search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bakrid"

    • நெல்லை மாநகரில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழுகை நடந்தது.
    • பெரும்பாலான இடங்களில் சிலர் தங்களது வீடுகளிலும் தொழுகை நடத்தினர்.

    நெல்லை:

    தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டா டப்பட்டது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான இந்நாளில் நெல்லை மாவட்டம் மற்றும் மாநகரில் நூற்றுக்கணக்கான இடங்களில் சிறப்பு தொழுகை நடை பெற்றது. மாநகரில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழுகை நடந்தது.

    மேலப்பாளையம்

    மாவட்டத்தில் திசையன்விளை, ஆத்தங்கரை பள்ளிவாசல், களக்காடு, ஏர்வாடி, பத்தமடை, பேட்டை உள்ளிட்ட இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பள்ளிவாசல்களிலும், திறந்தவெளி திடல்களிலும் நடந்த தொழுகையில் சிறுவர்-சிறுமியர்கள் உள்பட குடும்பத்தினருடன் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.

    நெல்லை மேலப்பாளையம் விரிவாக்க பகுதி கரீம் நகர் மஸ்ஜித் ஹூதா பள்ளிவாசல் சார்பாக ஹஜ் பெருநாள் திடல் தொழுகை மதினா பள்ளி திடலில் நடைபெற்றது. பள்ளிவாசல் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி பெருநாள் உரையாற்றினார்.

    எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு பக்ரீத் வாழ்த்து செய்தி கூறினார். அப்போது அவர், தியாகத்தை போற்றிடும், போதித்திடும் இந்த நாளில் ஒடுக்கபட்ட மக்களின் வாழ்வு உயர்ந்திட நாட்டு மக்களுக்கு எதிரான சக்திகளை வீழ்த்த சபதமேற்போம் என்றார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் கனி, செய்தி தொடர்பாளர் பக்கீர் முகமது லெப்பை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்துல் வகாப் எம்.எல்.ஏ.

    மேலப்பாளையம் ஜின்னாதிடலில் நடைபெற்ற தொழுகையில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான டி.பி.எம்.மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். நெல்லை டவுன் முகம்மது அலி தெரு, எம்.என்.பி பள்ளிவாசல், ஜாமியா பள்ளிவாசல், வி.மா. பள்ளிவாசல், நயினார்குளம் பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மேலப்பாளையம் மாநகராட்சி திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    டவுன்-பேட்டை

    டவுன் லாலுகாபுரத்தில் மாவட்ட பேச்சாளர் சித்திக் தலைமையில் நடைபெற்ற தொழுகையில் வெளிநாடு வாழ் தமிழர் நல சங்கத்தின் மாவட்ட தலைவர் டவுன் ஜாபர் கலந்து கொண்டார்.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை மேற்கு கிளை சார்பில் பேட்டை மஸ்ஜிதுர்ரஹீம் பள்ளிவாசல் அருகில் உள்ள திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. மாவட்ட துணைச்செயலாளர் அப்துல் பாசித், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை மேற்கு கிளை தலைவர் சேக் அப்துல் காதர், செயலாளர் பீர் முஹம்மது, பொருளாளர் அகமது மீரான், துணைச்செயலாளர் அப்துல் ஹமீது, துணைச்செயலாளர் முஹம்மது கான், மருத்துவ அணி திப்புசுல்தான் நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    வாழ்த்துக்களை பரிமாறினர்

    பெரும்பாலான இடங்களில் சிலர் தங்களது வீடுகளிலும் தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்ததும் முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.

    மேலும் ஏழைகளுக்கு அரிசி, இறைச்சி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பல்வேறு இடங்களில் ஆடு, மாடு போன்றவற்றின் இறைச்சியை குர்பானியாக வழங்கினர். பிரியாணி போன்ற உணவு பொட்டலங்களும் வழங்கினர். இதனையொட்டி பள்ளிவாசல்கள், திடல்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் பக்ரீத் பண்டிகை சிறப்பு குறித்து பேசினார்.
    • விழாவில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் மரியா கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. கல்லூரி நிறுவன தலைவர் டி.டி.என்.லாரன்ஸ், தாளாளர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    விழாவில் தமிழ்த்துறை உதவி பேராசிரியை லலிதா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் பக்ரீத் பண்டிகையின் சிறப்பு குறித்து மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார். விழாவில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.2-ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி ஹபீபா பேகம் நன்றி கூறினார்.

    • பக்ரீத் பெருநாளில் ஏழைகளுக்கு உதவி செய்வதும் வழக்கம்.
    • பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களையும் பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.

    தமிழகம் முழுவதும் திறந்தவெளி மைதானங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு மைதானங்களில் நடந்த தொழுகையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைத்து மக்களும் அமைதியோடு வாழ வேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர்.

    பக்ரீத் பெருநாளில் ஏழைகளுக்கு உதவி செய்வதும் வழக்கம். அதன்படி இஸ்லாமியர்கள் இன்று பல இடங்களில் ஏழைகளுக்கு உதவி வழங்கினார்கள்.

    மேலும் பல இடங்களில் இறைச்சிகளையும் ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்ந்த னர்.

    சென்னையிலும் இன்று பக்ரீத் பண்டிகை உற்சாக மாக கொண்டாடப்பட்டது. காலையிலேயே இஸ்லாமியர் கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். இதல் சிறுவர்களும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சென்னை பிராட்வேயில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் இன்று காலையில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாகிருல்லா எம்.எல்.ஏ. மற்றும் 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். தொழுகை முடிந்த பிறகு அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் இன்று காலையில் பக்ரீத் பண்டிகையை யொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.

    சென்னை மண்ணடி அரண்மனைக்காரன் தெருவில் உள்ள மைதானத்தில் பக்ரீத் தொழுகை நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர். இதன்பின் ஆடு, மாடு குர்பானி கொடுத்தனர். மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    திருவொற்றியூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திருவொற்றியூர் தேரடியில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதே போன்று தாங்கல் ஜும்மா பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடு மாடுகளை குர்பானி கொடுத்தனர்.

    திருவொற்றியூர் எஸ். ஆர். கார்டன் பகுதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். தொழுகையில் ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    கொளத்தூர் திரு.வி.நகர், குமரன் நகரில் உள்ள மசூதியில் இஸ்லாமியர்கள் பக்ரீத் தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த் துக்களை தெரிவித்தனர்.

    இதேபோல் சென்னை பெரம்பூர், ஓட்டேரி, ராயபுரம், புரசைவாக்கம், அண்ணாநகர், ஐஸ் அவுஸ், வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை, கொடுங்கையூர் உள்ளிட்ட சென்னை முழுவதும் உள்ள மசூதிகளில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

    • மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்.
    • இறைவனுக்கு மிகவும் விருப்பமானது கால்நடைகளை குர்பானி கொடுப்பதாகும்.

    அரபி மாதங்களில் 12-வது நிறைவு மாதமாக இடம் பெறுவது துல்ஹஜ் மாதம் ஆகும். இந்த மாதத்தின் பத்தாம் நாளன்று உலக முஸ்லிம்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்படக்கூடியது 'பக்ரீத் பண்டிகை' ஆகும். 'பக்ரா' மற்றும் 'ஈத்' எனும் இரண்டு உருது வார்த்தைகளின் இணைப்புதான் 'பக்ரீத்' ஆகும். இதன் பொருள்- 'ஆட்டைப் பலியிட்டு கொண்டாடப்படும் பெருநாள்' என்பதாகும். மேலும் இதற்கு 'குர்பானி பெருநாள்' என்றும் பெயருண்டு.

    'குர்பானி' என்றால் 'தியாகம் செய்தல்' என்பது அர்த்தமாகும். குர்பானி கொடுப்பது முஸ்லிம்கள் மீது ஹிஜ்ரி 2-ம் ஆண்டு கடமையாக்கப்பட்டது. இதற்கு காரணமாக ஒரு சரித்திர நிகழ்வும் உண்டு. நபி இப்ராகீம் (அலை) அவர்கள் தமது 86-ம் வயதில் குழந்தை வரம் கேட்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்தபோது அவர்களுக்கு இஸ்மாயீல் எனும் ஆண் குழந்தையை இறைவன் வழங்கினான். சில ஆண்டுகள் கழித்து அந்தக்குழந்தையை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவதாக கனவு கண்டார்.

    இந்த இறை உத்தரவை செயல்படுத்திட குழந்தையை அறுத்துப் பலியிட துணிந்தார். அவரின் தியாகத்தை ஏற்றுக்கொண்ட இறைவன் குழந்தைக்கு பதிலாக பிராணி ஒன்றை பலியிட வழிகாட்டினார். இதுகுறித்து திருக்குர்ஆன் கூறுவதாவது: "ஆகவே அவ்விருவரும் இறைவனின் விருப்பத்திற்கு முற்றிலும் வழிபட்டு இப்ராகீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட முகங்குப்புறக் கிடத்தினார். அச்சமயம் நாம் 'இப்ராகீமே என அழைத்து உண்மையாகவே நீங்கள் உங்களுடைய கனவை மெய்யாக்கி வைத்து விட்டீர்கள் என்றும் நன்மை செய்பவருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்' என்றும் கூறி 'நிச்சயமாக இது மகத்தானதொரு பெரும் சோதனையாகும்' என்றும் கூறினோம்.

    ஆகவே மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம். அவருடைய கீர்த்தியைப் பிற்காலத்திலும் நிலைக்க வைத்தோம்". (திருக்குர்ஆன் 37:103-108) 'நபியே நீர் உம் இறைவனை தொழுது குர்பானியும் கொடுப்பீராக' (திருக்குர்ஆன் 108:3) இந்த தியாகத்திருநாள் குறித்த நபிமொழிகள் வருமாறு: 'துல்ஹஜ் 10-ம் நாளன்று ஆதமின் மகன் செய்யும் செயல்களில் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது கால்நடைகளை குர்பானி கொடுப்பதாகும்.

    அவைகள் மறுமைநாளில் தமது கொம்புகளுடனும் ரோமங்களுடனும் கால்குளம்புகளுடனும் அவர்களை வந்தடையும். அறுக்கப்படும் பிராணிகளின் ரத்தங்கள் பூமியில் விழும் முன்பாகவே இறைவனிடம் அவை சென்றடைகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: திர்மிதி) 'குர்பானி கொடுப்பதினால் எங்களுக்கு என்ன கிடைக்கும்?' என நபித்தோழர்கள் வினவிய போது 'அதன் ஒவ்வொரு ரோமத்திற்கும் ஒரு நன்மை உண்டு' என நபி (ஸல்) பதில் தெரிவித்தார்கள். (அறிவிப்பாளர்: ஜைத் பின் அர்க்கம் (ரலி) நூல்: அஹ்மது) இறைவன் நமக்கு வழங்கிய வாழ்க்கை மற்றும் செல்வங்கள் கால்நடைகள் ஆகிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்திட தியாகப்பெருநாள் கொண்டாடப்படுகிறது.

    இதன்மூலம் இறை நெருக்கத்தையும் பெறமுடிகிறது. இறைவனுக்கு அடிபணிதலையும் காட்டமுடிகிறது. குர்பானி என்பது தமக்கும் தமது குடும்பத்தாருக்கும் அனைத்து சமுதாய ஏழை எளியோருக்கும் உணவு மற்றும் மாமிசங்களை வழங்கி உணவு வழங்குவதை விரிவுபடுத்தி பசியில்லாத சமுதாயத்தை உருவாக்குவதும் உறவுகளை ஆதரிப்பதும் விருந்தினர்களை உபசரிப்பதும் அண்டை அயலாரை அன்புடன் நடத்துவதும் நலிந்தோருக்கு தர்மம் செய்வதும் ஆகும்.

    குர்பானி என்பது நபி இப்ராகீம் (அலை) அவர்களின் தியாக வழிமுறையை நினைவு கூர்வதும் அதை கடைப்பிடிப்பதும் ஆகும். குர்பானி என்பது இறைவனின் கூற்றை உண்மைப்படுத்துவதும் இறைவிசுவாசத்தின் மீது உறுதியாக இருப்பதின் சாட்சியமும் ஆகும். இறைவன் பிரியப்படும் விதமாகவும் அவன் பொருந்திக் கொள்ளும் விதமாகவும் அவனது உத்தரவை வெகுவிரைவாக செயல்படுத்துவதும் தான் குர்பானியாகும்.


    பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.



    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்புநெறி காட்டிய நபிகள் நாயகத்தின் வழி நடக்கும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள். ஏழை-எளியோரின் பசிதீர்த்து கொண்டாடும் தியாகத்தின் திருநாள் இது. இந்த நாளில், "ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகள்; பிறகு நண்பர்கள்; அடுத்துதான் தங்களுக்கு" என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து, பயன்படுத்திக்கொள்ளும் பண்பையும், மனிதநேயத்தையும் இஸ்லாமிய பெருமக்கள் வெளிப்படுத்துகிறார்கள்.



