search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கெவின் பீட்டர்சன்"

    • நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், மும்பை அணிகள் மோதின.
    • இதில் ராஜஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய மும்பை 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் திலக் வர்மா 65 ரன்னும் வதேரா 49 ரன்களும் எடுத்தனர்.

    ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா 5 விக்கெட்டும், போல்ட் 2 விக்கெட்டும், சாஹல், ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் சதமடிக்க 18.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி நடப்பு தொடரில் 5-வது தோல்வியைப் பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவை இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் சாடியுள்ளார்.

    இதுதொடர்பாக கெவின் பீட்டர்சன் கூறுகையில், கோட்சி முதலில் பந்து வீசுகையில் ஜெய்ஸ்வால் நிறைய ரன்களை அடித்து விடுகிறார். இதனால் 2வது ஓவரை வீச கோட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இது பாண்ட்யாவின் மோசமான கேப்டன்சிக்கு  உதாரணமாக விளங்குகிறது என தெரிவித்துள்ளார்.

    • குஜராத் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா முதல் ஓவரை வீசவில்லை.
    • 3-வது பவுலராக ஆட்டத்தின் 4-வது ஓவரில்தான் பந்து வீச வந்தார்.

    அகமதாபாத்:

    ஹர்த்திக் பாண்ட்யா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. சுப்மன்கில் தலைமையிலான குஜராத் அணி தொடக்க ஆட்டத்திலேயே வெற்றி பெற்றது.

    குஜராத் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா முதல் ஓவரை வீசவில்லை. 3-வது பவுலராக ஆட்டத்தின் 4-வது ஓவரில்தான் பந்து வீச வந்தார். ஹர்த்திக் பாண்ட்யா, லுகே வுட் ஆகியோருக்கு பிறகே வீசினார்.

    ஹர்த்திக் பாண்ட்யாவின் இந்த முடிவு தொடர்பாக டெலிவிஷன் வர்ணனையாளர்களான கவாஸ்கர், பீட்டர்சன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    பும்ரா முதல் ஓவரை வீசாதது ஏன்? எனக்கு இது புரியவில்லை என்று பீட்டர்சன் குறிப்பிட்டுள்ளார். இதற்கு கவாஸ்கர் பதில் அளிக்கும்போது, மிக நல்ல கேள்வி, மிக மிக நல்ல கேள்வி என்றார்.

    • 2-வது டெஸ்ட் போட்டியில் வர்ணனையாளராக ஜாகீர் கான் மற்றும் பீட்டர்சன் ஆகியோர் செயல்பட்டனர்.
    • அப்போது இந்திய கேப்டன் டோனி தன்னுடைய பாக்கெட்டில் இருப்பதாக ஜாகீர் கானிடம் பீட்டர்சன் கூறினார்.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தும் 2-வது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளனர்.

    இந்நிலையில் இந்த போட்டியில் வர்ணனையாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பீட்டர்சன் ஆகியோர் செயல்பட்டனர். அப்போது இந்திய கேப்டன் டோனி தன்னுடைய பாக்கெட்டில் இருப்பதாக ஜாகீர் கானிடம் பீட்டர்சன் கூறினார். அதற்கு யுவராஜ் சிங் உங்களை பலமுறை அவுட்டாக்கி தம்முடைய பாக்கெட்டில் போட்டதை மறந்து விடாதீர்கள் என்று ஜாகீர் கான் பதிலடி கொடுத்தார்.

    இது குறித்து அவர்கள் பேசிய உரையாடல் பின்வருமாறு:-

    கெவின் பீட்டர்சன்: என்னுடைய பாக்கெட்டில் யார் இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா? மகத்தான டோனி. அவர் கம்ரான் அக்மலுக்கு அடுத்தபடியாக இருக்கிறார்.

    ஜாகீர் கான்: நான் சமீபத்தில் யுவராஜ் சிங்கை சந்தித்தேன் என்பது உங்களுக்கு தெரியும். அவர் அங்கே கெவின் பீட்டர்சன் இருப்பதை பற்றி என்னிடம் கூறினார்.

    கெவின் பீட்டர்சன்: ஆம்.. நீங்கள் அதை சொல்வீர்கள் என்று எனக்கு தெரியும். யுவராஜ் என்னை சில முறை அவுட்டாக்கியுள்ளார்.

    ஜாகீர் கான்: அதனால் கெவின் பீட்டர்சன் ஒரு பட்டப் பெயரை யுவராஜுக்கு கொடுத்தது எனக்கு நினைவிருக்கிறது.

    கெவின் பீட்டர்சன்: ஆம் அதை யுவராஜ் தன்னுடைய இமெயில் முகவரியாக நீண்ட காலம் பயன்படுத்தினார். நாங்கள் சில மகத்தான போட்டி போட்டுள்ளோம்.

    (தொடர்ச்சி) களத்தில் எங்களுக்கிடையே சில அழகான போட்டியும் நடந்துள்ளது. நீண்ட காலம் நீங்கள் விளையாடும் போது இதுதான் நடக்கும். அப்போது நீங்கள் ஜாலியாக பேசும் வாய்ப்பு கிடைப்பதும் அதைப்பற்றிய நல்ல விஷயமாகும். அஸ்வின் அதே விஷயத்தை பென் ஸ்டோக்ஸிடம் கேரியர் முடிந்ததும் செய்வார். அவர்களும் இதே போல விளையாடி முடித்த பின் பேசி மகிழ்வார்கள்.

    என்று பேசினார்கள். 

    • ஐபிஎல் தொடரில் பீட்டர்சன் டெல்லி அணிக்காக விளையாடியுள்ளார்.
    • ஐபிஎல்லில் கடைசிவரை ஆர்சிபி அணிக்காக மட்டுமே ஆடுவேன் என்று விராட் கோலி கூறியிருந்தார்.

    ஐபிஎல் தொடங்கியதிலிருந்து ஒரே அணிக்காக ஆடிவரும் ஒரே வீரர் என்ற தனித்துவமான சாதனைக்கு சொந்தக்காரர் விராட் கோலி. ஐபிஎல் 16வது சீசனிலும் வழக்கம்போலவே முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது ஆர்சிபி அணி.

    லீக் சுற்றின் கடைசி 2 போட்டிகளிலும் சதமடித்து ஐபிஎல்லில் 7 சதங்களுடன், அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார். ஐபிஎல்லில் ஆர்சிபிக்காக 237 போட்டிகளில் ஆடி 7 சதங்களுடன் 7263 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பல சாதனைகளை படைத்த அவரால் ஆர்சிபி அணிக்காக ஒரு கோப்பையை கூட வென்று கொடுக்கமுடியவில்லை. இந்த சீசனிலும் பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் ஆர்சிபி வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஐபிஎல்லில் கடைசிவரை ஆர்சிபி அணிக்காக மட்டுமே ஆடுவேன் என்றும், வேறு அணிக்காக ஆடுவதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்றும் கோலி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் விராட் கோலி டெல்லி கேப்பிடள்ஸ் அணிக்காக ஆட வேண்டிய நேரம் வந்துவிட்டது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

    அதில், விராட் கோலியின் சொந்த ஊர் டெல்லி தான் என்ற நிலையில், அவர் டெல்லிக்காக ஆட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பீட்டர்சன் தெரிவித்துள்ளார். டெல்லி கேப்பிடள்ஸ் அணியும் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை.

    2008-ம் ஆண்டில் டெல்லி அணி விராட் கோலியை ஏலத்தில் எடுப்பதாக இருந்தது. ஆனால் டெல்லி அணிக்கு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் தேவைப்படும் நிலையில் பிரதீப் சங்வானை ஏலத்தில் எடுத்தது. இல்லாவிடில் விராட் கோலி டெல்லி அணிக்காகதான் விளையாடிருப்பார். 

    பீட்டர்சன் டெல்லி அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விராட் கோலி சர்வதேச அளவில் 75 சதங்களை விளாசி, சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை விரட்டிவருகிறார். சச்சின் சாதனையை கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • போட்டி முடிந்த பிறகும் மைதானத்தில் இருந்த எவரும் நகர்ந்து செல்லாமல் கூட்டம் முழுமையாக அங்கேயே இருந்தது.
    • ரசிகர்களின் இந்த செயல் எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

    டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிளே-ஆப் சுற்றுக்குள் செல்லும் வாய்ப்பும் சிஎஸ்கே அணிக்கு பிரகாசமாக இருக்கிறது.

    தற்போது 13 போட்டிகளில் 15 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. கடைசி லீக் போட்டியை டெல்லி அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இதில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கும் செல்வார்கள். மேலும் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து நேரடியாக குவாலிபயர்-1-ல் விளையாடும் வாய்ப்பையும் பெரும் அளவிற்கு வலுவாக இருக்கிறது.

    இந்த சீசனின் கடைசி ஹோம் போட்டியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. துரதிஷ்டவசமாக இதில் தோல்வியை தழுவியது. போட்டி முடிந்த பிறகு டோனி உட்பட அணியின் மற்ற வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் இணைந்து மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தவாறு மைதானத்தை சுற்றி வளம் சென்றனர்.

