search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "College"

    • ஆன்லைன் கலந்தாய்வு, ஒதுக்கீட்டு ஆணை போன்ற பணிகள் நடைபெறும்.
    • கடந்த ஆண்டு பொது கலந்தாய்வுக்கு 2 லட்சத்து 20 இடங்கள் வழங்கப்பட்டன.

    சென்னை:

    தமிழகத்தில் 470-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு முறையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த 6-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதுவரையில் 2 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ள நிலையில் ஜூன் 6-ந் தேதியுடன் அவகாசம் முடிகிறது. அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு, தர வரிசை பட்டியல் வெளியீடு, ஆன்லைன் கலந்தாய்வு, ஒதுக்கீட்டு ஆணை போன்ற பணிகள் நடைபெறும்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு கலந்தாய்வுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் புருஷோத்தமன் கூறியதாவது:-

    பொறியியல் கல்லூரிகளுக்கான இணைப்பு அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக் கழகம் வழங்குகிறது. இந்த ஆண்டும் புதிய கல்லூரிகள் மற்றும் புதிய இடங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படலாம். அங்கீகாரம் வழங்கும் பணி முடிந்து ஜூலை 2-வது வாரத்தில் பொறியியல் கல்லூரிகளின் விவரம், பி.இ., பி.டெக் இடங்கள் குறித்த பட்டியலை தருவ தாக அண்ணா பல்கலைக் கழகம் கூறியுள்ளது.

    கடந்த ஆண்டு பொது கலந்தாய்வுக்கு 2 லட்சத்து 20 இடங்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு கல்லூரிகள் மற்றும் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா என்பது அண்ணா பல்கலைக் கழகம் அளிக்கும் பட்டியலுக்கு பிறகே தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பலத்த காற்றினால் பல பகுதிகளில் குடிசைகளும், கூரைகளும் பறந்தன.
    • அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மணிப்பூரின் பல பகுதிகளில் கனமழை, ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. இதனால், வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

    இம்பாலின் மேற்கில் உள்ள காஞ்சிப்பூர் மற்றும் தேரா ஆகியவை பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல வீடுகள் சேதமடைந்தன. பலத்த காற்றினால் பல பகுதிகளில் குடிசைகளும், கூரைகளும் பறந்தன.

    இந்நிலையில், மணிப்பூரில் பெய்து வரும் கனமழை காரணமாக, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று (மே 6) மற்றும் நாளை (மே 7) விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் என். பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதல்வர் பிரேன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாநிலத்தில் நிலவும் வானிலை காரணமாக 2024 மே 6 மற்றும் மே 7ம் தேதிகள் அன்று அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும். தற்போதைய வானிலையால் ஏற்படும் அபாயங்களுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும்,"அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக்கொள்கிறேன். மாநில அரசு உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது," என்றார்.

    • அவசர காலம் தவிர மற்ற நேரங்களில் மின் விநியோகத்தை நிறுத்தக் கூடாது என மின்கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • மின்னகத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 94987 94987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார வாரியம் மாநிலம் முழுவதும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. அவசர காலம் தவிர மற்ற நேரங்களில் மின் விநியோகத்தை நிறுத்தக் கூடாது என மின்கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கி உள்ளதால் மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

    மின் தொடர்பான புகார்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயலியில் அளிக்கலாம் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்து உள்ளது. மேலும் மின்ன கத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 94987 94987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக இனிமேல் அதிவேகத்தில் மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும் என்று அரசு சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி புகார் கொடுத்த 2 மணி நேரத்துக்குள் மின்தடை தொடர்பான புகார்களை சரி செய்ய வேண்டும். மின்சார வயர்கள் தொடர்பான பிரச்சினையை 5 மணி நேரத்துக்குள் தீர்க்க வேண்டும். பெரிய பிரச்சினைகள், டிரான்ஸ்பார்மர் பிரச்சினைகளை 10 மணி நேரத்துக்குள் தீர்க்க வேண்டும் என மின்சார வாரிய அதிகாரி களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காரைக்குடி கிட் அண்டு கிம் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
    • பல்வேறு பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள மானகிரி கிட் அண்ட் கிம் பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரி வளாகத்தில் ஸ்டீல் ஸ்ட்ரைப்ஸ் வீல்ஸ் லிமி டெட் நிறுவனம் சார்பில் நேர்முக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    இந்த வளாக நேர்முக தேர்வில் கல்லூரியின் சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட் ரானிக்ஸ் கம்யூனி கேஷன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என பல் வேறு பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் 35 மாணவர்கள் தேர்வு பெற்றனர். கல்லூரி முதல்வர் முனைவர் பார்த்த சாரதி நேர்முக தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்க ளுக்கு வேலைவாய்ப்புக் கான பணி நியமன ஆணை களை வழங்கினார். மாண–வர்களை கல்லூரி தலை வர் அய்யப்பன் வாழ்த்தி னார்.