    இத்தகைய உயரிய நெறியினை கடைப்பிடித்து வரும் இஸ்லாமிய சமூகத்தினர் அனைவரும் பக்ரீத் திருநாளை கொண்டாடி அன்பை பரிமாறிக்கொள்ளவும், நபிகளார் காட்டிய வழியில் அனைவரிடத்தில் அன்பு செலுத்தி கருணை காட்டிடவும் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.



    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:- உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், சகோதரத்துவமும், ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவி; விட்டுக்கொடுத்தலும், மத நல்லிணக்கமும், மனிதநேயமும் தழைத்தோங்க வேண்டும்; அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்று மனதார வாழ்த்துவதோடு எனது உளங்கனிந்த பக்ரீத்திருநாள் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


    • ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • அதில் ஈத் பண்டிகை அன்பையும், தியாகத்தையும் விளக்கும் புனித பண்டிகை என குறிப்பிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஈத் பண்டிகை அன்பையும், தியாகத்தையும் விளக்கும் புனித பண்டிகை என்று குறிப்பிட்டுள்ளார்.

    தியாகம் மற்றும் மனித குலத்திற்கு தன்னலமற்ற சேவையை வழங்கும் பாதையைப் பின்பற்ற இந்தப் பண்டிகை நம்மை ஊக்குவிக்கிறது.

    இந்நாளில் சமுதாயத்திற்கு பரஸ்பர சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தைப் பரப்ப நாம் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

    • சகோதரத்துவமும், ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட வேண்டும்.
    • விட்டுக்கொடுத்தலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்க வேண்டும்.

    சென்னை:

    பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

    உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இறை நினைவோடும், தியாகச் சிந்தனையோடும், பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், எனது உளங்கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே, இறைத் தூதரின் தியாகங்களை எண்ணிப் பார்த்து அவருடைய வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான்.

    இத்தியாகத் திருநாளில் பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்; துன்பப்படுபவர்களுக்கு உதவி புரியுங்கள், அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள்; எளியவர்களிடம் கருணை காட்டுங்கள், சிந்தனையிலும், நடத்தையிலும் தூய்மை உடையவராக இருங்கள் என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை அனைவரும் மனதில் நிறுத்தி வாழ்ந்தால், உலகில் அமைதி நிலவி, வளம் பெருகும்.

    சகோதரத்துவமும், ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட வேண்டும்; விட்டுக்கொடுத்தலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்க வேண்டும்; அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

    உலகோர் அனைவரும் ஒரே தாய், தந்தை வழிவந்தவர்கள் என்ற நபிகள் நாயகம் (ஸல்) கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம், ஏகத்துவம் போன்றவற்றை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ முற்படுவதே மனித இனத்தின் குறிக்கோளாகும். இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளாக கொண்டாடுகிற பக்ரீத் பண்டிகை, தியாகத்தை போற்றுகிற நாளாகும்.

    தியாகத்திலே பிறந்து, தியாகம் செய்வதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற, மத கோட்பாடுகளைப் போற்றி பாதுகாக்கிற வகையில் வாழ்ந்து வருகிற இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்கள்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

    உலக முஸ்லிம்களில் பலர் ஐந்தாவது கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்றி, தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    உலக முஸ்லிம்கள் கொண்டாடிடும் தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளில் முஸ்லிம் பெருமக்கள் அனைவருக்கும் இதயமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா:-

    கொடுங்கோலன் நம் ரூத்தின் அடக்குமுறைகளைத் துணிவுடன் எதிர்கொண்டு வென்ற இறைத் தூதர் இப்ராஹீம் மற்றும் அவரது அருமை மகனார் இஸ்மாயீல் ஆகியோரின் அரும்பெரும் தியாகத்தையும் இறைவனுக்கு அடிபணியும் ஒப்பற்ற தன்மையையும் நினைவு கொள்ளும் வகையில் தியாகத்திருநாள் உலகமெங்கும் வாழும் முஸ்லிம்களால் கொண்டாடப்படுகின்றது.

    இந்திய துணைக்கண்டத்தில் மாத்திரமல்லாமல் முழு உலகிலும் அமைதியும் வளமும் சுதந்திரமும் உரிமைகளும் மேலோங்குவதற்கும் பிரார்த்தனை செய்வோம். அனைவருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    மேலும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணிராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், திருநாவுக்கரசர் எம்.பி., சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ஹாரூன் ரசீது ஆகியோரும் பக்ரீத் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    • பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 30-ந்தேதி அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
    • பண்டிகையை கொண்டாடி திரும்புவதில் சிரமம் இருக்காது.

    ராமநாதபுரம்

    மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹி ருல்லா எம்.எல்.ஏ. கூறிய தாவது:-

    தமிழ்நாட்டில் ஹஜ் பெருநாள் எனும் பக்ரீத் பண்டிகை நாளை (29-ந்தேதி) கொண்டாட உள்ளது. இதையொட்டி 30-ந்தேதியை (வெள்ளிக் கிழமை) அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என முஸ்லிம்கள் எதிர் பார்த்து உள்ளனர்.

    வருகிற 1, 2-ந்தேதி வார விடுமுறை என்பதால் மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள் தமது சொந்த ஊர்களில் பண்டி கையை கொண்டாடி திரும்புவதில் சிரமம் இருக்காது. மேலும் ஒரு சில கல்வி நிறுவனங்களில்

    30-ந்தேதி அன்று தேர்வு களும் நடைபெற உள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது.

    சொந்த ஊருக்குச் செல்பவர்கள் திரும்பிவர அவகாசம் அளிக்கும் வகையில் பக்ரீத் பண்டி கைக்கு அடுத்த நாளான 30-ந்தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • பக்ரீத் பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் ஆடுகளை குர்பானி கொடுப்பது வழக்கம்.

    நெல்லை:

    தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக விளங்கும் எட்டயபுரம் ஆட்டுச்சந்தைக்கு அடுத்தப்படியாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கால்நடை சந்தை புகழ்பெற்றது.

    செவ்வாய்க்கிழமை நடைபெறும் இந்த சந்தைக்கு தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வருவது வழக்கம். அன்றைய தினம் சந்தைக்கு ஆயிரக்கணக்கில் ஆடுகள் கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படும். இங்கு ஆடுகள் மட்டுமின்றி மாடுகள், கோழிகள், மீன், கருவாடு உள்ளிட்ட பொருட்கள் விற்பனையும் தனித்தனி இடங்களில் நடைபெறும்.

    வழக்கமாக சுமார் ரூ.2 கோடி அளவில் வர்த்தகம் நடைபெறும் நிலையில் ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் சுமார் ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனை நடக்கும்.

    இந்நிலையில் பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் ஆடுகளை குர்பானி கொடுப்பது வழக்கம். இதையொட்டி இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தைக்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேல் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அதிகளவில் செம்மறி ஆடுகள் வந்திருந்தது. இதேபோல் வெள்ளாடுகளும் வந்தன.

    அவற்றை வாங்குவதற்காக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த வியாபாரிகள் குவிந்தனர். அவர்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர். பிற்பகலில் செம்மறி ஆடுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. ஆடுகள் தரத்திற்கேற்ப ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 35 ஆயிரம் வரை விற்கப்பட்டது.

    அதிகபட்சமாக பொட்டு வகை ஆடுகள் ரூ. 35 ஆயிரத்திற்கு விற்பனையானது. இதனால் இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தை களைக்கட்டி காணப்பட்டது. இது தொடர்பாக வியாபாரிகள் கூறும்போது, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செம்மறி, வெள்ளாடு என ஆயிரக்கணக்கான ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தோம். இதில் செம்மறி ஆடுகள் விற்றுத்தீர்ந்த நிலையில் வெள்ளாடுகள் மட்டும் குறைந்த அளவில் உள்ளன. இன்று சுமார் 3 ஆயிரம் ஆடுகள் விற்பனையானது. இதனால் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடந்துள்ளது.

    ஆயிரக்கணக்கான பொது மக்களும், நூற்றுக்கணக்கான வியாபாரிகளும் திரளும் மேலப்பாளையம் கால்நடை சந்தையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் அனைவரும் வெயில், மழையில் நிற்கும் நிலை உள்ளது. எனவே ஷெட்டுகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் இரண்டு பெருநாளை கொண்டாடுவார்கள்.
    • ஈதுல் அல்ஹா எனும் இந்த தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் இரண்டு பெருநாளை கொண்டாடுவார்கள். ஒன்று ரம்ஜான் பண்டிகை. மற்றொன்று பக்ரீத் பண்டிகை ஆகும்.புனித ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருந்து அதன் இறுதியில் கொண்டாடப்படுவது ரம்ஜான் பண்டிகையாகும்.

