search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prisoner escaped"

    • திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட கைதி திடீரென்று தப்பி ஓடினார்
    • திருப்பூர் பகுதியில் தீபன்ராஜ் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்ததையடுத்து அங்கு சென்ற தனிப்படையினர் கைது செய்தனர்

    திருச்சி:

    திருச்சி மத்திய சிறையில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். சிறையில் குற்றவாளிகள் நன்னடத்ததையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு விளையாட்டு, விவசாயம், மீன் வளர்ப்பது உள்ளிட்ட வேலைகளை சிறை அதிகாரிகள் கொடுத்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் கடந்த 2021-ம்ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த தீபன்ராஜ் (வயது 31) என்பவர், சிறுமியை கற்பழித்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் விசாரனைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.

    பின்னர் புதுக்கோட்டை கலெக்டரின் உத்தரவின் பேரில் தீபன்ராஜ் மீது 3 வழக்குகள் இருப்பதால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அவரும் சிறையில் தண்டனையை அனுபவித்து வந்தார்.

    இதையடுத்து கடந்த 9-ந்தேதி தனக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தன்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் படியும் சிறை அதிகாரிகளிடம் நடித்துள்ளார்.

    இதை நம்பிய சிறை அதிகாரிகள் சிறை காவலர்கள் பாதுகாப்போடு திருச்சி அரசு மருத்துவமனைக்கு தீபன்ராஜை அழைத்து வந்து சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

    இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய தீபன்ராஜ் நேற்று (20-ந்தேதி) அதிகாலை 1 மணியளவில் சிறை காவலர்கள் அசந்த நேரத்தில் நைசாக மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றுள்ளார். இதையறிந்த சிறை காவல்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக சிறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் அடிப்படையில் சிறை அதிகாரிகள் உடனடியாக தனிப்படை அமைத்து தப்பி சென்ற விசாரனை கைதியை தேடி வந்தனர். விசாரனையில் திருப்பூர் பகுதியில் தீபன்ராஜ் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

    பின்னர் சிைற தனிப்படை போலீசார் திருப்பூருக்கு விரைந்து அங்கு பதுங்கியிருந்த குற்றவாளி தீபன்ராஜை பிடித்து வந்து மீண்டும் திருச்சி மத்திய சிறையில் சிங்கம் பட சினிமா பானியில் அடைத்தனர். கைதி தப்பி சென்ற 24 மணி நேரத்தில் பிடித்த சிறை போலீசாருக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    கேரளாவில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு விசாரணைக்கு காரில் அழைத்து சென்ற போது விழுப்புரத்தில் தப்பி ஓடிய கைதியை போலீசார் தேடி வருகின்றனர்.
    விழுப்புரம்:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பலம் அர்ஜூணன்( வயது27). இவர் கேரளாவில் கஞ்சா விற்று வந்தார். இது குறித்து கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து பலம் அர்ஜூணனை கைது செய்தனர்.

    பலம் அர்ஜூணன் மீது ஆந்திர மாநில போலீஸ் நிலையத்திலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    அந்த வழக்குகள் தொடர்பாக பலம் அர்ஜூணனிடம் விசாரணை நடத்த ஆந்திர மாநில போலீசார் முடிவு செய்தனர்.

    அதன் பேரில் அவரை ஆந்திர போலீசாரிடம் ஒப்படைப்பதற்காக கேரள போலீசார் 4 பேர் பலம் அர்ஜூணனை அழைத்து கொண்டு ஒரு காரில் ஆந்திரா நோக்கி புறப்பட்டனர்.

    அந்த கார் இன்று அதிகாலை விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் உள்ள சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது பலம் அர்ஜூணன் கழிவறைக்கு செல்ல வேண்டும் என போலீசாரிடம் கூறினார்.

    உடனே காரை சாலையோரமாக போலீசார் நிறுத்தினர். பின்னர் பலம் அர்ஜூணனை காரில் இருந்து இறக்கி கை விலங்கையும் கழற்றி விட்டனர்.

    கழிவறைக்கு சென்ற பலம் அர்ஜூணன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு சென்று பார்த்த போது பலம் அர்ஜூணனை காணவில்லை. அவரை அந்த பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் போலீசார் தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    பின்னர் இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கைதி பலம் அர்ஜூணனை வலை வீசி தேடி வருகின்றனர்.
    கர்நாடக ஜெயிலில் இருந்து தூக்குதண்டனை கைதி தப்பி ஓடியது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகிறார்கள். #Karnatakajail

    பெல்காம்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவர் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் தாலுகாவில் உள்ள அரலே கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இங்கு ஈரோட்டை சேர்ந்த ராஜேந்திரன், ராஜம்மா, காசி, அவரது மனைவி சிலம்மா உள்பட 15 பேர் வேலை பார்த்தனர்.

