search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hardik pandya"

    • சேவாக், ராயுடு தேர்வு செய்த அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறவில்லை.
    • கீப்பராக ரிஷப் பண்டை சேவாக்கும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை ராயுடுவும் தேர்வு செய்துள்ளனர்,

    புதுடெல்லி:

    ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை இந்திய முன்னாள் வீரர்களான சேவாக், அம்பதி ராயுடு ஆகியோர் அறிவித்துள்ளனர். சேவாக் தேர்வு செய்த அணியில் சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெறவில்லை. கீப்பராக ரிஷப் பண்டை தேர்வு செய்துள்ளார்.

    இதே போல ராயுடு தேர்வு செய்த அணியிலும் ஹர்திக் பாண்ட்யா இடம் பெறவில்லை. கீப்பராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்துள்ளார். இவரது அணியில் ரியான் பராக் இடம் பிடித்துள்ளார்.

    மேலும் சிவம் துபேவை இந்திய டி20 அணியில் சேர்க்க வேண்டும் என அஜித் அகர்கரிடம் சிஎஸ்கே அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சேவாக் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி:-

    ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், சிவம் துபே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சந்தீப் சர்மா, முகமது சிராஜ், ஜஸ்பிரிட் பும்ரா.

    அம்பதி ராயுடு தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி:-

    ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரியான் பராக், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், தினேஷ் கார்த்திக், சிவம் துபே, மயங்க் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, சாஹல், ரவீந்திர ஜடேஜா, அர்ஸ்தீப் சிங், குல்தீப் யாதவ். 

    • நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், மும்பை அணிகள் மோதின.
    • இதில் ராஜஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய மும்பை 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் திலக் வர்மா 65 ரன்னும் வதேரா 49 ரன்களும் எடுத்தனர்.

    ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா 5 விக்கெட்டும், போல்ட் 2 விக்கெட்டும், சாஹல், ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் சதமடிக்க 18.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி நடப்பு தொடரில் 5-வது தோல்வியைப் பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவை இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் சாடியுள்ளார்.

    இதுதொடர்பாக கெவின் பீட்டர்சன் கூறுகையில், கோட்சி முதலில் பந்து வீசுகையில் ஜெய்ஸ்வால் நிறைய ரன்களை அடித்து விடுகிறார். இதனால் 2வது ஓவரை வீச கோட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இது பாண்ட்யாவின் மோசமான கேப்டன்சிக்கு  உதாரணமாக விளங்குகிறது என தெரிவித்துள்ளார்.

    • மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

    சண்டிகர்:

    17-வது ஐ.பி.எல். சீசனின் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 192 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 78 ரன்களையும், ரோகித் சர்மா 36 ரன்களையும் எடுத்தனர்.

    இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் மும்பை 18 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தது. அதனால் களத்திலேயே நடுவர்கள் உள்வட்டத்திற்கு வெளியே கடைசி 2 ஓவரில் ஒரு பீல்டரை குறைத்து மும்பைக்கு தண்டனை கொடுத்தனர்.

    அதைத் தொடர்ந்து பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்க தவறியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்து விவாதித்தனர்.
    • இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில் உலகக்கோப்பை அணியில் ஹர்திக் பாண்ட்யாவின் இடம் பற்றியும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    மும்பை:

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் கடந்த வாரம் மும்பையில் சந்தித்து டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்து விவாதித்தனர். இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில் உலகக்கோப்பை அணியில் ஹர்திக் பாண்ட்யாவின் இடம் பற்றியும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் பாண்ட்யா இடம்பெற நடப்பு ஐ.பி.எல். சீசனில் அதிகளவில் பந்து வீச வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித், தலைமை பயிற்சியாளர் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் இந்த கருத்து ரோகித் சர்மா அளித்த பதில் பின்வருமாறு:-

    நாங்கள் இதுவரை சந்திக்கவே இல்லை. நானோ அல்லது ராகுல் அல்லது அஜித்தோ அல்லது பிசிசிஐயின் யாரோ ஒருவர் கேமரா முன் வந்து பேசுவதை நீங்கள் கேட்காத வரையில், எதையும் நம்பவேண்டாம். அதேபோல உலகக்கோப்பையில் நானும் கோலியும் தொடக்க வீரர்களாக இறங்குவது குறித்தும் இன்னும் முடிவு எடுக்கவில்லை என ரோகித் சர்மா கூறினார்.

    மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக விளையாடி வரும் ஹர்திக் பாண்ட்யா 6 போட்டிகளில் 131 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் இந்த ஐபிஎல் சீசனில் அவர் பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் இரண்டு போட்டிகளில் மட்டுமே பாண்ட்யா 4 ஓவர்களை வீசியுள்ளார்.

    டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிராக அவர் ஒரு ஓவர் கூட வீசவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் ஒரு ஓவரை மட்டுமே வீசினார். சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான போட்டியில், பாண்ட்யா 3 ஓவர்கள் வீசினார். ஆனால் எதிலும் சிறந்த செயல்பாடு இல்லை. 

    • கடந்த ஆண்டு டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய மத்வாலிற்கு இந்த முறை ஏன் வாய்ப்பு தரவில்லை.
    • ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீசி ஒரு விக்கெட் எடுத்தார். ஆனால் அதன் பிறகு அவருக்கு இரண்டாவது ஓவர் கிடைக்கவில்லை.

    ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை - சென்னை அணிகள் மோதின. இதில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா கேப்டன்ஷிப் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் பேசியதாவது:-

    மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் பந்துவீச்சை மேம்படுத்த முடியும். அவர்களின் கேப்டன் தனது பந்துவீச்சாளர்களை சிறப்பாக நிர்வகிக்க முடியும். ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீசி ஒரு விக்கெட் எடுத்தார். ஆனால் அதன் பிறகு அவருக்கு இரண்டாவது ஓவர் கிடைக்கவில்லை. அதிலும் குறிப்பாக அவர் ரச்சின் ரவீந்திராவை ஆட்டமிழக்க செய்தும், ஷிவம் தூபே பேட்டிங் செய்யும் போது ஏன் அவருக்கு பந்துவீச வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்ற கேள்வி உள்ளது.

    அதன்பின் அவரது ஓவரை ஹர்திக் பாண்டியா வீச முன்வந்து, தனது முதல் ஓவரிலேயே15 ரன்கள் கொடுத்தார். பிறகு கடைசி ஓவரை வீசும் முறை வந்ததும் அவரே பந்து வீச வந்தார். அவர் ஆகாஷ் மத்வாலுக்கு பந்து வீச ஏன் வாய்ப்பு வழங்கவில்லை. கடந்த ஆண்டு டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய மத்வாலிற்கு இந்த முறை ஏன் வாய்ப்பு தரவில்லை. ஒருவேளை அவர் பந்துவீசி இருந்தால் கூடுதலாக 20 ரன்கள் வராமல் இருக்கலாம்.

    இவ்வாறு பதான் கூறினார்.

    • எங்கே பந்து வீசினால் டோனி சிக்சர் அடிப்பார் என்று தெரிந்து கொண்டு ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டது போல் தெரிந்தது.
    • பாண்ட்யா அவருடைய ஹீரோவின் அரவணைப்பை பெறுவதற்காக வேண்டுமென்றே பந்து வீசியதுபோல் தெரிந்தது.

    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை- சென்னை அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 29-வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 206 ரன்கள் சேர்த்தது.