    இந்த நிலையில் நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்–பட்டது. இறைத்தூதர் இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இப்ராஹீம் நபி தான் கண்ட கனவின்படி தனது மகன் இஸ்மாயிலை அறுத்துப் பலியிட துணிந்தார். அப்போது வந்த இறைக்கட்டளை மகனை அறுக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ஒரு ஆட்டை இறைவனுக்காக பலியிடுமாறும் கூறப்பட் டது. அத–ன்படியே அவர் அக்கடமையை நிறைவேற்றினார்.இறைக்கட்டளை என்ற தும் தனது மகனையே பலி கொடுக்க முயன்ற இந்தத் தியாகம் தான் இந்த பண்டிகையின் பின்னணியாகும்.

    இந்த தியாகத் திருநாளில் சிறப்பு தொழுகை நடத்தியும், கால்நடைகளான ஆடு, மாடு, ஒட்டகங்களை பலியிட்டு அதன் இறைச்சிகளை உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் கொடுத்தும் கொண்டாடப்படும்.ஈதுல் அல்ஹா எனும் இந்த தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. இத்திருநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், பல்லடம், உடுமலை, தாராபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அைனத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பள்ளிவாசலில் திருப்பூர் மாநகர பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்காேனார் ஒன்று கூடி உலக அமைதி வேண்டி கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்கு பின் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். இதுபோல் திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளியிலும் சிறப்பு தொழுகை நடந்தது. இதிலும் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று பக்ரீத் பண்டிகை தொழுகையில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் பெரிய பள்ளிவாசல், காதர்பேட்டை பள்ளிவாசல், கோம்பைத்தோட்டம் பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் இன்று காலை பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. அதுபோல் பெரிய பள்ளிவாசலில் தொழுகை நடந்தது. சி.டி.சி. கார்னர் அல் அமீன் பள்ளி வளாகத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர். பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு, குர்பானி கொடுத்து கொண்டாடினர்.

    • இந்த தியாகத் திருநாள் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
    • உலக மக்கள் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என சிறப்பு தொழுகையில் வழிபாடு நடத்தினோம்.

    கோவை:

    கோவையில் ஜாக் கமிட்டி பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள் இன்று தியாக திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகையினை உற்சாகமாக கொண்டாடினர்.

    குனியமுத்தூரில் உள்ள ஆயிஷா திருமண மண்டபத்தில் இன்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. கோவையில் காலையில் இருந்து மழை பெய்து வந்ததன் காரணமாக மைதானத்தில் நடத்தாமல் திருமண மண்டபத்திற்கு வைத்து சிறப்பு தொழுகை நடந்தது. இந்த தியாகத் திருநாள் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

    இது குறித்து இஸ்லாமியர்கள் கூறியதாவது:- சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் விதமாக தியாக திருநாள் கொண்டாட படுகிறது. அதிகாலையில் எழுந்து புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் ,ஆடு,மாடு போன்றவற்றை குர்பானி கொடுத்து அந்த இறைச்சியின் ஒரு பங்கை ஏழை எளியவர்களுக்கும், ஒரு பங்கை உற்றார் உறவினர்களுக்கும், ஒரு பங்கை தங்களுக்கும் என பிரித்து கொடுத்து மகிழ்ச்சியுடன் தியாக திருநாளை கொண்டாடி வருகிறோம்.

    உலக மக்கள் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என சிறப்பு தொழுகையில் வழிபாடு நடத்தினோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பக்ரீத் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
    • பக்ரீத் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் :-

    'தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகப் பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகள்!

    அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும்; அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும்' என்ற உயரிய கோட்பாடுகளோடு, நபிகள் நாயகம் அளித்த போதனைகளைப் பின்பற்றி இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றும் சகோதரர்கள் இந்தப் பக்ரீத் பண்டிகையை ஆண்டு தோறும் கொண்டாடுகிறார்கள்.

