என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வத்தலக்குண்டு அருகே போலீஸ் பிடியிலிருந்து கைதி தப்பி ஓட்டம்
Byமாலை மலர்23 Oct 2018 9:54 AM GMT (Updated: 23 Oct 2018 9:54 AM GMT)
வத்தலக்குண்டு அருகே போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடிய கைதியை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரும்பாறை:
தேனியை சேர்ந்தவர் பொன்ராஜ்(வயது47). இவர் கொடைக்கானல் மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் திருடி வந்தார். தாண்டிக்குடி போலீசார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர். கொடைக்கானல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
நேற்று கொடைக்கானல் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் பாண்டி, சங்கீதாமணி ஆகியோர் அழைத்து வந்திருந்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு வத்தலக்குண்டு வந்தபோது பொன்ராஜ் தனது மனைவியை பார்க்கவேண்டும் என கூறியுள்ளார்.
அதன்படி போலீசாரிடமிருந்த செல்போனை வாங்கி தனது மனைவிக்கு போன் செய்தார். சிறிதுநேரத்தில் தனது மனைவி வர உள்ளதாகவும், அவரை பார்த்துவிட்டு செல்லலாம் என வத்தலக்குண்டு பஸ்நிலையம் அருகே காத்திருந்தனர். அப்போது அவருக்கு கைவிலங்கு மாட்டப்படவில்லை.
திடீரென போலீசார் கண்ணில் மண்ணைதூவிவிட்டு பொன்ராஜ் மறைந்துவிட்டார். அக்கம்பக்கம் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர். இதுகுறித்து தாண்டிக்குடி போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் தப்பி ஓடிய பொன்ராஜை தேடி வருகின்றனர்.
தேனியை சேர்ந்தவர் பொன்ராஜ்(வயது47). இவர் கொடைக்கானல் மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் திருடி வந்தார். தாண்டிக்குடி போலீசார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர். கொடைக்கானல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
நேற்று கொடைக்கானல் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் பாண்டி, சங்கீதாமணி ஆகியோர் அழைத்து வந்திருந்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு வத்தலக்குண்டு வந்தபோது பொன்ராஜ் தனது மனைவியை பார்க்கவேண்டும் என கூறியுள்ளார்.
அதன்படி போலீசாரிடமிருந்த செல்போனை வாங்கி தனது மனைவிக்கு போன் செய்தார். சிறிதுநேரத்தில் தனது மனைவி வர உள்ளதாகவும், அவரை பார்த்துவிட்டு செல்லலாம் என வத்தலக்குண்டு பஸ்நிலையம் அருகே காத்திருந்தனர். அப்போது அவருக்கு கைவிலங்கு மாட்டப்படவில்லை.
திடீரென போலீசார் கண்ணில் மண்ணைதூவிவிட்டு பொன்ராஜ் மறைந்துவிட்டார். அக்கம்பக்கம் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர். இதுகுறித்து தாண்டிக்குடி போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் தப்பி ஓடிய பொன்ராஜை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X