search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை அரசு ஆஸ்பத்திரி"

    • கோவை அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தையை தூக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • ஆரோக்கியமேரியை அவரது தாயாரிடம் ஒப்படைத்து, இனி இவ்வாறு நடக்காமல் பார்த்து கொள்ளும்படி அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.

    கோவை:

    கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பிரசவ வார்டு உள்ளது. இங்கு பிரசவத்திற்காக கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    கோவையை அடுத்த அன்னூரை சேர்ந்த பெண்ணிற்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று மதியம் அந்த ஆண் குழந்தையை தொட்டிலில் வைத்து விட்டு அந்த பெண் வெளியே சென்றார்.

    அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் திடீரென்று அந்த பச்சிளம் ஆண் குழந்தையை தூக்கிக் கொண்டு வேகமாக வெளியே செல்ல முயன்றார். இதை பார்த்து சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி காவலாளிகள், அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

    அவர்களிடம் அந்த பெண், அந்த குழந்தை தன்னுடையது என கூறியுள்ளார். இதனிடையே வெளியே சென்ற குழந்தையின் தாய் திரும்பி வந்தார். அவர், தொட்டிலில் குழந்தை இல்லாததால் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.

    மேலும் அங்கிருந்த மருத்துவ பணியாளர்களிடம் தனது குழந்தையை காணவில்லை என்று கூறினார். இதை அறிந்த காவலாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் விரைந்து செயல்பட்டு தீவிரமாக தேடி குழந்தையை தூக்கி சென்ற அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் முன்னுக்குப்பின் முரணாக தகவலை தெரிவித்தார். சந்தேகம் அடைந்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரித்தனர். அதில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

    அந்த பெண்ணை சுற்றி போலீசார் மற்றும் பொதுமக்கள் நிற்பதை பார்த்து ஒரு மூதாட்டி ஓடி வந்தார். அவர் போலீசாரிடம் அந்த பெண் எனது மகள் எனவும் தாங்கள் கோவை உடையாம்பாளையத்தை சேர்ந்தவர்கள், எனது மகள் பெயர் ஆரோக்கியமேரி (வயது 32) என்றும், அவர் கடந்த 15 வருடமாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.

    மேலும் அவர் நேற்று ஆஸ்பத்திரியில் ஒரு தாய் தனது குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டு இருந்த போது அவரிடம் சென்று அந்த குழந்தை தன்னுடையது என கூறி அவரிடம் இருந்து குழந்தையை பிடுங்க முயற்சி செய்து உள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் ஆரோக்கியமேரி துரத்தி விட்டுள்ளனர்.

    அதன்பின்னர் தான் அவர் பிரசவ வார்டில் உள்ள குழந்தையை தூக்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆரோக்கியமேரியை அவரது தாயாரிடம் ஒப்படைத்து, இனி இவ்வாறு நடக்காமல் பார்த்து கொள்ளும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தையை தூக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை வார்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
    • 3 தனி அறைகள், 12 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை வார்டு அமைக்கப்படுகிறது.

    கோவை

    குறைந்த கட்டணத்தில் தனியார் மருத்துவமனைக்கு இணையான மருத்துவ சேவையை வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை வார்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்து–வக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை வார்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், கட்டண சிகிச்சை வார்டு அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் கட்டண சிகிச்சை வார்டுக்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் ரூ.97 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது:-அரசு மருத்துவமனையில் அமைக்கப்படும் கட்டண சிகிச்சை வார்டு தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் செயல்படுத்தப்படும்.

    அரசு மருத்துவ மனையின் நூற்றாண்டு விழா கட்டிடத்தில், முதல் தளத்தில் கட்டண சிகிச்சை வார்டு அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.3 தனி அறைகள், 12 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை வார்டு அமைக்கப்படுகிறது. தனி அறைகள் பிரிவில் 2 அறைகளில் தலா 2 படுக்கைகளும், மற்றொரு அறையில் ஒரு படுக்கை வசதியும் ஏற்படுத்தப்படும்.