    19 ஓவரில் சிஎஸ்கே 180 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரை பாண்ட்யா வீசினார். முதல் பந்தில் விக்கெட் கிடைத்தது. அடுத்து வந்த டோனி ஹாட்ரிக் சிக்சர் விளாசினார். இதனால் 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே 206 ரன்கள் குவித்தது. இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் எங்கே பந்து வீசினால் டோனி சிக்சர் அடிப்பார் என்று தெரிந்து கொண்டு ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டது போல் தெரிந்தது என சுனில் கவாஸ்கர் கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது நீண்ட காலத்திற்குப் பின் நான் பார்த்த மோசமான பந்து வீச்சாகும். அது பாண்ட்யா அவருடைய ஹீரோவின் அரவணைப்பை பெறுவதற்காக வேண்டுமென்றே பந்து வீசியதுபோல் தெரிந்தது.

    எங்கே பந்து வீசினால் டோனி சிக்சர் அடிப்பார் என்று தெரிந்து கொண்டு ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டது போல் தெரிந்தது. ஒரு சிக்சர் அடிக்கவிட்டால் பரவாயில்லை ஆனால் தொடர்ந்து லென்த் பாலாக வீசி டோனி சிக்ஸர் அடிப்பதற்கு ஏற்ற வகையில் ஹர்திக் பாண்டியா பந்து வீசி இருக்கிறார். மூன்றாவது பந்து, அதைவிட மோசம். லெக்சைடில் பந்து ஃபுல் டாஸ் ஆக வந்தது.

    அதை டோனி எளிதாக சிக்சருக்கு விரட்டினார். இது நிச்சயம் ஒரு மோசமான பந்துவீச்சு. ஒரு மோசமான கேப்டன்சி. என்னை கேட்டால் ருதுராஜ், ஷிவம் துபேவின் அதிரடிக்கு பின்பு சென்னை அணியை 185 - 190 ரன்களுக்குள் மும்பை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    சுனில் கவாஸ்கரின் இந்த கருத்து பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. 

    • ஐ.பி.எல். 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது
    • ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சி குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார்

    ஐ.பி.எல். 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணிக்கு ஐ.பி.எல். தொடரில் பல கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.இதனை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    போட்டி நடைபெறும்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். தற்போதும் எழுப்பி வருகின்றனர். அணி நிர்வாகம், ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரால் சரி செய்ய முடியவில்லை. இது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக உள்ளது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது. ஆனால் அதற்கு அடுத்த 2 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வெற்றி பாதைக்கு அணி திரும்பியது. ஆனால் மீண்டும் நேற்று நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை தோல்வியடைந்தது. அந்த தோல்விக்கு கடைசி ஓவரில் டோனிக்கு எதிராக பாண்டியா 20 ரன்கள் கொடுத்ததே முக்கிய காரணமாக அமைந்தது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

    இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சி குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர் "ஹர்திக் பாண்ட்யா டாஸ் போடும்போதும் பேட்டிங் செய்ய வரும்போதும் அளவுக்கு அதிகமாக சிரித்த முகத்துடன் இருக்கிறார். மகிழ்ச்சியாக இருப்பதுபோல தன்னை காட்டிக்கொள்ள முயல்கிறார் ஆனால், அவர் உண்மையில் வருத்தத்தில் உள்ளார். ரசிகர்கள் BOO செய்து முழக்கமிடுவது போன்ற விஷயங்கள், ஹர்திக்கை காயப்படுத்தியுள்ளது. இது அவரது கேப்டன்சியை பாதிக்கிறது. அவரது இடத்தில் நானும் இருந்திருக்கிறேன். இது மிகவும் கடினமான சூழல்" என்று தெரிவித்துள்ளார்.

    "ஹர்திக் பாண்ட்யாவுக்கு என்ன நடக்கிறது. அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்கள் தற்போது முன்னாள் சி.எஸ்.கே கேப்டன் டோனி பாண்ட்யாவை அடித்து நொறுக்குவதை பார்த்து மகிழ்ச்சியடைகிறார்கள். அது அவருக்கு வலியை கொடுக்கும். ஏனெனில் இந்திய வீரரான அவர் உணர்ச்சிவசப்படுகிறார். எனவே இப்படி நடக்கும் போது அது அவரை பாதிக்கிறது. இது நடக்காமல் இருக்க ஏதாவது நடக்க வேண்டும்" என்று கூறினார்.

