search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vijayakanth birthday"

    • நெறஞ்சமனசுடன் வலம் வந்து கொண்டிருக்கும் அண்ணன் விஜயகாந்த்துக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    சென்னை:

    தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணைநிலை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச்செய்தியில் கூறி இருப்பதாவது:-

    'வானத்தைப் போல' பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், மரியாதையையும் பெற்று 'புலன் விசாரணை' செய்தாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் சகாப்தமாக 'கேப்டனாக' மரியாதையுடன், நெறஞ்சமனசுடன் வலம் வந்து கொண்டிருக்கும் அண்ணன் விஜயகாந்த்துக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளைமுன்னிட்டு தேமுதிக சார்பில் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    தா.பேட்டை:

    திருச்சி மாவட்டம்  தா.பேட்டை அடுத்த ஜடமங்கலம் கிராமத்தில் தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளைமுன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தே.மு.தி.க வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்ட துணைச் செயலாளர் பழனிவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கோபி, சங்கர், தனபால் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். 

    தா.பேட்டை ஒன்றிய செயலாளர் அழகை.குணசேகரன் வரவேற்றார். கூட்டத்தில் தே.மு.தி.க மாநில துணைச் செயலாளர் பார்த்த சாரதி பங்கேற்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்கள், முதியோர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

     கூட்டத்தில் மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் சந்திரசேகரன், கேப்டன் மன்ற துணைச் செய லாளர் பெரியசாமி, ஒன்றிய பொருளாளர் சங்கர், துணைச் செயலாளர்கள் சதீஷ்குமார், பன்னீர் செல்வம், மாவட்ட பிரதிநிதி மோகன்ராஜ், ஊராட்சி செயலாளர் தமிழரசன், கிளை செயலாளர் சரவணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய அவைத் தலைவர் சிவமணி நன்றி கூறினார்.
    தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது உடல்நலக்குறைவால் ஓய்வெடுத்து வரும் நிலையில், அவரை சந்தித்து நடிகர் பார்த்திபன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Vijayakanth #Parthiban
    சென்னை:

    தே.மு.தி.க தலைவர் விஜய காந்த் கடந்த 25-ந்தேதி தனது 66-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

    உடல்நலக்குறைவு காரணமாக அவர் அவ்வப்போது மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை மேற்கொண்டுவிட்டு வந்தார். மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார்.

    நடிகர் பார்த்திபன் நேற்று விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்தியதோடு பிறந்தநாளுக்காக ஒரு மெழுகு விளக்கை பரிசளித்துள்ளார்.


    படம் எடுத்து அதனை பகிர்ந்துள்ள பார்த்திபன் ‘முன் தினம் தளபதி, நேற்று நம்மவர், இன்று கேப்டன். அழகு மெழுகு விளக்கை பிறந்த நாள் பரிசாக அளித்து சந்தித்தேன். மனதில் பாரமும், இமையில் ஈரமும் கண்டவர் நாலே மாதத்தில் என்னை பழைய மிரட்டலுடன் காணப்போகிறீர்கள்’ என நம்பிக்கை அளித்தார் என்று பதிவிட்டுள்ளார். #Vijayakanth #Parthiban
    விஜயகாந்த் பிறந்த நாளையட்டி அரியலூர் மாவட்ட தே.மு.தி.க.வினர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட தே.மு.தி.க சார்பில் மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல் தலைமையில் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் செட்டிஏரி கரையில் உள்ள சக்திவிநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடைபெற்றது. முக்கிய இடங்களில் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. ஏழை, எளிய பெண்கள் 50 பேருக்கு சேலை வழங்கப்பட்டது.

    அரியலூர் ஒன்றியம் கோவிந்தபுரம் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடும், கொடியேற்றி இனிப்புகள் வழங்கியும் ஏழை எளியவர்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் அரியலூர் நகர செயலாளர் தாமஸ் ஏசுதாஸ், மாவட்ட பொருளாளர் கவியரசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், மாவட்ட தொழிற்சங்க துணை தலைவர் பழக்கடை பாண்டியன், மாவட்ட தொண்டரணி நிர்வாகிகள் நல்லதம்பி, ராமச்சந்திரன், நகர நிர்வாகிகள் மதி, ரமேஷ், சுந்தர், ராதாகிருஷ்ணன், சின்னமுருகன், நமச்சிவாயம், சக்திவேல், மருதை, பாலா, செல்வராஜ், பாலசுப்பிரமணியன், சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி கரூர் கோவிலில் தே.மு.தி.க.வினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.
    கரூர்:

    தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி கரூர் வெண்ணைமலை அய்யப்பன் கோவிலில் அபிஷேகம் செய்யப்பட்டு மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் கே.வி. தங்கவேல் தலைமை தாங்கினார். 

