search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீராமபுரம் பகுதியில் ரூ.4.10 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள்- அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்
    X

    ஸ்ரீராமபுரம் பேரூராட்சிக்குட்பட்ட திருமலைராயபுரம் அரசு பள்ளியில் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிகளுக்கு அமைச்சர் இ.பெரியசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அருகில் கலெக்டர் பூங்கொடி மற்றும் பலர் உள்ளனர்.

    ஸ்ரீராமபுரம் பகுதியில் ரூ.4.10 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள்- அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்

    • ஸ்ரீராமபுரம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.10 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டிடப்பணிகளை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.
    • சுகாதா ரத்துறை, போக்குவரத்து த்துறை, கூட்டுறவுத்துறை, கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள பணியிட ங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் பேசினார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே ஸ்ரீராமபுரம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.10 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டிடப்பணிகளை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார். கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். வேலுச்சாமி எம்.பி. முன்னிலை வகித்தார்.

    ஸ்ரீராமபுரம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட செட்டியபட்டி யில் தமிழ்நாடு நக ர்ப்புற மேம்பாட்டு த்திட்டத்தில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி, போளியம்ம னூரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக பேவர்பிளாக் கல் பதிக்கும் பணி, திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுமான பணிகள் என மொத்தம் ரூ.4.10 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது அமைச்சர் பேசியதாவது:-

    தமிழக மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்ப டுத்தப்ப ட்டு வருகின்றன. பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான குடிநீர், சுகாதாரம், வகுப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. திருமலைரா யபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது நபார்டு திட்டத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிக்கு இன்னும் தேவையான வசதிகள் செய்து தரப்படும்.

    கருணாநிதி முதலமை ச்சராக இருந்தபோது, போளி யம்மனூரில் முதன்முறை யாக சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. தற்போது கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக பேவர்பிளாக் கல் பதிக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களுக்குத் தேவையான கல்வி வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் வாயிலாக சாலை மேம்பாட்டுப் பணிகள் மே ற்கொள்ளப்பட்டு வருகி ன்றன. முதல்-அமைச்சர் கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 10,000 கி.மீட்டர் துாரம் சாலைகள் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுக்காக ரூ.180 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கிராமப்புறங்களில் மின் வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்ந்து நிறை வேற்றப்பட்டு வருகின்றன. நான் கூட்டுற வுத்துறை அமைச்சராக இருந்தபோது கூட்டுறவுத்துறையில் 7000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் தகுதியின் அடிப்படையில் 180 பணி நியமனங்கள் மே ற்கொ ள்ளப்பட்டு, காலிப்பணி யிடங்கள் பூர்த்தி செய்ய ப்பட்டன. சுகாதா ரத்துறை, போக்குவரத்து த்துறை, கூட்டுறவுத்துறை, கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள பணியிட ங்கள் விரைவில் நிரப்பப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×