search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "OFFICER INSPECTED"

    • சாலையின் தரம்
    • நான்கு வழி சாலையாக

    பல்லடம்: தமிழக நெடுஞ்சாலை துறையின் திருப்பூர் கோட்டத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் மாநில நெடுஞ்சாலை பல்லடத்திலிருந்து தாராபுரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பல்லடத்தில் இருந்து புத்தரச்சல் வரை 11.80 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இரு வழி சாலையை ரூ.115 கோடி மதிப்பீட்டில் நான்கு வழி சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும்பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையின் தரம் மற்றும் பணிகள் குறித்து திருப்பூர் கோட்ட கண்காணிப்பு பொறியாளர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது திருப்பூர் கோட்ட பொறியாளர் ரமேஷ் கண்ணா,பல்லடம் உதவி பொறியாளர் பாபு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • ரூ.1.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடம்

    கரூர்:

    வெள்ளியணை, மண்மங்கலம், புகழூர் ஆகிய பகுதிகளில் நேற்று ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து தமிழக அரசின் கைத்தறித்துறை ஆணையரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான டி.பி.ராஜேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் முன்னிலை வகித்தார். கரூர் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளியணை ஊராட்சி பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடம் பணிகளை பார்வையிட்டு கட்டிடத்தின் அளவு மற்றும் தரம் குறித்தும், வெள்ளியில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டிடங்களை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பாரமரிக்கும் பணிகளையும், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் கழிவுகளை மறுபயன்பாடு செய்ய சாலை அமைக்க மூலப்பொருட்கள் தயார் செய்யும் பணிகளையும் ஆய்வு செய்தார். பின்னர் மண்மங்கலம் பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டிடங்களை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்படும் பராமரிப்பு பணிகளையும், புகழூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலக செயல் முறைகள் குறித்த கோப்புகள் பராமரிப்புகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். பின்னர் புகழூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்."

    ×