    அத்துடன் வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கும் போது உடனடியாக ஸ்பின்னர்களை பயன்படுத்தி எதிரணியை அட்டாக் செய்யும் யுக்தியை கேப்டனாக பாண்ட்யா பின்பற்றவில்லை என பீட்டர்சன் விமர்சித்தார். அந்த வகையில் மிகப்பெரிய அழுத்தத்திற்குள் தவிக்கும் பாண்ட்யா அடுத்து வரும் போட்டிகளில் மும்பையை வெற்றி பாதைக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.

    • குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்
    • நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது

    ஐ.பி.எல். 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணிக்கு ஐ.பி.எல். தொடரில் பல கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது. ஆனால் அதற்கு அடுத்த 2 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வெற்றி பாதைக்கு அணி திரும்பியுள்ளது.

    ஆனால் தோல்வியடைந்த முதல் 3 போட்டிகளில் முழுமையாக பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா அடுத்தடுத்த 2 போட்டிகளில் குறைவான ஓவர்கள் மட்டுமே பந்துவீசி வருவதை பற்றி நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சைமன் டவுல் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "இப்படி, ஒரு போட்டியில் அதிக ஓவர் வீசிவிட்டு, அடுத்த போட்டியில் பந்து வீசவில்லை என்றால், அவர் காயம் அடைந்துள்ளார். அவரிடம் ஏதோ தவறு இருக்கிறது. அவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், அவரிடம் ஏதோ தவறு இருப்பது உறுதி. அது என் உள்ளுணர்வு" என்று தெரிவித்துள்ளார்.

    டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கும் நிலையில், அவருக்கு கடுமையான காயம் ஏற்படாமல் தடுப்பதற்காகவே ஹர்திக் பாண்ட்யா பந்து வீசுவதை குறைக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

    ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீசும் போது ஹர்திக் பாண்ட்யாவிற்கு காலில் காயம் ஏற்பட்ட நிலையில், உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகினார். அதன் பிறகு ஆஸ்திரேலியா டி20 தொடர், தென் ஆப்பிரிக்கா டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 தொடர், ஆப்கானிஸ்தான் டி20 தொடர், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் என்று எந்த தொடரிலும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் செய்ய வரும் போது ரசிகர்கள் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வந்தனர்.
    • தோல்வியடையும் வேலையிலும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆதரவாக விராட் கோலி செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை - ஆர்சிபி அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 196 ரன்கள் குவித்தும் தோல்வியடைந்தது. இதன் மூலம் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது.

    இந்நிலையில் இந்த போட்டியின் போது விராட் கோலியின் செயல் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது. மும்பையில் நடந்த இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் செய்ய வரும் போது ரசிகர்கள் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வந்தனர்.

    அந்த நிலையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலி உடனே ரசிகர்களை நோக்கி அவரும் இந்திய வீரர் தான் என்னும் வகையில் சைகை காட்டி இப்படி செய்யாதீர்கள் என கூறினார். மேலும் அவருக்கு ஆதரவு தெரிவியுங்கள் எனவும் கூறினார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தோல்வியடையும் வேலையிலும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆதரவாக விராட் கோலி செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

     

    விராட் கோலி, எதிரணி வீரர்களுக்கு எதிராக ஆக்ரோஷமாக செயல்பட கூடியவர். அவரை சீண்ட எதிரணி வீரர்கள் யோசிப்பார்கள். ஏனென்றால் அவரை சீண்டினால் பேட்டால் தான் பதிலடி கொடுப்பார். அது நிறைய முறை நடந்திருக்கிறது.

    ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்க்கு எதிராக நிறைய முறை கோலி வம்பிழுத்துள்ளார். ஆனால் ஸ்மித் பால் டெம்பரிங் சர்ச்சையில் சிக்கி ஒரு வருடம் விளையாடாமல் இருந்தார். ஒரு வருடம் கழித்து வந்து விளையாடினார். அப்போது இந்தியாவுடனான போட்டியின் போது ரசிகர்கள் ஸ்மித்தை கலாய்த்து கோஷங்களை எழுப்பினர். உடனே பேட்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலி அப்படி செய்யாதீர்கள் எனவும் அவருக்கு ஆதரவு கொடுங்கள் எனவும் சைகை மூலம் காட்டினார்.

    இதேபோல ஐபிஎல் தொடரின் போது ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் மற்றும் விராட் கோலி ஆகியோர் மோதலில் ஈடுப்பட்டனர். அதன் பிறகு ரசிகர்கள் நவீன் உல் ஹக்குக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அந்த ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்தியாவில் ஆப்கானிஸ்தான் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

    அப்போது ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த நவீன் உல் ஹக்கை ரசிகர்கள் கலாய்த்து தள்ளினர். உடனே விராட் கோலி அவரை கிண்டல் செய்யாதீர்கள் என கூறினார். இதனை சற்றும் எதிர்பாராத நவீன் உல் ஹக், கோலியிடம் வந்து கட்டியணைந்து சமரசம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரன் சேசிங்கில் ரோகித், இஷான் கிஷன் பேட்டிங் செய்த விதம், ஆட்டத்தை முன் கூட்டியே முடிப்பது எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது.
    • மும்பை அணியில் பும்ரா இருப்பது எனது அதிர்ஷ்டம். நான் அவரிடம் கேட்கும் ஒவ்வொரு முறையும் அவர் விக்கெட்டுகளைப் எடுத்து தருகிறார்.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று மும்பையில் நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. கேப்டன் டு பிளிசிஸ் 61 ரன்னும், படிதார் 50 ரன்னும், தினேஷ் கார்த்திக் 53 ரன்னும் எடுத்தனர். மும்பை தரப்பில் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் விளையாடிய மும்பை, 15.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து வென்றது. தொடர்ந்து இஷான் கிஷன் 69 ரன்னும், ரோகித் சர்மா 38 ரன்னும், சூர்ய குமார் யாதவ் 52 ரன்னும் எடுத்தனர்.

    வெற்றி குறித்து மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    வெற்றி பெறுவது எப்போதும் அற்புதமானது. நாங்கள் வெற்றி பெற்ற விதம் சிறப்பாக இருந்தது. இம்பாக்ட் பிளேயர் விதியால் கூடுதல் பந்து வீச்சாளரைப் பயன்படுத்த முடிகிறது. இது எனக்கு கூடுதல் பயனை அளித்தது. ரன் சேசிங்கில் ரோகித் சர்மா, இஷான் கிஷன் பேட்டிங் செய்த விதம், ஆட்டத்தை முன் கூட்டியே முடிப்பது எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது.

    இந்த ஆடுகளத்தில் இலக்கு குறைவாக இருந்ததால், ரன் ரேட்டை உயர்த்த நினைத்தோம். மும்பை அணியில் பும்ரா இருப்பது எனது அதிர்ஷ்டம். நான் அவரிடம் கேட்கும் ஒவ்வொரு முறையும் அவர் விக்கெட்டுகளைப் எடுத்து தருகிறார். அவருக்கு அனுபவமும் நம்பிக்கையும் அதிகம். பெங்களூரு கேப்டன் டு பிளிசிஸ் சில இடங்களில் பந்தை அடித்தார். அது போன்று வேறு வீரர்கள் அடித்து நான் பார்த்ததில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெங்களூரு கேப்டன் டு பிபெலிசிஸ் கூறும்போது, ஆட்டத்தில் பனி ஒரு பெரிய பங்கை வகிக்கும் என்று எங்களுக்குத் தெரியும். எங்களுக்கு 215-220 ரன்கள் தேவைப்பட்டது. 190 ரன் போதுமானதாக இல்லை. பனி படிந்தவுடன் மிகவும் கடினமாக இருந்தது. பந்தை பலமுறை மாற்றினோம். மும்பை அணி வீரர்கள் எங்கள் பந்துவீச்சாளர்களை நிறைய தவறுகளைச் செய்ய வைத்தார்கள். முக்கியமான கட்டங்களில் முக்கிய விக்கெட்டுகளை இழந்தோம். பும்ரா சிறப்பாக பந்து வீசினார். மலிங்கா போன்ற ஒருவர் 20 ஓவர் கிரிக்கெட டில் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார். அதை தற்போது பும்ரா வைத்துள்ளார் என்றார்.

