search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலுவலர் ஆய்வு"

    • வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • குழந்தைகள் மருத்துவமனையின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறைகளை சார்ந்த முதல் நிலை அலுவலர்களுடன் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லால்வேனா, கலெக்டர் ஆஷா அஜித் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    கூட்டத்தில் ஒவ்வொரு துறைகளின் சார்பில் இதுவரை மேற்கொண்ட திட்டப்பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தேவை யான நிதி நிலைகள் ஆகியன தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் எடுத்து ரைத்து, அவைகள் தொடர் பான விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

    முன்னதாக திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய வற்றின் செயல்பாடுகள், ரூ.472.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அலுவலக கட்டுமான பணிகள், நெடுமரம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பனை ஓலை பயிற்சி மையம், தி.வைரவன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் செயல்பாடுகள், அரசனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடு கள் ஆகியன குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு செய்தனர்.

    மேலும் மக்களை தேடி மருத்துவ திட்ட பயனாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.

    பின்னர் சிவகங்கை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்து வமனையின் செயல்பாடு களையும் ஆய்வு செய்தனர்.

    • சென்னிமலை வட்டார பகுதியில் மாம்பழ குடோன்கள், கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • வியாபாரிகள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    சென்னிமலை:

    தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர் உத்தரவின்படியும், ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலரின் அறிவுறுத்துதலின் படியும் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாம்பழ குடோன்கள், மொத்த மாம்பழ விற்பனை கடைகள், சிறிய மாம்பழ கடைகள் மற்றும் பழ குடோன்களில் செயற்கை முறையில் ரசாயனம் மற்றும் கார்பைட் கற்கள் பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் சென்னிமலை வட்டார பகுதியில் செயல்பட்டு வரும் மாம்பழ குடோன்கள், மொத்த விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் ஆய்வு செய்தார்.

    அப்போது ரசாயனம் மற்றும் கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 30 கிலோ அளவுள்ள மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

    மேலும் பழ வியாபாரிகளிடம் செயற்கை முறையில் ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுவதால் அந்த பழங்களை சாப்பிடும் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் என்றும், வியாபாரிகள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன் படி சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

    • காரியாபட்டி அருகே அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.96 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட நூலக கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும், அரசு பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலு வலர்- மாற்றுத்தி றனாளி நலத்துறை செயலாளர் ஆனந்த்குமார், கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் பி.புதுப்பட்டி ஊராட்சியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்ப டும் உணவு மற்றும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்து மாணவர்களு டன் அமர்ந்து சாப்பிட்டனர்.

    பி.புதுப்பட்டி ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் பி.புதுப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.96 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட நூலக கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பி.புதுப்பட்டி ஊராட்சி யில், துணை சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து மருந்துகளின் இருப்பு குறித்தும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் மருந்துகள், வழங்கப்படும் சிகிச்சைகள், மருத்துவர்களின் வருகை குறித்தும், நாய்க்கடி மூலம் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் கேட்டறிந்தனர். மின் ரத்த அழுத்தம் கண்டறியும் கருவியில் மறுமுறை சார்ஜ் செய்யும் வசதி உள்ள மின்கலத்தை பயன்படுத்துமாறு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

    காரியாபட்டி வட்டம் கம்பிக்குடி ஊராட்சி மந்திரிஓடை கிராமத்தில் நரிக்குறவர் காலனியில் வசிக்கும் 54 குடும்பங்களுக்கு ரூ.3.19 கோடி மதிப்பில், வீடுகள் கட்டுப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து அந்த பணிகளை விரைவாகவும், தரமாகவும், முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

    காரியாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஆய்வகத்தில் மாணவர்கள் செய்முறை தேர்வு செய்து வருவதை பார்வையிட்டு பழுதடைந்த கட்டிடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

