search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andipatti"

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக ஒன்றிய அலுவலகத்தில் நேற்று இரவு முதல் 9 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். #ITRaids #LokSabhaElections2019 #Andipatti
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டியில் உள்ள வணிக வளாகத்தின் கீழே செயல்படும் அமமுக அலுவலகத்தில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய 9 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 1.48 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மொத்தம்  94 பண்டல்கள் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த பண்டல்களில் வாக்காளர் பெயர் பட்டியல், வார்டு எண்ணுடன் இருந்தது. அத்துடன் ஒரு தபால் வாக்குச்சீட்டும் கைப்பற்றப்பட்டது. அதில், அமமுக வேட்பாளருக்கு வாக்களிக்கப்பட்டிருந்தது.



    ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக மொத்தம் 2 கோடி ரூபாய் பணம் கொண்டு வந்துள்ளனர்.  வருமான வரி சோதனையின்போது, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் சிலர் பணத்துடன் தப்பி ஓடிவிட்டனர். #ITRaids #LokSabhaElections2019 #Andipatti
    ஆண்டிப்பட்டியில் நடந்த சோதனையின்போது சிக்கிய ரூ.1.50 கோடி பணம் அதிமுகவுக்கு சொந்தமானது என அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #AMMKCandidate #AndipattiITRaids
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக ஒன்றிய அலுவலகத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், ரூ.1.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.



    ஆனால், கைப்பற்றப்பட்ட பணம் அதிமுகவுக்கு சொந்தமானது என ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியின் அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

    “அதிமுக பிரமுகருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் பணம் இருப்பதாக நாங்கள் தான் தகவல் தந்தோம். ஆனால், அதிமுகவை காப்பாற்றுவதற்காக அந்த பணம் அமமுகவின் பணம் என பொய்யாக குற்றம்சாட்டுகிறார்கள். போலீசார் வானத்தை நோக்கி சுடாமல், எங்களை அச்சுறுத்துவதற்காக டம்மி புல்லட் மூலம் வணிக வளாகத்திலேயே சுட்டனர்” எனவும் வேட்பாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #AMMKCandidate #AndipattiITRaids

    தேனி ஆண்டிப்பட்டியில் இயங்கி வந்த அமமுக ஒன்றிய அலுவலகத்தில் நடந்த வருமானவரி சோதனை நிறைவு பெற்றதாக அதிகாரிகள் தகவல். #Andipatti #AMMK #Election2019 #ECRaid
    தேனி:

    ஆண்டிப்பட்டியில் அமமுக கட்சியின் அலுவலகம் உள்ளது. இங்கிருந்து வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அவர்கள் அலுவலகத்தில் போலீசார் உதவியுடன் சோதனை செய்ய முயன்றனர்.

    அப்போது அமமுக கட்சியின் தொண்டர்கள் அவர்களை தடுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் வானத்தை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    மேலும் அவ்விடத்திற்கு கூடுதலாக காவலர்களும், அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டனர்.  அமமுக அலுவலகத்தில் போலீசார் உதவியுடன் வருமான சோதனை அதிகாரிகள் சோதனை செய்யதனர்.

    அப்போது வாக்காளர்களுக்கு கொடுக்க பாக்கெட்களில் கட்டுக்கட்டாக பணம்  வைத்திருந்ததை வருமான வரித்துறையினர் கண்டறிந்து பணத்தை பறிமுதல் செய்தனர்

    வாக்காளர்களுக்கு ரூ.300 வீதம் பணம் பட்டு பட்டுவாடா செய்ய திட்டமிட்டிருந்த தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு கொடுக்க பாக்கெட்களில் கட்டுக்கட்டாக பணத்தை பிரித்து ஒவ்வொருவருக்கும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



    அமமுக ஆதரவாளர்கள் கடையில் பணத்தை பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகளை கண்டதும் அமமுக ஆதரவாளர்கள் தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  தொடர்ந்து அமமுக ஆதரவாளர்கள் கடையில் வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

    தேனி ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக ஒன்றிய அலுவலகத்தில்  நேற்று இரவு 8 மணி முதல் விடிய விடிய சுமார் 10 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வாக்காளர் பட்டியலுடன் பணம் இருந்ததாக அதிகாரிகள் தகவல் அளித்தனர்.   மேலும் அமமுக ஒன்றிய அலுவலகத்தில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.1.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    தேனி ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக ஒன்றிய அலுவலகத்தில் உள்ளே நுழைய முயன்ற போது அவர்களை தடுத்தது தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக அமமுக மாவட்ட துணைச் செயலாளர் பழனி, சுமன்ராஜ், பிரகாஷ், மது ஆகியோர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
    #Andipatti #AMMK #Election2019 #ECRaid
    தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமமுக அலுவகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்தனர். #Andipatti #Election2019
    ஆண்டிப்பட்டியில் அமமுக கட்சியின் அலுவலகம் உள்ளது. இங்கிருந்து வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அவர்கள் அலுவலகத்தில் போலீசார் உதவியுடன் சோதனை செய்ய முயன்றனர்.

