search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "development projects"

    • சீயோன் நகரில் ரூ.9 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடையை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
    • மேலும் ரூ.40 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் உள்ளிட்டவைகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

    உடன்குடி:

    உடன்குடி ஊராட்சி ஓன்றியம் வெள்ளாளன் விளை ஊராட்சி சீயோன் நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ.9 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடையை தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    மேலும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.40 லட்சம் மதிப்பில் சமுதாய நலக் கூடம், சீர்காட்சி ஊராட்சி காமராஜ்நகரில் ரூ.20 லட்சம் மதிப்பில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த் தேக்க தொட்டி ஆகியவை அமைப்பதற்கான பூமி பூஜையிலும் அமைச்சர் பங்கேற்று அடிக்கல் நாட்டி னார்.

    உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன், தாசில்தார் வாமனன், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்சிராணி, சுடலை, ஊராட்சி மன்றத் தலைவர்கள் வெள்ளாளன் விளை ராஜரத்தினம், சீர்காட்சி கருணாகரன், உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், உடன்குடி பேரூராட்சி உறுப்பினர்கள் ஜான்பாஸ்கர், அஸ்ஸாப் அலி, செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன், சீர்காட்சி ஊராட்சி துணைத்தலைவர் ஜெயகிருஷ்ணன், தி.மு.க. மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, மாவட்ட, நிர்வாகிகள் பால்ராஜ், ராதாகிருஷ்ணன், சசிகுமார், கிதியோன், பிரவீன், சற்குணராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.82.15 லட்சம் மதிப்பீட்டில் பழஞ்சநல்லூர் - தேவனாம்புத்தூர் சாலை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட பல்வேறு பகுதிக ளில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொ ள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியின் கீழ் ரூபாய் 3.94 கோடி மதிப்பீட்டில் புதியதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், காட்டுமன்னார்கோவில் பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகள் கட்டுமான திட்டத்தின் கீழ் காட்டுமன்னார்கோவில் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் நல்வாழ்விற்காக 300 ச.அடிகொண்ட 4 வீடுகள் கொண்ட தொகுப்பு வீடுகளாக 18 தொகுப்புகளை கொண்டு தலா ரூ 5 லட்சம் வீதம் மொத்தம் 72 வீடுகள் ரூ. 3.60 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.

    மேலும் செட்டிதாங்கல், கீழக்கடம்பூர் மற்றும் தொரப்பு ஆகிய 3 ஊராட்சிகளில் 15-வது நிதிக்குழு மானிய திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.42.60 லட்சம் மதிப்பீட்டில் கிராம செயலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும்,தொரப்பு ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அருண்மொழித்தேவன் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், சண்டன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு குழந்தை நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.42 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் அவ்வளாகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சைக்கிள் ஸ்டாண்ட் மற்றும் ரூ.5.90 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் கழிவறை ஆகிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.82.15 லட்சம் மதிப்பீட்டில் பழஞ்சநல்லூர் - தேவனாம்புத்தூர் சாலை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இவ்வூராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவான ஆய்வு மேற்க்கொண்டு, அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர கலெக்டர் அறிவுறுத்தினார்.அப்போது ஒன்றிய குழு தலைவர் சாதியா பர்வின் நிஜார் அகமது , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகரன் , சுகுமார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் வடக்கு தொகுதியும், அ.தி.மு.க. திருப்பூர் ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமார் பணிகளை தொடங்கி வைத்தார்.
    • முருகேஷ்குமார், ராசப்பன், அருண், யுவராஜ், சரவணன், இந்து முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் எம்.எஸ்.செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

     திருப்பூர்:

    திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.76 லட்சத்து 30 ஆயிரத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன்படி மொய்யாண்டபாளையம் பகுதியில் ரூ.2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்க தொட்டி ரூ.18 லட்சத்து 50 ஆயிரத்திலும், தட்டான்குட்டை, ஜே.நகர் பகுதியில்22 லட்சத்து 80 ஆயிரத்திலும், புதிய தார்சாலை, அப்பியாபாளையம் ரங்காநகர் பகுதியில் ரூ.21 லட்சத்திலும்புதிய தார்சாலை, எஸ்.எஸ்.நகர் ஆரம்பப்பள்ளி அருகில் ரூ.14 லட்சத்தில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடம் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது.

