search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 பேர் மீது வழக்கு"

    • வீரசின்னம்பட்டி பிரிவில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை நம்பர்களின் அடிப்படையில் விற்பனை செய்தனர்.
    • அவர்களிடம் இருந்த ரூ.6 ஆயிரத்து 300, பில்புக், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையிலான போலீசார் சாணார்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது வீரசின்னம்பட்டி பிரிவில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை நம்பர்களின் அடிப்படையில் விற்பனை செய்த அலங்காநல்லூரை சேர்ந்த கண்ணன்( வயது 38), கன்னியாபுரத்தை சேர்ந்த சுரேந்திரன்( வயது 43) ஆகிய 2 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர்.

    அவர்களிடம் இருந்த ரூ.6 ஆயிரத்து 300, பில்புக், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.மேலும் இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்குபதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • விருதுநகர் அருகே சிற்பக்கூட ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி(வயது58). அங்குள்ள சிற்பக்கூடம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் சிற்பக்கூடத்தில் பணியில் இருந்தபோது தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றினர்.

    இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு கார் ஷெட்டில் உள்ள வாட்ச்மேன் அறையில் தூக்கில் தொங்கியபடி இருப்பதாக அவரது மனைவிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மனைவி, உறவினர்களுடன் அங்கு சென்று அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் பாண்டியன் நகர், கே.டி.கே. தங்கமணி காலனியை சேர்ந்தவர் ராமர்(வயது50). இவர் தனக்கு அடிக்கடி தற்கொலை எண்ணம் ஏற்படுவதாக மனைவியிடம் கூறி வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ஹரி முனீஸ்வரன், பாண்டியன் நகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்டி இருந்த ஆடுகளில் கிடாவை காணவில்லை.
    • போலீசார் மாணிக்கம், விக்னேசை கைது செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்த கெஞ்சனூர், புது தோட்டத்தை சேர்ந்தவர் பூவாத்தாள் (57). இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று ஆடுகளை தோட்டத்திற்கு அருகே உள்ள காலியிடத்தில் கட்டி இருந்தார்.

    ஒரு மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது கட்டி இருந்த ஆடுகளில் கிடாவை காணவில்லை.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    பக்கத்து தோட்டத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் 2 பேர் ஆட்டை திருடி சென்றது பதிவாகி இருந்தது. இதை வைத்து போலீசார் துப்பு துலுக்கினர்.

    சத்தியமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில் பவானிசாகர் அருகே பகுத்தம்பாளை யத்தை சேர்ந்த மாணிக்கம் (31), கெஞ்சனூரை சேர்ந்த அப்புசாமி என தெரிய வந்தது.

    இதற்கு உடந்தையாக வடக்குப்பேட்டையை சேர்ந்த விக்னேஷ் (32) என்பவர் இருந்ததும் தெரியவந்தது. போலீசார் மாணிக்கம், விக்னேசை கைது செய்தனர்.

    இதில் அப்புசாமி 2 நாட்களுக்கு முன்பு பவானிசாகர் போலீஸ் நிலையத்தில் பதிவாகியிருந்த வழக்கில் ஒன்றில் கைது செய்யப்பட்டார்.

    • ரெயில் நிலையத்தில் போலீசார் பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனையிட்டனர்.
    • மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டும் சோதனையில் ஈடுப்பட்டனர்.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு மக்கள் இன்று முதல் செல்ல தொடங்கியுள்ளனர்.

    ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று மாலை முதலே வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று இரவு முதல் தீபாவளியை கொண்டாடும் வகையில் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் ஈரோடு ரெயில் நிலையத்தில் நேற்று முதல் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் தங்கி இருக்கும் பிற மாவட்ட தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு தீபாவளி கொண்டாட செல்ல தொடங்கியுள்ளனர்.

    இதனால் ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்வே இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ெரயிலில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி பட்டாசு கொண்டு செல்லப்பட்டால் ரூ.5000 அபராதம் விதிக்க ப்படும் எனவும் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    இதையடுத்து நேற்று முதல் ஈரோடு ரெயில்வே நுழைவு பகுதியில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா தலைமையில் ரெயில்வே போலீசார் பயணிகள் உடை மைகளை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

    பட்டாசு பொருட்கள் பதுக்கி வைத்துள்ளார்களா என்று உடைமைகளை சோதனை செய்தனர்.

    மேலும் மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டும் சோதனையில் ஈடுப்பட்டனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறும்.

    இதனை தடுக்கும் வகையில் போலீ சார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். சந்தேக ப்படும் சில நபர்களை பிடி த்து விசாரணை நடத்திய அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இன்று 2-வது நாளாக ஈரோடு ரெயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பயணி களின் உடைமைகளை தீவிர சோதனையிட்டனர்.

