search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணை நடிகை"

    • போலீசார் விசாரணையில் பரபரப்புதகவல்கள்
    • தமிழகம்-கேரளாவில் வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர்

    குழித்துறை :

    கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு வெட்டுக்காட்டுவிளையைச் சேர்ந்தவர் மெர்லின் ராஜ் (வயது 39). முன்னாள் ராணுவ வீரர். இவர் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக, 2016-ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

    அதன்பிறகு மெர்லின் ராஜ், தனது வாழ்க்கை செலவுகளுக்காக திருட்டு மற்றும் வழிப்பறி சம்ப வங்களில் ஈடுபட்டுள்ளார். 2019-ம் ஆண்டு கேரள மாநிலம் கொல்லம் ெரயில்வே ஸ்டேஷனில் முதல்முறையாக நகை திருட்டில் ஈடுபட்டார். தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த் தாண்டம், திருவட்டார், ஆசாரிப்பள்ளம், நேசமணி நகர், மண்டைக்காடு, இரணியல், கொல்லங்கோடு பகுதியில் வழிப்பறி சம்பவத்தில் இறங்கினார்.

    இதனால் அவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கொலை, மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கிலும் சிக்கினார். மேலும் 13 அடிதடி வழக்குகளும் அவர் மீது உள்ளன. இதனை தொடர்ந்து மெர்லின் ராஜை, தமிழகம் மற்றும் கேரள போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். இதற்கிடையில் அவருடன் மேக்காமண்டபம் பூந்தோப்பை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவனும் கூட்டாளியாக இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. ஒரு சில இடங்களில் போலீசாரின் வாகன சோதனையின் போது சிக்கிய போதும், ராணுவத்தில் பணியாற்றிய அடையாள அட்டையை காண்பித்து மெர்லின் ராஜ் தப்பி சென்றுள்ளார்.

    இந்த நிலையில் மார்த் தாண்டம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காளியப்பன் தலைமையில் போலீசார் திக்குறிச்சியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் மெர்லின் ராஜ், மணிகண்டன் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர்கள் தேடப்படும் கொள்ளையர்கள் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இருந்து 20 பவுன் நகைகள், கார், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, மெர்லின்ராஜ் போலீ சாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

    ராணுவத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட பிறகு வருமானம் எதுவும் இல்லை. இதனால் தமிழகம் மற்றும் கேரளாவில் வழிப்பறி கொள்ளையில் இறங்கினேன். இந்த வருமானம் மூலம் தேவைக்கு ஏற்ப மதுபானங்கள் தாராள மாக வாங்கினேன்.

    கேரள மாநிலம் விழிஞ்சத்தில் போலீசார் வாகன சோதனையில் குடிபோதையில் இருந்த நான் சிக்கினேன். எனது மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். இந்த மோட்டார் சைக்கிள், விழிஞ்சம் போலீஸ் நிலைய வளா கத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அதனை அதிகாலை வேளை யில் சென்று திருடி வந்தேன். இது தொடர்பாக விழிஞ்ஞம் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது.

    கோவில்பட்டியில் குடிபோதையில் சென்ற போது வாகன சோதனையில் சிக்கினேன். அப்போது ராணுவ அடையாள அட்டை காண்பித்து தப் பித்து விட்டேன். கொள்ளை யடித்த நகை-பணத்தை வைத்து ஏராளமான பெண்கள் மற்றும் துணை நடிகைகளு டன் குற்றாலம் மற்றும் பல்வேறு இடங்க ளுக்கு சென்று உல்லாசம் அனுபவித்தேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×