    பி.புதுப்பட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் உயரம், எடை, குழந்தைகளின் வருகைப் பதிவேடு மற்றும் அங்குள்ள சமையலறை ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை)தண்டபாணி, செயற்பொறியாளர் சக்தி முருகன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) யசோதாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முக பிரியா, சிவகுமார், வட்டாட்சியர் விஜயலட்சுமி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • சிவகங்கை மாணவர் விடுதியில் வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.
    • ஆய்வின்போது மாணவர்களின் வருகை பதிவேடு, வரவு-செலவு கணக்குகள் முதலியவற்றை பார்வையிட்டார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது மாணவர்களின் வருகை பதிவேடு, வரவு-செலவு கணக்குகள் முதலியவற்றை பார்வையிட்டார். மேலும் உணவுகள் பற்றிய விவரங்கள், மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகள் முதலியவற்றை நேரில் பார்வையிட்டு மாணவர்களின் வருகை குறித்து காப்பாளரிடம் கேட்டறிந்தார்.

    அப்போது வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

    • வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.
    • கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி முன்னிலை வகித்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அரசின் முன்னோடி திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் முதன்மை செயலாளருமான டாக்டர் பீலா ராஜேஷ் தலைமை தாங்கினார். கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துறை வாரியாக நடந்து வரும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். மேலும் பொதுமக்களின் மனுக்கள் மீதும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் தொடர்பான பதிவேடுகளை டாக்டர் பீலா ராஜேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் சூளகிரி தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் துறை மூலம் பட்டா, சிட்டா, முதியோர் உதவி தொகை, புதிய மின்னணு குடும்ப அட்டை, சான்றிதழ்கள் வழங்கும் பணிகளையும், பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கூடுதல் கலெக்டர் வந்தனாகார்க், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு சிறப்பு செயலருமான எம்.கருணாகரன் ஆய்வு மேற்கொண்டாா்.
    • விரும்பம்பள்ளத்தில் ரூ.2.67 லட்சம் மதிப்பீட்டில் தாா் சலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தாா்.

    காங்கயம் : 

    காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.9.88 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு சிறப்பு செயலருமான எம்.கருணாகரன் ஆய்வு மேற்கொண்டாா்.

    இதில் படியூா் ஊராட்சி சத்யா நகரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் சாா்பில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம், காங்கயம் நகராட்சியில் நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் ரூ.9.62 கோடி மதிப்பீட்டில் வாரச் சந்தையில் புதிய கடைகள் கட்டுமானப் பணிகள், விரும்பம்பள்ளத்தில் ரூ.2.67 லட்சம் மதிப்பீட்டில் தாா் சலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தாா்.

    இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டாா்.பின்னா் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் நடைபெற்ற கல்விக் கடன் முகாமில் 73 பேருக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளுக்கான ஆணைகளை வழங்கினாா்.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லட்சுமணன், சமூக நல அலுவலா் அம்பிகா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

    • சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • ரூ.17.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன், காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம், தேவகோட்டை யூனியன், கண்ணங்குடி யூனியன், ஆகிய பகுதிகளில் நடைபெறும் பல்வேறு பணிகள் தொடர்பாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வேனா, கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் திருப்புவனம் அரசு மருத்துவமனை மற்றும் பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய வற்றில் புற நோயாளிகள் பிரிவு, தாய்-சேய் நலப்பி ரிவு, மருந்தகம், மருந்துகளின் இருப்பு மற்றும் பராமரிப்புப் பதிவேடு, தேவையான மருந்துகளின் எண்ணிக்கை மற்றும் ஊசிபோடும் அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவ லகத்தின் செயல்பாடுகள், தேவகோட்டை யூனியன், வீரை ஊராட்சி, கைக்குடி நடுநிலைப்பள்ளியில் ரூ.4.96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமையல் அறைக்கூடம் மற்றும் ரூ.17.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    கண்ணங்குடி கிராமத்தில் ரூ.7.36 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணியையும், கண்டியூர் ஊராட்சி, வலையன்வயல், கீழக்குடியிருப்பில் ரூ.4.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு மேற்கொண்டனர்.