    12 படுக்கைகளுடன் கூடிய பொது சிகிச்சை வார்டில் தலா 6 படுக்கைகள் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. தனி அறைகள் மகப்பேறு சிகிச்சைக்காக மட்டும் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கட்டண சிகிச்சை வார்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போதை பழக்கத்துக்கு அடிமையாகி சிகிச்சைக்காக போதை ஒழிப்பு மையத்தில் அனுமதிக்கப் படுபவர்களுக்கு குறைந்தபட்சம் 15 முதல் 30 நாள்கள் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    • போதை ஒழிப்பு மையம் விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய பொலிவுடன் பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.

    கோவை:

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளித்து மீண்டும் புது வாழ்வை மீட்டெடுக்கும் வகையில் போதை ஒழிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், ஆலோசனைகள், வழிகாட்டல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மூலம் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் மீட்கப்படுகின்றனர்.

    இந்நிலையில் கோவையில் போதை பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் போதை ஒழிப்பு மையத்தை விரிவாக்கம் செய்ய ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

    இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது:-

    போதை பழக்கத்துக்கு அடிமையாகி சிகிச்சைக்காக போதை ஒழிப்பு மையத்தில் அனுமதிக்கப் படுபவர்களுக்கு குறைந்தபட்சம் 15 முதல் 30 நாள்கள் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருந்துகளுடன், இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகள், யோகாசனம், தியானம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

    தினமும் மனநல ஆலோசகர் மூலம் கவுன்சிலிங் வகுப்புகளும் நடத்தப்படுகிறது. ஆரம்பத்தில் மிகவும் ஆக்ரோஷமாக நடந்துகொள்வார்கள் தொடர் பயிற்சியின் மூலம் அமைதியான மன நிலைக்கு திரும்புகின்றனர். தற்போது இந்த மையத்தில் 10-க்கும் குறைவானவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

    ஒரு மாதம் வரை தங்கி சிசிச்சைப் பெற வேண்டியுள்ளதால் பெரும்பாலானவர்கள் சிகிச்சைக்கு வர மறுக்கின்றனர். சிலர் பாதியிலே தப்பிக்கவும் முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு உரிய ஆலோசனைகள் அளிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தற்போது 10-க்கும் குறைவான படுக்கை வசதியுடன் செயல்படும் மையத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. படுக்கைகளின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கப்படும். மேலும் சிகிச்சை பெறுபவர்களை உற்சாகமாக வைத்துகொள்ளும் விதமாக தொலைக்காட்சி, விளையாடும் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

    தவிர டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். விரைவில் போதை ஒழிப்பு மையம் விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய பொலிவுடன் பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • உலகளவில் 63 நாடுகளில் குரங்கு அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது.
    • 15-க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

    கோவை:

    உலகளவில் 63 நாடுகளில் குரங்கு அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலத்தில் தலா ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குரங்கு அம்மை நோய் பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இந்தநிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பி ரமணியன், கோவையில் நேற்று ஆய்வு மேற்கொ ண்டார். கோவை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள குரங்கு அம்மை நோய் தடுப்பு கண்காணிப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அரவர் கூறுகையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் குரங்கு அம்மைக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு வார்டு அமைக்கப்பட உள்ளதாக கூறினார். அதன்படி கோவை அரசு ஆஸ்பத்திரியில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு வார்டு ஒன்று திறக்கப்பட்டு உள்ளது. 15-க்கும் மேற்பட்ட படுக்கைகள் அங்கு போடப்பட்டு தயார் நிலையில் உள்ளது. நோய் பாதிப்புக்கு ள்ளான வர்கள் வந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    கேரளா- தமிழகம் இடையே பொள்ளாச்சி, வாளையாறு உள்பட 13 இடங்களில் தரை மார்க்கமாக கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வந்து செல்வோரை சோதனை மையம் அமைத்து கண்காணித்து வருகிறார்கள். இங்கு முகங்களிலோ அல்லது முழங்கைக்கு கீழேயோ கொப்பளங்கள் வந்தால் அவர்களை உடனடியாக பரிசோதிப்பது என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

    ×