search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LK Advani"

    • எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • அவரது உடல்நிலை நலமுடன் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி (96), முதுமை காரணமாக உடல்நல பாதிப்புகளுக்காக டெல்லி அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவரது உடல்நிலை நலமுடன் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நல பாதிப்புகளுக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    • எல்.கே. அத்வானி நேற்று இரவில் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • நரம்பியல் துறையின் மூத்த டாக்டரின் கண்காணிப்பில் அவர் சிகிச்சையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே. அத்வானி, நேற்று இரவில் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 96 வயதான அவர் முதுமை காரணமான உடல்நல பாதிப்புகளுக்காக சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் ஒருநாள் இரவு முழுவதும் சிகிச்சை பெற்றார்.

    அங்கிருந்து வீடு திரும்பிய சில நாட்களுக்குப் பின்பு அவருக்கு மீண்டும் உடல்நல கோளாறுகள் ஏற்பட்டதால் நேற்று இரவு 9 மணி அளவில் அவர் டெல்லி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். நரம்பியல் துறையின் மூத்த டாக்டரின் கண்காணிப்பில் அவர் சிகிச்சையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • தொடர்ச்சியாக மருத்துவர்கள் கண்காணிப்பிலேயே உள்ளார்.

    பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு நேற்றிரவு திடீர் உல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அவர் தொடர்ச்சியாக மருத்துவர்கள் கண்காணிப்பிலேயே உள்ளார்.

     

    1942 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்.-இல் தன்னை இணைத்துக் கொண்ட அத்வானி 1986 முதல் 1990 பிறகு 1993 முதல் 1998 மற்றும் 2004 முதல் 2005 ஆகிய காலக்கட்டங்களில் பா.ஜ.க.வின் தேசிய தலைவராக பதவி வகித்துள்ளார்.

    மத்தியில் கிட்டத்தட்ட மூன்று முறை ஆட்சியமைக்க தவறிய பா.ஜ.க. 1999-இல் ஆட்சி பொறுப்பேற்ற காலக்கட்டத்தில் எல்.கே. அத்வானி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் முதல் உள்துறை அமைச்சராக தேர்வானார். பிறகு இவர் துணை பிரதமராகவும் பதவி வகித்தார்.

    பிறகு 2009 ஆம் ஆண்டு தேர்தலில் எல்.கே. அத்வானி பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக பதவி வகித்தார்.

    • அகில பாரதிய வித்யார்தி பரிஷத் மாணவர் குழுவின் தலைவராகவும் அவர் இருந்தார்.
    • 2007-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று, 3-வது முறை முதல்-மந்திரியாக நரேந்திர மோடி பதவி ஏற்றார்.

    சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து 3 முறை பிரதமர் பதவியை வகித்தவர் என்ற நேருவின் 'ஹாட்ரிக்' சாதனையை, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி சமன் செய்து வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

    இது தவிர இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த முதல் பிரதமர் என்ற சிறப்பும் மோடிக்கு உள்ளது.

    அரசியல் பின்புலம் இல்லாத சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர், இன்றைக்கு புதிய உச்சம் கண்டிருக்கிறார் என்றால், அது ஒன்றும் எளிதாக நடந்துவிடவில்லை. அதற்காக அவர் கடந்து வந்த பாதைகள் கரடு முரடானவை. கற்களும், முற்களும் நிறைந்தவை.

    குஜராத் மாநிலம் வட் நகரில் 1950-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி முல்சந்த் மோடி - ஹீரா பென் தம்பதிக்கு 3-வது மகனாக பிறந்தவர், நரேந்திர மோடி. குடும்பத்தில் 5 மகன்கள், ஒரு மகளை காப்பாற்றுவதற்காக தந்தை முல்சந்த் மோடி வட் நகர் ரெயில் நிலையத்தில் டீக்கடை நடத்தினார். தாயார் ஹீரா பென்னோ வீடு வீடாக சென்று கிடைத்த வேலையை செய்து கணவருக்கு உறுதுணையாக இருந்தார்.

    தந்தைக்கு உதவியாக நரேந்திர மோடியும் டீயை கையில் எடுத்துக்கொண்டு ரெயில் பெட்டிகளில் பயணிகளிடம் விற்பனை செய்தார்.

    பள்ளி பருவத்தில் சராசரி மாணவனாக இருந்த அவருக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. தனது 8-வது வயதிலேயே அதில் உள்ள தேசிய தொண்டர் அணியில் சேர்ந்தார். ஆன்மிகத்தின் மீதும் ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்தார்.

    10 வயதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் நிரந்தர உறுப்பினராக சேர்ந்த பிறகு, நரேந்திர மோடிக்கு மணி நகரில் உள்ள அந்த இயக்கத்தின் அலுவலகமே வீடாக மாறியது.

