search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramanathapuram govt hospital"

    • போராட்டம் காரணமாக இன்று காலை காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
    • ஓ.பி. சீட்டு பெற வரிசையில் ஏராளமானோர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மேலும் ஏராளமானோர் உள் நோயாளிகளாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தற்போது காய்ச்சல் பரவி வருவதால் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வழக்கத்தை விட சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் அவர்கள் இன்று காலை திடீரென பணிகளை புறக்கணித்து ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாதந்தோறும் 7-ந்தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். ஊதியத்தில் பிடித்தம் செய்யும் தொழிலாளர் வைப்புத் தொகை முறையாக கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். 5 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் செவிலியர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் காரணமாக இன்று காலை காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    ஓ.பி. சீட்டு பெற வரிசையில் ஏராளமானோர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. செவிலியர்கள் இல்லாததால் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களின் உதவியுடன் சிகிச்சை அளித்தனர்.

    ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய கைதியை போலீசார் ஆந்திராவில் வைத்து கைது செய்துள்ளனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள சனவேலியை சேர்ந்தவர் சிவசங்கரன். கடந்த 6-ந் தேதி காலையில் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று இருந்தார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் வீட்டின் கதவை உடைந்து உள்ளே புகுந்தான். பின்னர் பீரோவில் இருந்த 13 பவுன் நகை, 2 ஜோடி கொலுசு ஆகியவற்றை திருடினான்.

    அதற்குள் அக்கம் பக்கத்தினர் வீடு திறந்து கிடந்திருப்பதை கண்டு அங்கு திரண்டனர். இதை அறிந்த திருடன் உடனே அங்கிருந்து தப்ப முயன்றான்.

    ஓட்டம் பிடித்த திருடனை அப்பகுதி பொதுமக்கள் விரட்டிச் சென்று பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் அவனுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த திருடனை ஆர்.எஸ்.மங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அவன் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சந்தோஷ் குமார் (வயது 28) என தெரியவந்தது. போலீசார் அவனை கைது செய்தனர்.

    பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த சந்தோஷ்குமாரை போலீசார் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    ஆஸ்பத்திரியில் தொண்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான், போலீஸ்காரர்கள் மூர்த்தி, பாலமுருகன், முத்து ராமலிங்கம் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் அதிகாலையில் கழிப்பறைக்கு செல்வதாக கூறி விட்டுச் சென்ற சந்தோஷ் குமார் போலீஸ்காரர்களை ஏமாற்றி விட்டு அங்கிருந்து தப்பினான்.

    பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் உள்பட 4 போலீஸ் காரர்களையும் சஸ்பெண்டு செய்து மாவட்ட போலீஸ் சூப்பரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவிட்டார்.

    தப்பி ஓடிய கைதியை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர் தாஸ், தலைமை காவலர் செல்லதுரை, போலீஸ்காரர்கள் ராஜ்குமார், ராஜேஸ் மற்றும் சஸ்பெண்டு செய்யப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான், போலீஸ்காரர்கள் மூர்த்தி, பாலமுருகன், முத்து ராமலிங்கம் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

    இவர்கள் சென்னை வியாசர்பாடிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சந்தோஷ்குமார் ஆந்திர மாநிலம் நெல்லூரை அடுத்த தடா கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர்.

    அதற்குள் தகவல் அறிந்த சந்தோஷ்குமார் ஆந்திர- தமிழகம் எல்லையையொட்டி உள்ள ஆரணி காட்டுப்பகுதிக்குள் சென்று பதுங்கினான். ஆனாலும் போலீசார் துப்பு துலக்கி கடும் சிரமத்திற்கு பின்னர் இன்று அதிகாலை சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.

    அவனை போலீசார் ராமநாதபுரத்திற்கு அழைத்து வருகின்றனர்.
    ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பணியை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். #DoctorsStrike
    ராமநாதபுரம்:

    ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று டாக்டர்கள் அறிவித்தனர்.

    அதன்படி ராமநாதபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பணியை புறக்கணித்தனர். இதனால் சிகிச்சைக்கு வந்த வெளி நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தனியார் ஆஸ்பத்திரிகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    போராட்டம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் மலையரசு கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள் மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்கிட கோரி இன்று ஒரு நாள் வெளிநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை புறக்கணித்து போராட்டம் நடத்துகின்றனர். மாநில கூட்டமைப்பின் அறிவுரைப்படி ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் உள்ள 42 டாக்டர்கள் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள 10 மருத்துவமனைகள், 48 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட மாட்டாது.

    மற்றபடி அவசர சிகிச்சைகள், வார்டில் தங்கி உள்ள உள் நோயாளிகளுக்கு வழக்கம் போல் சிகிச்சை அளிக்கப்படும். இந்த போராட்டம் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் நடைபெறும். பொதுமக்கள் எங்கள் நியாயமான கோரிக்கையை உணர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும், என்றனர்.

    சிவகங்கை அரசு ஆஸ்பத்திரி மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் வெளிநோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று 1540 டாக்டர்கள் போராட்டத்தில் பங்கேற்றதாக அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில பொருளாளர் டாக்டர் ராமு தெரிவித்தார். #DoctorsStrike
    ×