    இதில் திருப்பூர் வடக்கு தொகுதியும், அ.தி.மு.க. திருப்பூர் ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமார் பணிகளை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கவுன்சிலர் சாமிநாதன், பேரவை ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் ராதாமணி சிவகாமி, மாவட்ட வர்த்தக அணி தலைவர் சுப்பிரமணியம், முன்னாள் சேர்மன் தங்கராஜ், ஒன்றிய பொருளாளர் சிவசாமி, ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மஹராஜ், ஊராட்சி துணைத்தலைவர் ராஜாமணி கந்தசாமி, நிர்வாகி ராம்குமார், மாவட்ட வக்கீல் பிரிவு சித்ரா, சொசைட்டி முன்னாள் தலைவர் கிட்டுசாமி, வார்டு உறுப்பினர்கள் முருகேஷ்குமார், ராசப்பன், அருண், யுவராஜ், சரவணன், இந்து முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் எம்.எஸ்.செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • குழந்தைகள் மருத்துவமனையின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறைகளை சார்ந்த முதல் நிலை அலுவலர்களுடன் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லால்வேனா, கலெக்டர் ஆஷா அஜித் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    கூட்டத்தில் ஒவ்வொரு துறைகளின் சார்பில் இதுவரை மேற்கொண்ட திட்டப்பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தேவை யான நிதி நிலைகள் ஆகியன தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் எடுத்து ரைத்து, அவைகள் தொடர் பான விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

    முன்னதாக திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய வற்றின் செயல்பாடுகள், ரூ.472.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அலுவலக கட்டுமான பணிகள், நெடுமரம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பனை ஓலை பயிற்சி மையம், தி.வைரவன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் செயல்பாடுகள், அரசனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடு கள் ஆகியன குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு செய்தனர்.

    மேலும் மக்களை தேடி மருத்துவ திட்ட பயனாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.

    பின்னர் சிவகங்கை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்து வமனையின் செயல்பாடு களையும் ஆய்வு செய்தனர்.

    • பொதுப்பணித்துறை மூலமாக 6 பாலங்கள் அமைத்தல், புதிதாக 2.67 கிலோமீட்டர் தூரம் புதிய வழித்தட கால்வாய் அமைத்தல் பணிகள் தொடங்கியது.
    • அதனை தெற்கு ஆரைக்குளம் கிராமத்தில் சண்முகையா எம்.எல்.ஏ., ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    தூத்துக்குடி:

    தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் பொது மக்களின் பிரதான அடிப்படை தேவைகள் குறித்து எம்.எல்.ஏ.க்கள் தெரிவிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒட்டப்பிடாரம், புதியம்புத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மலைப்பட்டி, ஒட்டப்பிடாரம், புதியம்புத்தூர், மலர்க்குளம், பெரியகுளம் மற்றும் ஒட்டப்பிடாரம் சுற்றியுள்ள 50 கிராம குளங்கள் பயன்பெறும் வகையில் வரத்து கால்வாய் நீரோடையில் 6 பாலங்கள் அமைத்தல், 15 கிலோமீட்டர் தூரம் வரை தூர்வாரும் பணி, மேலும் புதிதாக 2.67 கிலோமீட்டர் தூரம் புதிய வழித்தட கால்வாய் அமைத்தல் போன்ற கோரிக்கைகளை ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா அளித்திருந்தார்.

    இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நடவடிக்கையின் மூலம் பொதுப்பணித்துறை மூலமாக ரூ. 13.83 கோடி மதிப்பீட்டில் 6 பாலங்கள் அமைத்தல்,15 கிலோமீட்டர் தூரம் வரை தூர்வாரும் பணி மேலும் புதிதாக 2.67 கிலோமீட்டர் தூரம் புதிய வழித்தட கால்வாய் அமைத்தல் பணிகள் தொடங்கியது. அதனை தெற்கு ஆரைக்குளம் கிராமத்தில் சண்முகையா எம்.எல்.ஏ., ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் கோரம்பள்ளம் ஆறு வடிநில கோட்ட உதவி செயற்பொறி யாளர் சங்கர்ராஜ், உதவி பொறியாளர் ஆறுமுகராஜ், கள உதவியாளர் பிரபாகர், தாசில்தார் சுரேஷ், வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, ஒன்றிய துணைச் செயலாளர் லட்சுமணன், ஒன்றிய கவுன்சிலர்கள் நவநீதகிருஷ்ணன், சித்ராதேவி சண்முகராஜ், மொட்டையசாமி, மாவட்ட பிரதிநிதி தங்ககுமார், நகரச் செயலாளர் லிங்கராஜ், வர்த்தகர் அணி முத்துக்குமார், சிறுபான்மை அணி ஞானதுரை, ஆரைக்குளம் ஊராட்சிமன்ற தலைவர் சங்கரி, ஊராட்சி செயலர் செல்வம், ஒட்டப்பிடாரம் ஊராட்சிமன்ற தலைவர் இளையராஜா, அவைத் தலைவர் சுப்பிரமணியன், ஆரைக்குளம் கிளைச் செயலாளர்கள் பால முருகன், நிறைய பூபதி, கிளை பிரதிநிதி சமுத்திரவேல், முருகன், ஓசநூத்து கிளை செயலாளர் சண்முகம், புதியம்புத்தூர் கிளைச் செயலாளர்கள் சற்குணபாண்டி, பாலகுருசாமி, கிருஷ்ணசாமி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்
    • பேரட்டி ஊராட்சியில் சுமார் ரூ.1.57 கோடி மதிப்பில் பணிகள் நடைபெறுவதாக பேட்டி