    நிகழ்ச்சியில் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண் டனர்.

    • அன்னை பாத்திமா கல்லூரி பேராசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.
    • ஜம்பலபுரம் என்ற கிராமத்தை மேம்படுத்த தேர்வு செய்துள்ளது.

    மதுரை

    நாடு முழுவதும் கிராமப்புறங்களை மேம்படுத்த, 'உன்னத் பாரத் அபியான்' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ், பின்தங்கிய கிராமங்களில் கல்வி நிறுவனங்கள் மூலம் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன. இதில் நாட்டில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பின்தங்கிய, மக்கள் தொகை, 30 ஆயிரத்துக்குக் குறைவான எண்ணிக்கை கொண்ட கிராமங்களை தேர்வு செய்து அக்கிராமத்தின் கட்டமைப்புகளை மேம்படுத்த அரசுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்.

    இதன்படி திருமங்கலம் ஆலம்பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பேரையூர் வட்டத்தைச் சேர்ந்த ஜம்பலபுரம் என்ற கிராமத்தை மேம்படுத்த தேர்வு செய்துள்ளது. இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட உள்ள கல்லூரி பேராசிரியர்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் இரண்டு நாட்கள் பயிற்சி வகுப்பு மத்திய அரசு நிதி உதவியுடன் நடந்தது. இதில் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் தமிழ் துறை தலைவர் முனியாண்டி கலந்துகொண்டு பயிற்சி பெற்றார். அவரை கல்லூரி தாளாளர் எம். எஸ். ஷா, பொருளாளர் சகிலா ஷா, கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர், சக பேராசிரியர்கள் ராமுத்தாய், ஜோதி, ஆறுமுக ஜோதி மற்றும் உடற்கல்வி இயக்குனர் நாராயண பிரபு உள்ளிட்டோர் பாராட்டினர்.

    • சுயநிதி கல்லூரி ஆசிரியர்களுக்கு யு.ஜி.சி. பரிந்துரைத்த ஊதியத்தை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
    • பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    மதுரை

    சுயநிதி கல்லூரி ஆசிரியர் பாதுகாப்பு மாநாடு மதுரை காமராசர் பல்கலைக் கழக கல்லூரியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மூட்டா தலை வர் செந்தாமரைக் கண்ணன் தலைமை தாங்கினார். மண் டல தலைவர்கள் ரமேஷ் ராஜ், ஞானேஸ்வரன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். செயலாளர் ராபர்ட் திலீபன் வரவேற்றார். மாநாட்டின் முக்கிய நோக் கம் குறித்து பொதுச்செயலா ளர் நாகராஜன் பேசினார்.

    மாநாட்டில் தமிழ்நாடு அரசு சுயநிதி ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கேரள அரசின் சுயநிதி ஆசிரியர்கள் ஒழுங்காற்றுச் சட்டத்தைப் போல் ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும், தமிழ்நாடு அரசு சுயநிதி சுல்லூரிகளை ஒழுங்குபடுத்த தனி இயக்கு னரகம் தொடங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாடு அரசு, சுயநிதி ஆசிரியர்களுக்கு யு.ஜி.சி. பரிந்துரைத்த ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாடு அரசு சுயநிதி கல்லூரிகள் பற்றிய வெள்ளை அறிக்கை வெளி யிட வேண்டும். பொறியியல் கல்லூரிகளில் சுயநிதி பிரி வில் பணியாற்றும் ஆசிரியர் களுக்கு ஏ.ஐ.சி.டி.இ. நிர்ண யித்துள்ள ஊதிய விகிதம்,

    அகவிலைப்படி உள் ளிட்ட பிற படிகளும், ஆசிரி யர் அல்லாத அலுவலர்க ளுக்கு குறைந்தபட்ச கூலிச் சட்டம் 1948-ன் அடிப்ப டையில் ஊதியம் அகவி லைப்படி உள்ளிட்ட பிற படிகளும் ஆண்டு ஊதிய உயர்வு மருத்துவ விடுப்பு மகப்பேறு மருத்துவ விடுப்பு உள்ளிட்ட சலுகைகளும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட் டன.

