search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "infrastructure"

    • புது டெல்லியில் ஒரு சந்திப்பில் நிதின் கட்கரி உரையாற்றினார்
    • சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்நிறுவனங்கள் விலையை ஏற்றுகின்றன

    இந்தியாவின் ஆளும் பா.ஜ.க. அரசாங்கத்தின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி (66).

    இந்திய தலைநகர் புது டெல்லியில், "க்ரிசில் இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கான்க்லேவ் 2023" எனும் இந்தியாவின் உள்கட்டமைப்பில் பங்கு பெறும் நிறுவனங்களுக்கான ஒரு சந்திப்பில் அவர் உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது;

    அரசாங்கம் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை ஊக்குவித்தாலும் உள்கட்டமைப்பு அமைப்பதில் பங்கு பெறும் நிறுவனங்கள் தற்போதைய தொழில்நுட்பங்களுக்கு மாற தயங்குகின்றன. இதனால் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனது திட்டங்களுக்கு டிபிஆர் எனும் 'விரிவான திட்ட அறிக்கைகள்' (Detailed Project Reports) தயாரிக்க மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றன. இது மட்டுமின்றி சிமெண்ட் மற்றும் எக்கு தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுக்குள் 'ரகசிய கூட்டமைப்பு' ஒன்றை உருவாக்கி விலை குறையாமல் பார்த்து கொள்கின்றன. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்நிறுவனங்கள் விலையை ஏற்றுவதையும் வழக்கமாக கொண்டுள்ளன. நிலையின்றி அடிக்கடி உயரும் விலையினால் டிபிஆர் உருவாக்குவது மிக கடினமாக உள்ளது. எங்குமே ஒரு முழுமையான டிபிஆர் உருவாக்கப்படுவதில்லை. தயாரிக்கப்படும் திட்ட அறிக்கைகளிலும் பல தவறுகள் இடம்பெறுகின்றன. சரக்கு போக்குவரத்திற்கான செலவினங்கள் இந்தியாவில் 14லிருந்து 16 சதவீதம் உள்ளது. ஆனால் சீனாவில் 8லிருந்து 10 சதவீத அளவிலேயே உள்ளது. இதனால் திட்டங்களுக்கான செலவுகள் வரையறுக்கப்பட்டதை விட அதிகமாகி விடுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அலுவலக பணிகளை வீட்டில் இருந்து செய்வது பெண் ஊழியர்களுக்கு பல விதங்களிலும் பாதுகாப்பானது.
    • முதுகுவலி ஏற்படுத்தாத நாற்காலியை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

    பன்னாட்டு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் 'வீட்டில் இருந்து பணி செய்யும்' ஒர்க் ஃப்ரம் ஹோம் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கின்றன. மேலை நாடுகளில் பரவலாக இருந்த இந்த முறை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் பலவற்றிலும் தற்போது கடைபிடிக்கப்படுகிறது.

    இந்தியாவில் உள்ள இதர தனியார் நிறுவனங்களும் அவர்களது ஊழியர்களை வாரத்தின் குறிப்பிட்ட நாட்கள் வீட்டில் இருந்தபடியே பணிகளை மேற்கொள்ள தெரிவித்துள்ளன. அலுவலக உள்கட்டமைப்பு வசதிகள் அனைவரது வீடுகளிலும் இருக்காது என்பதால் சில மாற்றங்களை வீட்டில் செய்து கொள்வது அவசியம். அப்படிப்பட்ட மாற்றங்கள் பற்றி உள்கட்டமைப்பு வல்லுனர்கள் அளித்துள்ள குறிப்புகளை இங்கே காணலாம்.

    உள்கட்டமைப்பும், அலுவலக சூழலும் உள்ள இடத்தில் பணிபுரிவதற்கும், வீட்டின் ஒரு பகுதியை மாற்றியமைத்து பணி புரிவதற்கும் பல மாற்றங்களை, ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அலுவலக பணிகளை வீட்டில் இருந்து செய்வது பெண் ஊழியர்களுக்கு பல விதங்களிலும் பாதுகாப்பானது. வீட்டில் உள்ள ஒரு அறையை பணி புரிவதற்கேற்ப மாற்றம் செய்யும்போது லைப்ரரி, படிக்கும் அறை ஆகியவற்றுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம்.