    மாற்றுதிறனாளிகள் அணி செயலாளர் பவர்டெக்ஸ் செல்வராஜ், மாவட்ட அவை தலைவர் அரவை முத்து, பொருளாளர் அரிவின்ஸ், துணை செயலாளர்கள் சோமூர் ரவி, கஸ்தூரி தங்க ராஜ், சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    விழாவில் நகர செயலாளர் காந்தி, ஒன்றிய செயலாளர் ஜெயகுமார், பொதுக் குழு உறுப்பினர்கள் தனபால், ரெங்கநாதன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் குமார், கேப்டன் மன்றம் மாணிக்கம், பெரியண்ணன், மாணவரணி நவநீதகிருஷ்ணன், கலையரசன், சண்முகசுந்தரம், தொண்டரணி பழனிச்சாமி, துளசிமணி, மகளிரணி கமலம், வெள்ளையம்மா, யசோதா, சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை பொதுக்குழு உறுப்பினர் முருகன் சுப்பையா செய்திருந்தார்.
    விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியின் சார்பில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    பெரம்பலூர்:

    தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியின் சார்பில்  பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் சிறுகுடல், பீல்வாடி, மண்டபம், நன்னை,வேப்பூர் ஆகிய கிராமங்களில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    பின்னர் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களும், கடந்த ஆண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ஊக்க பரிசும் வழங்கப்பட்டது. 

    ஒதியம் கிராமத்தில் கொடி ஏற்றி வைத்து ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மரக்கன்று வழங்கும் விழாவும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வேப்பூர்  ஒன்றிய மாவட்ட பிரதிநிதி சோழரசன் ஏற்பாட்டில் செஞ்சேரி வித்யாஸ்ரமம் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது. 

    நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர்  துரை.காமராஜ் , மற்றும் மாவட்ட  பொருளாளர் கண்ணுசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் சுடர்செல்வன் ஷங்கர், மேகலா ரங்கராஜ், மற்றும் வேப்பூர் ஒன்றிய செயலாளர் மலர்மன்னன், மற்றும் ஒன்றிய பொருளாளர் செந்தில்குமார் பெரம்பலூர் நகர செயலாளர் ஜெயக்குமார் தொழிற் சங்கத் தலைவர் ஜோதிலட்சுமி  மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் செங்கமலை, கோவிந்தன், சங்கர்,மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
    தே.மு.தி.க. பொது செயலாளர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில் நடைபெற்றது. இதில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    கோவை:

    தே.மு.தி.க. பொது செயலாளர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில் நடைபெற்றது. கோவை மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் காட்டன் செந்தில் தலைமை தாங்கி பேசினார். பகுதி செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார். மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் சிங்கை சந்துரு வாழ்த்தி பேசினார்.

    சிறப்பு விருந்தினர்களாக மாநில கேப்டன் மன்ற செயலாளர் செல்வ அன்புராஜ், தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி செல்வதாசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 

    கூட்டத்தில் 500 பேருக்கு இலவச வேட்டி, சேலை, குடங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாற்று கட்சியை சேர்ந்த 100 பேர் தே.மு.தி.க.வில் இணைந்தனர். மாவட்ட அவை தலைவர் கேசவன், பொருளாளர் லிங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்த ராஜ், பொன்ராஜ், ஆனந்தகுமார், வனிதா துரை, செயற் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியம், பழனி, பகுதி செயலாளர்கள் சர்தார் என்ற ஜாகீர் உசேன், தண்டபாணி, ஆனந்தக்குமார், முத்துகுமார், தீனதயாளன், பொதுக்குழு உறுப்பினர் பாக்ஸ் மூர்த்தி, வர்த்தக அணி கார்த்திசன், மாணவரணி வினோத், பகுதி நிர்வாகிகள் ராஜா, கொம்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் விஜயகாந்த நீடூழி வாழ வேண்டி தங்க தேர் இழுத்து தேமுதிகவினர் வழிப்பட்டனர்.
    திருச்சி:

    திருச்சி மாநகர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் அதன் தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. திருச்சி அரியமங்கலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமை தாங்கி கட்சி கொடியேற்றி, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சிக்கு அவை தலைவர் அலங்கராஜ் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் விஜயகாந்த நீடூழி வாழ வேண்டி தங்க தேர் இழுத்து வழிப்பட்டனர். நிகழ்ச்சிக்கு உறையூர் பகுதி செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். இன்று மதியம் திருச்சி மலைக்கோட்டை பகுதி தே.மு.தி.க. சார்பில் 11-வது வார்டு சறுக்குபாறை அய்யனார் கோவிலில் விஜயகாந்த் பெயருக்கு அர்ச்சனை செய்து கிடா வெட்டி விருந்து அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளர் நூர்முகமது தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் பழனி முன்னிலை வகித்தார். ஏர்போர்ட் பகுதி சார்பில் பகுதி செயலாளர் குமார் ஏற்பாட்டில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் டி.வி. கணேஷ் வழங்கினார். 

    நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் வி.கே. ஜெயராமன், பொருளாளர் மில்டன் குமார், தலைமை பொது குழு உறுப்பினர்கள் கணேஷ், ராமு,ராஜ்குமார், முகேஷ், பெருமாள்,பகுதி செயலாளர்கள் வெல்டிங் சிவா,கருணாகரன், தொழிற் சங்கம் திருப்பதி, தமிழ் செல்வன், முன்னாள்மாவட்ட செயலாளர்  தங்கமணி, மகளிரணி செயலாளர் பிரித்தா விஜய் ஆனந்த், குமாரசரவணன், மாவட்ட இளைஞரணி சுப்புடு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா நாகர்கோவிலில் இன்று கொண்டாடப்பட்டது. விஜயகாந்த் பெயரில் சிறப்பு வழிபாடு நடந்தது. #vijayakanthbirthday
    நாகர்கோவில்:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. குமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் இன்று காலை மாவட்ட செயலாளர் அமுதன் தலைமையில் மும்மத வழிபாடு நடந்து. புத்தேரி யோகீஸ்வரர் கோவிலில் விஜயகாந்த் பெயரில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதைதொடர்ந்து வடசேரி தர்கா, கோட்டார் சவேரியார் ஆலயத்திலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நிகழ்ச்சியில் அவைத் தலைவர் கிருஷ்ணராஜ், பொருளாளர் ஜெயச்சந்திரன், துணைச் செயலாளர் ராஜன், வக்கீல் அணி செயலாளர் பொன் செல்வராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜேஷ், இந்தியன் சரேஷ், இளைஞரணி துணைச் செயலாளர் மதிமுருகன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ரிச்மோகன்ராஜ், மாவட்ட இளைஞரணி கவுதம். மகளிரணியை சேர்ந்த பாக்கியரதி, சுபா, தொண்டரணி ரபீக் பாய், ராஜாக்கமங்கலம் ஒன்றிய செயலாளர் வைகுண்ட கண்ணன், பொதுக் குழு உறுப்பினர்கள் வைகுண்ட மணி, ஸ்டீபன், ஒன்றிய அவைத்தலைவர் தங்க கிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி கவுதம், தர்மபுரம் ஊராட்சி செயலாளர் கலையரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி குமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பல்வேறு இடங்களில் கொடி யேற்று விழா நிகழ்ச்சி நடந்தது. #vijayakanthbirthday
    தே.மு.தி.க. பொது செயலாளர் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவையொட்டி கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 7 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. #HBDCaptainVijayakanth

    கோவை, ஆக.25-

    தே.மு.தி.க. பொது செய லாளர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா இன்று கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் சிறப்பாக கொண்டா டப்பட்டது.

    இதையொட்டி புலியகுளம் முந்தி விநாயகர்கோவிலில் சிறப்பு பூஜை, புனித அந்தோ ணியார் ஆலயத்தில் பிரார்த் தனை, தொழிற்சங்கம் சார்பில் சி.டி.சி. டெப்போ அருகில் கொடி யேற்று விழா, அன்ன தானம் வழங்குதல், ஜங்கில்பீர் தர்காவில் தொழுகை நடந்தது.

