search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore Government Hospital"

    • அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை வார்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
    • 3 தனி அறைகள், 12 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை வார்டு அமைக்கப்படுகிறது.

    கோவை

    குறைந்த கட்டணத்தில் தனியார் மருத்துவமனைக்கு இணையான மருத்துவ சேவையை வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை வார்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்து–வக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை வார்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், கட்டண சிகிச்சை வார்டு அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் கட்டண சிகிச்சை வார்டுக்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் ரூ.97 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது:-அரசு மருத்துவமனையில் அமைக்கப்படும் கட்டண சிகிச்சை வார்டு தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் செயல்படுத்தப்படும்.

    அரசு மருத்துவ மனையின் நூற்றாண்டு விழா கட்டிடத்தில், முதல் தளத்தில் கட்டண சிகிச்சை வார்டு அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.3 தனி அறைகள், 12 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை வார்டு அமைக்கப்படுகிறது. தனி அறைகள் பிரிவில் 2 அறைகளில் தலா 2 படுக்கைகளும், மற்றொரு அறையில் ஒரு படுக்கை வசதியும் ஏற்படுத்தப்படும்.

    12 படுக்கைகளுடன் கூடிய பொது சிகிச்சை வார்டில் தலா 6 படுக்கைகள் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. தனி அறைகள் மகப்பேறு சிகிச்சைக்காக மட்டும் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கட்டண சிகிச்சை வார்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மகளிர் தினத்தன்று பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் நல்ல முறையில் பிறந்ததால் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மகிழ்ச்சி அடைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.
    கோவை:

    கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாபு. தொழிலாளி. இவரது மனைவி சிந்து (வயது 26). இவர்களுக்கு கடந்த 1¾ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இதையடுத்து சிந்து கர்ப்பமானார். 3-வது மாதம் ஸ்கேன் பரிசோதனை செய்வதற்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். டாக்டர்கள் ஸ்கேன் செய்த போது அவருக்கு 3 கருக்கள் இருப்பதை கண்டு பிடித்தனர்.

    பின்னர் டாக்டர்கள் அவருக்கு சத்து மாத்திரைகள் வழங்கி உணவு சாப்பிடும் முறை குறித்து ஆலோசனை கூறினர். இதைத்தொடர்ந்து நிறைமாத கர்ப்பிணியான சிந்து கடந்த 2-ந் தேதி பிரசவத்துக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    பிரசவ வலியால் துடித்த சிந்துவுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக 4 பேர் கொண்ட டாக்டர் குழு அமைக்கப்பட்டது. அவர்கள், நேற்று சிந்துவுக்கு சிசேரியன் முறையில் அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்த்தனர்.

    காலை 9.23 மணியளவில் சிந்துவுக்கு அழகான 3 பெண் குழந்தைகள் பிறந்தன.

    அதில், 2 பெண் குழந்தைகள் தலா 1¾ கிலோ எடையும், ஒரு குழந்தை 1½ கிலோ எடையுடன் இருந்தது. தாய் மற்றும் குழந்தைகள் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    மகளிர் தினத்தன்று பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் நல்ல முறையில் பிறந்ததால் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மகிழ்ச்சி அடைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

    இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகன் கூறியதாவது:-

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரே பிரசவத்தில் தற்போது 3 குழந்தைகள் பிறந்து உள்ளது. அந்த பெண்ணுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

    இது குறித்து அந்த குழந்தைகளின் தந்தை சுரேஷ்பாபு கூறும்போது,

    மகளிர் தினத்தன்று ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் மிகவும் ஏழையான நான் 3 பெண் குழந்தைகளையும் எப்படி வளர்க்கப்போகிறேன் என்று தெரியவில்லை. எனவே அரசு எனக்கு உதவ வேண்டும் என்றார். #tamilnews
    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது. #Swineflu
    கோவை:

    கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சரவண மூர்த்தி. இவரது மனைவி நாகமணி(வயது 47).

    இவர் கடந்த சில நாட்களாக கடுமையான காயச்சலால் பாதிக்கப்பட்டார். கடந்த 1 வாரத்துக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு பரிசோதனை நடந்தது.

