என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு
Byமாலை மலர்21 Nov 2018 10:03 AM GMT (Updated: 21 Nov 2018 10:03 AM GMT)
கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது. #Swineflu
கோவை:
கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சரவண மூர்த்தி. இவரது மனைவி நாகமணி(வயது 47).
இவர் கடந்த சில நாட்களாக கடுமையான காயச்சலால் பாதிக்கப்பட்டார். கடந்த 1 வாரத்துக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு பரிசோதனை நடந்தது.
இதில் நாகமணிக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.
கடந்த 2 மாதங்களில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 62 பேர் பலியாகி உள்ளனர். நாகமணியோடு சேர்த்து பலி எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது பன்றிக்காய்ச்சலுக்கு 48 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 4 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 56 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Swineflu
கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சரவண மூர்த்தி. இவரது மனைவி நாகமணி(வயது 47).
இவர் கடந்த சில நாட்களாக கடுமையான காயச்சலால் பாதிக்கப்பட்டார். கடந்த 1 வாரத்துக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு பரிசோதனை நடந்தது.
இதில் நாகமணிக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.
கடந்த 2 மாதங்களில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 62 பேர் பலியாகி உள்ளனர். நாகமணியோடு சேர்த்து பலி எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது பன்றிக்காய்ச்சலுக்கு 48 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 4 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 56 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Swineflu
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X