    இதேபோல் ஈரோட்டுக்கு வரும் ஒவ்வொரு ரெயில்க ளில் ஒவ்வொரு பெட்டியாக சென்று பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர். மேலும் பயணி களுக்கு விழிப்புணர்வு நோட்டீசும் வழங்கினர்.

    ெரயில் பயணத்தின் போது யாரும் சாப்பிட எது கொடுத்தாலும் அதை வாங்கி சாப்பிடக்கூடாது. அதிக நகைகளை அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும்.

    இரவு நேரத்தில் தூங்கும் போது ஜன்னலை மூடி விட்டு தூங்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு அடங்கிய நோட்டீசையும் வழங்கினர்.

    இன்று வழக்க த்தை விட ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் நிரம்பி விட்ட தால் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிகள் இடம் பிடிக்க போட்டா போட்டி போட்டனர்.

    • கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அக்பர் உசேன் என்பவரது வீட்டில் உள்ள கோழி கொட்டகையில் சோதனை மேற்கொண்டனர். அதில் அங்கு ஒரு பையுடன் இருந்த பெண் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் பரமத்தி சப் -இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் இருக்கூரில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் உள்ள அக்பர் உசேன் என்பவரது வீட்டில் உள்ள கோழி கொட்டகையில் சோதனை மேற்கொண்டனர். அதில் அங்கு ஒரு பையுடன் இருந்த பெண் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    ரெயிலில்...

    விசாரணையில் இருக்கூரை சேர்ந்த அக்பர் உசேன் என்பவரது மனைவி சுப்பியா(40) மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த திலோக்சிங் என்பவரது மகன் சங்கர் சிங் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    மேலும் சங்கர் சிங், சுப்பியா மற்றும் அவரது கணவர் அக்பர் உசேன் என்கிற ராஜு ஆகியோர் ஒடிசா மாநிலத்திற்கு சென்று பலமுறை மொத்தமாக கஞ்சாவை ெரயில் மூலம் கடத்தி வந்து கபிலர்மலை பகுதியில் தொடர்ந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    கைது

    சுப்பியா மற்றும் சங்கர் சிங் ஆகியோரிடமிருந்து காய்ந்த விதைகள், இலைகள், காய்கள், பூ மற்றும் தன்டுகளுடன் கூடிய உலர்ந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் 2 பேரும் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள எலப்பார்பட்டியை சேர்ந்தவர் சித்ராதேவி (வயது35). இவரும் அதே ஊரைச் சேர்ந்த நாகசூர்யா (22) என்பவரும் சந்தேகபப்படும்படியாக நின்றுகொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந் தனர். வடமதுரை சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து தலைமையிலான போலீசார் அவர்களிடம் சோதனை நடத்தி 650 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் ஆலோசனையின்படி கைது செய்யப்பட்ட 2 பேரும் வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்ப ட்டனர். நாகசூர்யா மீது ஏற்கனவே கஞ்சா விற்றது தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைதான நிலையில் மீண்டும் சிறைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாட்டூரை சேர்ந்தவர் பிச்சுகா ஸ்ரீஹரிபாபு (46), இவர் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் சேலை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார்.
    • சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஐதராபாத்தில் இருந்து சேலம் வழியாக திருவனந்தபுரம் வரும் ரெயிலில் மனைவியுடன் வந்தார். மொரப்பூர் ரெயில் நிலையம் அருகே வந்த போது தனது செல்போன் மாயமாகி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    ஆந்திரமாநிலம் நெல்லூர் மாவட்டம் பாட்டூரை சேர்ந்தவர் பிச்சுகா ஸ்ரீஹரிபாபு (46), இவர் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் சேலை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார்.

    வியாபாரி

    வழக்கம் போல கடந்த 31-ந் தேதி இளம்பிள்ளையில் சேலைகள் வாங்க சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஐதராபாத்தில் இருந்து சேலம் வழியாக திருவனந்தபுரம் வரும் ரெயிலில் மனைவியுடன் வந்தார். மொரப்பூர் ரெயில் நிலையம் அருகே வந்த போது தனது செல்போன் மாயமாகி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் சம்பவம் குறித்து சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று சேலம் ஜங்சன் ரெயில் நிலைய நடைமேடை எண் 1-ல் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் சுறறி திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த பிரம்மம் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்த அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து திருட்டு செல்போனையும் பறிமுதல் ெசய்தனர். இந்த செல்போனின் மதிப்பு ரூ.12 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.