    ஒரு படுக்கையறை கொண்ட வீடுகளில் ஒரு பகுதியை தடுப்பு அல்லது ஸ்கிரீன் அமைத்து தனிப்பட்ட இடமாக பயன்படுத்தலாம். அல்லது படுக்கை அறையின் ஒரு பகுதியை பயன்படுத்தலாம். வெளி நபர்கள் அடிக்கடி வந்து செல்லும் நிலையில் வரவேற்பறையின் ஒரு பகுதியை பார்டிஷன் மூலம் பிரித்து பயன்படுத்தலாம்.

    அறையின் கார்னர் பகுதி, மாடிப்படிகளின் கீழ்ப்புறம் அல்லது அறையின் ஒரு பக்க உள்ள சுவரை ஒட்டிய பகுதியை தேர்வு செய்து பணியிடமாக அமைக்கலாம். மேஜை, நாற்காலி, அலமாரி ஆகியவற்றுடன், மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்யும் நிலையில் முதுகுவலி ஏற்படுத்தாத நாற்காலியையும் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

    பணிபுரியும் அறை ஜன்னலுக்கு அருகில், செடிகள் வளர்ந்துள்ள வெளிப்பகுதி, மரங்கள் உள்ள பகுதியாக இருந்தால் கண்களுக்கு இதமாக இருக்கும். அலுவலகங்களில் வைக்க இயலாத குடும்ப புகைப்படம், பரிசுகள் ஆகியவற்றை வீட்டில் பணிபுரியும் பகுதிகளில் வைக்க முடியும். பணிபுரிய அமரும் இடத்தில் எதிர்ப்புற சுவர் வெண்மை நிறத்தில் இருப்பதுடன், மின்விளக்கு வெளிச்சமும் பரவலாக இருப்பது நல்லது.

    பணி இடத்துக்கு அருகில் வெள்ளை மார்க்கர் போர்டு ஒன்றை சுவரில் மாட்டி வைத்து, தினமும் காலையில் அன்று செய்ய வேண்டிய பணிகள் பற்றிய குறிப்பினை எழுதி வைத்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால், கணினியில் ஸ்டிக்கி நோட்ஸ் பகுதியில் குறிப்புகளாக வைத்துக்கொண்டு பணிகளை செய்து வரலாம்.

    மனம் கவரும் நிறங்களில் லைட் செட்டிங் அமைப்பது கண்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். அறைகளில் இயற்கையான வெளிச்சம் வரும் அளவுக்கு மனதில் உற்சாகம் ஏற்படும். குறிப்பாக நல்ல வெளிச்சமும், காற்றும் வரக்கூடிய ஜன்னல் அமைந்துள்ள பகுதிகள் கணினி பணியின் களைப்பை அகற்ற உதவுகின்றன.

    பணி புரியும் அறை அல்லது இடங்களில் குழந்தைகள் குறுக்கீடு என்பதை தவிர்க்க இயலாது. வீட்டில் உள்ள குழந்தைகளுடன், பக்கத்து வீட்டு குழந்தைகளும் அந்த சிக்கலுக்கு துணையாக அமைந்து விடுவார்கள். படிப்பு சம்பந்தமான பயிற்சி முறைகளுக்கு மட்டுமே சில கட்டுப்பாடுகளுடன் அவர்களை அங்கே அனுமதிக்கலாம். வளர்ப்பு பிராணிகளான நாய் அல்லது பூனை போன்றவை அங்கே உலாவுவதை அனுமதிக்கக்கூடாது.

    • மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய அரசு அதிக நிதி ஒதுக்குகிறது.
    • நவீன வசதிக ளுடன் கூடிய அரசு அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் ரூ244.20 லட்சம் மதிப்பில் மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலக புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு கலெக்டர் ஜெயசீலன் தலைைம தாங்கினார். சீனிவாசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு அடிக்கல் நட்டு புதிய கட்டிட பணிகளை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் அமைச்சர்கள் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் தமிழ கத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு எளிதி லும், விரைவாகவும் சென்ற டைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நிர்வாக கட்டமைப்புகளை செயல் படுத்தி வருகிறார்கள்.

    அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் பல்வேறு மேம் பாட்டு நிதி திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டப் பணிகளை செயல் படுத்தி வருகிறது. அதுமட்டு மல்லாமல் பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரமமின்றி பணிபுரிய வசதியாக வும் பல்வேறு நிதி திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து பல்வேறு துறைகளுக்கு நவீன வசதிக ளுடன் கூடிய அரசு அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக் குமார், சாத்தூர் கோட்டாட் சியர் சிவக்குமார், செயற்பொறியாளர் செல்வராஜன், விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுமதி ராஜசேகர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவ லர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • மனதை கொள்ளை கொள்ளும் அழகையும் சுற்றுச்சூழலையும் சமமான சீதோஷ்ண நிலையையும் பெற்றுள்ளது திருமூர்த்திமலை.
    • அமணலிங்கேஸ்வரர் கோவிலும் அதனைச் சார்ந்த பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளது.

    உடுமலை :

    வானமும் பூமியும் ஒன்று சேர்ந்து நமக்கு அளிக்கும் சீதனம் மலையும் மலை சார்ந்த இடமும், அதனுள் உற்பத்தியாகின்ற ஆறுகளும் உயிர்வாழ் வனவிலங்குகளும்தான். இயற்கையோடு இரண்டறக் கலந்த ரம்மியமான ,எழில் மிகுந்த ,மனதை விட்டு நீங்காத சூழல் மண் மற்றும் மூலிகை நிறைந்த காற்றை சுவாசித்து அனுபவிப்பதற்கு இத்தலைமுறையில் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். இதனால் தான் சுற்றுலா என்றதும் ஒவ்வொருவரின் முதல்,முதன்மை, முத்தான தேர்வாக சட்டென நினைவில் வருவது மலை வாழிடங்கள்.

    சுற்றுலாக்களில் பலவகை இருந்தாலும் அதில் இயற்கை சுற்றுலாவே முதலிடம் பிடிக்கிறது.அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அனைத்து வளங்களையும் வார்த்தைகளால் விவரிக்க இயலாத மனதை கொள்ளை கொள்ளும் அழகையும் சுற்றுச்சூழலையும் சமமான சீதோஷ்ண நிலையையும் பெற்றுள்ளது திருமூர்த்திமலை. ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்து அமணலிங்கேஸ்வரர் கோவிலும் அதனைச் சார்ந்த பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளது.

    தென்கையிலாயம் என்று அழைக்கப்படும் தோணிநதி தவழ்ந்து வருகின்ற பாலாற்றின் கரையில் சிவலிங்கத் தோற்றத்தில் அமைந்துள்ள குன்றில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, விஷ்ணு,சிவன் ஆகிய கடவுள்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். படைத்தல்,காத்தல், அழித்தல் என்ற முத்தொழில் புரிந்து வரும் மும்மூர்த்திகள் ஒருசேர சுயம்புவாக அருள்பாலிப்பது தமிழகத்தில் வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசய அற்புதக் காட்சியாகும். குன்றின் மீது உப்பு,குருமிளகு, சந்தனம் வீசி பக்தர்கள் வழிபாடு செய்து வருகிறார்கள்.1968-ம் ஆண்டு முதல் இந்துசமய அறநிலையத் துறையின் சார்பில் செயல் அலுவலர் நியமிக்கப்பட்டு இயங்கி வருகின்ற இந்த கோவில் வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர், நவக்கிரகங்கள் தனித்தனி சன்னதிகளிலும் அபிராமி,மகேசுவரி, கௌமாரி,காளி, வாராகி,அயிராணி,இந்திராணி ஆகிய சப்த கன்னிகள் ஒரே கல்லில் ஒன்றாக அருள்பாலித்து வருகிறார்கள்.