    மும்பை அணி 2-வது வெற்றியை பெற்றது. பெங்களூரு 5-வது தோல்வியை சந்தித்தது.

    • ஹர்திக், குர்ணால் பாண்ட்யாவின் வளர்ப்பு சகோதரர் வைபவ் பாண்ட்யாவை பண மோசடி வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.
    • கடந்த் சில நாட்களாக ஹர்திக் பாண்ட்யா குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஐபிஎல் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை நடந்த முடிந்த லீக் போட்டிகள் முடிவில் ராஜஸ்தான் அணி முதல் இடத்தில் உள்ளது. 2 முதல் 4 இடங்கள் முறையே கொல்கத்தா, லக்னோ, சென்னை ஆகிய அணிகள் உள்ளன.

    இந்த புள்ளி பட்டியலில் மும்பை அணி 8-வது இடத்தில் உள்ளது. முதல் 3 போட்டிகளில் தோல்வியை தழுவிய அந்த அணி 4-வது போட்டியில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனையடுத்து மும்பை அணியின் 5-வது போட்டியில் ஆர்சிபி அணியுடன் இன்று மோதுகிறது.

    இந்த தொடர் தொடங்கியதில் இருந்து மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஹர்திக் பாண்ட்யா குடும்பம் தொடர்பான ஒரு செய்தி வைரலாகி வருகிறது.

    ஹர்திக் பாண்ட்யா மற்றும் குர்ணால் பாண்ட்யாவின் வளர்ப்பு சகோதரர் வைபவ் பாண்ட்யாவை பண மோசடி வழக்கில் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

    குர்ணால், ஹர்திக், வைபவ் மூவரும் இணைந்து உருவாக்கிய நிறுவனத்தில் இருவருக்கும் தெரியாமல் ரூ.1 கோடி வரை தன்னுடைய வங்கி கணக்கிற்கு மாற்றியதுடன், தன்னுடைய லாப விகிதத்தையும் அதிகரித்து வைபவ் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

    • மும்பை அணி முதல் 3 ஆட்டங்களில் (குஜராத், ஐதராபாத், ராஜஸ்தானுக்கு எதிராக) வரிசையாக தோற்றது.
    • டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் பாண்ட்யா சாமி தரிசனம் செய்திருந்தார்.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    இந்நிலையில் போட்டிக்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அவருடன் இஷான் கிஷன், பியூஸ் சாவ்லா மற்றும் குர்ணால் பாண்ட்யா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். இதனால் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    ஏனென்றால் இந்த சீசனை மோசமாக தொடங்கிய மும்பை அணி முதல் 3 ஆட்டங்களில் (குஜராத், ஐதராபாத், ராஜஸ்தானுக்கு எதிராக) வரிசையாக தோற்றது. இந்த தோல்விக்கு பிறகு 4-வது போட்டியில் டெல்லி அணியை மும்பை சந்தித்தது. அந்த போட்டிக்கு முன்னர் ஹர்திக் பாண்டியா குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து நடந்து போட்டியில் டெல்லி கேப்பிட்டல்சை தோற்கடித்து மும்பை வெற்றிக்கணக்கை தொடங்கியது. 

    இந்த நிலையில் இப்போதும் அவர் கோவிலுக்கு சென்றுள்ளதை வைத்து ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ×