search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யு.ஜி.சி."

    • சுயநிதி கல்லூரி ஆசிரியர்களுக்கு யு.ஜி.சி. பரிந்துரைத்த ஊதியத்தை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
    • பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    மதுரை

    சுயநிதி கல்லூரி ஆசிரியர் பாதுகாப்பு மாநாடு மதுரை காமராசர் பல்கலைக் கழக கல்லூரியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மூட்டா தலை வர் செந்தாமரைக் கண்ணன் தலைமை தாங்கினார். மண் டல தலைவர்கள் ரமேஷ் ராஜ், ஞானேஸ்வரன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். செயலாளர் ராபர்ட் திலீபன் வரவேற்றார். மாநாட்டின் முக்கிய நோக் கம் குறித்து பொதுச்செயலா ளர் நாகராஜன் பேசினார்.

    மாநாட்டில் தமிழ்நாடு அரசு சுயநிதி ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கேரள அரசின் சுயநிதி ஆசிரியர்கள் ஒழுங்காற்றுச் சட்டத்தைப் போல் ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும், தமிழ்நாடு அரசு சுயநிதி சுல்லூரிகளை ஒழுங்குபடுத்த தனி இயக்கு னரகம் தொடங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாடு அரசு, சுயநிதி ஆசிரியர்களுக்கு யு.ஜி.சி. பரிந்துரைத்த ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாடு அரசு சுயநிதி கல்லூரிகள் பற்றிய வெள்ளை அறிக்கை வெளி யிட வேண்டும். பொறியியல் கல்லூரிகளில் சுயநிதி பிரி வில் பணியாற்றும் ஆசிரியர் களுக்கு ஏ.ஐ.சி.டி.இ. நிர்ண யித்துள்ள ஊதிய விகிதம்,

    அகவிலைப்படி உள் ளிட்ட பிற படிகளும், ஆசிரி யர் அல்லாத அலுவலர்க ளுக்கு குறைந்தபட்ச கூலிச் சட்டம் 1948-ன் அடிப்ப டையில் ஊதியம் அகவி லைப்படி உள்ளிட்ட பிற படிகளும் ஆண்டு ஊதிய உயர்வு மருத்துவ விடுப்பு மகப்பேறு மருத்துவ விடுப்பு உள்ளிட்ட சலுகைகளும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட் டன.

    முடிவில் பொருளாளர் ராஜ ஜெயசேகர் நன்றி கூறி னார்.

    ×