    முடிவில் பொருளாளர் ராஜ ஜெயசேகர் நன்றி கூறி னார்.

    • உலக வாழ்விட தினம் சிறப்பு கருத்தரங்கம் கல்லூரி கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது.
    • மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி (எம்.ஐ.டி.) இயந்திரவியல் துறை இந்திய பொறியாளர் அமைப்பு மாணவர் பிரிவு சார்பில் உலக வாழ்விட தினம் சிறப்பு கருத்தரங்கம் கல்லூரி கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது.

    மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்லூரி முதல்வர் மலர்கண் வாழ்த்துரை வழங்கினார். இந்திய பொறியாளர் அமைப்பின் புதுவை மாநில தலைவர் மற்றும் இயந்திரவியல் துறைத் தலைவர் ராஜாராம் வரவேற்புரை நிகழ்த்தினார். புதுவை கிரீன் கியாஸ்- கெமிக்கல்ஸ் பெர்டிலைசர்ஸ் தனியார் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி என்ஜினீயர் ஞானசேகரன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    கருத்தரங்கில் இயந்திரவியல் துறை மாணவர்கள் திரளாக பங்கேற்றனர். இயந்திரவியல் துறை உதவி பேராசிரியர் கணேஷ் குமார் நன்றி கூறினார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடவியல் துறை பேராசிரியை ராஜலட்சுமி மற்றும் உதவி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • உலக தரநிர்ணய நாள் சிறப்பு கருத்தரங்கம் கல்லூரி கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது.
    • டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி(எம்.ஐ.டி.) இயந்திரவியல் துறை மற்றும் இந்திய பொறியாளர் அமைப்பு சார்பில் "உலக தரநிர்ணய நாள் சிறப்பு கருத்தரங்கம் கல்லூரி கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது.

    மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்லூரி முதல்வர் மலர்கண் வாழ்த்துரை வழங்கினார். இந்திய பொறியாளர் அமைப்பின் புதுவை மாநில தலைவர் மற்றும் இயந்திரவியல் துறைத் தலைவர் ராஜாராம் வரவேற்புரை நிகழ்த்தினார். புதுவை டி.வி.எஸ் சுந்தரம் பாஸ்டநர்ஸ் தரக்கட்டுப்பட்டு துறை பொறியாளர் சாயேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    கருத்தரங்கில் இயந்திரவியல் துறை மாணவர்கள் திரளாக பங்கேற்றனர். இயந்திரவியல் துறை உதவி பேராசிரியர் கணேஷ் குமார் நன்றி கூறினார்.

    கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி, இயந்திரவியல் துறை பேராசிரியர் மதியரசு மற்றும் உதவி பேராசிரி யர்கள் செய்திருந்தனர்.

    • புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.
    • முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விளா அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது.

    முதன்மை நிர்வாக அதிகாரி ஐஸ்வர்யா சரண்சுந்தர் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் மற்றும் தாளாளர் முனைவர் ஆர்.சுவாமிநாதன் கல்லூரியின் சாதனைகள் மற்றும் பாடப்பிரிவுகளைப் பற்றி விரிவாக எடுத்து ரைத்தார். இதில் அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் க.ரவி, முன்னாள் துணை வேந்தர் சொ.சுப்பையா,பூமி குழுமம் தலைவர் நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங் களை வழங்கி வாழ்த்தினர்.

    சோகோ இந்தியா நிறு வன தலைவர் பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு மாண வர்களை காணொலி காட்சி மூலம் வாழ்த்தினார்.இந்த பட்ட மளிப்பு விழாவில் மொத்த மாக 465 மாணவர்கள், 379 மாணவி கள் என மொத்தம் 844 பேர் பட்டம் பெற்றனர். 16 பேர் பல்கலைக்கழக அள வில் ரேங்க் எடுத்து தங்க பதக்கம் பெற்றனர்.