    ஊட்டி, 

    சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன், பர்லியார் ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.16.72 லட்சம் மதிப்பில் கரன்சி அங்கன்வாடிமைய கட்டிடம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.16.87 லட்சம் மதிப்பில் பர்லியார் ரேஷன் கடை ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.

    தொடர்ந்து கரன்சி பகுதியில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.2 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிட தடுப்புச்சுவர், வண்டிச்சோலை ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1.01 கோடி மதிப்பில் சோலாடாமட்டம் சாலைப்பணிகள், பேரட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.1.61 லட்சம் மதிப்பில் நூலக சீரமைப்பு பணி, எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கல்குழி கிணறு, எடப்பள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.10.95 லட்சம் மதிப்பில் இந்திரா நகர் பகுதியில் சேமிப்பு கிடங்கு, ஆரக்கொம்பையில் ஜல்ஜுவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.12.12 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் என ரூ.1.35 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட்டார்.

    பேரட்டி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின்கீழ் ரூ.5.43 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளி சமையல்கூடத்தை திறந்து வைத்த அமைச்சர், ஊராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் ரூ.7.2 லட்சம் மதிப்பில் கழிவுகள் சேகரிக்கும் பிக்-அப் வாகனத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஸ்ரீமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டம் கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக நடந்து வருகிறது. இதன்மூலம் அங்கு படிக்கும் 1-5-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை மேற்கொள்ளும் வகையில் பேரூராட்சி, ஊராட்சியின் பல்வேறு பகு திகளில் வளர்ச்சி த்திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.குன்னூர் தாலுகா, உலிக்கல் பேரூராட்சி மற்றும் மேலூர், உபதலை, பர்லியார், எடப்பள்ளி, வண்டிச்சோலை, பேரட்டி ஆகிய ஊராட்சி ப்பகுதிகளில் வளர்ச்சித்தி ட்டப்பணிகளை ஆய்வு செய்து அங்கு பணிகள் தரமாக நடக்கிறதா என்பதை பார்வை யிட்டோம்.குன்னூர் அடுத்த பேரட்டி ஊராட்சியில் சுமார் ரூ.1.57 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின் போது மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், குன்னூர் தாசில்தார் கனிசுந்தரம், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மோகனகு மாரமங்கலம், ஆறுமுகம், பர்லியார் ஊராட்சி தலைவி சுசீலா, பேரட்டி ஊராட்சி தலைவர் ஜெகதீசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஸ்ரீராமபுரம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.10 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டிடப்பணிகளை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.
    • சுகாதா ரத்துறை, போக்குவரத்து த்துறை, கூட்டுறவுத்துறை, கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள பணியிட ங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் பேசினார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே ஸ்ரீராமபுரம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.10 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டிடப்பணிகளை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார். கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். வேலுச்சாமி எம்.பி. முன்னிலை வகித்தார்.

    ஸ்ரீராமபுரம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட செட்டியபட்டி யில் தமிழ்நாடு நக ர்ப்புற மேம்பாட்டு த்திட்டத்தில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி, போளியம்ம னூரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக பேவர்பிளாக் கல் பதிக்கும் பணி, திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுமான பணிகள் என மொத்தம் ரூ.4.10 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது அமைச்சர் பேசியதாவது:-

    தமிழக மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்ப டுத்தப்ப ட்டு வருகின்றன. பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான குடிநீர், சுகாதாரம், வகுப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. திருமலைரா யபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது நபார்டு திட்டத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிக்கு இன்னும் தேவையான வசதிகள் செய்து தரப்படும்.