    இந்த நிலையில் ராஜம்மா, சிலம்மாவிடம் முருகேசன் தவறாக நடக்க முயன்றார். இதில ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரன், ராஜம்மா, சிலம்மா, அவரது கணவர் காசி, மகள் ரோஜா ஆகிய 5 பேரையும் வெட்டி கொன்றார். இச்சம்பவம் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 15-ந்தேதி நடந்தது.

    கைது செய்யப்பட்ட முருகேசனுக்கு  தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பெல்காவி ஹிண்டல்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் சிறையில் இருந்த முருகேசன் திடீரென்று மாயமானார். அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறை முழுவதும் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. முருகேசன் ஜெயிலில் இருந்து தப்பி சென்றது தெரியவந்தது.

    தேர்தல் பாதுகாப்பு பணிக்கு போலீசார் சென்றதால் சிறையில் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி முருகேசன் தப்பி உள்ளார். அவரை கர்நாடக போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். #Karnatakajail

    ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய கைதியை போலீசார் ஆந்திராவில் வைத்து கைது செய்துள்ளனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள சனவேலியை சேர்ந்தவர் சிவசங்கரன். கடந்த 6-ந் தேதி காலையில் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று இருந்தார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் வீட்டின் கதவை உடைந்து உள்ளே புகுந்தான். பின்னர் பீரோவில் இருந்த 13 பவுன் நகை, 2 ஜோடி கொலுசு ஆகியவற்றை திருடினான்.

    அதற்குள் அக்கம் பக்கத்தினர் வீடு திறந்து கிடந்திருப்பதை கண்டு அங்கு திரண்டனர். இதை அறிந்த திருடன் உடனே அங்கிருந்து தப்ப முயன்றான்.

    ஓட்டம் பிடித்த திருடனை அப்பகுதி பொதுமக்கள் விரட்டிச் சென்று பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் அவனுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த திருடனை ஆர்.எஸ்.மங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அவன் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சந்தோஷ் குமார் (வயது 28) என தெரியவந்தது. போலீசார் அவனை கைது செய்தனர்.

    பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த சந்தோஷ்குமாரை போலீசார் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    ஆஸ்பத்திரியில் தொண்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான், போலீஸ்காரர்கள் மூர்த்தி, பாலமுருகன், முத்து ராமலிங்கம் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் அதிகாலையில் கழிப்பறைக்கு செல்வதாக கூறி விட்டுச் சென்ற சந்தோஷ் குமார் போலீஸ்காரர்களை ஏமாற்றி விட்டு அங்கிருந்து தப்பினான்.

    பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் உள்பட 4 போலீஸ் காரர்களையும் சஸ்பெண்டு செய்து மாவட்ட போலீஸ் சூப்பரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவிட்டார்.

    தப்பி ஓடிய கைதியை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர் தாஸ், தலைமை காவலர் செல்லதுரை, போலீஸ்காரர்கள் ராஜ்குமார், ராஜேஸ் மற்றும் சஸ்பெண்டு செய்யப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான், போலீஸ்காரர்கள் மூர்த்தி, பாலமுருகன், முத்து ராமலிங்கம் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

    இவர்கள் சென்னை வியாசர்பாடிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சந்தோஷ்குமார் ஆந்திர மாநிலம் நெல்லூரை அடுத்த தடா கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர்.

    அதற்குள் தகவல் அறிந்த சந்தோஷ்குமார் ஆந்திர- தமிழகம் எல்லையையொட்டி உள்ள ஆரணி காட்டுப்பகுதிக்குள் சென்று பதுங்கினான். ஆனாலும் போலீசார் துப்பு துலக்கி கடும் சிரமத்திற்கு பின்னர் இன்று அதிகாலை சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.

    அவனை போலீசார் ராமநாதபுரத்திற்கு அழைத்து வருகின்றனர்.
    ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட கைதி தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே சனவெளி கிராமத்தைச்சேர்ந்த பூசாரி சிவசங்கர பாண்டியன். இவர் வீட்டில் இல்லாதபோது பூட்டை உடைத்து 13 பவுன் நகை, 2 ஜோடி கொலுசு, 1,000 ரூபாய் ரொக்கம் திருட்டுப்போனது.

    இது தொடர்பாக சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சந்தோஷ்குமார் (வயது28) என்பவரை ஆர்.எஸ். மங்கலம் போலீசார் கைது செய்தனர்.

    உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அவரை போலீசார் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த நிலையில் பாதுகாப்புக்கு இருந்த போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு சந்தோஷ் குமார் தப்பியோடி தலைமறைவானார். போலீசார் தீவிரமாக அவரை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா கூறுகையில், வீடு புகுந்து திருடிய சந்தோஷ்குமார் தப்பி ஓடும்போது சனவெளி கண்மாய் அருகே அடையாளம் தெரியாத 10 பேர் பிடித்து தாக்கி உள்ளனர். இதில் அவன் பலத்த காயம் அடைந்ததால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு பாதுகாப்புக்கு 4 போலீசார் காவலில் இருந்தனர்.

