search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central universities"

    தமிழ்நாட்டில் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் உள்பட நாடு முழுவதும் 13 மத்திய பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. #CentralUniversity #Cabinet
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், தமிழ்நாட்டில் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் உள்பட நாடு முழுவதும் 13 மத்திய பல்கலைக்கழகங்களின் தொடர் செலவினம் மற்றும் அந்த வளாகங்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.3 ஆயிரத்து 639 கோடியே 32 லட்சம் செலவினத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    ஆன்லைன் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் அடுத்த தலைமுறை திட்டத்தை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாக இன்போசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான செலவுத்தொகை ரூ.4 ஆயிரத்து 242 கோடிக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    இதுகுறித்து மத்திய மந்திரி பியுஷ் கோயல் கூறுகையில், “இந்த திட்டத்தால், வருமான வரி கணக்குகளை ஆய்வு செய்வதற்கான கால அளவு 63 நாட்களில் இருந்து ஒரு நாளாக குறையும். ஒரே நாளில் கணக்குகள் ஆய்வு செய்து முடிக்கப்படும். இதனால், திரும்ப பெறும் தொகையையும் விரைவில் பெற முடியும். 18 மாதத்துக்கு பிறகு திட்டம் அமலுக்கு வரும்” என்றார்.

    பொதுத்துறையை சேர்ந்த எக்சிம் வங்கிக்கு ரூ.6 ஆயிரம் கோடி மூலதனமாக வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    நாடுமுழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் 5 ஆயிரத்து 606 பேராசிரியர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. #ProfessorPost #Vacancies
    புதுடெல்லி:

    நாடுமுழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் 5 ஆயிரத்து 606 பேராசிரியர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன.

    புகழ்பெற்ற ஐ.ஐ.டி.யில் மட்டும் 2 ஆயிரத்து 806 இடங்கள் காலியாக இருக்கின்றன. அதே போல் என்.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.இ.எஸ்.டி.யில் 870 பணியிடங்களும், ஐ.ஐ.எம்-ல் 283 பணியிடங்களும் காலியாக உள்ளன.

    ஓய்வு மற்றும் ராஜினாமா காரணமாகவும், அதிகமான மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதாலும் மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணிக்கு காலியிடங்கள் ஏற்படுவதும், அவற்றை நிரப்புவதும் தொடர்ச்சியான செயல்முறையாகி விட்டது.

    எனினும் பேராசிரியர் பணிக்கான காலியிடங்களை நிரப்ப ஆய்வு மாணவர்களை பேராசிரியர்களாக நியமிப்பது, ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்துவது, கவுரவ பேராசிரியர்களை நியமிப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை பல்கலைக்கழகங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்த தகவல்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #ProfessorPost #Vacancies  #Tamilnews 
    ×