    தொடர்ந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிறந்த 7 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப் பட்டது. மேலும் உள்நோயா ளிகளுக்கு பழம், பிஸ்கெட் வழங்கினர். பின்னர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடி னர். இதைத்தொடர்ந்து 40-வது வார்டில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடந் தது. நிகழ்ச்சிகளுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் காட்டன் ஆர்.செந்தில் தலைமை தாங்கினார். மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் சிங்கை சந்துரு, அவை தலைவர் கேசவன், பொருளாளர் லிங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்த ராஜ், பொன்ராஜ், ஆனந்த குமார், வனிதா துரை,

    செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியம், பழனி, பகுதி செயலாளர்கள் சர்தார் என்ற ஜாகீர் உசேன், தண்டபாணி, ஆனந்தக்குமார், முத்து குமார், பன்னீர்செல்வம், தீனதயாளன், பொதுக்குழு உறுப்பினர் பாக்ஸ் மூர்த்தி, வர்த்தக அணி கார்த்திசன், மாணவரணி வினோத் உள்பட பலர் கலந்து கொண் டனர்.

    இன்று மாலை 6 மணிக்கு காந்தி பார்க் பால தண்டபாணி கோவிலில் தங்கத்தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் நாளை பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என தக்கலை ஒன்றிய செயலாளர் டேவிட் அறிவித்துள்ளார்.
    தக்கலை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் நாளை பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என தக்கலை ஒன்றிய செயலாளர் டேவிட் அறிவித்துள்ளார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி நாளை தக்கலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 21 இடங்களில் கொடியேற்றப்படும். காலை 9 மணிக்கு தக்கலை பஸ் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடப்படும்.

    அதைதொடர்ந்து தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் நாளை பிறக்கும் அனைத்து குழந்தை களுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும். பின்னர் முட்டைக்காட்டில் தக்கலை ஒன்றிய அலுவலகம் திறக்கப்படும். இந்த அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் மாவட்ட செயலாளர் ஜெக நாதன் தலைமை தாங்குகிறார். அவைத் தலைவர் ஸ்ரீகுமார், திருவட் டார் ஒன்றிய செயலாளர் ஜஸ்டின் தேவகுமார் முன்னிலை வகிக்கின்றனர். கழக தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அறிக்கையில் கூறி உள்ளார்.
    விஜயகாந்த் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவி வழங்கி நாளை கொண்டாடப்பட இருக்கிறது என்று மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். #vijayakanth

    கோவை:

    தே.மு.தி.க. பொது செயலாளர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா நாளை (சனிக்கிழமை) கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் காட்டன் ஆர். செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தே.மு.தி.க. பொது செயலாளர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி நாளை காலை 6 மணிக்கு புலியகுளம் முந்தி விநாயகர்கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. தொடர்ந்து புனித அந்தோணியார் ஆலயத்தில் பிரார்த்தனை, தொழிற் சங்கம் சார்பில் சி.டி.சி. டெப்போ அருகில் கொடியேற்று விழா, அன்னதானம் வழங்குதல், ஜங்கில்பீர் தர்காவில் தொழுகை நடக்கிறது.

    காலை 9 மணிக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தல் உள்நோயாளிகளுக்கு பழம், பிஸ்கெட் வழங்குதல், 10 மணிக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் பிறந்த நாள் கேக் வெட்டு தல் நடக்கிறது. மாலை 6 மணிக்கு காந்தி பார்க் பால தண்டபாணி கோவிலில் தங்கத்தேர் இழுக்கப்படு கிறது. நாளை மறுநாள்(26-ந் தேதி) மாலை பீளமேடு ரொட்டிக் கடை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில கேப்டன் மன்ற செயலாளர் செல்வஅன்பு ராஜ், தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி செல்வதாசன் ஆகியோர் பேசுகிறார்கள்.

    கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் கேப்டன் ஆணைப்படி நிவாரணபொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிவாரண பொருட்கள் 27-ந் தேதி கேரளாவுக்கு கொண்டு சென்று வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, டாடாபாத்தில் உள்ள அரச மரத்தடி ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

    மாநகர் மாவட்ட செயலாளர் காட்டன் ஆர்.செந்தில் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார். வார்டு செயலாளர் வி.வி.ராஜன் வரவேற்று பேசினார். பொருளாளர் லிங்கம், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ், பொன்ராஜ், செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், பகுதி நிர்வாகிகள் நரசிம்மராஜ், பாரதி, ஆறுக்குட்டி, அழகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×