search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்டிபட்டி"

    • மக்கள் போலீஸ் நிலையத்திற்கே பூட்டு போட்டால் தங்கள் குறைகளை யாரிடம் தெரிவிப்பது என கூறினர்.
    • போலீஸ் நிலையத்திற்கு பூட்டு போட்ட சம்பவம் சமூக வளைதலங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி போலீஸ் சரகத்திற்கு உள்பட்ட ஏத்தகோவில் போலீஸ் நிலையம் மாவட்டத்தின் கடைசி எல்லையில் அமைந்துள்ளது. இதற்கு அடுத்து கரடு பகுதியை கடந்தால் ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் நகரங்களை அடையலாம்.

    இந்த போலீஸ் நிலையத்தில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் பணியில் உள்ளனர். தேனி மாவட்டத்தின் பெரும்பாலான போலீஸ் நிலையங்களில் காவலர்கள் பற்றாக்குறை காரணமாக ஒருசிலர் மட்டுமே பணியில் இருப்பது வாடிக்கையாக உள்ளது.

    இந்நிலையில் நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்திற்காக தேனி வருகை தந்தார். இதனையொட்டி பாதுகாப்பு பணிக்காக பெரும்பாலான போலீஸ் நிலையங்களில் போலீசார் அங்கு சென்றுவிட்டனர். இதேபோல் ஏத்தகோவில் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து போலீசாரும் அங்கு சென்றுவிட்டதால் போலீஸ் நிலையத்திற்கு பூட்டு போட்டனர்.

    இதைபார்த்த அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையத்திற்கே பூட்டு போட்டால் தங்கள் குறைகளை யாரிடம் தெரிவிப்பது என கூறினர். மேலும் போலீஸ் நிலையத்திற்கு பூட்டு போட்ட சம்பவம் சமூக வளைதலங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

    • ஆண்டிபட்டியில் மாலை நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் கிராம மக்கள் ரெயில் நிலையத்தை கடந்து செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர்.
    • இதற்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    மதுரை-போடி வரை அகல ரெயில் பாதை பணிகள் முடிந்து கடந்த 15-ந் தேதி முதல் போடியில் இருந்து மதுரை, சென்னைக்கு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    தேனி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக உள்ள ஆண்டிபட்டி பகுதி மக்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 11 ஆண்டுகளுக்கு பின்னர் ரெயில் வசதி ஏற்படுத்தப்பட்டதால் ஆர்வமுடன் பயணித்து வருகின்றனர்.

    மதுரையில் இருந்து தினசரி காலை 9.24 மணிக்கும், சென்னையில் இருந்து வாரம் 3 முறை இயக்கப்படும் குளிர்சாதன விரைவு ரெயில் காலை 8.20 மணிக்கும் ஆண்டிபட்டிக்கு வருகிறது.

    இதேபோல் மதுரைக்கு மாலை 6.34 மணிக்கும், சென்னைக்கு இரவு 9.10 மணிக்கும் ரெயில்கள் திரும்பி செல்கின்றன. இந்தநேரங்கள் தவிர மற்ற நேரங்களில் ரெயில் நிலையம் பூட்டப்படுகிறது. ஆண்டிபட்டி ரெயில் நிலையத்தை கடந்து ஏராளமான பொதுமக்கள் கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.

    ஆனால் மின் விளக்கு, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக மாலை நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் கிராம மக்கள் ரெயில் நிலையத்தை கடந்து செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர். மேலும் வெளியூர்களில் இருந்து முன்கூட்டியே வரும் பயணிகள் ரெயில் நிலையம் பூட்டப்பட்டு ள்ளதால் வெளியிலேயே காத்திருக்கும் அவல நிலை உள்ளது.

    இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் பலமுறை புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டிபட்டி பகுதியில் ரெயில் சேவை தொடங்கப்பட்டது மகிழ்ச்சி அளித்தாலும் ரெயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

    எனவே இதற்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×