search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவிர பரிசோதனை"

    • ரெயில் நிலையத்தில் போலீசார் பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனையிட்டனர்.
    • மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டும் சோதனையில் ஈடுப்பட்டனர்.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு மக்கள் இன்று முதல் செல்ல தொடங்கியுள்ளனர்.

    ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று மாலை முதலே வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று இரவு முதல் தீபாவளியை கொண்டாடும் வகையில் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் ஈரோடு ரெயில் நிலையத்தில் நேற்று முதல் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் தங்கி இருக்கும் பிற மாவட்ட தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு தீபாவளி கொண்டாட செல்ல தொடங்கியுள்ளனர்.

    இதனால் ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்வே இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ெரயிலில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி பட்டாசு கொண்டு செல்லப்பட்டால் ரூ.5000 அபராதம் விதிக்க ப்படும் எனவும் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    இதையடுத்து நேற்று முதல் ஈரோடு ரெயில்வே நுழைவு பகுதியில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா தலைமையில் ரெயில்வே போலீசார் பயணிகள் உடை மைகளை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

    பட்டாசு பொருட்கள் பதுக்கி வைத்துள்ளார்களா என்று உடைமைகளை சோதனை செய்தனர்.

    மேலும் மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டும் சோதனையில் ஈடுப்பட்டனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறும்.

    இதனை தடுக்கும் வகையில் போலீ சார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். சந்தேக ப்படும் சில நபர்களை பிடி த்து விசாரணை நடத்திய அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இன்று 2-வது நாளாக ஈரோடு ரெயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பயணி களின் உடைமைகளை தீவிர சோதனையிட்டனர்.

    இதேபோல் ஈரோட்டுக்கு வரும் ஒவ்வொரு ரெயில்க ளில் ஒவ்வொரு பெட்டியாக சென்று பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர். மேலும் பயணி களுக்கு விழிப்புணர்வு நோட்டீசும் வழங்கினர்.

    ெரயில் பயணத்தின் போது யாரும் சாப்பிட எது கொடுத்தாலும் அதை வாங்கி சாப்பிடக்கூடாது. அதிக நகைகளை அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும்.

    இரவு நேரத்தில் தூங்கும் போது ஜன்னலை மூடி விட்டு தூங்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு அடங்கிய நோட்டீசையும் வழங்கினர்.

    இன்று வழக்க த்தை விட ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் நிரம்பி விட்ட தால் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிகள் இடம் பிடிக்க போட்டா போட்டி போட்டனர்.

    ×