    கோவிலுக்கு முன்பு கார்த்திகை திருவிழாவன்று ஜோதி ஏற்றக்கூடிய 30 அடி உயரம் கொண்ட ஜோதிக்கம்பம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.இதன் அடிப்பாகத்தில் அஷ்ட திக்குகளையும் நோக்கியவாறு பத்திரகாளி, வனதுர்க்காதேவி, விசாலாட்சி ஆகிய மூன்று சக்தி மூர்த்தங்களும் கூத்தாண்டவர், அகோரவீரபத்திரர் ஆகிய சிவ மூர்த்தங்களும் ராம அவதாரம், நரசிம்ம அவதாரம், வேணுகோபாலர் மூன்று வைணவ மூர்த்தங்களும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது சமய ஒற்றுமை சைவ, வைணவ ஒற்றுமையை குறிக்கும் சான்றாக பக்தர்களால் போற்றி வணங்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு முன்பு வரலாற்றை விவரிக்க கூடிய அழகிய சிற்ப வேலைப் பாடுகளுடன் எழுந்தருளி இருக்கும் எட்டுகால் மண்டபமும் பக்தர்கள் தங்கி இளைப்பாறும் வகையில் கட்டப்பட்டுள்ள ஆயிரங்கால் மண்டபமும் இன்றளவும் தன்னிலை குறையாது கம்பீரத்துடன் காட்சி அளித்து வருகிறது.

    குருமலை வனப்பகுதியில் உற்பத்தியாகும் தோணிநதி தென்னாறு,பாலாறு ஆகியவற்றுடன் இணைந்து உழுவியாறு,கொட்டையாரு,பாரப்பட்டி யாரு,உப்புமண்ணம்ஓடை,கிழவிபட்டி ஓடை உள்ளிட்டவற்றை உள்வாங்கி தவழ்ந்து வந்து பஞ்சலிங்கங்கள் எழுந்தருளியுள்ள கூடுதுறையில் ஒன்றிணைந்து நீர்வீழ்ச்சியாக உருமாறி மூலிகைத் தண்ணீரால் எண்ணற்றோரின் மனப்பிணி,உடல் பிணியைப் போக்கி மும்மூர்த்திகள் எழுந்தருளி இருக்கும் குன்றை தழுவியவாறு திருமூர்த்தி அணையை அடைகின்றது பஞ்சலிங்க அருவி.

    பஞ்சபூதங்களும் ஒன்றாக இணைந்து பஞ்சலிங்கேஸ்வரராக காட்சியளிக்கும் மலைமீது உள்ள பஞ்சலிங்கங்களை வழிபட்டால் திருவையாறு, திருவானைக்காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம் ஆகிய பஞ்சபூத தலங்களுக்கு சென்று வழிபட்ட பாக்கியத்தை பெறலாம்.பஞ்சலிங்கங்களை வழிபடுவதற்கு மாதந்தோறும் வருகின்ற பிரதோஷ தினத்தன்று பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.பஞ்சலிங்க அருவியும் அதன் பராமரிப்பும் இன்று வரையிலும் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

    மும்மூர்த்திகள் குன்றில் சுயம்புவாக எழுந்தருளி உள்ளதால் கோபுரம் அமைக்கப்படவில்லை.இதனால் கோபுர வடிவில் செய்யப்பட்ட சப்பரத்தை மாசி மாத மகாசிவராத்திரியன்று பூலாங்கிணர் பகுதியில் இருந்து கிராமங்கள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு குன்றின் மீது வைக்கப்பட்டு விடிய விடிய ஆன்மீகம்,கலை, பண்பாட்டு நிகழ்ச்சிகளுடன் விழா நடத்தப்படுகிறது.அதுதவிர பிரதோஷம், கிருத்திகை,ஆடி,தை புரட்டாசி உள்ளிட்ட விசேச அமாவாசை நாட்கள், தமிழ் புத்தாண்டு, ஆடிப்பெருக்கு உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அமாவாசை நாட்களில் பாலாற்றின் கரையில் பொதுமக்கள் அமர்ந்து முன்னோர்களுக்கு திதி,தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