    அகில பாரதிய வித்யார்தி பரிஷத் மாணவர் குழுவின் தலைவராகவும் அவர் இருந்தார்.

    பின்னர் அரசியல் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டதால், குஜராத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தியாவில் 1975-ம் ஆண்டு நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது நடந்த போராட்டங்களில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்ட நரேந்திர மோடிக்கு பல அரசியல் தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது.


    1987-ம் ஆண்டு பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி, நரேந்திரமோடியை கட்சியின் அமைப்புச் செயலாளராக நியமித்தார். அடுத்த ஓராண்டிலேயே கட்சியின் குஜராத் மாநில பொதுச் செயலாளரானார். 1990-ம் ஆண்டு எல்.கே.அத்வானி நடத்திய ரத யாத்திரைக்கு வியூகம் வகுத்து கொடுத்தவரே நரேந்திர மோடிதான். 1998-ம் ஆண்டு குஜராத், இமாசல பிரதேச தேர்தல் பொறுப்பாளராகவும் அவர் செயல்பட்டார். அதன்பிறகு, இமாசல பிரதேசம், பஞ்சாப், அரியானா, சண்டிகர், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கு பா.ஜ.க. பொதுச் செயலாளராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டார்.

    அதே ஆண்டு (1998) வாஜ்பாய் பிரதமராக பதவியேற்றபோது, நரேந்திர மோடிக்கு தேசிய செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந்தேதி குஜராத் முதல்-மந்திரியாக இருந்த கேசுபாய் பட்டேல் ராஜினாமா செய்ததால், அதற்கு அடுத்த நாள் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் நரேந்திர மோடி முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றார். பின்னர் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி நடந்த கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, தனது பதவியை ராஜினாமா செய்த நரேந்திர மோடி, அதே ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றார்.

    பின்னர், 2007-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று, 3-வது முறை முதல்-மந்திரியாக நரேந்திர மோடி பதவி ஏற்றார். இதனால், குஜராத் அரசியல் வரலாற்றில் நீண்ட கால முதல்-மந்திரியாக இருந்தவர் என்ற சாதனையை படைத்த அவர், 2012-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று 4-வது முறை முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றார்.

    இந்த நேரத்தில், குஜராத்தில் சோலார் மின் உற்பத்தியை அதிகரித்து, மின்மிகை மாநிலமாக மாற்றிக் காட்டியதுடன், இளைஞர்கள் போதையின் பாதைக்கு செல்லாமல் இருக்க போதைப் பொருட்களுக்கு தடை விதித்தார். மாநிலம் முழுவதும் தண்ணீர் வசதி, சாலை வசதி, விவசாய வளர்ச்சி, தொழில் வளர்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்தி மாநிலத்தை முன்னணிக்கு கொண்டுவந்து குஜராத் மாடலை நாடறியச் செய்தார்.

    அந்த நேரத்தில், மத்தியில் காங்கிரஸ் அரசின் 10 ஆண்டு கால ஆட்சி முடிவடையும் தருவாயில் இருந்தது. எனவே, பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால், சக்தி வாய்ந்த, பிரபலமான ஒரு தலைவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டிய கட்டாயம் அக்கட்சித் தலைமைக்கு ஏற்பட்டது.

    அதன் அடிப்படையில், 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில், பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பு ஏற்றார். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று 'தூய்மை இந்தியா' திட்டத்தை நாடு முழுவதும் தொடங்கி வைத்து அதில் வெற்றியும் கண்டார்.

    2019-ம் ஆண்டு 2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைத்தபோது, பிரதமர் நரேந்திரமோடி சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். முக்கியமாக, முத்தலாக் மசோதா நிறைவேற்றம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, பொதுத் துறை வங்கிகள் 12 ஆக குறைப்பு, குடியுரிமை திருத்த சட்டம், பெண்களுக்கான இடஒதுக்கீடு, புதிய பாராளுமன்றம் திறப்பு, அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி, அயோத்தியில் பால ராமர் கோவில் திறப்பு என அடுக்கடுக்கான சாதனைகளை பா.ஜ.க. அரசு படைத்தது.


    இந்த சாதனைகளுடன் 18-வது பாராளுமன்ற தேர்தலை சந்தித்த பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார் ஆதரவுடன் 293 இடங்களை கைப்பற்றி இப்போது ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது.

    அரசியலில் தொடக்கம் முதலே வெற்றி ஒன்றையே கண்டு சந்தித்து வந்த பிரதமர் மோடி, தற்போது 3-வது முறையாக வெற்றி பெற்று 'ஹாட்ரிக்' சாதனை படைத்து, நேருவின் சாதனையை சமன் செய்து புதிய வரலாறு படைத்துவிட்டார்.

