என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "employees suspended"

    • வார்டில் இருந்து வாகன நிறுத்துமிடம் நீண்ட தூரம் இருந்ததால் அவர் நடக்க முடியாது என்று கூறினார்.
    • ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தும் சக்கர நாற்காலி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    கோவை:

    கோவை அரசு தலைமை ஆஸ்பத்திரியில் தினமும் 5000 வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகிறார்கள். 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகள், உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஒவ்வொரு சிகிச்சை பிரிவுக்கும் சென்று நோயாளிகள் சிகிச்சை பெறவும், சிகிச்சை முடிந்த நோயாளிகள் வார்டுக்கு அழைத்துச் செல்லவும் அங்கு ஸ்ட்ரக்சர் மற்றும் சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் 70 வயதான தனது தந்தைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை அளிக்க வந்த அவரது மகன், தந்தைக்கு காலில் சிகிச்சை அளிக்கப்பட்டு கட்டு போடப்பட்டிருந்த நிலையில் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார். வார்டில் இருந்து வாகன நிறுத்துமிடம் நீண்ட தூரம் இருந்ததால் அவர் நடக்க முடியாது என்று கூறினார்.

    எனவே ஆஸ்பத்திரியில் சக்கர நாற்காலி வழங்கும்படி அவரது மகன் கேட்டுள்ளார். அப்போது ஊழியர்கள் அவரை காத்திருக்கும் படி கூறியுள்ளனர். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தும் சக்கர நாற்காலி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் அவரது மகன் தந்தையை தனது உடலில் சாய்த்துக் கொண்டு மேல் தளத்திலிருந்து இறங்கி கீழே வந்தார். பிறகு அவரை இழுத்தபடியே ஆஸ்பத்திரி வாசலில் நின்ற வாகனத்திற்கு கொண்டு சென்றார்.

    ஆஸ்பத்திரியில் சக்கர நாற்காலி வழங்கப்படாததால் தந்தையை மகன் தோளில் சாய்த்துக் கொண்டு இழுத்து சென்ற காட்சியை அங்கிருந்த சிலர் செல்போனில் படம் பிடித்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக அரசு மருத்துவக்கல்லூரி டீன் விசாரணை மேற்கொண்டார்.

    அதன்பேரில் ஊழியர்கள் எஸ்தர்ராணி, மணிவாசகம் ஆகிய 2 பேரை சஸ்பெண்டு செய்து அவர் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் 5 நாட்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரள அரசு போக்குவரத்து துறை, கடந்த 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை துறை ஊழியர்களிடம் சோதனை நடத்தியது.
    • அதிரடி நடவடிக்கை கேரள போக்குவரத்து துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு நடவடிக்கையாக மதுபோதையில் யாராவது பணிக்கு வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.

    இதன்பேரில் கேரள அரசு போக்குவரத்து துறை, கடந்த 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை துறை ஊழியர்களிடம் சோதனை நடத்தியது. அப்போது மது அருந்தியவர்கள், மதுபானம் வைத்திருந்தவர்கள் கண்டறியப்பட்டனர். அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 74 நிரந்தர ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 26 தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை கேரள போக்குவரத்து துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • யாராவது பணிக்கு வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு.
    • ஊழியர்கள் மீது மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு நடவடிக்கையாக மதுபோதையில் யாராவது பணிக்கு வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.

    இதன்பேரில் கேரள அரசு போக்குவரத்து துறை, கடந்த 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை துறை ஊழியர்களிடம் சோதனை நடத்தியது. அப்போது மது அருந்தியவர்கள், மதுபானம் வைத்திருந்தவர்கள் கண்டறியப்பட்டனர். அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 74 நிரந்தர ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 26 தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை கேரள போக்குவரத்து துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கேரள போக்குவரத்து துறையில் மதுபோதையில் பணியாற்றிய மேலும் 97 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். மேலும், 40 தற்காலிக ஊழியர்களும் பணி நீக்கம் செய்துள்ளனர்.

    கடந்த 14ம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்களிடம் பரிசோதனை நடைபெற்று வருகிறது. அதன் நடவடிக்கையாக, மதுபோதையில் பணியாற்றிய ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்தனர்.

    ஒடிசா மாநிலத்தில் பழங்குடியினருக்காக நடத்தப்படும் பள்ளி விடுதியில் தங்கியிருந்த 14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.#GirlDeliveredBaby
    புவனேஸ்வரம்:

    ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் தரிங்காபாடி என்ற இடத்தில் மாநில அரசின் பழங்குடியினர் மற்றும் கிராம வளர்ச்சித் துறை சார்பில் பழங்குடியினர் மாணவிகளுக்கான விடுதி நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த விடுதியில் அங்குள்ள சேவா ஆஷ்ரம் பள்ளியில் படிக்கும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவிகள் தங்கி உள்ளனர்.

    இவர்களில் 8-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி ஒருவர் நேற்று முன்தினம் இரவு விடுதியில் இருந்த நிலையில் திடீரென குழந்தை பெற்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகத்தினர் அந்த மாணவியையும், குழந்தையையும் இரவோடு இரவாக காட்டுக்குள் துரத்தி விட்டனர்.

    அந்த சிறுமி குழந்தையோடு காட்டுக்குள் தங்கி இருந்தார். இதை பார்த்த கிராம மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


    விடுதி மேற்பார்வையாளர்கள், சமையலாளர் உள்ளிட்ட 6 ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். மாணவி கர்ப்பத்துக்கு காரணம் அருகில் உள்ள கல்லூரியில் படிக்கும் 3-ம் ஆண்டு மாணவர் என்று தெரியவந்தது. அவரை கைது செய்துள்ளனர்.

    விடுதியில் இருந்த மாணவி எப்படி அந்த வாலிபரை சந்தித்தார் என்பது மர்மமாக உள்ளது. இதுபற்றி முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. #GirlDeliveredBaby
    ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, பணிக்கு வராத 24 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். #SrinagarEmployees #JKEmployeesSuspended
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் பிடிபி-பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க. திரும்ப பெற்றதையடுத்து, ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. துறை சார்ந்த நிர்வாகம் அனைத்தும் ஆளுநரின் கட்டுப்பாட்டின்கீழ், அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பிற்கு வந்துள்ளது. ஊழியர்களின் செயல்பாடுகளை உயர் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

    அவ்வகையில் இன்று ஸ்ரீநகர் துணை ஆணையாளர் உத்தரவின்பேரில் அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக நகர் முழுவதும் மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், முறைப்படி விடுப்பு எடுக்காமலும், முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமலும் பணிக்கு வராத 24 ஊழியர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    இந்த ஊழியர்கள் அனைவரின் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து மாவட்ட ரெட் கிராஸ் கமிட்டியின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கவும் துணை ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து அதிகாரிகளும் ஊழியர்களும் அலுவலகங்களுக்கு குறித்த நேரத்திற்கு  வரவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார். #SrinagarEmployees #JKEmployeesSuspended
    ×