    கோவிலுக்கு வருகின்ற வழியில் சிறுவர்பூங்கா,நீச்சல் குளம்,வண்ணமீன் காட்சியகம்,படகு இல்லம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் சுதந்திரபோராட்ட வரலாற்றை நினைவு கூறத்தக்க வகையில் தளி பாளையப்பட்டு அரசர் எத்தலப்ப நாயக்கரின் திருவுருவங்களும் போர் முறைகளும் காண்டூர் கால்வாய் அருகே சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு உள்ளன.இங்கு தமிழக அரசால் எத்தலப்ப நாயக்கருக்கு விரைவில் மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளது.மேலும் கடந்த 2013 - ம் ஆண்டு முதல் தமிழர்களின் வீரம்,கலை,கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாகவும் அரசுத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்களை அறிந்து கொள்ளும் வகையிலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையும் இணைந்து ஆடிப்பெருக்கு விழாவை நடத்தி வந்தது.கொரோனாவிற்கு பின்பு விழா நடத்தப்படவில்லை.

    பல்வேறு சிறப்புகளும் பெருமையும் வாய்ந்த திருமூர்த்தி மலையில் இன்றளவும் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது.இந்த பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவிப்பதற்கான முயற்சிகள் கடந்த 2000 ல் மேற்கொள்ளப்பட்டது.ஆனால் அதன் பின்பு நடவடிக்கை எடுக்கவில்லை.ஆனாலும் 2006-ம் ஆண்டு சுற்றுலாத் துறையின் சார்பில் 2.5 லட்சமும் கோவில் நிர்வாகம் சார்பில் 2.5 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பஞ்சலிங்க அருவிக்கு செல்லும் வழியில் உள்ள பாதை மற்றும் பக்கவாட்டு இரும்பு கைப்பிடிகள் அமைக்கப்பட்டது.மேலும் பஞ்சலிங்க அருவிக்கு முன்பு 1991-ம் ஆண்டில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட இரும்பு பாலம் சேதம் அடைந்து உள்ளது. அதனுடன் சேர்த்து அருவிக்கு செல்லும் பாதை, பக்கவாட்டு கம்பி வேலி, இரும்புகைப்பிடி, சுகாதார வளாகம் கட்டுவதற்கு கருத்துரு தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.அனுமதி கிடைத்த பின்பு அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.அதுதவிர கோவில் வளாகத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி,புறக்காவல் நிலையம்,பேருந்து நிறுத்தம்,பார்க்கிங் வசதி,ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டியது அவசியமானதாக உள்ளது.இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைவது மூலமாக குருமலை, குளிப்பட்டி,பூச்சகொட்டாம்பாறை, திருமூர்த்திமலை மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த மலைவாழ் மக்கள்,பொதுமக்கள்,சுற்றுலாபயணிகள் பயனடைவார்கள்.

    சிறுவர்களைக் கவரும் விதமாக அமைக்கப்பட்ட சிறுவர்பூங்காவும் அதில் உள்ள பொழுதுபோக்கு உபகரணங்கள், விலங்குகளின் சிலைகள் பராமரிப்பின்றி சிதிலம் அடைந்தும் பிளாஸ்டிக் கழிவுகளால் சீரழிந்தும் வருகின்றது. அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு இன்றளவும் நடவடிக்கை எடுக்கவில்லை.அதே போன்று 1991-ம் ஆண்டு தளி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் தொடங்கப்பட்ட படகுத்துறையும் அணைப்பகுதியில் இயங்கி வந்த படகும் பல்வேறு காரணங்களால் கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து காட்சிப் பொருளாக மாறி உள்ளது. அதை புதுப்பித்து இயக்குவதற்கு தளி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.அதற்கு விரைவில் செயல் வடிவம் கொடுத்து படகு சவாரியை துவக்க வேண்டும்.

    அதே போன்று சுற்றுலா பயணிகளுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது தொலைத்தொடர்பும், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதியும். இதற்கான இடத்தை தேர்வு செய்வதும் அவசியமாகும். மேலும் பொதுப்பணித்துறை சார்பில் திருமூர்த்தி அணையின் நுழைவு வாயிலில் இருந்து ஷட்டர்கள் வரையிலான 2 கிலோ மீட்டர் பகுதியில் பூங்கா அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது.அதுவும் இன்றளவும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது. நாடி வந்து வணங்குவோர்க்கு முக்தியளிக்கும் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள திருமூர்த்திமலையை சுற்றுலா தளமாக அறிவித்து அனைத்து தரப்பட்ட மக்களையும் கவரும் விதம் அங்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவது அவசியமாகும்.