    மற்றொரு சம்பவம்

    இேத போல மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்தவர் ஷியாலி உமேஷ் மோர் (39), இவர் கடந்த 31-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் போடிநாயக்கனூ்ரில் இருந்து -சென்னை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் காட்பாடிக்கு ரெயிலில் புறப்பட்டார். ரெயில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் வரும் போது கண் விழித்து பார்த்த போது அவரது செல்போன் மாயமாகி இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து சம்பவம் குறித்து ேசலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று அதிகாலை சேலம் ரெயில் நிலைய 3-வது பிளாட்பார்மில் சுற்றி திரிந்த நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் பாலாஜி நகரை சேர்ந்த யுவராஜ் (39) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டதால் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 ஆயிரம் மதிப்பிலான அந்த செல்போனையும் மீட்டனர். 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

    • சின்னமனூர் அருகே பெண் உள்பட 2 பேர் மாயமாகினர்.
    • புகாரின்பேரில் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே சீலையம்பட்டியை சேர்ந்தவர் முத்துக்காளை மகள் தரணி(19). இவர் தையல் பயிற்சிக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று அவர் திடீரென மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் சின்னமனூர் போலீசில் அவரது தந்தை புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தரணியை தேடி வருகின்றனர்.

    தேனி என்.ஆர்.டி.நகரை சேர்ந்தவர் கண்ணன்(54). இவர் அப்பகுதியில் பழைய இரும்பு மற்றும் அட்டை வியாபாரம் செய்து வருகிறார். இதில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த கேதர்சுமார்(35) என்பவர் கடந்த 3 வருடங்களாக தங்கி வேலை செய்து வந்தார். அவர் திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தருமபுரி அருகே கள்ளச் சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • காரை வழிமறித்து சோதனை செய்தனர்.

    தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கள்ளத் தனமாக சாராயம் கடத்தி வருவதாக கிடைத்த ரக சிய தகவலை அடுத்து கோட்டப்பட்டி போலீசார் ஆண்டியூர் கூட்ரோடு அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது பையர் நாயக்கன்பட்டி பகுதியில் இருந்து தீர்த்தமலை நோக்கி வந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர்.

    அதில் ஒரு கட்டைப்பை யில் சுமார் 10 லிட்டர் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து சாராயத்துடன் 2 லட்சம் மதிப்புள்ள காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் காரில் வந்த வர்களை பிடித்து விசார ணை செய்ததில் தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஆண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் சுரேஷ் (வயது 39), நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த காளப்பநாயக்கன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் செல்லதுரை
    (34 ) என்பது தெரியவந்தது.

    2 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர் சம்பவத்தன்று தொழில் பேட்டையில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நடராஜன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரபாவதியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள தாதம்பட்டி அடுத்த படையாட்சி காடு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் (வயது 43). இவர் உடையாபட்டி அருகே உள்ள தொழில்பேட்டையில் வேலை செய்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர் சம்பவத்தன்று தொழில் பேட்டையில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நடராஜன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதேபோல் சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சோளம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி பிரபாவதி (45). இவர் மன அழுத்த காரணத்தால் கடந்த 7 ஆண்டுகளாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பிரபாவதி வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உடனடியாக சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரபாவதியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து தர்மபுரிக்கு மாறுதல் செய்து உத்தரவு வந்தது.
    • இதனால் மனவேதனையில் தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டியை சேர்ந்த கருப்பையா மகன் சங்கர்(35). இவர் மதுரையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து தர்மபுரிக்கு மாறுதல் செய்து சங்கருக்கு உத்தரவு வந்தது. ஆனால் அங்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    இதனால் மனவேதனையில் தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி மாவட்டம் அமச்சியாபுரம் தெற்குதெரு காலனியை சேர்ந்த முத்து மனைவி மீனாட்சி(63). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த மீனாட்சி அரளிவிதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று கல்லூரிக்கு சென்ற அவர் நண்பர்க ளுடன் முல்ைலபெரி யாற்றில் குளிக்க சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்ைல.
    • அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.

    சின்னமனூர்:

    பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் தங்கபாண்டி(19). இவர் வீரபாண்டி அரசு கலை க்கல்லூரியில் பி.ஏ. முத லாம்ஆண்டு படித்து வரு கிறார். நேற்று கல்லூரிக்கு சென்ற அவர் நண்பர்க ளுடன் முல்ைலபெரி யாற்றில் குளிக்க சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்ைல. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை வீரபாண்டி போலீ சில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாண வனை தேடி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் சபரிநாதன் மனைவி பூங்கோதை(23). இவர் தனது மனைவியை பாட்டி வீட்டில் விட்டுவிட்டு வெளியூர் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பூங்கோதை மாயமாகி இருந்தார். இதுகுறித்து பாட்டி தனக்கு எதுவும் தெரியாது என கூறினார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேவதான ப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பூங்கோதையை தேடி வருகின்றனர்.

    ×