    அப்போது வாக்காளர்களுக்கு கொடுக்க பாக்கெட்களில் கட்டுக்கட்டாக பணம்  வைத்திருந்ததை வருமான வரித்துறையினர் கண்டறிந்து பணத்தை பறிமுதல் செய்தனர்

    வாக்காளர்களுக்கு ரூ.300 வீதம் பணம் பட்டு பட்டுவாடா செய்ய திட்டமிட்டிருந்த தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு கொடுக்க பாக்கெட்களில் கட்டுக்கட்டாக பணத்தை பிரித்து ஒவ்வொருவருக்கும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அமமுக ஆதரவாளர்கள் கடையில் பணத்தை பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகளை கண்டதும் அமமுக ஆதரவாளர்கள் தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    தொடர்ந்து அமமுக ஆதரவாளர்கள் கடையில் வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். பணம் எண்ணும் பணி நடைபெற்று வரகிறது. #Andipatti #Election2019
    ஆண்டிப்பட்டி அருகே கிடப்பில் போடப்பட்ட பாசன திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம மக்கள் கால்நடைகளுடன் போராட்டம் நடத்தினர்.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி யூனியனுக்குட்பட்ட 30 பஞ்சாயத்துகள் உள்ளன. இப்பகுதியில் ஏராளமான கண்மாய்கள் மற்றும் சிறு குளங்கள் உள்ளன. மழைக்காலத்தில் மட்டுமே இங்கு தண்ணீர் வரத்து இருக்கும். எனவே தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க திப்பரவு அணை திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அத்திட்டத்தை செயல்படுத்த எவ்வித முயற்சியும் மேற் கொள்ளாததால் வறட்சி காலத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

    எனவே கம்பம் முல்லைப் பெரியாற்றில் இருந்து ராட்சத குழாய் மூலம் ஆண்டிப்பட்டி கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வர விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    அதன்படி 47 கி.மீ தூரம் குழாய் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் தேர்தல் அறிக்கையில் இத்திட்டம் இடம் பெற வில்லை.

    எனவே இப்பிரச்சினையை வலியுறுத்தி பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் தெரிவித்து கடந்த 4 நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 4-ம் நாளாக இன்று கொட்டப்பட்டி கிராமத்தில் கால்நடைகளுடன் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

    இதனால் ஆண்டிப்பட்டி யூனியனுக்குட்பட்ட பல கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு கோ‌ஷம் பலமாக எதிரொலித்து வருகிறது.

    ஆண்டிப்பட்டி அருகே சென்டர் மீடியனில் பைக் மோதி வாலிபர் பலியானார்.

    ஆண்டிப்பட்டி:

    வத்தலக்குண்டு அருகில் உள்ள விருவீடு பகுதியை சேர்ந்த பேயத்தேவர் மகன் கபிலன் (வயது21). இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் ராஜலிங்கம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் போடியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு வந்தார். பின்னர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அரப்படிதேவன்பட்டி என்ற இடத்தில் வந்தபோது சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனில் பைக் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கபிலன் உயிரிழந்தார். இது குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகில் உள்ள குமணன்தொழு மன்னூத்து பகுதியை சேர்ந்தவர் மொக்கையன் (வயது45). இவர் வெள்ளிமலை எஸ்டேட்டில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவருக்கு இருமல் இருந்ததால் வீட்டில் இருந்த கால் வலி தைலத்தை டானிக் என நினைத்து குடித்து விட்டார்.