    இக்கல்லூரியானது பிற்பட்ட கிராமப்புற இளை யோர் நலம் கருதி, கடந்த 2016-ம் ஆண்டு 40 என்ற எண்ணிக்கையில் இளங் கலை (கணிதம், கணினி யியல், வணிகப் பயன் பாட்டியல், தகவல் தொழில் நுட்பம்) ஆகிய பாடப் பிரிவுடன் ஆரம்பிக்கப் பட்டது.

    இன்று இளங்கலையில் 19 பிரிவுகளும், முதுகலை யில் 7 பிரிவுகளும் ஆய்வுப் பிரிவு கணிதம் மற்றும் கணிணி அறிவியல் ஆகி யவை தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாணவர்கள் பன்முகத் திறனுடன் மாநில அளவி லும், மாவட்ட அளவிலும் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது தனித் திறமையை வெளிப்படுத்தி வருகின்ற னர். மேலும் மாவட்ட கலெக்டர், மாநில முதல்- அமைச்சர்கள், அமைச்சர் கள், துணை வேந்தர்கள், பல்வேறு ஆளுமை களிட மும் பொற் கரங்களால் பண முடிப்பு களையும், விருதுகளையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்து உள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.

    பட்டமளிப்பு விழாவில் வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் ஹாஜி முகமது மீரா, காரைக்குடி வித்யாகிரி பள்ளி முதல்வர் ஹேம மாலினி சுவாமிநாதன். முன்னாள் எம். எல். ஏ. எச்.ராஜா, நகர்மன்ற தலைவர் சே.முத்துதுரை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • மருத்துவ கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி தலைமை தாங்கினார்.
    • அலைய்டு ஹெல்த் சயின்ஸ் டீன் ஆலிஸ் கிஸ்கு வரவேற்றார்.

    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் மருத்துவம் சார்ந்த துணை மருத்துவ படிப்பு தினம் மற்றும் மருத்துவ துறையில் அலைய்டு ஹெல்த் சயின்ஸ் படிப்பின் முக்கிய பங்கு குறித்த கருத்தரங்கு கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

    மருத்துவ கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி தலைமை தாங்கினார். அலைய்டு ஹெல்த் சயின்ஸ் டீன் ஆலிஸ் கிஸ்கு வரவேற்றார்.

    பிம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஆறுபடை மருத்துவ கல்லூரி அலைய்டு ஹெல்த் சயின்ஸ் இயக்குனர் பேராசிரியர் ஆண்ட்ரூ ஜான் கலந்து கொண்டு பேசினார். பின்னர் மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் செவிலியர் கல்லூரி முதல்வர் மோனி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ நிபுணர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவ மாணவிகளின் சுவரொட்டி விளக்கப்பட கண்காட்சி நடைபெற்றது.

    முடிவில் இயன் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ஸ்ரீ காந்த் நன்றி கூறினார்.

    • நிவேதா கடலூர் பெண்கள் கல்லூரியில் பி. ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
    • இதையடுத்து நிவேதாவின் தந்தை ராஜா பண்ருட்டி போலீசில் புகார் செய்தார்

    கடலூர்:

    பண்ருட்டி விழமங்கலத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் ரேவதி (எ) நிவேதா (வயது 17). இவர் கடலூர் பெண்கள் கல்லூரியில் பி. ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 6-ந் தேதி கல்லூரிக்கு சென்ற அவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து நிவேதாவின் தந்தை ராஜா பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றார்.

    • பெரியசாமி மகள் ஜனனி(17) இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு மகளிர் தனியார் கல்லூரியில் பி. ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
    • நேற்று முன்தினம் ஓமலூரில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று வருவதாக கூறியவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள சிக்கம்பட்டி கிராமம் புதூர் காடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் ஜனனி(17) இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு மகளிர் தனியார் கல்லூரியில் பி. ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஓமலூரில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று வருவதாக கூறியவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பெரியசாமி குடும்பத்தினர் அக்கம் பக்கம் உறவினர் வீடுகளில் தேடியும் எங்கும் கிடைக்காத நிலையில் தாரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×