    இதில் நாகமணிக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

    கடந்த 2 மாதங்களில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 62 பேர் பலியாகி உள்ளனர். நாகமணியோடு சேர்த்து பலி எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது பன்றிக்காய்ச்சலுக்கு 48 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 4 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 56 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Swineflu

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மர்ம காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர். #Swineflu #Dengue
    கோவை:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பன்றி, டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் காய்ச்சலின் தாக்கம் குறையவில்லை.

    அரசு ஆஸ்பத்திரியில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கோவையில் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு தினசரி ஏராளமானோர் வருகின்றனர். இதனால் காய்ச்சல் வார்டுகளில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு பன்றி, டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என டாக்டர்கள் சோதனை செய்து அங்கு திறக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் கோவை வெள்ளலூரை சேர்ந்த நாகராஜ் (வயது 62). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவரது உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் நாகராஜின் ரத்தத்தை பரிசோதனை செய்தபோது அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து நேற்று இரவு நாகராஜை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காமால் இன்று அதிகாலை நாகராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இதே போல சுங்கம் பைபாஸ் ரோட்டை சேர்ந்த நாகமணி (45). இவர் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு திடீரென நாகமணியின் உடல் நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து அவரை உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வந்த 1 மணிநேரத்தில் நாகமணி பரிதாபமாக இறந்தார்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஆர். வேலூரை சேர்ந்தவர் நாகராஜ் (55). இவரும் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக நேற்று முன்தினம் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அவரை டாக்டர்கள் அங்குள்ள காய்ச்சல் வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு நாகமணி பரிதாபமாக இறந்தார்.

    தாராபுரத்தை அடுத்த கொண்டரசம்பாளையம் மாருதி நகரை சேர்ந்தவர் கார்த்திக். பனியன் தொழிலாளி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு சன்சியா(4) என்ற பெண் குழந்தை இருந்தது. இக்குழந்தைக்கு கடந்த மாதம் 18 -ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டதால் தாராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2 நாள் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் காய்ச்சல் குணமாகாததால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறுமியை பரிசோதித்தபோது பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று மதியம் சிகிச்சை பலன் இன்றி பலனின்றி இறந்தார். இதனால் கொண்டரசம்பாளையம் பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

    பலியான சன்சியாவின் பெற்றோருக்கு பன்றி காய்ச்சல் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கி அவர்களையும் டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 12 பேரும், டெங்கு காய்ச்சலக்கு 3 பேரும், மர்ம காய்ச்சலுக்கு 56 பேர் என மொத்தம் 71 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #Swineflu #Dengue
    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 2 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வைரஸ் காய்ச்சலுக்கு 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். #swineflu
    கோவை:

    கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பன்றி, டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதார துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பாலமநல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோருக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் சுகாதாரத்துறை சார்பில் பாலமநல்லூர் கிராமத்துக்கு மருத்துவ குழு அனுப்பபட்டது.

    மருத்துவ குழுவினர் முகாம் அமைத்து காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 30 துப்புறவு பணியாளர்கள் மூலமாக கிராமத்தில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு கரூரை சேர்ந்த 69 வயது முதியவர், ஈரோட்டை சேர்ந்த 9 வயது சிறுமி ஆகிய 2 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறப்பு வார்டில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    வைரஸ் காய்ச்சலுக்கு 35 பேரும் என மொத்தம் 37 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தினசரி ஏராளமானோர் காய்ச்சல் பாதிப்புடன் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    தொடர்ந்து காய்ச்சல் ,சளி,இருமலுடன் இருப்பவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. இவர்களின் யாருக்காவது, டெங்கு, பன்றி காய்ச்சல் நோய் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. #swineflu
    கோவையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைது கழிவறை ஜன்னலை உடைத்து தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கோவை:

    சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகன் செல்வம் (வயது 30). இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    செல்வம் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஜெயிலில் இருந்த இவர் கடந்த 6-ந் தேதி கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த சிறை அதிகாரிகள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஜெயில் கைதிகள் வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    அங்கு இருந்த செல்வம் மீண்டும் கையை அறுத்து தற்கொலை செய்ய முயன்றார். இதனையடுத்து அவரை ஆஸ்பத்திரியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு வைத்து அவருக்கு கடந்த 2 நாட்களாக டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

    தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செல்வத்துக்கு பாதுகாப்பாக சரவணகுமார் என்ற போலீஸ்காரர் இருந்தார். இன்று அதிகாலை 5 மணியளவில் போலீஸ்காரரிடம் செல்வம் கழிவறைக்கு செல்வ வேண்டும் என்று கூறினார்.

