக வளாகத்தின் முதல் தளத்தில் “அரோமா பியூட்டி பார்லர்” என்கிற பெயரில் மசாஜ் சென்டர் உள்ளது. இங்கு 3 பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    நேற்று மதியம் மசாஜ் சென்டருக்கு 5 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அங்கிருந்த பெண் ஊழியர்களிடம் பேச்சு கொடுத்தனர். திடீரென அவர்கள் 3 பெண் ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 3 செல்போன்கள், 2 பவுன் செயின், ரூ.7 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர்கள் கூச்சலிட்டனர். சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் 5 பேர் கும்பலை துரத்திச் சென்றனர். அதில் ஒருவனை மட்டும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மற்ற 4 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து மசாஜ் சென்டர் மேலாளர் கார்த்திக், விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் கோமதி பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினார். அவன், எம்.ஜி.ஆர். நகர் சூளைப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் என்பது தெரிய வந்தது.

    தப்பி சென்ற கூட்டாளிகள் 4 பேர் குறித்து ஆற்காடு சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல்லில் பெண்ணிடம் நகை பறித்த கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் சித்ரா. திருச்சி சாலையில் உள்ள மேம்பாலத்தில் பைக்கில் சென்ற போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து மிரட்டினர். மேலும் சித்ராவிடம் இருந்து 9 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதே போல் திண்டுக்கல் பாதாள காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரையும் ஒரு கும்பல் மிரட்டி அவரிடம் இருந்து 5 பவுன் தங்க செயின் மற்றும் மோதிரங்களை பறித்துச் சென்றனர்.

    இந்த 2 கொள்ளை சம்பவங்கள் குறித்து நகர் வடக்கு போலீசார் விசாரித்தனர். சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஷ், நல்லதம்பி, வீர பாண்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    சம்பவ இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது ஒரே கும்பல் 2 பேரிடமும் நகை பறித்துச் சென்றது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடினர்.

    நகை பறிப்பில் ஈடுபட்ட விஜயஜெயசீலன், மதிவாணன், விக்னேஷ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 14 பவுன் தங்க நகைகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் பாராட்டு தெரிவித்தார்.

    வேலூரில் பெண்ணிடம் 5 பவுன் செயின் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் வேலப்பாடி பி.எஸ்.எம். தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சாந்தி (வயது 40). இவர், நேற்று மாலை பூந்தோட்டம் பகுதியில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் திடீரென சாந்தியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி திருடன்.. திருடன்.. என கூச்சலிட்டார். ஆனால் அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோயம்பேடு பஸ்சில் பெண்ணிடம் 11 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #JewelRobbery
    போரூர்:

    ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் கல்பனா (வயது 22). இவர் தனது சகோதரருடன் சென்னையில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு நேற்று முன்தினம் மதியம் சித்தூர் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தார்.

    பஸ்சில் ஏறி தன்னிடம் இருந்த பையை இருக்கைக்கு மேல் வைத்துவிட்டு அமர்ந்தார். சிறிது நேரம் கழித்து பஸ் கிளம்பியபோது பையை காணாமல் அதிர்ச்சியடைந்தார். அந்த பையில் 11 பவுன் நகை இருந்தது. அதை மர்ம நபர்கள் எடுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #JewelRobbery

    சென்னை போரூர் அருகே பஸ்சில் சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் சென்று பட்டப்பகலில் நகை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பூந்தமல்லி:

    சென்னையை அடுத்த போரூர் ஏரிக்கரை அருகே, ஸ்ரீபெரும்புதூர் செல்லும் அரசு பஸ் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் ஜன்னலோர இருக்கையில் ஒரு பெண் நகை அணிந்து அமர்ந்து இருந்தார்.

    இதை ஏற்கனவே நோட்டமிட்டவாறு 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    ஏரிக்கரை பஸ் நிறுத்தத்தில் அந்த பஸ் நின்றது. அப்போது மோட்டார் சைக்கிளின் வேகத்தை குறைத்து, அதில் வந்த நபர்களில் ஒருவன் எழுந்து, அந்தப்பெண்ணின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தான். அதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் அவர்கள் சிட்டாய் பறந்து விட்டனர்.

    நகையைப் பறிகொடுத்த பெண், அலறித் தவித்தார்.

    அந்தப் பெண் கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை சேர்ந்த பொற்செழியன் மனைவி சந்திரிகா (வயது 52) ஆவார். இவர் தனது மகனின் திருமணத்துக்கு சென்னையில் உள்ள உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்தவர் என தெரியவந்து உள்ளது.

    கிண்டியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று அழைப்பிதழ் கொடுத்துவிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள உறவினருக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக பஸ்சில் சென்றபோதுதான் இந்த நகை பறிப்பு சம்பவம் நடந்து உள்ளது.

    பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுவரை சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நடந்து செல்கிற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு, இரு சக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு, வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்ணிடம் நகை பறிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து உள்ளன. பஸ்சின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து இருந்த பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் சென்று நகை பறித்த சம்பவம் புதிதாக அமைந்து உள்ளது. இது இனி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து செல்கிற பெண்கள் மிகவும் கவனமாகவும், உஷாராகவும் இருக்க வேண்டும் என்பதற்கு பாடமாக அமைந்து உள்ளது.

    நகையை இழந்த சந்திரிகா, போரூர் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி, மோட்டார் சைக்கிளில் சென்று நகை பறித்த கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    ×