    • ஆனைமலை செல்லும் ரோடு நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
    • ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர்.

    உடுமலை :

    கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து உடுமலை முக்கோணம் பகுதியில் பிரிந்து ஆனைமலை செல்லும் ரோடு மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவின் கீழ், நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த வழித்தடத்தில் பாப்பனூத்து, சாளையூர், கொடிங்கியம், எரிசனம்பட்டி உட்பட பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன. தென் மாவட்டங்களிலிருந்து ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவு இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர்.

    போக்குவரத்து மிகுந்த இந்த ரோட்டில் அபாய வளைவு பகுதிகள் அதிக அளவு உள்ளன. முக்கோணத்திலிருந்து வாளவாடி செல்லும் ரோடு பிரியும் பகுதி, ெரயில்வே கேட் அருகில் சாளையூரிலிருந்து உடுக்கம்பாளையம் ரோடு பிரியும் பகுதி, அதே கிராமத்தில் மழை நீர் ஓடை குறுக்கிடும் பகுதி என ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் அபாய வளைவுகள் உள்ளன. ரோடு குறுகலாக இருப்பதால் இந்த வளைவுகளில் விபத்துகள் தொடர்கதையாக உள்ளது.

    கனரக வாகனங்கள் அவ்வழியாக செல்லும் போது பிற வாகனங்கள் விலகிச்செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.இவ்வழித்தடத்தில் ஆனைமலை, வேட்டைகாரன்புதூர், உடுக்கம்பாளையம், வல்லக்குண்டாபுரம், தேவனூர்புதூர் உட்பட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    பஸ் மற்றும் கனரக போக்குவரத்து மிகுந்த இந்த ரோட்டில், அபாய வளைவு பகுதியை மேம்படுத்த, பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாளையூர் உட்பட பகுதிகளில் வேகத்தடை மட்டும் அமைக்கப்பட்டுள்ளது.அங்கும் போதிய குறியீடுகள் இல்லாததால் இரவு நேரங்களில் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர்.இந்த ரோட்டை விரிவுபடுத்தி அபாய வளைவு பகுதிகளில் சென்டர் மீடியன் அமைத்தல், வேகத்தை குறைத்து செல்வதற்கான குறியீடு உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • போதிய கட்டமைப்பு வசதிகள் பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் உள்ளது.
    • இளைஞர்கள் பல்வேறு விளையாட்டுகளில் மாநில அணியில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை நகரின் மையப்பகுதியில் 6.30 ஏக்கர் பரப்பில் நேதாஜி மைதானம் அமைந்துள்ளது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்குரிய இம்மைதானம், சுற்றுப்பகுதி விளையாட்டு வீரர்களின் முக்கிய பயிற்சி மைதானமாக உள்ளது.

    ஆனால் போதிய கட்டமைப்பு வசதிகள் பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் உள்ளது. கடந்த2014-15ல், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ஸ்கேட்டிங் மைதானம் மட்டும் ஏற்படுத்தப்பட்டது. பிற விளையாட்டுகளுக்கான வசதிகள் எதுவும் இல்லை. தற்போது இப்பகுதியில் ஆக்கி, தடகளம், வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி பெற உடுமலை பகுதி இளைஞர்கள் ஆர்வம் காட்டினாலும், மைதானத்தில் போதிய வசதிகளில்லை.

    எனவே மின்னொளியுடன் கூடிய வாலிபால் மைதானம், தடகளத்துக்கான ஓடுதளம் மற்றும் கால்பந்து மைதானம் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் மற்றும் உடற்பயிற்சிக்கூடம் ஆகிய வசதிகள் தேவை என இப்பகுதி விளையாட்டு வீரர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

    ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடுமலை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பல்வேறு விளையாட்டுகளில் மாநில அணியில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். மேலும், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பயிற்சி பெற்றுவிளையாட்டில் சாதிக்க காத்திருக்கின்றனர்.எனவே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நேதாஜி மைதானத்தில் ஆய்வு செய்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   