    நபிகள் நாயகத்தின் போதனைகளுக்குச் சிறப்பும், பெருமையும் சேர்க்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இந்தத் தியாகப் பெருநாளை மகிழ்ச்சியுடனும்; கொரோனா பரவலைக் கவனத்தில் கொண்டு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, தியாகப் பெருநாளைப் பாதுகாப்புடன் கொண்டாடிட வேண்டும் எனக்கேட்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி:-

    நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் தடைக் கற்களாகத் திகழ்கின்ற அதர்மம், அநீதி, சூழ்ச்சி, வன்மம் ஆகியவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்து, நற்சிந்தனைகளும், நன்னெறிகளும் வெற்றிபெற எண்ணற்றத் தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் தேவைப்படும். இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலை நிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

    இந்த இனிய திருநாளில் எல்லோரிடத்திலும் இறை உணர்வும், தியாகச் சிந்தனையும், சகோதரத்துவமும் மலரட்டும்; அது மனித குல நல்வாழ்விற்கு மகோன்னத மாய் வழிகோலட்டும். எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

    சமீப காலமாக, இஸ்லாமியர்கள் சந்தித்து வருகிற அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தால் அவர்களது உடமைகள் புல்டோசர்கள் மூலமாக இடித்து தள்ளப்படுகின்றன. பா.ஜ.க.வின் புல்டோசர் கலாச்சாரம் சிறுபான்மையின மக்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய அடக்குமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றம் எடுக்கின்ற நடவடிக்கைகள் கூட உரிய பலனைத் தர முடியாத சூழல் உருவாகி வருகிறது. இந்த அவல நிலையில் இருந்து சிறுபான்மையின மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

    தியாகத்திலே பிறந்து, தியாகம் செய்வதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற, மத கோட்பாடுகளைப் போற்றி பாதுகாக்கிற வகையில் வாழ்ந்து வருகிற இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    பக்ரீத் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது. அந்த வகையில் இது மனிதநேயத் திருவிழாவும் ஆகும். இறைவனுக்காக மகனையே பலியிடத் துணியும் அளவுக்கு இஸ்லாமியர்களுக்கு இறைபக்தி உண்டு என்பதையே இத்திருவிழா நினைவூட்டுகிறது. தியாகத்தை போற்றுவதே இத்திருநாளின் நோக்கமாகும்.

    பக்ரீத் திருநாளை முன்வைத்து இஸ்லாம் சொல்லும் செய்தியைத் தான் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு மதங்கள் கூறுகின்றன. அனைத்து மதங்களும் சொல்லும் செய்தி அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்; இல்லாதவர்களுக்கு உதவுங்கள் என்பது தான். இந்தப் பாடத்தை புரிந்து நடந்தாலே உலகில் அமைதியும், சகோதரத்துவமும் தழைக்கும். அதன்படி அன்பு, நல்லிணக்கம், ஈகை, மாற்றுத்திறனாளிகள் மீதான அக்கறை என்றும் நீடிக்க வேண்டும்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

    நிறம், சாதி, மொழி, இனம், தேசம் என்ற வரம்புகளைத் தகர்த்து, 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்ற உணர்வுடன், அரபா பெரு வழியில் மானுட சமுத்திரமாக மக்கள் சங்கமித்து, வழக்க வழிபாடுகளில் திளைத்திருக்கும் மகோன்னதம் இன்று அரங்கேறுகிறது; ஈகை உணர்வால், வையகத்தை அய்யமின்றி வாகை சூடலாம் என்று அறிவிக்கின்றது.

    தமிழ்நாட்டில் காலங்காலமாக உறவுமுறை கூறி, உணர்வுபூர்வமாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம் பெருமக்கள், சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுச்சேர்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள் ஆகும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-

    உலகளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் பண்டிகை பக்ரீத் பண்டிகை. இஸ்லாமியர்களின் அடிப்படை கடமைகளில் 5-வது கடமையாக ஹஜ் புனித பயணமாக மெக்கா செல்வதாகும். இப்புனித பயணத்தின் இறுதி கடமையாக இறைவனுக்கு பலியிட்டு அந்த இறைச்சியை ஏழை, எளியவர்களுக்கும், நண்பர்களுக்கும் அளித்து இந்நாளை கொண்டாடுவது இப்பண்டிகையின் தனிச்சிறப்பு.