    அவர்களிடம் கழிவறை செல்வதாக கூறிச் சென்ற சந்தோஷ்குமார், அங்கிருந்த ஜன்னல் வழியாக தப்பி ஓடி உள்ளான். அவனை பிடிக்க திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    காவல் பணியில் கவனக்குறைவாக இருந்த 4 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    வத்தலக்குண்டு அருகே போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடிய கைதியை போலீசார் தேடி வருகின்றனர்.
    பெரும்பாறை:

    தேனியை சேர்ந்தவர் பொன்ராஜ்(வயது47). இவர் கொடைக்கானல் மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் திருடி வந்தார். தாண்டிக்குடி போலீசார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர். கொடைக்கானல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

    நேற்று கொடைக்கானல் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் பாண்டி, சங்கீதாமணி ஆகியோர் அழைத்து வந்திருந்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு வத்தலக்குண்டு வந்தபோது பொன்ராஜ் தனது மனைவியை பார்க்கவேண்டும் என கூறியுள்ளார்.

    அதன்படி போலீசாரிடமிருந்த செல்போனை வாங்கி தனது மனைவிக்கு போன் செய்தார். சிறிதுநேரத்தில் தனது மனைவி வர உள்ளதாகவும், அவரை பார்த்துவிட்டு செல்லலாம் என வத்தலக்குண்டு பஸ்நிலையம் அருகே காத்திருந்தனர். அப்போது அவருக்கு கைவிலங்கு மாட்டப்படவில்லை.

    திடீரென போலீசார் கண்ணில் மண்ணைதூவிவிட்டு பொன்ராஜ் மறைந்துவிட்டார். அக்கம்பக்கம் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர். இதுகுறித்து தாண்டிக்குடி போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் தப்பி ஓடிய பொன்ராஜை தேடி வருகின்றனர்.

    திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பினார். இதையடுத்து 3 போலீஸ்காரர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

    விருதுநகர்:

    விருதுநகரில் அருப்புக் கோட்டை ரோட்டில் உள்ள இரும்புக்கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது. இது தொடர்பாக விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் திருடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    அவருடன் பெரிய வள்ளிகுளம் அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (38) என்பவரும் திருட்டில் ஈடுபட்டிருந்தார்.

    அவரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸ் நிலைய அறையில் வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்கள் அஜாக்கிரையாத இருந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு கைதி பன்னீர்செல்வம் அங்கிருந்து தப்பினார். இது உயர் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாவட்ட போலீஸ் சூப் பிரண்டு ராஜ ராஜன் உத்தர வின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது.

    விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத் தில் பணிபுரியும் போலீஸ் காரர்கள் மணிவண்ணன், ரவிசங்கர், ஜெயமணி ஆகியோர் பணியில் கவனக் குறைவாக இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து 3 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். தப்பியோடிய கைதி பன்னீர் செல்வத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

    புழல் சிறையில் உள்ள கைதி ஒருவரை ஜாமீனில் விடுவிப்பதற்காக வந்த கடிதத்தில் முகமதுஷெரீப் தனது பெயரை மாற்றி தப்பியது தற்போது தெரியவந்துள்ளது. #PuzhalJail
    சென்னை:

    சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் முகமதுஷெரீப் (வயது 27). வீடு புகுந்து திருடிய வழக்கில் கடந்த ஆகஸ்டு மாதம் 18-ந்தேதி முகமது ஷெரீப்பை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவன் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டான்.

    புழல் சிறையில் உள்ள ஜெயிலர் மற்றும் சப்-ஜெயிலரிடம் முகமது ஷெரீப் நன்றாக பழகினான். இதனால் அவனை உதவியாளர் போல அதிகாரிகள் வேலை வாங்கினர்.

    இந்த நிலையில் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ஒரு கைதியை ஜாமீனில் விடுவிப்பதற்கான கடிதம் கடந்த 4-ந்தேதி ஜெயிலுக்கு வந்தது. அந்த கடிதத்தை முகமது ஷெரீப் வாங்கி அதிகாரிகளிடம் கொடுக்க சென்றார்.

    திடீரென்று முகமது ஷெரீப் கடிதத்தின் உறையில் இருந்த பெயரை நீக்கி தனது பெயரை மாற்றி எழுதி தன்னை ஜாமீனில் விட கடிதம் வந்துள்ளதாக அதிகாரிகளிடம் கொடுத்தான். அதிகாரிகளும் அதை சரியாக கவனிக்காமல் முகமது ஷெரீப்பை கடந்த 5-ந்தேதி வெளியே விட்டு விட்டனர்.

