search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாரத ரத்னா விருது எனது லட்சியத்திற்கும் கொள்கைகளுக்கும் கிடைத்த மரியாதை: எல்.கே.அத்வானி பெருமிதம்
    X

    பாரத ரத்னா விருது எனது லட்சியத்திற்கும் கொள்கைகளுக்கும் கிடைத்த மரியாதை: எல்.கே.அத்வானி பெருமிதம்

    • பா.ஜ.க. தலைவர் எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தது.
    • எனக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை பணிவுடன், நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாரத ரத்னா விருது குறித்து அத்வானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பாரத ரத்னா விருது ஒரு நபராக எனக்கு கிடைத்த மரியாதை மட்டுமல்ல. எனது லட்சியங்களுக்கும் கொள்கைகளுக்கும் கிடைத்த மரியாதை. இன்று எனக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை மிகப் பணிவுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன்.

    என்னுடன் நெருக்கமாகப் பணியாற்றிய பண்டிட் தீனதயாள் உபாத்யாயா மற்றும் அடல் பிகாரி வாஜ்பாய் இருவரையும் இந்நாளில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மகத்தான நமது நாடு புகழின் உச்சத்திற்கு முன்னேறட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×