    இனி அடுத்த 5 ஆண்டுகளுக்கு என்னென்ன வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தப்போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    • பிரதமர் மோடியை பாராளுமன்ற குழு தலைவராக எம்.பி.க்கள் தேர்வு செய்தனர்.
    • ஞாயிற்றுக்கிழமை மாலை 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார்.

    மக்களவை தேர்தலில் பாஜக-வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பாஜக ஆட்சி அமைக்கிறது. மோடியை தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக அதில் உள்ள கட்சிகள் தேர்வு செய்தன.

    இன்று தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுடன் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் மோடியை பாராளுமன்ற குழு தலைவராக எம்.பி.க்கள் தேர்வு செய்தனர். இதனால் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர இருக்கிறார்.

    இந்த நிலையில் பாரத ரத்னா விருதை பெற்றவரும், பாஜகவின் முன்னாள் தலைவருமான எல்.கே. அத்வானியை அவரது வீட்டில் சந்தித்து ஆசி பெற்றார்.

    மோடி 3-வது முறை பிரதமராக வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை பதவி ஏற்க உள்ளார். இந்த பதவி ஏற்பு விழாவில் உலக நாடுகளில் பல தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    எல்.கே. அத்வானியைத் தொடர்ந்து முரளி மனோகர் ஜோஷியையும் சந்தித்து ஆசி பெற்றார். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவரும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பாடுபட்ட தொடக்க கால தலைவர்களில் முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    பின்னர் முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார்.

    • நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஏற்கனவே நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 4 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
    • இந்நிலையில் டெல்லியில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் மூத்த குடிமகன்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியை டெல்லி தேர்தல் ஆணையம் செய்துகொடுத்துள்ளது.

    நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஏற்கனவே நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 4 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வரும் மே 20 திங்கட்கிழமை அன்று உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம் என அதிக வாக்காளர்கள் உள்ள மாநிலங்களில் உள்ள தொகுதிகள் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவில் பங்கேற்க உள்ளன. அதைத்தொடர்ந்து மே 25 ஆம் தேதி நடக்கும் 6 ஆம் கட்ட வாக்குபதிவு நாளன்று டெல்லிக்கு ஒரே கட்டத்தில் வாக்குப்பதிவு நடந்து முடியும்.

    இந்நிலையில் டெல்லியில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் மூத்த குடிமகன்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியை டெல்லி தேர்தல் ஆணையம் செய்துகொடுத்துள்ளது. நேற்று இந்த வசதி மூலம் மொத்தம் 1409 பேர் வாக்களித்த நிலையில் இன்று வடக்கு டெல்லி உட்பட பல்வேறு தொகுதிகளில் மொத்தம் 2956 பேர் வாக்களித்தனர்.

    அதன்படி டெல்லியில் வசித்து வரும் பல்வேறு காட்சிகளைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்கள் இன்று (மே 18) வாக்களித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமரும் மன்மோகன் சிங் நேற்று தனது வீட்டில் இருந்தபடியே தனதுஜனநாயகக் கடமையை ஆற்றினார்.

     

    முன்னாள் உள்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் முகமத் ஹமீத் அன்சாரி ஆகியோரும் நேற்றைய தினம் வாக்களித்தாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் பாஜகவை மூத்த தலைவர் எல்.கே அத்வானி இன்று தனது இல்லத்தில் இருந்தபடியே வாக்களித்தார். 

    • எல்.கே.அத்வானிக்கு இன்று அவரது இல்லத்திற்கே ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார்
    • பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் மனநிலை பெண்களுக்கு எதிரானது மற்றும் தலித் மக்களுக்கு விரோதமானது

    முன்னாள் பிரதமர்களான பி.வி.நரசிம்மராவ், சவுத்ரி சரண்சிங், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்-மந்திரி கர்ப்பூரி தாக்கூர் ஆகிய 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

    அதன்படி எல்.கே.அத்வானியை தவிர மற்ற 4 பேருக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவர்களது குடும்பத்தினரிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கினார். வயது முப்பு காரணமாக எல்.கே.அத்வானிக்கு இன்று அவரது இல்லத்திற்கே ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார்.

    இந்நிலையில், பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரை மீண்டும் பிரதமர் மோடி வேண்டுமென்றே அவமதித்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    அந்த பதிவில், "குடியரசுத் தலைவர் நிற்கிறார், பிரதமர் மோடி அமர்ந்திருக்கிறார். பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரை மீண்டும் பிரதமர் மோடி வேண்டுமென்றே அவமதித்துள்ளார்.

    இது முதல் முறையல்ல - புதிய நாடாளுமன்றம் தொடங்கப்பட்டபோது, குடியரசு தலைவரை அழைக்கவில்லை, ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியில் கூட அவரை அழைக்கவில்லை.

    பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் மனநிலை பெண்களுக்கு எதிரானது மற்றும் தலித் மக்களுக்கு விரோதமானது என்பதை இந்த சம்பவங்கள் காட்டுகின்றன" என்று காங்கிரஸ் பதிவிட்டுள்ளது.

    • 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
    • எல்.கே.அத்வானியை தவிர மற்ற 4 பேருக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவர்களது குடும்பத்தினரிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கினார்.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர்களான பி.வி.நரசிம்மராவ், சவுத்ரி சரண்சிங், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்-மந்திரி கர்ப்பூரி தாக்கூர் ஆகிய 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

    அதன்படி எல்.கே.அத்வானியை தவிர மற்ற 4 பேருக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவர்களது குடும்பத்தினரிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கினார். வயது முப்பு காரணமாக எல்.கே.அத்வானிக்கு இன்று அவரது இல்லத்திற்கே ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார்.

    இதில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜ.க. தலைவர் எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தது.
    • அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, பாரத ரத்னா விருது குறித்து அத்வானி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரத ரத்னா விருது எனது லட்சியங்களுக்கும் கொள்கைகளுக்கும் கிடைத்த மரியாதை. இன்று எனக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை மிகப் பணிவுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

    இந்நிலையில், பா.ஜ.க.வின் மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி, எல்.கே.அத்வானி வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து, பாரத ரத்னா விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

    • இந்தியாவில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.
    • வளர்ச்சிப் பணிகள் அதே வேகத்தில் தொடரும்.

    பா.ஜ.க., மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பரம்பரை அரசியலுக்கு சவால் விட்டதாகவும், இந்தியாவின் ஜனநாயகத்தை அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தேசியவாத சித்தாந்தங்களுடன் இணைத்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

    ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "முன்னாள் துணைப் பிரதமர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்குவது, 'முதலில் தேசம்' என்ற சித்தாந்தத்திற்குக் கிடைத்த மரியாதை" என்று கூறினார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-

    எல்.கே. அத்வானி ஜனநாயகத்தை ஒரு கட்சியின் பிடியில் இருந்து விடுவிக்க தொடர்ந்து போராடினார். அனைவருக்கும் வழிகாட்டினார். அவர் பரம்பரை அரசியலை சவால் செய்தார். இந்தியாவின் ஜனநாயகத்தை அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தேசியவாத சித்தாந்தங்களுடன் இணைத்தார்.

    இரண்டு நாட்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட், நாட்டின் ஏழை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டது.

    கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர். வளர்ச்சிப் பணிகள் அதே வேகத்தில் தொடரும். மோடியின் உத்தரவாதம் எல்லா நம்பிக்கைகளும் சரியும் இடத்தில் இருந்து தொடங்குகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க. தலைவர் எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தது.
    • எனக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை பணிவுடன், நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாரத ரத்னா விருது குறித்து அத்வானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பாரத ரத்னா விருது ஒரு நபராக எனக்கு கிடைத்த மரியாதை மட்டுமல்ல. எனது லட்சியங்களுக்கும் கொள்கைகளுக்கும் கிடைத்த மரியாதை. இன்று எனக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை மிகப் பணிவுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன்.

    என்னுடன் நெருக்கமாகப் பணியாற்றிய பண்டிட் தீனதயாள் உபாத்யாயா மற்றும் அடல் பிகாரி வாஜ்பாய் இருவரையும் இந்நாளில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மகத்தான நமது நாடு புகழின் உச்சத்திற்கு முன்னேறட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    • எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது.
    • விருது பெற்ற அத்வானிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. மூத்த தலைவரான எல்.கே.அத்வானியின் சேவையை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு இன்று அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக அறிவித்துள்ளது.

    நாட்டின் மிக உயரிய விருதை அத்வானி பெற்றிருப்பது பா.ஜ.க. மூத்த தலைவர்களிடமும், நிர்வாகிகளிடமும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் அத்வானிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். பிரதமர் மோடியும் அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், அத்வானியின் மகள் பிரதீபா அத்வானி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எல்.கே.அத்வானியும் உடனிருந்தார். தனக்கு விருது வழங்கியதை ஏற்கும் வகையில் அத்வானி நன்றி தெரிவிக்கும் வகையில் கைகளை கூப்பி மகிழ்ச்சி தெரிவித்தார்.

    இதையடுத்து, பிரதீபா அத்வானி செய்தியாளர்களிடம் கூறுகையில், நாட்டின் மிக உயர்ந்த விருது அவருக்கு வழங்கப்பட்டதில் முழு குடும்பமும் நானும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அவர் முழு வாழ்க்கையையும் நாட்டின் சேவைக்காக அர்ப்பணித்துள்ளார். பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

    ×