    இந்த நிலையில் முகமது ஷெரீப்பை ஜாமீனில் விடுவதற்கான கடிதம் ஜெயிலுக்கு வந்தது. அதன் பிறகே வேறொருவருக்கு வாங்கிய ஜாமீனில் முகமது ஷெரீப் தனது பெயரை மாற்றி தப்பியது தெரியவந்தது. இதனால் ஜெயிலில் பரபரப்பு ஏற்பட்டது. #PuzhalJail

    கோவையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைது கழிவறை ஜன்னலை உடைத்து தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கோவை:

    சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகன் செல்வம் (வயது 30). இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    செல்வம் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஜெயிலில் இருந்த இவர் கடந்த 6-ந் தேதி கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த சிறை அதிகாரிகள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஜெயில் கைதிகள் வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    அங்கு இருந்த செல்வம் மீண்டும் கையை அறுத்து தற்கொலை செய்ய முயன்றார். இதனையடுத்து அவரை ஆஸ்பத்திரியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு வைத்து அவருக்கு கடந்த 2 நாட்களாக டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

    தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செல்வத்துக்கு பாதுகாப்பாக சரவணகுமார் என்ற போலீஸ்காரர் இருந்தார். இன்று அதிகாலை 5 மணியளவில் போலீஸ்காரரிடம் செல்வம் கழிவறைக்கு செல்வ வேண்டும் என்று கூறினார்.

    இதனையடுத்து போலீஸ்காரர் சரவணகுமார் கழிவறை செல்ல செல்வத்தை அனுமதித்தார். செல்வம் கழிவறைக்கு சென்று 15 நிமிடங்கள் ஆகியும் அவர் திரும்பிவரவில்லை.

    இதனால் போலீஸ்காரர் கழிவறை கதவை தட்டினார். ஆனால் கதவை செல்வம் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸ்காரர் கதவை உடைத்து கழிவறைக்கு சென்று பார்த்தார்.

    அப்போது கழிவறையில் செல்வம் இல்லை. கழிவறைக்கு சென்ற செல்வம் அங்கு இருந்த ஜன்னலை உடைத்து தப்பிச் சென்றது தெரிய வந்தது.

    அதிர்ச்சியடைந்த போலீஸ்காரர் சரவணகுமார் இது குறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சிறை அதிகாரிகள் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர். ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சிறைக்கைதி செல்வத்தை தேடி வருகிறார்கள்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி போலீஸ்காரரை ஏமாற்றி தப்பிச் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    திருட்டு வழக்கில் பிடிபட்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஹெலிகாப்டர் மூலம் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #thieffleesFrenchjail #thieffleesbyhelicopter
    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற கொள்ளையில் தொடர்புடையவன் ரெடோயின் ஃபெய்ட்(46). அந்நாட்டின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்று  பின்னர் கைதான இவனுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இதையடுத்து, பாரிஸ் நகரின் புறநகர் பகுதியில் உள்ள ரியூ பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஃபெயிட், 3 கைதிகள் துணையுடன் சிறையில் இருந்து தப்பிச் சென்றான்.

    அவன் வெளியே ஓடிவந்ததும் ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் அவனை ஹெலிகாப்டரில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர்.

    இந்த சம்பவம் பாரிஸ் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவனை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டரை புறநகர் பகுதியில் கண்டுபிடித்த போலீசார் ரெடோயின் ஃபெய்ட்-ஐ கைது செய்ய பாரிஸ் நகரம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முன்னதாக, கடந்த 2013-ம் ஆண்டிலும் வெடிகுண்டால் சிறை சுவரை உடைத்து தப்பிச்சென்ற இவன் பின்னர் போலீசில் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது. #thieffleesFrenchjail #thieffleesbyhelicopter
    ஓசூர் சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கைதி தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக சிறை வார்டன் சஸ்பெண்டு செய்யப்பட உள்ளார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கிளைச் சிறையில் தற்போது 32 விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இதில் அடிதடி வழக்கில் கைதான கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் ஜீவா நகரை சேர்ந்த தனஞ்ஜெய் (வயது 40) என்ற கைதியும் இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் நேற்று காலை 7.30 மணிக்கு தப்பி ஓடி விட்டார். அவர் வாசல் வழியாக சென்றாரா அல்லது கழிவறை வழியாக சென்றாரா என்று தெரியவில்லை.

    இது குறித்து ஓசூர் டவுன் போலீசில் சிறைத்துறை நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. போலீசார் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகிறார்கள்.

    கைதி தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக சிறை வார்டன் சஸ்பெண்டு செய்யப்பட உள்ளார்.

    ×