    கருணாநிதி முதலமை ச்சராக இருந்தபோது, போளி யம்மனூரில் முதன்முறை யாக சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. தற்போது கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக பேவர்பிளாக் கல் பதிக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களுக்குத் தேவையான கல்வி வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் வாயிலாக சாலை மேம்பாட்டுப் பணிகள் மே ற்கொள்ளப்பட்டு வருகி ன்றன. முதல்-அமைச்சர் கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 10,000 கி.மீட்டர் துாரம் சாலைகள் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுக்காக ரூ.180 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கிராமப்புறங்களில் மின் வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்ந்து நிறை வேற்றப்பட்டு வருகின்றன. நான் கூட்டுற வுத்துறை அமைச்சராக இருந்தபோது கூட்டுறவுத்துறையில் 7000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் தகுதியின் அடிப்படையில் 180 பணி நியமனங்கள் மே ற்கொ ள்ளப்பட்டு, காலிப்பணி யிடங்கள் பூர்த்தி செய்ய ப்பட்டன. சுகாதா ரத்துறை, போக்குவரத்து த்துறை, கூட்டுறவுத்துறை, கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள பணியிட ங்கள் விரைவில் நிரப்பப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    • மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
    • உடனடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முழுக்கவனம் எடுத்து தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    தமிழக மக்களின் நலனுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மக்களுக்கு தேவையான திட்டங்களை உடனடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முழுக்கவனம் எடுத்து தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.7.02 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் 2 எம்.எல்.டி கொள்ளளவு கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் குறித்தும், ரூ.30.14 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர்த்திட்ட பணிகள் குறித்தும், ரூ.177.69 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நொய்யல் ஆறு மேம்பாடு மற்றும் பொழுது போக்கு வசதிகள் செய்யும் பணிகள் குறித்தும், 54.36 கோடி மதிப்பீட்டில் மாநாட்டு அரங்கப்பணிகள் குறித்தும், ரூ.30.28 கோடி மதிப்பீட்டில் தினசரி சந்தை மேம்படுத்துதல் பணிகள் குறித்து என மொத்தம் ரூ.299.49 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து இந்த ஆய்வு கூட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

    இதில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், செல்வராஜ் எம்.எல்.ஏ, மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • வளர்ச்சி திட்டபணிகளை ஆணையாளர் பிரவீன்குமார் ஆய்வு செய்தார்.
    • மாமன்ற உறுப்பினர் ராதிகா, சுகாதார அலுவலர் ராஜ் கண்ணன், சுகாதார ஆய்வாளர் அலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை கிழக்கு மண்டலம் 8-வது வார்டில் தாகூர் நகர், ஆர்.ஆர்.நகர், கம்பர் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் 8-வது வார்டு சந்தானம் நகர் மெயின் தெருக்கள், 11-வது வார்டு ஜி.ஆர்.நகர் 5, 6-வது தெருக்க ளில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் முடிவடைந்துள்ள தார் சாலை பணிகள், சந்தானம் நகர் உள் தெருக்கள், மெயின் கிழக்கு தெருக்களில் ரூ.1.91 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப் பட்டுள்ள தார் சாலைப்பணிகள் என மொத்தம் ரூ.5.73 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை ஆணையாளர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து மாட்டுத்தாவணி சர்வேயர் காலனி மெயின் சாலையில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் திருப்பாலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆணையாளர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர் காளிமுத்தன், செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி, உதவி செயற்பொறி யாளர்கள் ஆரோக்கிய சேவியர், முருகேச பாண்டியன், உதவிப்பொறியாளர் முருகன், மாமன்ற உறுப்பினர் ராதிகா, சுகாதார அலுவலர் ராஜ் கண்ணன், சுகாதார ஆய்வாளர் அலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு திட்டப்பணிகள் குறித்து தொடா்ந்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகள் குறித்து துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூா், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்கள், ஊத்துக்குளி மற்றும் குன்னத்தூா் பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

    திருப்பூர் கலெக்டர அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா். கூட்டத்துக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து பேசியதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து தொடா்ந்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக திருப்பூா், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்கள், ஊத்துக்குளி மற்றும் குன்னத்தூா் பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில், 15-வது நிதிக்குழு மானியத்திட்டம், தமிழ்நாடு ஊரக கிராம சாலைகள் உட்கட்டமைப்புத் திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், ஊராட்சி ஒன்றிய பொதுநிதி திட்டம் மற்றும் பிரதான் மந்திரி கிராம சாலைகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    குடிநீா் விநியோகம், வடிகால், தெருவிளக்கு, சாலை, பொதுக் கழிப்பிடம், நியாய விலைக் கடை, சமுதாய நலக்கூடம், தொகுப்பு வீடுகள், பேருந்து மற்றும் நிழற்குடை, பள்ளிக் கட்டடம், சத்துணவு மையம், அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம், கால்நடை மருத்துவமனை, மயானம் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகள் குறித்து துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேற்கண்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டு கொண்டுவர வேண்டும் என்றாா்.

    ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மதுமிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி, திருப்பூா் மற்றும் ஊத்துக்குளி வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊத்துக்குளி மற்றம் குன்னத்தூா் பேரூராட்சி செயல் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • ரூ.47 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
    • கலெக்டர் ஆஷா அஜித் களஆய்வுகள் மேற்கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் அனைத்துத் துறைகளின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் லால்வேனா, கலெக்டர் ஆஷா அஜித் களஆய்வுகள் மேற்கொண்டனர்.

    பி்னனர் கலெக்டர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் பணிகள் தொடர்பாகவும்இ பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அனைத்துப் பகுதிகளிலும் மேம்படுத்தும் விதமாகவும்இ நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாகஇ தொடர்ந்து களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சருகணியாறு வடிநிலக்கோட்டத்தின் மூலம் அன்னியேந்தல் கிராமத்தில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டிக்குளம் பகுதியில் ரூ.3060 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அணைக்கட்டு கட்டும் பணிகள் தொடர்பாகவும், ரூ.1686.37 லட்சம் மதிப்பீட்டில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் அணைக்கட்டு பணிகளை, சிவகங்கையில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண் சந்தையில் அங்குள்ள நடைபெற்ற ஏலம் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் செயல்பாடுகள், செயல்படுத்தப்பட்டு வரும் சாலைப்பணி, ரூ.13.20 லட்சம் மதிப்பீட்டில் மறவமங்கலத்தில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் ஊரணி, மேலமருங்கூர் கிராமத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் ஆகியன தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் காரைக்குடியில் நகராட்சிஇ நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள்இ மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணிகளையும்இ கழனிவாசலில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மகளிர் கல்லூரி மாணவிகள் விடுதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில்இ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், செயற்பொறியாளர் (சருகனியாறு வடிநிலக்கோட்டம்) பாரதிதாசன், துணை இயக்குநர் (சுகாதாரம்) விஜய்சந்திரன், துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) தமிழ்செல்வி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகணேஷ், ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு மாணவர் விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சண்முகையா எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
    • சவலாபேரி அரசு மேல்நிலைபள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சண்முகையா எம்.எல்.ஏ., கலந்து கொண்டார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட கீழக்கோட்டை, கலப்பை பட்டி ஆதிய பஞ்சாயத்து பகுதிகளில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை மற்றும் பாலம் அமைத்தல் பணிகள் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்க விழா நடைபெற்றது.

    இதில் சண்முகையா எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் கயத்தாறு தாசில்தார் நாகராஜன், ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் (கிராம ஊராட்சி), உதவி பொறியாளர் ரவி, பணி மேற்பார்வையாளர் சங்கர், வி.ஏ.ஓ. கணேசன், கூட்டுறவு சங்கத் தலைவர் சுடலைமுத்து, ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி, பஞ்சாயத்து தலைவர்கள் சண்முகசுந்தரி தங்கராஜ், கீழக்கோட்டை சதீஷ்குமார், கொடியங்குளம் அருண்குமார், கிளை செயலாளர் முருகன், கோமதி, மாவட்ட நலக்குழு உறுப்பினர் பெரியதுரை, பிரதிநிதி ஜோசப் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அப்பகுதிகளில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்ப பதிவு முகாம்களை சண்முகையா எம்.எல்.ஏ. பார்வையிட்டார். பின்னர் கே. கைலாசுபுரம் அரசு மாணவர் விடுதியை பார்வையிட்டு அங்கு வழங்கப்படும் மதிய உண வின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

    இதனையடுத்து புளி யம்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்துக்கு சென்று ஆய்வு நடத்தினார். தொடர்ந்து புளியம்பட்டியை அடுத்துள்ள சவலாபேரி அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சண்முகையா எம்.எல்.ஏ., 55 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கிப் பேசினார்.

    ×