    இதனையடுத்து போலீஸ்காரர் சரவணகுமார் கழிவறை செல்ல செல்வத்தை அனுமதித்தார். செல்வம் கழிவறைக்கு சென்று 15 நிமிடங்கள் ஆகியும் அவர் திரும்பிவரவில்லை.

    இதனால் போலீஸ்காரர் கழிவறை கதவை தட்டினார். ஆனால் கதவை செல்வம் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸ்காரர் கதவை உடைத்து கழிவறைக்கு சென்று பார்த்தார்.

    அப்போது கழிவறையில் செல்வம் இல்லை. கழிவறைக்கு சென்ற செல்வம் அங்கு இருந்த ஜன்னலை உடைத்து தப்பிச் சென்றது தெரிய வந்தது.

    அதிர்ச்சியடைந்த போலீஸ்காரர் சரவணகுமார் இது குறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சிறை அதிகாரிகள் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர். ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சிறைக்கைதி செல்வத்தை தேடி வருகிறார்கள்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி போலீஸ்காரரை ஏமாற்றி தப்பிச் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
    கோவை:

    கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

    இதற்காக அவரை அவரது பெற்றோர் அந்த பகுதியில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் மாணவியை சோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து மாணவி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    மேலும் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 8 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு கோவை, திருப்பூரை சேர்ந்த 5 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் நல்ல மழை பெய்தது. தற்போது மழை ஓய்ந்த நிலையில் பகலில் வெயிலும், இரவில் கடுமையான பனிப்பொழிவும் இருந்து வருகிறது.

    இந்த மாறுபட்ட காலநிலையால் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மாறுபட்ட காலநிலையால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி தற்போது டெங்கு காய்ச்சல் கோவை மாவட்டத்தில் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் கோவையை சேர்ந்த 4 பேரும், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 5 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதே போல கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலுக்கு 10 பேரும், எலி காய்ச்சலுக்கு ஒருவரும் ஏற்கனவே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


    கோவை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தல்காரர்கள் என கருதி பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை அரசு ஆஸ்பத்திரியின் புதிய கட்டிடத்தில் 3-வது மாடியில் குழந்தைகள் நலப்பிரிவு உள்ளது. இந்த வார்டு பகுதியில் இன்று காலை 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமாக திரிந்தனர். அங்கு மிங்குமாக சிறிது தூரம் சுற்றிய இருவரின் நடவடிக்கைகள் அங்கிருந்த பொதுமக்களுக்கு சந்தேகத்தை அதிகரித்தது.

    அவர்கள் இருவரும் குழந்தைகளை கடத்த வந்திருப்பதாக வார்டில் இருந்தவர்கள் கருதினர். இதையடுத்து 2 வாலிபர்களையும் மடக்கிப் பிடித்து அவர்களிடம் நீங்கள் யார்? இங்கு உங்களது உறவினர்கள் யார் தங்கியிருக்கிறார்கள்? எதற்காக இங்கு சுற்றுகிறீர்கள்? என கேட்டனர்.

    அதற்கு இரு வாலிபர்களும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதுகுறித்து பொதுமக்கள் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்ற போலீசார் 2 வாலிபர்களையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் ஒருவர் மதுரையை சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் கோவையை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. எதற்காக ஆஸ்பத்திரிக்குள் சுற்றினர்? என போலீசார் கேட்ட போது, உரிய பதிலை கூறவில்லை.

    இதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தே.மு.தி.க. பொது செயலாளர் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவையொட்டி கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 7 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. #HBDCaptainVijayakanth

    கோவை, ஆக.25-

    தே.மு.தி.க. பொது செய லாளர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா இன்று கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் சிறப்பாக கொண்டா டப்பட்டது.