    • கோரிக்கை மனுக்கள் அளித்தனர்
    • ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விரைவில் பவளவிழா நடைபெறுவதற்கான பல்வேறு ஏற்பாடுகள் முன்னாள் மாணவர்கள் சார்பாக செய்யப்பட்டு வருகிறது.

    விளையாட்டு மைதானத்தில் விளை யாட்டரங்கம் அமைப்பு தொடர்ச்சியாக அமைச்சர் எ.வ.வேலு, கலெக்டர் முருகேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆகியோரிடம் ஏற்கனவே கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து நேற்று

    மாலை, திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் பாலமுருகன் பள்ளிக்கு வருகை தந்து, பள்ளி விளையாட்டு மைதானத்தையும், காலியாக உள்ள இடத்தையும் பார்வையிட்டார்.மேலும் விளையாட்டு மைதானத்தை மற்றும் ஒருங்கிணைந்த விளையாட்டு திடலுக்கு உரிய இடத்தையும் தேர்வு செய்தார்.

    இதற்கு பின்னர் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து விளக்கினார். கிராமப்புற மாணவர்கள் மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற தமது ஆர்வத்தை தெரிவித்தார். பள்ளி சார்பாகவும், முன்னாள் மாணவர் சங்கம் சார்பாகவும் சால்வை அணிவித்து பாராட்டினர்.

    • ஆய்வு அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறையிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளார்.
    • கும்பாபிஷேகம் நடத்த வேண்டிய நிலையில் உள்ள கோயில்களை ஆய்வு மேற்கொண்டார்.

    வெள்ளகோவில்.அக்.12-

    திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளக்கோயில் பகுதியில் கரூர் மற்றும் திருப்பூர் மாவட்ட தொல்லியல் துறை ஆலோசகர் அர்ச்சுனன், மிகவும் பழமையான கோவில்கள், கும்பாபிஷேகம் நடத்த வேண்டிய நிலையில் உள்ள கோயில்களை ஆய்வு மேற்கொண்டார். அந்த வகையில் வெள்ளகோவில் அருகே உள்ள புதுப்பை அங்காளம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் ஆய்வு அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறையிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளார்.

    • ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
    • அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டுரங்கில் அனைத்து துறைகளின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை தனிச்செயலாளர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சம்பத் தலைமை வாங்கினர்.

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து துறை வாரியாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கேட்டறிந்தார்.

    மேலும் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கி நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கவும் அரசிடமிருந்து ஏதேனும் காலதாமதங்கள் இருந்தால் அதனை உடனடியாக தன்னுடைய பார்வைக்கு கொண்டு வரவும் உத்தரவிட்டார்.பொதுமக்களுக்கு அரசு திட்டங்கள் உடனுக்குடன் கிடைக்க அனைத்து துறை அலுவலர்களும் திறம்பட செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், திட்ட இயக்குனர் லோகநாயகி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் குபேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • ரூ.1.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடம்

    கரூர்:

    வெள்ளியணை, மண்மங்கலம், புகழூர் ஆகிய பகுதிகளில் நேற்று ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து தமிழக அரசின் கைத்தறித்துறை ஆணையரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான டி.பி.ராஜேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் முன்னிலை வகித்தார். கரூர் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளியணை ஊராட்சி பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடம் பணிகளை பார்வையிட்டு கட்டிடத்தின் அளவு மற்றும் தரம் குறித்தும், வெள்ளியில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டிடங்களை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பாரமரிக்கும் பணிகளையும், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் கழிவுகளை மறுபயன்பாடு செய்ய சாலை அமைக்க மூலப்பொருட்கள் தயார் செய்யும் பணிகளையும் ஆய்வு செய்தார். பின்னர் மண்மங்கலம் பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டிடங்களை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்படும் பராமரிப்பு பணிகளையும், புகழூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலக செயல் முறைகள் குறித்த கோப்புகள் பராமரிப்புகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். பின்னர் புகழூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்."

    ×