search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விற்பனைக்காக கள்ளச்சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது
    X

    விற்பனைக்காக கள்ளச்சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது

    • தருமபுரி அருகே கள்ளச் சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • காரை வழிமறித்து சோதனை செய்தனர்.

    தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கள்ளத் தனமாக சாராயம் கடத்தி வருவதாக கிடைத்த ரக சிய தகவலை அடுத்து கோட்டப்பட்டி போலீசார் ஆண்டியூர் கூட்ரோடு அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது பையர் நாயக்கன்பட்டி பகுதியில் இருந்து தீர்த்தமலை நோக்கி வந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர்.

    அதில் ஒரு கட்டைப்பை யில் சுமார் 10 லிட்டர் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து சாராயத்துடன் 2 லட்சம் மதிப்புள்ள காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் காரில் வந்த வர்களை பிடித்து விசார ணை செய்ததில் தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஆண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் சுரேஷ் (வயது 39), நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த காளப்பநாயக்கன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் செல்லதுரை
    (34 ) என்பது தெரியவந்தது.

    2 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×