search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடு திருடிய"

    • கட்டி இருந்த ஆடுகளில் கிடாவை காணவில்லை.
    • போலீசார் மாணிக்கம், விக்னேசை கைது செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்த கெஞ்சனூர், புது தோட்டத்தை சேர்ந்தவர் பூவாத்தாள் (57). இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று ஆடுகளை தோட்டத்திற்கு அருகே உள்ள காலியிடத்தில் கட்டி இருந்தார்.

    ஒரு மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது கட்டி இருந்த ஆடுகளில் கிடாவை காணவில்லை.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    பக்கத்து தோட்டத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் 2 பேர் ஆட்டை திருடி சென்றது பதிவாகி இருந்தது. இதை வைத்து போலீசார் துப்பு துலுக்கினர்.

    சத்தியமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில் பவானிசாகர் அருகே பகுத்தம்பாளை யத்தை சேர்ந்த மாணிக்கம் (31), கெஞ்சனூரை சேர்ந்த அப்புசாமி என தெரிய வந்தது.

    இதற்கு உடந்தையாக வடக்குப்பேட்டையை சேர்ந்த விக்னேஷ் (32) என்பவர் இருந்ததும் தெரியவந்தது. போலீசார் மாணிக்கம், விக்னேசை கைது செய்தனர்.

    இதில் அப்புசாமி 2 நாட்களுக்கு முன்பு பவானிசாகர் போலீஸ் நிலையத்தில் பதிவாகியிருந்த வழக்கில் ஒன்றில் கைது செய்யப்பட்டார்.

    • 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து அவரது பட்டியில் இருந்த ஆடுகளை பிடித்து சென்றனர்.
    • வரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.

    நம்பியூர்:

    நம்பியூர் அருகே உள்ள மலையபாளையம் ஏரிக்காட்டு பள்ளத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 52). இவர் தனது வீட்டின் அருகே ஆடுகளை மேய்த்து விட்டு திரும்பவும் தனது வீட்டில் கொண்டு வந்து ஆடுகளை கட்டி வைத்துள்ளார்.

    அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து அவரது பட்டியில் இருந்த ஆடுகளை பிடித்து சென்றனர்.

    அதனைத் தொடர்ந்து பொன்னுச்சாமி மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆடு திருட்டில் ஈடுபட்ட வாலிபர்களை பின் தொடர்ந்து சென்றனர்.

    அப்போது திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட தட்டாங்குட்டை பகுதியில் கணேஷ் என்பவ ரது கறி கடையில் ஆடுகளை விட்டு சென்றுள்ளனர்.

    ஆடுகளை பார்த்து அடையாளம் தெரிந்து கொண்ட பொன்னு ச்சாமி கடைக்கா ரரிடம் இது எனது ஆடு என கூறியுள்ளார். கடைக்காரர் ஆட்டை 2 பேர் விட்டு சென்று ள்ளனர் என கூறினார்.

    இது சம்பந்தமாக பெருமா நல்லூர் போலீஸ் நிலையத்தில் பொன்னு ச்சாமி புகார் அளித்தார். அதன் அடிப்ப டையில் போலீசார் ஆடுகளை விட்டு சென்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தொரவலூர் பகுதியை சேர்ந்த மாணிக்கராஜ் (வயது 27), மணிகண்டன் (வயது 30) என தெரிய வந்தது.

    அதனை தொடர்ந்து திருட்டு சம்பவம் ஈரோடு மாவட்டம் வரப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடை பெற்றதால் வரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களையும் கைது செய்து கோபிசெட்டி பாளையம் 2-வது நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தி சிறை யில் அடைத்தனர்.

    • சம்பவத்தன்று இரவு பட்டியல் ஆடுகள் சத்தம் போடுவதை கேட்டு சந்திரசேகர் அங்கு வந்து பார்த்தார். அப்பொழுது 2 வாலிபர்கள் ஆட்டுப்பட்டியில் ஆடுகளை திருட முயன்றனர்.
    • இதனையடுத்து 2 வாலிபர்களையும், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார்சை க்கிளையும் சிவகிரி போவீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே மின்ன பாளையத்தை அடுத்த மொசுக்கவுண்டன் புதூரை சேர்ந்தவர் சந்திரசேகர் (42). விவசாயி. அதே பகுதியில் அவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் 15 ஆடுகள் வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு யாரோ மர்ம நபர்கள் சந்திரசேகர் பட்டியில் இருந்த 2 ஆடுகளை திருடி சென்று விட்டனர். மேலும் ஆடுகள் திருட்டு போகாமல் இருக்க இரவு, பகலாக ஆடுகள் கட்டி வைத்திருக்கும் பட்டியை கண்காணித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு பட்டியல் ஆடுகள் சத்தம் போடுவதை கேட்டு சந்திரசேகர் அங்கு வந்து பார்த்தார். அப்பொழுது 2 வாலிபர்கள் ஆட்டுப்பட்டியில் ஆடுகளை திருட முயன்றனர்.

    அப்போது சந்திரசேகர் வருவதை கண்டு 2 வாலிபர்கள் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தனர்.

    அப்பொழுது அந்த 2 வாலிபர்களை சந்திரசேகர் பொதுமக்கள் உதவியுடன் பிடித்து விசாரித்ததில், பாசூர் சோளங்காபாளையம் மணப்பாளிபள்ளம் 2-வது வீதியை சேர்ந்த சிவானந்தன் (20), அதே பகுதியை சேர்ந்த மனோஜ் (19) என்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து 2 வாலிபர்களையும், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார்சை க்கிளையும் சிவகிரி போவீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் சிவானந்தம், மனோஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து கொடுமுடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×