    அந்த இடத்தில் முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் இருந்தார். அப்போது நடந்த சில விஷயங்களை பகிர்ந்து கொண்டு, டோனிக்கு இது கடைசி ஐபிஎல் ஆக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கெவின் பீட்டர்சன் கூறியதாவது:-

    டோனி உட்பட பலரும் சேப்பாக்கம் மைதானத்தில் வளம் வந்தபோது நான் அங்கே இருந்தேன். போட்டி முடிந்த பிறகும் மைதானத்தில் இருந்த எவரும் நகர்ந்து செல்லாமல் கூட்டம் முழுமையாக அங்கேயே இருந்தது. ரசிகர்களின் இந்த செயல் எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. இப்படிப்பட்ட ஆதரவு டோனிக்கு இருக்கும்பொழுது இந்த ஐபிஎல் தொடருடன் அவர் ஓய்வு பெறுவார் என்று எனக்கு தோன்றவில்லை.

    இந்த வருடம் புதிதாக வந்திருக்கும் இம்பேக்ட் வீரர் விதிப்படி, டோனி அடுத்த வருடமும் ஆடலாம். பேட்டிங்கில் 7-வது 8-வது இடத்தில் இறங்குவதால், அதில் கவனம் செலுத்தவில்லை என்றாலும் 20 ஓவர்கள் முழுமையாக அவரால் கீப்பிங் செய்ய முடியும். களத்தில் நின்று கொண்டு முடிவுகளை எடுக்கலாம்.

    அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கு முன்னரே காலில் இருக்கும் பிரச்சனையை சரி செய்து கொண்டு இந்த வருடம் போலவே கடைசி கட்டத்திலும் பேட்டிங் இறங்கலாம். ஆகையால் டோனி ஓய்வு பெறுவது சரியாக இருக்காது என நம்புகிறேன். நாட்டு மக்கள் இதைதான் எதிர்பார்க்கிறார்கள். வருவார் என நினைக்கிறேன்.

    என்று அவர் கூறினார்.

    • விக்கெட் கீப்பரான டோனி சர்வதேச கிரிக்கெட்டில் 22 ஓவர்கள் வீசி உள்ளார்.
    • இதில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.

    மும்பை:

    நடப்பு ஐபிஎல் சீசனின் வர்ணனை பணியை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கவனித்து வருகிறார். நீங்கள் தானே டோனி கைப்பற்றிய முதல் மற்றும் ஒரே டெஸ்ட் விக்கெட்' என அவரிடம் பலரும் கேட்டு வருகின்றனர். இந்த சூழலில் அது தொடர்பாக வீடியோ ஆதாரத்தை அவர் வெளியிட்டுள்ளார்.


    இந்த கேள்விக்கு வித்திட்டவர் மகேந்திர சிங் டோனி தான். 2017 ஐபிஎல் சீசனின் போது அவர்தான் என்னுடைய முதல் டெஸ்ட் விக்கெட் என வேடிக்கையாக சொல்லி இருந்தார். அப்போது வர்ணனை பணியை கவனித்த பீட்டர்சன், மைக்ரோ போன் மூலம் புனே வீரர் மனோஜ் திவாரியுடன் பேசி இருந்தார். அப்போதுதான் இது நடந்தது. இது நடந்து ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில் 'நீங்கள் தானே டோனியின் முதல் டெஸ்ட் விக்கெட்' என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.


    இந்த நிலையில் கடந்த 2011-ல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான லார்ட்ஸ் போட்டியின் வீடியோ கிளிப் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் பீட்டர்சன். அந்த போட்டியின் முதல் நாள் அன்று டோனி பந்து வீசினார். அப்போது பீட்டர்சன் ஸ்ட்ரைக்கில் இருந்தார். அதில் ஒரு பந்து பீட்டர்சனின் பேட்டை உரசி சென்றது போல இருந்தது. 'அவுட்' என டோனி முறையிட்டார். நடுவரும் அவுட் கொடுத்தார். டிஆர்எஸ் பரிசீலனையில் பீட்டர்சன் அவுட் இல்லை என உறுதியானது.

    ஆதாரம் மிகத் தெளிவாக உள்ளது. நான் டோனியின் முதல் டெஸ்ட் விக்கெட் அல்ல. சிறப்பாக பந்து வீசி உள்ளீர்கள் எம்.எஸ்" என அந்த வீடியோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் பீட்டர்சன்.


    விக்கெட் கீப்பரான டோனி சர்வதேச கிரிக்கெட்டில் 22 ஓவர்கள் வீசி உள்ளார். 6 ஓவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டிலும், 16 ஓவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அடங்கும். இதில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார். அது ஒருநாள் கிரிக்கெட்டில் கைப்பற்றியதாகும். மேற்கிந்திய தீவுகள் வீரர் டி.எம். டவுலின் மட்டுமே.


    ×