    உடல்நிலை பாதிக்கப்பட்டு கடமலைக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். மயிலாடும்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜதானி அருகில் உள்ள மத்துசங்கிலிபட்டி தெற்கு தெருவை சேர்ந்த முருகன் மகன் ரஞ்சித் (24). இவருக்கு திருமணம் ஆகி மனைவியுடன் ஏற்பட்டு கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வந்தார். வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி வந்தார். ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் வீட்டில் இருந்த ஆசிட்டை குடித்து விட்டார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். ராஜதானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ராஜதானி அருகில் உள்ள கன்னியப்பபிள்ளைபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (58). குடி பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தங்கராஜ் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஆண்டிப்பட்டி அருகே தோட்டத்துக்கு தீ வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே கி.காமாட்சிபுரம் தென்பழஞ்சி தோட்டத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது42). அதே பகுதியில் சொந்தமாக நிலம் வைத்து வெள்ளைச் சோளம் பயிரிட்டு வருகிறார். மேலும் கால்நடைகளும் வளர்த்து வருவதால் தீவனங்களை தோட்டத்தில் வைத்திருந்தார்.

    இந்த தோட்டத்தில் திடீரென தீப்பற்றியது. அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

    இது குறித்து ஆண்டிப்பட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்தபோதும் வெள்ளைச் சோளம், கால்நடை தீவனங்கள், வைக்கோல் போர் அனைத்தும் தீயில் கருகி நாசமானது.

    அவரது தோட்டத்துக்கு அருகே அதே பகுதியை சேர்ந்த பிரேம் குமார் என்பவரது செல்போன் கண்டெடுக்கப்பட்டது. எனவே அவர்தான் தனது தோட்டத்திற்கு தீ வைத்திருக்க கூடும் என செல்வம் ராஜதானி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிரேம்குமார் தீ வைத்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டியில் அனுமதி இன்றி மது விற்ற கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே வருசநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிங்கராஜபுரம் அல்லல்ஓடை பகுதியில் குமணன்தொழுவை சேர்ந்த வேலுத்தேவர்(வயது42) என்பவர் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டார்.

    அவரிடமிருந்த அரைகிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    மூலக்கடை எதிரே உள்ள பெட்டிக்கடையில் சிறப்பாறையை சேர்ந்த அன்பழகன்(43), அதேபகுதியில் துரைசிங்கம்(42), குமணன்தொழு கருப்பசாமிகோவில் அருகே உள்ள மீராதெருவை சேர்ந்தவர் ராஜா(40) மற்றும் கடமலைக்குண்டு வசந்தகுமார்(31) ஆகியோர் அனுமதி இன்றி மதுபதுக்கி விற்றதாக போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து 150-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ஆண்டிப்பட்டி அருகே முன் விரோதத்தில் முதியவரை தாக்கிய கும்பலில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே டி.சேடப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 71). அதே ஊரைச் சேர்ந்த முனிசாமி (வயது 54). ராஜனின் மகன் பால்பாண்டி. திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். பால்பாண்டிக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர்.

    முனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் அடிக்கடி இதனை குத்திக்காட்டி ராஜனிடம் தகராறு செய்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பால்பாண்டி அவர்களை திட்டி விட்டு சென்றார். இதனை மனதில் வைத்துக் கொண்டு முனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் ராஜனிடம் பிரச்சினை செய்தனர்.

    சம்பவத்தன்று முனிசாமி அவரது மனைவி சீனியம்மாள் மகன் நாகேந்திரன் ஆகியோர் ராஜனை தாக்கியுள்ளனர். இதனை தடுக்க வந்த ராஜனின் மனைவி மணித்தாயும் தாக்கப்பட்டார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து முனிசாமி மற்றும் நாகேந்திரனை கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி அருகே பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள மயிலாடும்பாறை காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கம். இவரது மகள் முகிதா (வயது 14). தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக இவருக்கு வயிற்று வலி இருந்து வந்தது.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் வலி குறையவில்லை. இதனால் மனமடைந்த மாணவி தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டிய நிலையில் இருந்தார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகே கோவிலில் சோலார் பேனல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குண்டு கண்டமனூர் சாலையில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலை கடமலைக்குண்டுவைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் பராமரித்து இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று வழக்கம் போல் பூஜைகள் முடிந்ததும் கோவில் கதவை மூடிச் சென்றார். மறு நாள் காலை வந்து பார்த்த போது கோவிலில் இருந்த சோலார் பேனல் திருடப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். வரு‌ஷநாடு அருகே உள்ள தும்மக் குண்டுவைச் சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 22), விக்னேஷ் (24) ஆகியோர் சோலார் பேனலை திருடியது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த சோலார் பேனலையும் பறிமுதல் செய்தனர்.

    ×