    இதையொட்டி புலியகுளம் முந்தி விநாயகர்கோவிலில் சிறப்பு பூஜை, புனித அந்தோ ணியார் ஆலயத்தில் பிரார்த் தனை, தொழிற்சங்கம் சார்பில் சி.டி.சி. டெப்போ அருகில் கொடி யேற்று விழா, அன்ன தானம் வழங்குதல், ஜங்கில்பீர் தர்காவில் தொழுகை நடந்தது.

    தொடர்ந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிறந்த 7 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப் பட்டது. மேலும் உள்நோயா ளிகளுக்கு பழம், பிஸ்கெட் வழங்கினர். பின்னர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடி னர். இதைத்தொடர்ந்து 40-வது வார்டில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடந் தது. நிகழ்ச்சிகளுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் காட்டன் ஆர்.செந்தில் தலைமை தாங்கினார். மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் சிங்கை சந்துரு, அவை தலைவர் கேசவன், பொருளாளர் லிங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்த ராஜ், பொன்ராஜ், ஆனந்த குமார், வனிதா துரை,

    செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியம், பழனி, பகுதி செயலாளர்கள் சர்தார் என்ற ஜாகீர் உசேன், தண்டபாணி, ஆனந்தக்குமார், முத்து குமார், பன்னீர்செல்வம், தீனதயாளன், பொதுக்குழு உறுப்பினர் பாக்ஸ் மூர்த்தி, வர்த்தக அணி கார்த்திசன், மாணவரணி வினோத் உள்பட பலர் கலந்து கொண் டனர்.

    இன்று மாலை 6 மணிக்கு காந்தி பார்க் பால தண்டபாணி கோவிலில் தங்கத்தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நிபா வைரஸ் காய்ச்சலுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. #nipahvirus
    கோவை:

    கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் காய்ச்சலுக்கு 10 பேர் பலியாகி உள்ளனர். காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்த மாவட்டங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் நிபா வைரஸ் காய்ச்சல் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நிபா வைரஸ் காய்ச்சலுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.



    இது குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அசோகன் கூறியதாவது:-

    நிபா வைரஸ் காய்ச்சல் என்பது நிபா வைரசால் பாதிக்கப்பட்ட பழந்தின்னி வவ்வால் மற்றும் பன்றிகள் மூலம் மனிதனுக்கு பரவுகிறது. இந்த காய்ச்சல் 1998-ம் ஆண்டு மலேசிய நாட்டில் உள்ள நிபா என்ற பகுதியில் இருந்து பரவியதால் நிபா என்று அழைக்கப்படுகிறது.

    நிபா வைரசால் பாதிக்கப்பட்ட பழந்தின்னி வவ்வாலின் எச்சம், சீறுநீர் மூலமும் பன்றிகள் மூலமும் மனிதனுக்கு பரவுகிறது. டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை போல இந்த காய்ச்சல் வேகமாக பரவாது.

    நிபா வைரசால் பாதிக்கப்பட்ட வவ்வாலின் எச்சம், சீறுநீர் மனிதனின் உடலில் படும்போது இது பரவுவது இல்லை. மாறாக வவ்வாலின் எச்சம் மற்றும் சீறுநீர் உணவு பொருள் மற்றும் தண்ணீர் மீது படும்போது அதனை மனிதன் தெரியாமல் சாப்பிடுவதால் பரவுகிறது. எனவே பொது மக்கள் தேவையில்லாமல் பீதியடைய வேண்டாம்.

    நிபா வைரசுக்கு இதுவரை மருந்துகள் கண்டு பிடிக்கப்படவில்லை. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் அளவுக்கு அதிகமான வெப்பம், மற்றும் கடுமையான தலைவலி ஏற்படும். பின்னர் ரத்த அழுத்தம் அதிகமாகி மூளையை பாதித்து மரணம் ஏற்படும்.

    இவ்வாறான அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும். நிபா வைரசுக்கு மருந்து இல்லாததால் ஆரம்ப கால கட்டத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் போது டாக்டர்கள் காய்ச்சலை கட்டுபடுத்த மருந்து கொடுப்பார்கள். இதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக குணம்பெறலாம்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு அமைக்கப்பட்டுள்ளதை போல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிபா வைரஸ் காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் நோயாளிகளை கண்காணிக்க டாக்டர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். எனவே நிபா வைரஸ் பாதிப்பு உள்ளவர் சிகிச்சை பெற்று குணம்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #nipahvirus


    ×