search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "illegal work"

    கோவையில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டதையடுத்து உரிமையாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் எல்.ஐ.ஜி. காலனியில் ஆயுர்வேத வெல் சென்டர் என்ற பெயரில் மசாஜ் சென்டர் இயங்கி வந்தது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு தான் இந்த மசாஜ் சென்டர் தொடங்கப்பட்டது. கேரள மாநிலம் பத்தனம் திட்டாவை சேர்ந்த நவீன் (30) இதனை நடத்தி வந்தார். இங்கு ஊழியர்களாக கோட்டயத்தை சேர்ந்த சம்பத், திருச்சூர் ஜினேஷ், எர்ணாகுளம் ‌ஷனு ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். மசாஜ் சென்டர் என்ற பெயரில் இங்கு விபசாரம் நடப்பதாக பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசுக்கு புகார் வந்தது.

    இதை தொடர்ந்து டி.எஸ்.பி. கிருஷ்ண மூர்த்தி, இன்ஸ்பெக்டர் நடேசன் மற்றும் போலீசார் இந்த மசாஜ் சென்டரை கண்காணித்தனர். அப்போது அங்கு விபசாரம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மசாஜ் சென்டர் உரிமையாளர் நவீன், ஊழியர்கள் சம்பத், ஜினேஷ், ‌ஷனு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    புதுக்கோட்டை மற்றும் பெங்களூரை சேர்ந்த 2 இளம்பெண்கள் அங்கு இருந்தனர். அவர்களை போலீசார் மீட்டு கோவை சங்கனூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    ×