என் மலர்

    நீங்கள் தேடியது "government funding"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு சீரமைத்தல் பணிகளுக்கு அரசின் நிதி உதவி வழங்கப்படும் என புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிறிஸ்தவ தேவாலயங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016- 17-ம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ தேவாலயங்களை இந்த திட்டங்களின் கீழ் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்வதற்கு அந்த தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்திருக்க வேண்டும், தேவாலயமும் பதிவு செய்திருக்க வேண்டும்.

    தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருக்கக் கூடாது. சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும். விண்ணப்ப படிவத்தை அனைத்து உரிய ஆவணங்களுடன் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கு வருகிற 25&ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பபடிவம் மற்றும் சான்றிதழ்  WWW.bcmbcmw@tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டு உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். மேலும் 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலான தேவாலயங்களுக்கு ரூ.1 லட்சமும், 15 முதல் 20 ஆண்டுகள் வரையிலான தேவாலயங்களுக்கு ரூ.2 லட்சமும், 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள தேவாலயங்களுக்கு ரூ.3 லட்சமும் சீரமைத்தல் பணிகளுக்கு அரசின் நிதி உதவியாக வழங்கப்படுகிறது. கலெக்டர் தலைமையிலான குழு சார்பில் விண்ணப்பங்கள் அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து அங்கு ஆய்வு மேற்கொள்ளப்படும்.
    எனவே தகுதியான கிறிஸ்தவ தேவாலயங்கள் உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    ×