    பக்ரீத் திருநாளில், நாட்டில் சமத்துவமும், சகோதரத்துவமும் தழைக்கவும், எல்லோருக்கும் எல்லா நன்மைகளும், வளமும், நலமும் பெறவும், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்களை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:-

    பக்ரீத் போதிக்கும் பாடத்தை அனைவரும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம், மகிழ்ச்சி, வளம் உள்ளிட்ட அனைத்தும் தழைத்தோங்க வேண்டும் என்று கூறி, அத்தகைய நிலையை உருவாக்குவதற்கு உழைக்க இந்த நன்னாளில் சபதம் ஏற்போம்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    அன்பு, அறம், அமைதி, ஈகை, இரக்கம், கருணை ஆகிய நற்பண்புகளுடன் மனிதகுலம் அடுத்தக்கட்ட வளர்ச்சி பாதையில் செல்வதற்கு விடாமுயற்சியுடன் ஒற்றுமையாக பாடுபடுவோம். மதநல்லிணக்கத்தை பேணி சமத்துவ, சகோதரத்துவத்துடன் அனைவரும் வாழ்வில் மென்மேலும் உயரவும், இன்புற்று வாழவும் இந்த பக்ரீத் திருநாள் ஆசி புரியட்டும்.

    மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:-

    மாபெரும் இறைத்தூதர்கள் இப்ராஹீம் மற்றும் இஸ்மாயீல் ஆகியோரின் அரும்பெரும் தியாகத்தையும் இறைவனுக்கு அடிப்பணியும் ஒப்பற்ற தன்மையையும் நினைவு கொள்ளும் வகையில் தியாகத்திருநாள் உலகமெங்கும் வாழும் முஸ்லிம்களால் கொண்டாடப்படுகின்றது.

    தியாகத்திருநாளை கொண்டாடும் இத்தருணத்தில் சமத்துவமும் சகோதரத்துவமும் சமூக நல்லிணக்கமும் நாட்டில் தழைத்தோங்குவதற்கும், கொடுங்கோன்மை, அடக்குமுறை, சர்வாதிகாரம் முதலிய தீமைகள் வீழ்வதற்கும் இறைவனை வேண்டுவோம். நாட்டில் அமைதியும் வளமும் சுதந்திரமும் உரிமைகளும் மேலோங்குவதற்கும் பிரார்த்தனை செய்வோம்.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழகம் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்பட பலரும் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்கிறார்கள்.
    • இங்கு கேரளா வியாபாரிகள் அதிகளவில் வந்து கால்நடைகளை வாங்கி செல்கிறார்கள்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பஸ் நிலையம் அருகே கோவை மெயின் ரோட்டில் கால்நடை மற்றும் வார சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு புதன்கிழமை கால்நடை சந்தையும் வியாழக்கிழமை வார சந்தையும் நடந்து வருகிறது.

    இந்த சந்தை பெள்ளாச்சிக்கு அடுத்தப்படியாக தமிழகத்திலேயே 2-வது பெரிய சந்தையாக திகழ்ந்து வருகிறது. இந்த சந்தைக்கு சத்தியமங்கலம், புளியம்பட்டி, பவானிசாகர், கோபி செட்டிபாளையம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கால்நடைகளை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.

    மேலும் கரூர், நாமக்கல், கோவை, திருப்பூர் என பல பகுதிகளில் இருந்தும் ஆடுகள் மற்றும் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்கிறார்கள். இங்கு கேரளா வியாபாரிகள் அதிகளவில் வந்து கால்நடைகளை வாங்கி செல்கிறார்கள்.

    இதனால் வாரம் தோறும் இங்கு சுமார் ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆடு மற்றும் மாடுகள் விற்பனை நடந்து வருகிறது. மேலும் பண்டிகை மற்றும் விஷேச நாட்களில் வியாபாரிகள் அதிகளவில் வருவார்கள். இதனால் ரூ.15 லட்சத்துக்கு மேல் ஆடுகள் விற்பனை நடக்கும்.

    இந்த நிலையில் வரும் 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கு குர்பானி கொடுப்பார்கள். இதற்காக அவர்கள் ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

    இதையொட்டி புஞ்சை புளியம்பட்டி பகுதியில் நடந்த சந்தைக்கு ஏராளமான கால்நடைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஈரோடு மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்தும் விவசாயிகள் பலர் ஆடுகளை கொண்டு வந்திருந்தனர்.

    மேலும் புளியம்பட்டி சந்தைக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    இந்த சந்தையில் ஆடுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் இங்கு சுமார் ரூ.50 லட்சத்துக்கு மேல் ஆடுகள் விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×