    தமிழ்நாட்டில் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் உள்பட நாடு முழுவதும் 13 மத்திய பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. #CentralUniversity #Cabinet
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், தமிழ்நாட்டில் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் உள்பட நாடு முழுவதும் 13 மத்திய பல்கலைக்கழகங்களின் தொடர் செலவினம் மற்றும் அந்த வளாகங்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.3 ஆயிரத்து 639 கோடியே 32 லட்சம் செலவினத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    ஆன்லைன் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் அடுத்த தலைமுறை திட்டத்தை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாக இன்போசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான செலவுத்தொகை ரூ.4 ஆயிரத்து 242 கோடிக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    இதுகுறித்து மத்திய மந்திரி பியுஷ் கோயல் கூறுகையில், “இந்த திட்டத்தால், வருமான வரி கணக்குகளை ஆய்வு செய்வதற்கான கால அளவு 63 நாட்களில் இருந்து ஒரு நாளாக குறையும். ஒரே நாளில் கணக்குகள் ஆய்வு செய்து முடிக்கப்படும். இதனால், திரும்ப பெறும் தொகையையும் விரைவில் பெற முடியும். 18 மாதத்துக்கு பிறகு திட்டம் அமலுக்கு வரும்” என்றார்.

    பொதுத்துறையை சேர்ந்த எக்சிம் வங்கிக்கு ரூ.6 ஆயிரம் கோடி மூலதனமாக வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    உயர் கல்வி ஆராய்ச்சி, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.1 லட்சம் கோடி நிதி திரட்டுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. #Cabinet #Research #HigherEducation
    புதுடெல்லி:

    டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை நேற்று கூடியது. இந்த கூட்டத்தில் உயர் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு உயர் கல்வி நிதி நிறுவனம் (எச்.இ.எப்.ஏ.) இன்னும் 4 ஆண்டுகளில் (2022-ம் ஆண்டுக்குள்) ரூ.1 லட்சம் கோடி நிதி திரட்டிக்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

    இதேபோன்று உயர் கல்வி நிதி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு உயர்த்துவதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு ஒப்புதல் அளித்தது.

    ஏற்கனவே ரூ.1,000 கோடி வழங்கி உள்ள நிலையில் மத்திய அரசு இந்த நிறுவனத்துக்கு கூடுதலாக அரசு தரப்பு பங்காக ரூ.5 ஆயிரம் கோடி வழங்குவதற்கும் இந்தக் குழு தனது ஒப்புதலை வழங்கியது.

    உயர் கல்வி நிதி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு உயர்த்தும் மத்திய மந்திரிசபையின் முடிவால், தொழில் கல்வி நிறுவனங்கள் நிதி பெற வழி பிறந்து உள்ளது.

    புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகள், பிற சுகாதார கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயாக்கள், நவோதயா வித்யாலயாக்கள் உயர் கல்வி நிதி நிறுவனத்திடம் இருந்து நிதி வசதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிற முக்கிய முடிவுகள்:-

    * இணையதளம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிற சூழலில், சர்வதேச காப்புரிமை அமைப்பின்கீழ் அறிவுசார் படைப்பாளர்கள் தங்கள் கடின உழைப்பின் பலனைப் பெற ஏதுவாக உலக அறிவுசார் சொத்துக்கள் அமைப்பின் அறிவுசார் பதிப்புரிமை ஒப்பந்தத்தில் இணைவதற்கு மத்திய மந்திரி ஒப்புதல் வழங்கியது.

    * மரபணு தொழில் நுட்ப ஒழுங்குமுறை மசோதாவுக்கு ஒப்புதல் தரப்பட்டது.

    * நலிவுற்ற நிலையில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு செலவுக்கான நிதியை ரூ.200 கோடியில் இருந்து ரூ.336 கோடியே 24 லட்சமாக உயர்த்தும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    * சட்டம், நீதித்துறையில் கூட்டு ஆலோசனை குழு அமைப்பதற்கு இந்தியாவும், இங்கிலாந்தும் புரிந்து உணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய மந்திரிசபை ஒப்புதல் தந்தது.  #Research #HigherEducation #Tamilnews
    ×